Author: பதாகை

கவியின் கண்- மகத்தான காதல்

 எஸ். சுரேஷ்

அவளுக்கு வயது அறுபது. தன் வாழ்வின்
மகத்தான காதலை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

தன் நேசத்துக்குரியவன் கைகோர்த்துச் செல்கிறாள்.
காற்றில் ஆடுகிறது அவளது கேசம்.
அவளை நேசிப்பவன் சொல்கிறான்::
“உன் முடி முத்து போல் இருக்கின்றது:”.

:முட்டாள் கிழம்”
என்கின்றனர் அவள் பிள்ளைகள்.

– அன்னா ஸ்விர்ஸ்டின்ஸ்கஹா  

இதே தொடரில், முதியோரின் பிரச்சினைகள் பற்றி எழுதியபோது, இது குறித்து இன்னும் பேச வேண்டியிருக்கிறது என்றார் நண்பர் ஸ்ரீதர்.

முதுமையை வேறொரு கோணத்தில் இப்போது பார்க்கலாம் – இந்தக் கவிதை அதற்கொரு நல்ல அறிமுகம்.

முதுமை, அல்லது மத்திய பருவத்தின் பின்காலம் (இதற்கொரு சொல் உண்டா என்ன?), உன்னை தனிமை தொடரும் பருவம். நகர்ப்புறச் சூழலில்தான் இதைச் சொல்கிறேன், கிராமங்களின் கதை வேறு. (more…)

நவீனத்துவம், மாயம், புனைபடுதல் – 2

(சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சில சுதந்திரங்கள் எடுத்துக்கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை இது. கலைச்சொற்களின் தமிழாக்கமும் நம்பத்தகுந்ததாய் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பிழை எது, சரி எது என்பதை சுயமாய்ச் சிந்தித்தறிய தூண்டுதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மட்டுமே இந்த மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. விஷயத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள விரும்புபவர்கள், Michael Saler எழுதிய மூலக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம் )

இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதி இங்கே – இப்படி முடிந்திருந்தது.

(நவீனத்துவம் மற்றும் மாயம் குறித்து நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் சொல்லாடல் விருப்பு வெறுப்பற்ற கதை கூறலல்ல, அது மதிப்பீடுகளை முன்வைக்கிறது. மாயமகற்றல் என்பது சமயமின்மைக்குச் சமமாகிறது, அதிருப்திக்கும் இணையாகிறது. இந்தச் சொல்லாடல், உலகின் மாயமின்மையை விவரிப்பதோடு உலகின் வசீகரமின்மையையும் ஒப்புக்கொள்கிறது. உண்மையில், பத்தொன்பதாம் நூற்றாண்டில், ‘disenchantment’ என்ற ஆங்கிலச் சொல் பெரும்பாலும் ‘பண்பாட்டு அவநம்பிக்கை’யின் இணைச்சொல்லாக இருந்து வந்தது. ஆர்தர் ஷோபன்ஹார் மற்றும் அவரது மாணவர்கள் அறிவுலகில் இத்தரப்பை முன்வைத்தனர்.

உதாரணத்துக்கு, 1885ஆம் ஆண்டு எட்கார் சால்டஸ் எழுதிய, The Philosophy of Disenchantment என்ற நூல், சமயசார்பின்மையின் வரலாற்றை விவரிக்கவில்லை, மாறாய் சமகால பண்பாட்டு அவநம்பிக்கையின் வரலாறாகவே இருந்தது, வெபரின் entzauberung (“removal of magic”) என்ற சொல், ஆங்கிலத்தில் ‘மாயம் அகற்றல்’ என்று மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாய், disenchantment என்று மொழிபெயர்க்கப்பட்டபோது, ஏற்கனவே நிலவி வரும் பண்பாட்டு அவநம்பிக்கையின் சாயல்கள் வெபரின் கருத்துக்கு அளிக்கப்பட்டன.)

