எஸ். சுரேஷ்

கவியின்கண் – 2 “கொள்வன் கொல்லோ?”

அதியமான் நெடுமான் அஞ்சிக்காக ஔவையார்  பாடியதாக இது-

இல்லா கியரோ, காலை மாலை!
அல்லா கியர், யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி, நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளா தோனே?

(புறநானூறு – 232) (more…)

கவியின்கண் – 1 “எத்திசை செலினும் அத்திசைச் சோறே”

– எஸ். சுரேஷ்-

​மன்னன் நெடுமான் அஞ்சியின் அரண்மனை வாயிற்காவலனை நோக்கி ஔவை பாடியதாக ஒரு புறநானூற்றுப் பாடல் உண்டு:

வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே. (more…)

மீட்சி – எஸ். சுரேஷ்

“அவள் போன வருடம் இறந்துவிட்டாள்”
 
என்னுள் நீ என்றோ இறந்துவிட்டாய்
என்று நினைத்துக் கொண்டிருந்தேன்,
உன்னுள் நான் முழுவதும் இறந்து விட்டிருந்தேனா?
இனி அறிய முடியாது.
 
—- கல்லூரி செல்லும் வழியில் காத்திருந்து
 பைவ் ஸ்டார் சாக்லேட் கொடுத்ததும்
 வெட்கத்துடன் நீ அதை வாங்கியதும்
 உன் சிறு புன்னகையும் —-
 
துவக்கங்கள் நினைவில் விரிய எனக்குப் புரிகிறது
மனதைத் தொட்ட எவரும் இறப்பதில்லை.

இரு கவிதைகள் – எஸ். சுரேஷ்

எஸ். சுரேஷ்

திருஷ்டி

பிறரைக் காட்டிலும் தொலைதூரம்
தன்னால் பார்க்க முடிகிறது என்று
இளமையில் இறுமாப்பு கொண்டிருந்தான்

திரண்டு வரும் மேகங்களும்,
உருமும் இடியும்,
பார்வை பறிக்கக்கூடிய மின்னலும்
சுழன்று வரும் புயல் காற்றும்
பிறருக்கு முன்பே
காண்கிறான்

இவை தன் புகல்கள் அனைத்தும்
அழிக்கப்போவதை
உணர்கிறான்

பொங்கி வரும் அலையைத் தடுக்க
முடியாதவனாக
நிற்கும் பொழுதுதான்
அறிகிறான்

தூரதிருஷ்டி ஒரு வரமல்ல

oOo

சுயம்

கண்ணன் விரைந்தோடி வந்தான்,
வரவேற்றான்,
பிள்ளைகுட்டி எப்படி ஏதென்று
குசலம் விசாரித்தான்.
விளையாட்டு நாட்களை
நினைவு கூர்ந்தான்.
போதும் போதுமென்ன நில்லாது
உணவளித்தான்.
சுதாமா முடிந்து வைத்திருந்த
பிடி அவலும் அவிழ்த்து உண்டான்

கால் வலிக்க தன் வீட்டை
நெருங்கும்பொழுது கண்டான் சுதாமா:
அதே இடிந்த வீடு
ஒட்டுப்போட்ட புடவை போர்த்திய
மனைவி
கூச்சலிட்டுக்கொண்டு கிழிந்த ஆடைகளுடன்
ஓடும் குழந்தைகள்

நாளைக்கு சந்திக்கவேண்டிய
போராட்டங்கள் நினைத்துக்கொண்டு
மெளனமாய் கண்ணனுக்கு
நன்றி கூறினான் சுதாமா.