குருதிக் கறைகள்
நதியில்
கரையும் கனவில்
கழிகிறது
ஹைகேகாணிக்களின்
ஆழ்கடல்
அணிவகுப்பு.
பதாகை – நாலடியார், இன்னா நாற்பது இனியவை நாற்பது, கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி – என்று ஏராளமான நீதி நூல்கள் தமிழ் கவிதை மரபில் இருக்கின்றன. இவற்றை நாம் செய்யுட்கள் என்று வகைமைப்படுத்துகிறோமே தவிர, கவிதைகளாகக் கருதுவதில்லை. இது நம் மரபிலிருந்து நம்மைத் துண்டிப்பதாகாதா? எது கவிதை என்று கேட்பதைவிட, எப்படிப்பட்ட கவிதை என்று கேட்பது நம் புரிதலுக்கு உதவுவதாக இருக்குமா? பாடல்களையும் செய்யுட்களையும் கவிதையல்ல என்று விலக்கி வைப்பதற்கான தேவை என்ன?
றியாஸ் குரானா – உங்கள் கேள்வியை நான் விளங்கிக்கொண்ட வகையில் இதற்கு பதில் முயற்சிக்கிறேன். செய்யுள் மற்றும் பாடல் போன்றவைகள் எல்லாம் கவிதையின் வேறு வகையினங்கள்தான். அதாவது, கவிதைக் குடும்பத்தைச் சேர்ந்தவைதான். கவிதை மரபென்பது, இப்படி பல வகையினங்களை உள்ளடக்கிய ஒன்று. அவைதான் உண்மையில் தமிழ் கவிதையின் தொடர்ச்சி. இன்று புதுக்கவிதை எனச் சொல்லுவதோ அல்லது நவீன கவிதை எனச் சொல்லுவதோ தவிரவும், என்னைப் போன்றவர்கள் இன்னும் சற்று மேலேபோய் நவீனம் கடந்த கவிதை எனச் சொல்லுபவைகளோ தமிழ் கவிதை மரபைச் சேர்ந்தவை அல்ல. ஆயினும், இந்த கவிதைக் குடும்பத்திற்குள் சேர்த்துக்கொள்ளக்கூடிய புதிய வகையினங்கள் இன்று தமிழ் மனதினதும், தமிழ் கவிதை பாரம்பரியத்தினதும், தமிழ் நிலவியலினதுமான உள்ளீடுகளை தனக்குள் அடிப்படையில் வைத்துக்கொண்டு, கவிதைக்கான கற்பனைச் செயலை உலகளாவியதாக ஆக்கிவிட்டிருக்கிறது. இது தனித்துவமும், பன்மைத்துவமும் கவிதை வெளியில் இணைந்து செயற்படுவதாகும். (more…)
வந்தனா பஸ்ஸில் ஏறிய போது பாதி பஸ்தான் நிரம்பி இருந்தது.
நாலைந்து அமெரிக்கர்கள். ஏழெட்டு இந்தியர்கள். சொற்பமாய் சீனத்து முகங்கள். அன்றாடம் பஸ்ஸில் ஏறும்போதெல்லாம் அவளுக்குப் பெருமை நெஞ்சில் பொங்கி வழிவதைத் தவிர்க்க முடிவதில்லை. எல்லோரையும் போல நானும் தினமும் வாஷிங்டன் டி.சிக்கு வேலைக்குச் செல்பவளாகி விட்டேன்.
ஆனால் கண்ணனுக்கு மட்டும் இன்னும் மனக்குறை தீரவில்லை.
கண்ணன் டி.சியில்தான் ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் மென்பொருளாளனாக இருக்கிறான். வர்ஜீனியா, மேரீலாண்ட் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் பெரும்பாலும் அவனைப் போலவே ஏதாவதோர் அரசு அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியாளராகவோ, நிரந்தர ஊழியராகவோ இருப்பார்கள்.
