சிறுகதை

அணங்கும் பிணியும் அன்றே

தன்ராஜ் மணி

இன்று என் படுக்கையில் ஒரு ஆண் வேண்டும். பல நாட்கள் ஆகிவிட்டது. முற்றிலும் அந்நியரான உங்களிடம் இதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.  பழகியவர்களிடம் இத்தனை வெளிப்படையாய் பேச முடியாது.

நான் லின்சி, எனக்கு முப்பது வயதாகிறது, லண்டனில் ஒரு பிரபலமான வங்கியில் மென்பொருள் குழு மேலாளர் பணி. ஸ்டுவேர்ட் முறித்து கொண்டு போகும் வரை என் வாழ்வில் வெகு சில ஆண்களே இருந்தனர். என் தந்தை, அண்ணன், என் பள்ளி கால ஆண் தோழன் பென், கல்லூரி கால துணைவன் காரி, பிறகு ஸ்டுவேர்ட்.

ஸ்டுவேர்ட்டை காதலித்து தொலைத்து விட்டேன் . அழுது, கதறி புலம்பி, குடித்து , உண்டு ஒரு வழியாய் அவனை மறந்து வெளி வரும் போது ஒரு வருடம் கடந்து, இருபது கிலோ எடை கூடி ஆண்கள் வெறும் ஹாயுடன் அவசரமாக கடந்து செல்லும் பெண்ணாகிவிட்டேன்.

ஸ்டுவேர்ட்டை மறந்தாலும் அவன் விட்டு சென்ற கசப்பை என்னால் மறக்க முடியவில்லை. இந்த ஆண்களுக்கு மூளையற்ற மேனாமினுக்கிகள்தான் வேண்டும், அவர்கள் சொல்லும் சகிக்க முடியாத நகைச்சுவைக்கு சிரித்து, அவர்கள் விடும் கதைகளை நம்பிக் கொண்டு…

ஸ்டுவேர்ட்டும் ஒரு மேனாமினுக்கி பின்னால்தான் ஓடினான். ஆபாசமாய் அவனை திட்ட தோன்றுகிறது, இத்துடன் அவனை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்கிறேன், இல்லாவிட்டால் உங்கள் முன் இழிசொல் சொல்லி என் மதிப்பை இழக்க வேண்டியிருக்கும்.

இனி ஒரு ஆணை என்னால் காதலிக்க முடியாது. ஆனால் , ஆணின் உடல் எனக்களிக்கும் உவகை சொல்லில் அடங்காதது. என் அலுவலகத்தில் என் பெயர் ஆணுண்ணி. நான் வேலை பார்க்கும் இடத்தில் நான் துய்க்காத ஆணுடல் அநேகமாக இல்லை, ஒரு பாலர் சிலரை தவிர.

நான் ஓரிரு முறைகளுக்கு மேல் ஒரே ஆணுடலை உபயோகிப்பதில்லை, விலகி விடுவேன்.எந்த நிபந்தனைகளும் பாசாங்குகளும் இல்லாத அதி தூய ஊண் களியாட்டு மட்டுமே என்பதால் இதுவரை எனது ஊண் கொள்முதலுக்கு எந்த குறையும் இருந்ததில்லை. இலவசமாய் ,ஓரிரவுக்கு மட்டும் ,எந்த பின் விளைவுகளும் அற்ற ஓர் பெண்ணுடல் துய்ப்பை அவள் பேரிக்காய் போன்ற உடல்கட்டுடன் இருந்தாலும் எந்த ஆணும் மறுப்பதில்லை, அவளுடன் அன்றாடம் வாழத்தான் அவர்களால் முடிவதில்லை. அந்த ஓரிரவில் நான்தான் அவர்களுக்கு தேவதை. ஒவ்வொரு இரவும் நான் ஒரு தேவதை.., ஆஹா! எப்பொழுது நினைத்தாலும் கிறங்கச் செய்யும் எண்ணம்.

பல நிறம், பல இனம், பல நீள அகலங்களில் மூழ்கி களித்தும் தீரா பித்து இது. அவ்வளவு விரைவில் இது தீர்ந்து விடக்கூடாது என்பதே என் பிரார்த்தனை.

