அந்த முகம் என் முன் தெரிகிறது,
அதை வருட கை நீட்டும்பொழுது மறைகிறது.
வேறொரு முகம் மெதுவாகத் தோன்ற,
நான் அதை உற்றுப் பார்க்கிறேன்.
தெரிந்த முகம்தான், ஆனால் யாரென்று தெரியவில்லை.
கண்மூடி திறப்பதற்குள் மறைகிறது.
அடுத்து தோன்றும் முகம், பரிச்சயப்பட்ட முகம்.
என்னைப் பார்த்து சிரிக்கிறது.
நான் கை நீட்டி அதைத் தொடுகிறேன்.
எனக்குள் சந்தோஷம்.
லேசாகப் புன்னைகைக்கிறேன். (more…)
சிகந்தர்வாசி
அந்தரங்க துணை

இன்று காலை நடைபழகும்போது நடராஜன் எதிரில் வந்தார். என்னுடன் நடக்க ஆரம்பித்தார்.
நடராஜன் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்று சில வருடங்கள் ஆனாலும் இன்னும் சுறுசுறுப்பாக இருப்பவர். தினமும் ஷட்டில் ஆடுவார். காலையில் வாக்கிங்.
“லைப் எப்படி போயிண்டிருக்கு சார்?” என்று கேட்டேன்.
“என்னத்த சொல்ல சார், ஒரே தனிமையா இருக்கு. ரொம்ப லோன்லியா பீல் ஆறேன். அவ போயி அடுத்த மாசம் அஞ்சு வருஷம் ஆறது. அப்பா போன வருஷம் போயிட்டார். ஆபிசும் கிடையாது. ரொம்ப போர் சார்”
“ஏதாவது என்ஜிஓல சேருங்களேன் சார்”
அவர் உரக்க சிரித்தார், “நம்ப ஆபிஸ் பாலிடிக்ஸ் விட அங்க பாலிடிக்ஸ் ஜாஸ்தி இருக்கு. அதெல்லாம் முடியாத விஷயம்”
அவர் தனிமையைப் போக்க எதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். “உங்க அண்ணா நம்ப காம்ப்ளெக்ஸ்லதானே இருக்கார், அவர் வீட்டுக்கு போலாமே சார். அவரும் சும்மாதானே இருக்கார்?”
நடராஜன் விரக்தியாகச் சிரித்தது போல் இருந்தது. “அதெல்லாம் சொல்லுஷன் இல்ல சார்”
“சீரியல் பாக்கலாமே சார்” என்று சொல்ல வந்து அந்த எண்ணத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.
ஒரு சுற்று மௌனமாகவே இருந்தோம். திடீரென்று அவர், “என்னதான் சொல்லுங்க சார், வாழ்க்கைல நமக்குன்னு ஒரு துணை வேணும்” என்றார். (more…)
500A சம்பவம்
மதியம் மூன்று மணிவாக்கில் 500Aவில் ஏறினேன். ஏ.சி. பஸ் அது. மதிய வேலை என்பதால் டிரைவர், கண்டக்டர் தவிர கடைசி சீட்டுக்கு முன் உள்ள சீட்டில் ஒரு பெண்ணும் இருந்தார்கள். நான் முன்பக்கம் உட்கார்ந்து கொண்டேன். கதவுகள் மூடியவுடன் அவள் குரல் எனக்கு கேட்க ஆரம்பித்தது.
“.. அவா ரெண்டு பேரும் மீட் பண்ணிண்டா. தீபக் நல்லா பேசினான்னு சொன்னா. ரொம்ப நேரம் பேசினாப் போல இருக்கு. அவளுக்கு ஓகேன்னு சொன்னா. அவனும் ஓகே சொல்லியிருப்பான்னு நெனைக்கறேன்” தமிழில் பேசினாள். உரக்க பேசினாள். வேறு மனிதர்கள் பஸ்ஸில் இருப்பதை அவள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
சற்று நேரம் மௌனத்துக்கு பின், “அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. அவ ரொம்ப கான்பிடண்டா இருந்தா. ஆனா இப்போ அவன் பிடி கொடுத்து பேசமாட்டேன்கிறான்”
“…”
“சார், உங்களுக்கு இது பத்தி தெரியாதுன்னு எனக்கு தெரியும் சார். ஆனா நீங்க அவனோட மேனேஜர். நீங்க ஒரு வார்த்த அவன கேக்கலாம்”
“…”
“அது கரெக்ட்தான் சார். இது பர்சனல் விஷயம்தான். ஆனா நாங்க என் கசினுக்கு கல்யாணம் ஆகணும்னு ரொம்ப டென்ஷனா இருக்கோம். அதுக்குதான் உங்கள கேக்கறேன். ஒரு ரிக்வெஸ்ட்தான்.”
“…”
“இல்ல சார். நீங்க அவன போர்ஸ் பண்ண வேணாம். ஆனா ஏன் அவன் வேணாம்ன்னு சொல்றான்னு கேளுங்களேன்?”
“…”
“அவளுக்கு இப்போ முப்பது வயசாச்சு சார். சீக்கிரம் கல்யாணம் பண்ணிடணும்னு என் சித்தி சித்தப்பா பாக்கறா. இவ்வளவு நாள் அவ வேண்டாம்ன்னு இருந்தா. இவனதான் மொதல்ல சரின்னு சொல்லியிருக்கா. இந்த சந்தர்ப்பத்த விட முடியாது சார். நீங்கதான் எப்படியாவது அவன கன்வின்ஸ் பண்ணனும்”
“…”
“சார் நான் சொல்லறத கேளுங்க சார். ப்ளீஸ்.” அவள் குரல் உயர்ந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். கண்டக்டர் என்னைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார். “மனை அனுக்கொண்டிதாரே” என்றார் என்னிடம். பஸ் ஸ்டாப்பில் நின்றது. ஒருவர் ஏறிக்கொண்டார்.
கதவு மூடியபின் மறுபடியும் அவள் குரல். “…இருக்கலாம் சார். இல்லேன்னு சொல்லல. நீங்க இவள உங்க தங்கையா நினைச்சுக்கோங்க. ஒரு சிஸ்டருக்கு ஹெல்ப் பண்ற மாதிரி ஹெல்ப் பண்ணுங்கோன்னு கேக்கறேன்”
“…”
“இல்ல சார். அவருக்கு நீங்க மேனேஜர். நீங்க மனசு வெச்சா அவன கன்வின்ஸ் பண்ணலாம் சார். ஒரு தங்கைக்கு …”
“…”
“உங்களுக்கு தெரியாதது இல்ல. இந்த காலத்துல கல்யாணம் பண்ணி வெக்கறது எவ்வளவு கஷ்டம்னு. அதுவும் பொண்ணும் பையனும் ஒருத்தர ஒருத்தர் விரும்பற மாதிரி இருக்கறது இன்னும் கஷ்டம். அதுனாலதான் இது கை நழுவக்கூடாதுன்னு பாக்கறேன்”
“…”
“அவளுக்கு அவன பிடிச்சிருக்கு சார். அதுனாலதான் அவனுக்கு அடிக்கடி போன் பண்றா. இத ஏன் அவன் தப்பா எடுத்துக்கறான்? அடிக்கடி போன் பண்றதுல என்ன சார் தப்பு இருக்கு?”
“…”
“ஓகே சார். ஐ அண்டர்ஸ்டான்ட். நான் அப்புறம் போன் பண்றேன்”
அடுத்த ஸ்டாப் வரை நிசப்தமாக இருந்தது. ஸ்டாப்பில் பஸ் நின்றவுடன் அந்த பெண் இறங்க வந்தாள்.
பஸ்ஸில் இருந்த மற்றொருவரும் எழுந்து, “நீங்க தமிழ் போல இருக்கு. நீங்க பேசறத நான் கேட்டேன்….” என்று சொல்லிக்கொண்டே அந்த பெண்ணுடன் பஸ்ஸைவிட்டு இறங்கினார்.
பஸ் கதவு காற்றை உள்ளிழுத்துக் கொள்வது போன்ற மெல்லிய சப்தத்துடன் மூடிக் கொண்டது.
தொலைந்த துணை

