எழுத்து

பிறிதொரு ஆடவன் – டிசைரி யூங்

 

என் தங்கை வீட்டுக்காரன் சட்டையில்லாமல் வீட்டைச் சுற்றித் திரிவதை விரும்புகிறான். மார்ஷியாவைத் திருமணம் செய்து கொண்ட நாள் முதலே அவனுக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது.

நான் அடிக்கடி அவர்கள் வீட்டுக்குப் போய் நிற்பதில்லை. என் மகனைப் போலவே என் மருமகனும் ஒரு குழந்தைதான், அவனுக்கு எட்டு மாதங்கள்தான் ஆகின்றன, போன மாதம்தான் தவழ ஆரம்பித்தான்.

“தொழில் எப்படி போகிறது, சில்வியோ?” என்று என்னைக் கேட்கிறான். அவன் மஞ்சள் நிற கிண்ணம் ஒன்றில் ஓட்ஸ், வாழைப்பழம், தயிர் கலந்து கொண்டிருக்கிறான். குழந்தையின் கிண்ணம் போலிருக்கிறது.

“நன்றாகப் போகிறது. ஆனால் என் அப்பாவுடன் வேலை செய்வது கொஞ்சம் கஷ்டம்தான். அவர் மிக அதிகம் எதிர்பார்க்கிறார், அவருக்கு எதையும் கனகச்சிதமாகச் செய்தாக வேண்டும். சில சமயம் எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போய்விடலாம் பொலிருக்கிறது,” என்று ஒப்புக்கொள்கிறேன். (more…)

பறவை

எஸ். சுரேஷ்

ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்துக்கொண்டு
கவிதை எழுதத் தொடங்கினேன்
“உன் முகத்தைப் பார்த்தால் தாமரை மலரும்
உன் பாதம் பட்டால் பூக்கள் மலரும்
நீ கண் இமைத்தால் பட்டாம்பூச்சிகள் பறக்கும்
நீ சிரித்தால் மின்னலடிக்கும்
உன் கொலுசொலி கேட்டு வானம் உறுமும்
உன் வளையல் ஓசை என் மனதை மயக்கும்
உன் குரலைக் கேட்டால் குயிலும் நாணும்..”

ஹ ஹ ஹ ஹ என்று மரக்கிளையில் உட்கார்ந்து
என் கவிதையை படித்துக்கொண்டிருந்த குயில்
சிரித்துவிட்டுப் பறந்து சென்றது

கடைசி வரியை அழித்துவிட்டு
“நீ என்னுடன் இருந்தால் என்றைக்கும் இனிக்கும்”
என்று முடித்தேன்

ஒளிப்பட உதவி – steffichfineart.com

அப்படியே ஆகுக

 
காற்றில் இலை பரப்பி 
குலை தள்ளி
வேரில் செழித்திருந்த 
வாழை மரமொன்றை
வெட்டித் தள்ளினேன்
இலை கிழித்து 
குலை சிதைத்து
தோல் உரித்து 
வெண்தண்டு கடித்துக் குதறி 
வேர் வெட்டி
வெற்றியுடன் மீண்டபோது
நானறியாது 
அனைத்தையும் பார்த்திருந்த 
புதுக்கன்று 
மெல்ல தலைதூக்கி 
உலகுக்கு வந்தது,
ஆம், அப்படிதான் ஆகும்
..

அமைதி பள்ளத்தாக்கு பயணம்

எஸ். சுரேஷ்

sv3

“பிரும்மாண்டமான கருநாகம் ஒன்று சொன்ன நேரத்திற்கு அந்த கற்கள் பின்னாலிருந்து வெளியே வரும். இங்கு அதற்காக அவர்கள் வைத்திருக்கும் பாலைக் குடித்துவிட்டு மறுபடியும் அந்த கற்களுக்கு பின்னால் சென்று மறையும்”.

இதைக் கேட்டதும் நாங்கள் இரண்டடி பின்னகர்ந்தோம். பாம்பு ஒன்றும் அங்கு கண்ணில் படவில்லை.

எங்களுக்கு இதைச் சொல்லிக் கொண்டிருந்தவரின் பெயர்தான் ‘பேபி’, அவரோ அறுபது வயது தாண்டியவர். மலையாளமும் தமிழும் கலந்து பேசினார். கறுத்த நிறம். முறுக்கிய தசைகள். உழைப்பாளியின் உடல்கட்டு. இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடோடிகள் நடத்தும் ஒரு விழாவை விவரித்துக் கொண்டிருந்தார்.

“அப்படி வராவிட்டால்?” என்று ஹரிணி கேட்டாள். அவளுக்கு எப்பொழுதும் எல்லாவற்றிலும் சந்தேகம் இருக்கும்.

“வரும். நிச்சயம் வரும்,” என்றார் பேபி தீர்மானமாக.

ஹரிணி மெளனமாக இருந்தாள். அவளுக்கு அந்த பதிலில் அவ்வளவு திருப்தி இல்லை என்பது தெரிந்தது. (more…)

ஏழ்மை அனைத்தையும் மின்னச் செய்கிறது – பிராங்க் மக்கோர்ட் நேர்முகம்.

“ஒரு சாதாரண வாழ்கையை வாழ்ந்த சாதாரணர் இவர் என்று தோன்றுகிறது இல்லையா?” என்று பிராங்க் மக்கோர்ட் பற்றி கேட்கிறார் அஜய், “60 வயது வரை சாதாரண வாழ்க்கை வாழ்ந்த மக்கோர்ட் தன் நூல்களின் வெற்றியால் பிரபலமாகிவிட்டார். வாழ்க்கை அனுபவங்களா, அவற்றைச் சொல்லும் முறையா அல்லது அவற்றை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமா, எது ஒருவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது அல்லது அவர்களுடன் ஒன்ற வைக்கிறது?” .  அவரது கட்டுரையைப் படிக்கும்போது மக்கோர்ட்டின் பால்யகால ஏழ்மையும் அவரது தாயின் போராட்டங்களும்தான் முக்கியமாகத் தெரிகின்றன. சமூக, பொருளாதார சீர்கேடுகளால் பாதிக்கப்படும் அம்மாக்களும் பிள்ளைகளும் உலகெங்கும் ஒன்று போலவே இருக்கின்றனர்.

பிராங்க் மக்கோர்ட் Academy of Achievement என்ற தளத்தில் அளித்த நேர்முகத்தில் அவர் தன் இளம் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட பகுதிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழாக்கம் இது:

உங்கள் குழந்தைப்பருவம் எப்படிப்பட்டதாக இருந்தது?

ஒரு வகையில் செறிவானதாக இருந்தது. நாங்கள் மிகக் கடுமையான ஏழ்மை நிலையில் இருந்தோம். பொருளாதார தளத்தில் மிகத் தாழ்ந்த நிலைக்கும் கீழிருந்தாலும், நாங்கள் எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருந்தோம். எதிர்பார்ப்பதற்கு நிறைய இருந்தது, நம்பிக்கை வைப்பதற்கு நிறைய இருந்தது, அடைவதற்கு நிறைய இருந்தது, கனவுகாண நிறைய இருந்தது என்ற பொருளில் எங்கள் குழந்தைப்பருவம் மிகச் செறிவாக இருந்தது, ஆனால் பொருளாதாரச் சூழல் மிக மோசமாக இருந்தது. மழைக்கால கல்கத்தா என்று சொல்லலாம். கல்கத்தாவிலாவது வெம்மை இருக்கிறது. (more…)