சரி இன்றைய விஷயத்திற்கு வருவோம். ஒரு மாதமாக இரவு பகலாக வேலை. கடினமானதொரு மென்பொருள் ஆக்கத்தை எனது குழு இந்தியாவில் இருந்து வந்திருந்த மற்றொரு குழுவுடன் இணைந்து வெற்றிகரமாக வடிவமைத்து , நேற்று பயணர் உபயோகத்திற்கு வெளியிட்டாயிற்று. இன்று அதை கொண்டாட ஒரு மது விருந்து. அதற்காகவே இங்கு வந்து அமர்ந்திருக்கிறேன்.

இந்திய குழுவின் மேலாளனும் ஒரு இந்தியன்.இந்தியனாய் இருந்தாலும் என்னுடய காக்னி நகைச்சுவைகளை கூட புரிந்து கொண்டு ரசிக்கும் அளவுக்கு இங்கிலாந்துடன் பரிச்சியம் உடையவன். இந்த ஒரு மாதத்தில் இருவரும் ஒன்றாக மதிய உணவுக்கு செல்லும் அளவுக்கு நெருங்கிவிட்டோம். இன்றைய இரவை அவனோடு கழிக்கலாமென்றிருக்கிறேன்.  இந்த கறுப்பு நிற கையற்ற , முட்டியுயர சாடின் கவுனை அவனுக்காகவே அணிந்துள்ளேன்.

என் மார்பக பிளவை மிக எடுப்பாக வெளிக்காட்டும் வி வடிவ மேல் வெட்டை கவனியுங்கள்.
நான் அறிந்த வரையில் இந்தியர்களுக்கு பெண் மார்பின் மேல் ஒரு பெரிய மோகம், இந்த கவுன் மார்பை முன்னிலை படுத்துவதிற்கு உகந்தது. அது என்னவோ ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு அங்கத்தின் மேல் ஒரு மோகம் , வெள்ளையர்களுக்கு நீண்ட கால்களின் மேல், கருப்பர்களுக்கு உருண்டு திரண்ட பின் பக்கத்தின் மேல். விதிவிலக்காக ஒருவனைக் கூட நான் கண்டதில்லை. பழுப்பு நிறத்தில் , வெள்ளை நிற சட்டையும் , அடர்நீல நிற பாண்ட்டும் அணிந்து கையில் பியர் பைண்டுடன் உயரமாக வருபவன் தான் என்னுடைய இன்றிரவுக்கான நிகழ்ச்சி நிரல்.

“என்ன எஸெக்ஸ் பெண்ணே மதியத்தில் இருந்து ஆரம்பித்துவிட்டாயா?” என்றான் என்னருகில் அமர்ந்தபடி .

“சேம்பெயினை காலை உணவுடன் பரிமாறினாலும் நான் குடிப்பேன், இப்பொழுது தான் மூன்றாவது கோப்பை. இன்று அனைத்தையும் நிதானமாய் அனுபவித்து செய்வதாய் உத்தேசம்” என்றேன் கண் சிமிட்டியபடி.

அவன் கையில் இருந்த லாகர் பியரை ஒரு மிடறு விழுங்கிவிட்டு, என்னை நோக்கி புன்னகைத்தான். “உன் உதவிகள் அனைத்திற்கும் மிக்க நன்றி, நீ இல்லாவிட்டால் எப்படி இதை முடித்து கொடுத்திருப்பேனென்றே தெரியவில்லை” என்றேன்.

“இந்த உடையில் நீ வழக்கத்தைவிட அழகாக இருக்கிறாய்”, அவன் பார்வை இன்னும் என் கண்களில் தான் நிலைத்திருந்தது. நான் பேச்சை மடை மாற்றியது அவனுக்கு பிடிக்கவில்லை, சிரித்துக்கொண்டேன்.

குழுவினர் எங்கள் மேஜையில் ஒவ்வொருவராய் வந்து குழுமினர். நான் இன்னும் சற்று நெருங்கி அமர்ந்தேன். பல பேச்சுக்கள், வெடிச்சிரிப்புகள் இன்னும் பல குவளை செம்பெயினுடன் இரவு என்னுள் வெதுவெதுப்பாய் படர்ந்திறங்கியது.

பாரில் இப்போது நிற்க இடமில்லாதளவிற்கு கூட்டம்.

