– ஸ்ரீதர் நாராயணன் –
காலைக் கட்டிக்கொண்டு
தூக்கச்சொல்லும் பரிதவிப்பு,
தோளின் மீதேற்றிக்கொண்டதும்
விகசிக்கிறது பூரிப்பில்.
முதுகில் ஏற்றிக்கொண்டு
குதிரையோட்டம் ஓடும்போது
மகிழ்ச்சி கெக்கலிப்பாகிறது (more…)
– ஸ்ரீதர் நாராயணன் –
காலைக் கட்டிக்கொண்டு
தூக்கச்சொல்லும் பரிதவிப்பு,
தோளின் மீதேற்றிக்கொண்டதும்
விகசிக்கிறது பூரிப்பில்.
முதுகில் ஏற்றிக்கொண்டு
குதிரையோட்டம் ஓடும்போது
மகிழ்ச்சி கெக்கலிப்பாகிறது (more…)
– ஸ்ரீதர் நாராயணன் –
“இவனுக்குத்தான் அந்தப் பொண்ணிருக்கற வீடு தெரியுமா?”
லட்சுமணனின் குரலைக் கேட்டதும் கருணாகரன் சட்டென படித்துக் கொண்டிருந்த பத்திரிகையை கீழேப் போட்டுவிட்டு ஸ்டூலில் இருந்து எழுந்து நின்றான். கையை விறைப்பாக வைத்துக் கொண்டு, கீழுதட்டை மடித்துக் கொண்டு அவனை எடைபோடுவது போல பார்த்துக் கொண்டிருந்த லட்சுமணனின் தோரணையைப் பார்த்ததும் இன்னும் பணிவாக
“என்ன சார்” என்றான்.
“தனம் வீடு பத்தி கேக்கறார் சார்” என்றவாறே முத்துராமன் அவர் பக்கத்தில் வந்து நின்றார். பொலிவற்ற பின்னணியில் பிரகாசமான நிறங்கள் தூக்கலாக தெரிவது போல, லட்சுமணனின் மிடுக்கு இன்னமும் அதிகமாக தெரிந்தது.
“எந்தூரு உனுக்கு?” என்றார்.
உடல்மொழியில் இன்னமும் குழைவை சேர்த்துக் கொண்டு “இங்கிட்டுத்தான் சார். மருதுபட்டி” என்றான் கருணாகரன்.
“மருதுபட்டியா? அங்கிட்டு பூரா பயகளும் மாடு பத்திட்டு போற காட்டுப் பயகதான. நீ இங்க துணிய கிழிச்சுப் போட வன்ட்டியாக்கும்”
“இல்லீங்க சார். காலேஜு முடிச்சிட்டு சும்மாங்காட்டிக்கு வேலைக்கு வந்தேன்.”
அவன் சொல்வதை கவனிக்காமல் கடையை சுற்றுமுற்றும் அளவெடுத்துக் கொண்டிருந்தார் லட்சுமணன். முக்கியமாக துணிகளை உதறி, மடித்து பாலித்தீன் பைகளில் போட்டுக்கொண்டிருந்த பெண்களை ஒவ்வொருவராக அளவெடுப்பது போல பார்த்துக் கொண்டிருந்தார். கருணாகரன் பேசுவதை நிறுத்திவிட்டது தெரிந்ததும் அவன் பக்கம் திரும்பி
‘இந்தப் பொண்ணு வீடு எங்கிருக்கு?’ (more…)
– ஸ்ரீதர் நாராயணன் –
மூலக்கடை பிள்ளையார் கோவில் பக்கமாக வரும்போது சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. ‘சிக்னல் போட்டிருக்கு’ என்று சாந்தலட்சுமியின் காதுகளில் கேட்கும்படி முணுமுணுத்துவிட்டு சிவசுப்ரமணியன் வேகமாக பஸ்ஸின் படிக்கட்டுகள் பக்கமாக வந்தான். எதிர்பார்த்தது போல டிரைவர் வேகத்தைக் குறைக்க சட்டென குதித்து இறங்கினான். பின்னாடியே தடதடவென சாந்தலட்சுமி இறங்குவதற்குள் பஸ் வேகமெடுத்து விட்டது. அந்த மதிய நேரத்தில் நூறடிச்சாலை வெறிச்சோடி இருந்ததால், டிரைவர் வேகமெடுத்தபடி சிக்னலைத் தாண்ட, பஸ்ஸிலிருந்து குதித்த சாந்தலட்சுமி கொஞ்சம் தூரம் ஓடி சமாளித்து நின்றாள்.