இரவு ஒரு மணிக்கு டெலிபோன் மணி அடித்தது, கனவில் யாரோ என்னை கூப்பிடுவது போல்.
மணி அடிக்கிறது என்று உணர சற்று நேரமாகியது. இளைஞனாக இருந்திருந்தால் திடுக்கிட்டு எழுந்திருப்பேனோ என்னவோ. சற்று குழப்பத்துடன் ரிசிவரை கையில் எடுத்தேன்.
“ஹல்லோ. நான் உன் நம்பர கண்டுபிடிக்கமாட்டேன்னு நினைச்சியா? அவ்வளவு சீக்கிரம் உன்ன விட மாட்டேன்,” என்று சொல்லிவிட்டு சிரித்தது ஒரு குரல். இளம் பெண்ணின் குரல்.
“ஹலோ யார் நீங்க?”
“ஹஹ.. குரலை மாத்தி பேசறயாடா ராஸ்கல். என்ன ஏமாத்தமுடியாது. அதுக்கு வேற ஆள பாரு”
“ஹலோ. உங்களுக்கு யார் வேணும்?”
“நீதான் வேணும் அப்படின்னு நான் சொல்லணுமா? ஹ ஹ ஹ. அந்த மாதிரி சினிமா டைலாக் எல்லாம் நான் சொல்ல மாட்டேன். உனக்கே தெரியும் எனக்கு என்ன வேணும்ன்னு” (more…)
புது தில்லியில் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சம்பவம்

சகானோ மற்றும் நரூசேவுக்காக புது தில்லி விமான நிலையத்தில் இன்டர்நேஷனல் பிரிவில் எக்சிட் கேட் வாசலில் காத்துக் கொண்டிருந்தேன். இந்தியாவிற்கு வரும் சர்வதேச விமானங்கள் போல் இதுவும் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல்தான் வந்திறங்கும். அதற்குப் பிறகு அவர்கள் இம்மிக்ரேஷன், கஸ்டம்ஸ் எல்லாம் தாண்டி வெளியில் வர ஒரு மணிக்கு மேல் ஆகிவிடும். அவர்கள் ஜப்பானிலிருந்து வரும் எங்கள் வாடிக்கையாளர்கள். முதல் முறையாக இந்தியா வருவதினால் ப்ராஜெக்ட் மேனேஜரான நான் இங்கு அவர்களுக்காக அரை தூக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். (more…)