பக்கத்தில் அமர்ந்திருப்பவரின் காதில் சொன்னால்தான் அவருக்கு கேட்குமளவுக்கு இரைச்சல்.
நான் அவன் மேல் என் உடல் படர சாய்ந்து அவன் காதுக்குள் “என்னைப் பிடித்திருக்கிறதா” என்றேன். என் மூச்சு அவன் கன்னங்களில் பட்டு சூடாக என் முகத்தின் மேல் பொழிந்தது. அவன் புஜங்களில் என் இடது மார்பு அழுந்திக்கொண்டிருந்தது. அவன் என் பக்கம் திரும்பாமல் புன்னகையுடன் “நீ என்ன நினைக்கிறாய்” என்றுவிட்டு ஒரு மிடறு பீரை வாயில் விட்டுக்கொண்டான். சிறு சிணுங்கலுடன் “நீ சொல்” என்றேன். என்னைப்பார்த்து முன்னால் இருப்பவர்களை நோக்கி கண் காட்டினான். “வா, ஆடுவோம்” என்று சொல்லி எழுந்து என் கையை பற்றினான், நான் என் விரல்களை அவன் விரல்களில் பின்னிக்கொண்டேன்.

இருவரும் நடன அரங்கின் கூட்டத்திற்குள் நுழைந்தோம். அவன் இடது கையால் என் இடையை சுற்றி பிடித்தான் , அவன் கண்கள் என் ஆடையின் வி வெட்டு பிளவில் நிலைத்திருக்க மெதுவாக

சில நிமிடங்கள் ஆடிக்கொண்டிருந்தோம்.

“நீ இன்னும் பதில் சொல்லவில்லை”

“நான் பிடிக்காதவர்களின் முலைகளைப் பார்ப்பதில்லை” சொல்லிவிட்டு அவன் மூக்கால் என் மூக்கை உரசினான். நான் வெடிச்சிரிப்பை உதிர்த்துவிட்டு என் மூக்கால் அவன் மார்பை செல்லமாய் முட்டினேன். அவன் கையை விட்டு விட்டு “நான் காதலில் விழுந்தேன்” என்று பாடிக்கொண்டு குதித்தேன். மீண்டும் என் இடையை வளைத்து இழுத்தான். நான் தவ்வி அவன் உதட்டை கவ்வினேன். அவன் சற்று தயங்கிவிட்டு என் மேலுதட்டில் அவன் நாவால் நீவினான். அவன் நாவை என் பற்களால் மெல்ல என் வாய்க்குள் இழுத்தேன். அவன் இதழ்கள் என் உமிழ் நீரை சுவைக்க தொடங்கியது. என் கண்கள் கிறங்க , இதயம் படபடக்க , கால்கள் நிலையிழக்க அவன் இதழ்களையும், நாவையும் சுவைத்தேன். சிறிது நேரம் கழித்து அவன் இதழ்களை பிரித்தெடுத்துவிட்டு என்னை வாஞ்சையோடு பார்த்தான். எனக்கு அங்கேயே ஆடை கலைந்து உறவு கொள்ள வேண்டும் போல் இருந்தது.

“என் வீட்டிற்கு போவோமா” என்றேன் குளறலாக.

“இன்று மட்டுமா இல்லை என்றென்றுக்குமா” அவன் பார்வையில் குறும்பிருந்தது.

“என்றன்றைக்கும்” என்றேன் பலமாக சிரித்தபடி.

“உன் என்றன்றைக்கும் பனிரெண்டு மணி நேர ஆயுள் மட்டுமே கொண்டது என்று எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது” இப்பொழுதும் அவன் கண்கள் சிரித்து கொண்டிருந்தது, ஆனால் அதில் ஒரு சிறு கத்தி சொறுகி வைக்கப்பட்டது போல் என்னுள் ஒரு வலி.

அவன் கண்ணை தவிர்க்க அவன் மார்பில் தலை புதைத்தேன்.

என் தலையில் அவன் மென்மையாய் முத்தமிடுவதை உணர்ந்தேன்.

என் மோவாயை பற்றி என் முகத்தை தூக்கி என் இதழ்களில் முத்தமிட்டான். நான் கல் போல் கண் மூடி நின்றிருந்தேன். நான் அம்முத்தத்தில் இல்லை என அறிந்து இதழ் விலக்கினான்.