இனி- (more…)

நான் இப்பொழுது குடிக்கும் பியர்

நந்தா குமாரன்

உள்ளங்கையில் துள்ளும் கடல் மீது
ததும்பும் நார்சிசப் பிம்பம்
அந்த காலத்தில் பேய்கள் இருந்தன
என்றது
பேயோட்டிய பின்
போய் அமர்ந்த private beach கடற்கரை மணலில்
நட்ட பீர் பாட்டிலை
சைத்தானென்று
நாலு mug குடித்த பின்னும்
நான் இப்பொழுது குடிக்கும் பியர்
பிதுங்கும் கோப்பையில் விழுகிறது
கை நீட்டி உணர்ந்த மழை
ஊதித் தள்ளிய பியர் நுரை
கலக்கிறது கடல் நுரையுடன்
மழை மீது பெய்யும் மழை
கடல் மீதும் பெய்கிறது
என் மீதும் பெய்கிறது
கோபம் வீணடிக்கும்
அன்பின் வழி வந்த வெப்பம்
மேலே எழுந்தது
மஹாஜனங்களின் மீது
மழையாகிப் பொழிந்தது

கவிதை மொழியைப் புதுப்பிக்கிறது என்று சொல்லப்படுவது உண்டு, அனுபவங்களைப் புதுப்பிக்கிறது என்றும் சொல்லப்படுவது உண்டு. நீங்கள் கவிதை எழுதும் கணங்களில் எது புதுப்பிக்கப்படுகிறது என்று உணர்கிறீர்கள்?​

இரண்டுமேதான். உதாரணம், “நான் இப்பொழுது குடிக்கும் பியர்” கவிதை. சமாதானமும் அன்பும் தான் இந்தக் கவிதையின் உட்பொருள் … போதை அல்ல. “மழை மீது பெய்யும் மழை” என்ற வரி ஒரு புதிய கவனிப்பை முன் வைக்கிறது … அதன் மூலம் மழை எனும் அனுபவத்தை விஸ்தரிக்கிறது. அனுபவம் எல்லோருக்கும் எப்போதுமே ஒரே மாதிரி இல்லாமல் போவதற்குக் காரணம் – அது விழிப்புணர்வு சார்ந்தது என்பதால் தான். அதாவது ஒருவரின் விழிப்புணர்வு சார்ந்து ஒரு அனுபவம் தனித்துவம் நிறைந்ததாக மாறுகிறது. அதனால் தான் ஒரு சூரியோதயமும் சூரியாஸ்தமனமும் கூட வேறு வேறு மனிதர்களுக்கு வேறு வேறு உணர்வுகளை கிளர்த்திச் செல்கின்றன. கவிதைகளும் கூட இதனாலேயே உங்களுக்கு ஒரு அர்த்தமும் எனக்கு ஒரு அர்த்தமும் தருகின்றன. இதற்கு மொழியும் ஒரு முக்கிய காரணி என்பதை விளக்க வேண்டியதில்லை. ஒரு ஓவியத்திற்கும் இசைக்கும் இதே சக்தி இருப்பதை உணரலாம். ஆனால் நான் சொல்லும் இந்த சக்தி அதைப் பார்க்கும் கேட்கும் மனிதரின் மனதில் இருக்கிறது. இந்த விழிப்புணர்வு (கவனியுங்கள் நான் அறிவு என்று சொல்லவில்லை) இல்லாவிடில் அப்புறம் அனுபவத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.

“மழை மீது பெய்யும் மழை” என்ற வரி அதுவரை எழுதப்படாதது என நினைக்கிறேன். ஒரு பிரபல கவிஞரின் சமீபத்திய முகநூல் கவிதை ஒன்றில் இதே வரியைப் பார்த்தேன். யாரும் சுலபமாக சிந்திக்கக் கூடிய வரி தான் இது என்றாலும், இது காட்டும் அனுபவம் புதிது. கவிதை என்பது ஒரு அனுபவத் தீவு என்று பார்த்தோம். ஆனால் இதற்கு மொழியின் பங்கு மிக முக்கியமானது. திரி தூண்டப்பட்டாலொழிய ஜோதி எரிந்து சுடராது.

சாகித்ய அகாதமியின் மொழியாக்கச் செயல்திட்டம் குறித்து ஓர் அறிவிப்பு

இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்பவர்கள் குறித்து ஒரு தகவற் பெட்டகத்தை சாகித்ய அகாதமி அமைப்பு உருவாக்கி வருகிறது.  எந்த எந்த மொழிகளில் யார் யார் மொழிபெயர்க்கிறார்கள் என்ற விபரம், பயனர்களுக்கு வழங்கப்படும். இங்கு நீங்கள் பதிவு செய்து கொண்டால், மொழியாக்கம் செய்யும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கக்கூடும். வாழ்த்துகள்.

 

Translators - PaperAd 1-page1

 

நீங்கள் இப்போதே தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : nationalregistertranslators@gmail.com

செல்ஃபி சுப்புவும் பார் கவுன்சிலும்

கார்த்தி

selfie_subbu_barcouncil