கள்ளம் – பானுமதி கவிதை

சுற்றிலும் மதில் எனும்
பெருஞ்சுவர் கூர் அலகுகள்
கண்ணாடிச் சிதறல்கள்
சில்லறைகளைத்
தடுக்கவோ,மரணத்தை
ஓட்டவோ தேக்குக் கதவுகள்
பறவை விதைத்ததில்
எப்படியோ ஒரு செடி
கள்ளத்தனமாய் வளர்ந்து
பூத்தும் விட்டது.
இபிகோவின் எந்தப்
பிரிவிலிதை வதைப்பது
அல்ல
துப்புரவாக
அப்புறப்படுத்தலாம்
எதையேனும் செய்
என்னைக் கேட்காதே
நான் ஒரு முக்குரங்கு.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.