காஸ்மிக் தூசி

புல்வெட்டும் எந்திரத்துக்கு
கூடுவிட்டு கூடுபாய்ந்த
கிராமத்து வீட்டு
காராம்பசு,
தன் கட்டுப்புல்லையும்
சுவைத்து
தின்றுவிட்டது.
மறுநாள் காலை
வெட்டிய புல்லை
கொட்ட எடுக்கையில்
நாசியில் நிறையும் –
நீராவி பறக்கும் –
பசுஞ்சாணத்தின்
மணம்.