உனது பிரதியாய் – ஏ. நஸ்புள்ளாஹ் கவிதை

ஏ. நஸ்புள்ளாஹ்


ஔியுள்ள இடத்தில்
முளைக்கத் துவங்குகிறது ஆன்மா
ஒரு விநாடியேனும்
ஔியற்ற இடத்தில் அது
வாழ விரும்பவில்லை

இறுகி விலங்கிடப் பட்ட
இதயத்தின் மேல்
ஔி பட்டுப்பட்டு விலகும் போதெல்லாம்
ஆதியில் விடுபட்டுப் போன எல்லாம் அறியப்படாத புலத்திலிருந்து
ரேகைகளைத் தடவிப்பார்க்கின்றன

அடர் துயர்
கனத்த வலி
மிக எளிதாக ஆன்மாவுள்ளே
நுழைய முடியாமல்
ஔி பறந்து திரிந்து பசுமையின்
உச்சம் தருகிறது

நீ கோப்பையில் வழங்கிய
நஞ்சின் ருசியும்
ஔி ஊடுருவும் சிறு கணத்தில்
நிறமுமற்று சுவையுமற்று உனது பிரதியாய்
காதல் விதைத்து நிற்கிறேன்.

00

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.