ஏகாந்தன்
சிறகு போல் மிதக்கும்
மிருதுவான நினைவுகளோடு
உன்னூருக்கு
வந்திருக்கிறேன்
போய்விட்ட காலத்தின்
பொன் சுவடுகளுக்கேங்கி
அலைகிறேன் அங்குமிங்குமாக
இதோ உன் ராஜவீதி
பின்பக்கம் தள்ளியிருக்கும் கோவிலில்
பதற்றமின்றி நிற்பார் பெருமாள்
சத்தமாக இயங்கும் பெண்கள் பள்ளி
நிசப்தமாக நெருங்கி நிற்கும் அந்த மரம்
களைத்த முகங்களோடு
இளைத்த உடல்களோடு
நினைவுகளின் சிற்றலைகள்
நெஞ்சுக்கரையில் விசிறியடிக்க
நனைந்தவாறு நடக்கிறேன்
மெல்ல நெருங்குகிறது
உன் வீடு
என் கோவில்
நீ நிலவாத அகத்தின் அகத்திற்குள்
நீர்த்துப்போன கண்களால் துழாவுகிறேன்
எங்காவது அசையாதா உன் நிழல்
ம்ஹும் ..
என்று பிடிபட்டாய் ..
இன்று தரிசனம் தர
2 comments