சாய்ந்திருப்பதெல்லாம் மாயத்தோள்கள்

ஹேமந்த் குமார்

தொட்டிலுக்குப் பதிலாக
நான் உறங்கிய படுக்கை,
என் தாயின் தோள்;
ஆறுதலாக கட்டித் தழுவியது,
என் தந்தையின் தோள்

பெற்றோரிடம் கூறாமுடியா
சொற்களை பெற்றுக்கொண்டது,
என் சகோதர சகோதரியின் தோள்;
இரத்த சொந்தம் இல்லாவிட்டாலும்
நெஞ்சம் நிறைய தஞ்சமளித்தது,
நண்பரின் அன்புத் தோள்

தன் உடலெனும் கட்டிலில்
என்னை சுமந்த தலையணை,
என் காதலியின் தோள்;
வாழ்க்கை முழுவதும்
குடும்ப வருத்தங்களை சுமக்கிறது,
என் மனைவியின் தோள்
வரும் மரணத்தின் தோளுக்கு முன்பு
நான் சாய்ந்திருப்பதெல்லாம்,
வெறும் மாயத்தோள்கள்.

 

 

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.