என்றும் எம் மக்கள்

ஹேமந்த் குமார் 

இவ்வுலகை இரசிக்கப்
பிறந்தவன் நான்
என் உலகில் கலவரங்கள்
ஒழிவதற்கே – நான்
மானுடம் பாடி மகிழ்கிறேன்

நீ ஆணா பெண்ணா
அவசியமில்லை
உன் சாதியும் மதமும்
அடையாளமில்லை

நீ ஏழையா பணக்காரனா
பாகுபாடில்லை
உன் மொழியும் நாடும்
பிரிவுகளில்லை

நீ மனிதனா மிருகமா
யோசிக்கவில்லை
உன் நிறமும் குணமும்
இணைந்தவையில்லை

நீயும் நானும்
ஒன்றெனக் கண்டேன்
வயிறும் பசியும்
இருக்கும் எவரும்
எம் மக்கள் என்றெண்ணம்
கொண்டேன்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.