‘த, விழுந்து சாவறதுக்குனு வந்துக்குது பாரு. ஸ்டாப்பிங்ல இறங்கி நடந்து வாறதுக்கு என்னா கேடு’ கண்டக்டர் தலையை நீட்டி திட்டுவது சிவசுப்ரமணியன் காதுகளில் நன்றாகவே கேட்டது.
‘பேமானி. ரெட்ல கிராஸ் பண்ணிட்டு, என்னா சவுண்டு விடறான்’ சாந்தலட்சுமியின் குரல் பஸ்ஸை எட்டியிருக்காது என்றாலும், சாலையோரத்து இளநீர் கடைக்காரரின் காதுகளை எட்டியிருந்தது அவருடைய சிரிப்பின் மூலம் தெரிந்தது.
‘அதான், ஸ்பீடு கூட்டிக்கிறான்ல. என்னாத்துக்கு குதிக்கிற நீயு?’ (more…)
எறும்புகளை வளர்க்க என
சிறிய நெகிழி பெட்டிகளில்
கண்ணாடி மூடிகள் கொண்ட
சச்சதுர வீடுகள் அவை.
ஒவ்வொன்றிலும் காற்றுபோக்கியாக
சிறு துளைகளும் உண்டு.
அவற்றின் வழியே வந்து போகும்
எறும்புகள் ஒவ்வொன்றுக்கும்
ஒரு பெயரும், குடும்பமும்
கண்டுபிடித்து வைத்திருந்தாள்
நுணுக்கிய சர்க்கரை
இணுக்குகளை சேர்த்து
வைத்துக் கொள்ள ஓரத்தில்
சிறு மூலையும் உண்டு.
எறும்புகள் வந்து சேர
தாமதமாகும்போது
தேடிப்பிடித்து கொண்டுவந்து
சேர்ப்பார்கள்
அவளும் அண்ணனும்.
குளிர்காலங்களில் மட்டும்
முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில்
வெறிச்சோடிக் கிடக்கின்றன.
அவற்றை உள்ளங்கையில் ஏந்தி
உதடுகளால் ஊதி
கதகதப்பாக்குகிறாள்.
சாரிசாரியாக வந்து நிறைக்கின்றன
நெகிழ்ச்சியின் தருணங்கள்.
– ஸ்ரீதர் நாராயணன் –
ஒரு சொல்லை மட்டும்
பிரித்தெடுத்து கொண்டு
எங்கே போகிறாய்?
எழுதியது மொத்தமும் உனக்குத்தான்.
எல்லாவற்றையும் எடுத்து சென்று
எரிதழலில் இட்டுவிடு.
எழுத்தை சூழும் நெருப்பு
தின்று தீர்க்கட்டும்
உன்னையும் என்னையும்!
மாதொருபாகன் நூலுக்கான எதிர்ப்பை தொடர்ந்து நடக்கும் சர்ச்சையை ஒட்டி நிறைய அலசல்களும் கருத்து பரிமாற்றங்களையும் கவனிக்கிறோம். அழிப்பதற்காக இட்ட நெருப்பே அந்த எழுத்தை பெரும் வீச்சோடு பரப்பிச் செல்கிறது. எஞ்சிய சாம்பலிலிருந்து சில கேள்விகளும் அதற்கான விளக்கங்களையும் இப்படி தொகுத்து வைத்துக் கொள்ளலாம்.
இலக்கியம் என்பதற்கான வரையறை என்ன? இன்றைய புனைவுகள் நாளைய கலாச்சார, சமூக ஆவணமாக பேசப்படும் என்றெல்லாம் சொல்கிறார்கள். அத்தகைய படைப்புகளுக்கு கட்டுபாடுகள் தேவையில்லையா? (more…)