ஹேமந்த் குமார்
தொட்டிலுக்குப் பதிலாக
நான் உறங்கிய படுக்கை,
என் தாயின் தோள்;
ஆறுதலாக கட்டித் தழுவியது,
என் தந்தையின் தோள்
பெற்றோரிடம் கூறாமுடியா
சொற்களை பெற்றுக்கொண்டது,
என் சகோதர சகோதரியின் தோள்;
இரத்த சொந்தம் இல்லாவிட்டாலும்
நெஞ்சம் நிறைய தஞ்சமளித்தது,
நண்பரின் அன்புத் தோள்
தன் உடலெனும் கட்டிலில்
என்னை சுமந்த தலையணை,
என் காதலியின் தோள்;
வாழ்க்கை முழுவதும்
குடும்ப வருத்தங்களை சுமக்கிறது,
என் மனைவியின் தோள்
வரும் மரணத்தின் தோளுக்கு முன்பு
நான் சாய்ந்திருப்பதெல்லாம்,
வெறும் மாயத்தோள்கள்.
தோளென்ன, போர்த்திருக்கிற தோலும் மாயந்தான்!