இந்த இடத்துக்கு முதன் முதலில் அவன் கூட்டி வந்தது நினைவிருக்கிறது. அப்போது அவளுக்கு அமெரிக்கா புதிது. வாஷிங்டன் டி.சி புதிது. ஒயிட் ஹவுஸ் பார்க்க ஆசைப்பட்டாள்.
“என் ஆபிஸ் பக்கத்தில்தான் ஒயிட் ஹவுஸ் இருக்கு. நான் ஆபிஸ் போறப்போ என் கூடவே பஸ்ஸில் வா! டி.சி நகரத்தை சுத்திப் பார்த்துட்டு சாயந்தரம் ஒரே பஸ்ஸில் ரெண்டு பேரும் திரும்பி வந்துரலாம்.”
வீட்டிலிருந்து எட்டு நிமிஷ கார் பயணத்தில் அந்த இடத்துக்கு வந்தார்கள். குட்டி பஸ் ஷெல்ட்டருக்குப் பின்னால் பெரிய பார்க்கிங் லாட் இருந்தது. அதில் இரண்டு கார்களுக்கு நடுவே சொருகி நிறுத்தினான் கண்ணன்.
“கார்லயே டி.சி போக முடியாதா?”
கண்ணன் புன்னகைத்தான். “டி.சி மாதிரி பெரு நகரங்களில் டிராபிக்கை கட்டுப்படுத்த ஹெச் ஓ வி-ன்னு ஒரு சிஸ்டம் இருக்கு வந்தனா.”
“ஹெச் ஓ வியா?” (more…)
– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன் –
‘அக்னி அண்ட் அதர் போயம்ஸ் அண்ட் ட்ரான்ஸ்லேஷன்ஸ்….”
கரகரகொரகொரவென அவ்வப்போது அலையடித்து கலைத்துக் கொண்டிருந்த தொலைபேசிக் குரலில் பத்மநாபன் சொல்லிக் கொண்டே இருந்தான்.
‘என்னடா’ என்று நான் சற்று உரக்கவே கேட்டு மூன்று நொடிகள் தாமதத்தில் அவன் காதுக்கு போய் சேர்ந்ததிருக்க வேண்டும்.
மீண்டும் ‘அக்னி அண்ட் அதர் போயம்ஸ் அண்ட் ட்ரான்ஸ்லேஷன்ஸ் அண்ட் எஸ்ஸேஸ் அண்ட் அதர் ப்ரோஸ் ஃப்ராக்மெண்ட்ஸ்… இந்த பொத்தவம்தாம்டே. பாரதி பிரசுராலயம் வெளியீடு. மொத பதிப்பு ஆயிரத்தி தொள்ளாயிரத்து நுப்பத்திரெண்டுல வந்திருக்கு. அங்கன ஏதாச்சும் லைப்ரரில இருக்கான்னு பாருடே. நம்ம பாரதிப் புலவர் அய்யாவோட காப்பிய எவனொ கோண்டுட்டு போயிட்டான்னு ரொம்ப நாளா சொல்லிட்டிருந்தாவ. அங்கதான் அல்லா பளய பொத்தவத்தையும் மைக்ரோ பிலிமில் போட்டு வச்சிருக்கானுவளாமே. அய்யாவுக்கு ஒண்ணு வாங்கிட்டு வாடே’
மேலே சொன்னது முழுவதுமாக எனக்கு போனில் கேட்க முடியாமல் பத்மநாபனின் குரல் துண்டு துண்டாக வெட்டித்தான் கேட்டது. தொலைபேசி இணைப்பக பிரச்னையால் காணாமல் போனவற்றை நானாக இட்டு நிரப்பி புரிந்துகொள்வதற்குள் என் காலிங் கார்டின் இருப்பு தீர்ந்து போய்விட்டதாக அறிவிப்பு வந்து அழைப்பு நின்று போனது.
ஏற்கெனவே திகைப்பும் வியப்புமாக ஒரு பிரமிப்பு நிலையில் இருந்த எனக்கு இப்போது சற்று எரிச்சலும் சேர்ந்து கொண்டது. (more…)