“எனக்கு ஒரு நாள் போதாது” என்றான், இப்பொழுது அவனிடம் துளியும் சிரிப்பில்லை.

” கால் வலிக்கிறது, போய் அமர்வோம்” அவனை இழுத்துக்கொண்டு எங்கள் மேஜைக்கு சென்றேன்.

“நல்ல ஆட்டமா லின்சி” என்றான் தரச்சோதனை குழுவின் தலைவன் க்றிஸ், இடுப்பை முன்னும் பின்னும் ஆட்டியபடி.

“ஆம், பாதி எடை குறைந்துவிட்டது” என்றேன்.சத்தம் போட்டு போலிச்சிரிப்பொன்றை உதிர்த்தான், நல்ல போதையில் இருந்தான்.மேலே எதுவும் பேசாமல் மேஜையில் சென்று அமர்ந்தேன்.
சிறிது நேரம் மற்றவர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருந்தேன்.

என் இந்தியன் அனைவருக்கும் அடுத்த ரவுண்ட் மது வாங்க பாரை நோக்கி நடந்தான்.அவனையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் , ஒரு சிந்தனையும் இல்லாமல்.

என்னையறியாமல் ஒரு கசப்பு என்னுள் எழுந்தது. என் முன்னால் மேஜை மேல் ஒரு குவளை செம்பெயின் இருந்தது, அதை கையில் எடுத்துக்கொண்டு எழுந்து நின்றேன். என் வி விடிவ வெட்டிற்குள் குவளையின் வாயை நுழைத்து , நிதானமாக ஊற்றினேன். முற்றிலும் கவிழ்த்து விட்டு அதை மேஜை மேல் வைத்தேன். நாடக பாணியில் யானை தும்பிக்கை தூக்குவது போல் நெற்றியில் கை வைத்து உரக்க ” ஓ! ஓஹோ! என் முலைகளுடன் என் ஆடையும் நனைந்துவிட்டதே, யாராவது ஒரு கணவான் தயை கூர்ந்து என் மேல் கைப்படாமல் சுத்தம் செய்ய முடியுமா” என்றேன்.

சிலர் அடக்க மாட்டாத சிரிப்புடனும், சிலர் அதிர்ச்சியில் வாய் பிளந்தும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

க்றிஸ் எழுந்தான். அவனும் நாடக பாணியில் இரு கைகளையும் விரித்து ” லின்சி , என்றும் உன் சேவையில்” என்று கத்திக்கொண்டு மேஜையை சுற்றி ஓடி என் அருகில் வந்து நின்றான்.
நான் திரும்பி என் முலைகளை நிமிர்த்திக் காட்டி ” தொடங்குங்கள் உங்கள் சேவையை கணவானே” என்றேன்.

க்றிஸ் தன் கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு நாவை என் மார்பிளவிற்குள் விட்டு துப்புரவாய் சுத்தம் செய்ய தொடங்கினான்.

வேதாளத்தின் மோதிரம்

காலத்துகள்

நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு அதிஅத்தியாவசமாக வேதாளத்தின் மோதிரம் தேவைப்பட்டது. நான் பல நேரங்களில் கோபப்படுபவன் தான் என்றாலும் இன்றுவரை யாருடனும் கைகலப்பில் ஈடுபட்டதில்லை. அத்தகைய மூர்க்கம் எனக்குள் ஒருவேளை எழுந்தாலும், அதற்கான தைரியம் எனக்கு கிடையாது என்றே நினைக்கிறேன். ஆனால் ‘சாது’ என்று பட்டம் கொடுக்கப்படும் பலரைப் போல என் மனவுலகில் சாகஸக்காரனாகவே உலவினேன்.

நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்புறத்தில் இருந்த காலி மனை, சில நேரம் போர்க்களமாகும், சில நேரம் கொள்ளையர்களின் கப்பல் பயணிக்கும் கடலாக மாறும். இப்படி அந்த இடத்திலிருந்து வீட்டை, பள்ளியை, ஏன் உலகையே எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொண்டிருப்பேன். எனவே தீயவர்களை அழிக்கும் நாயகர்கள் பால் நான் ஈர்க்கப்பட்டது ஆச்சர்யமில்லை. அதிலும் தான் குத்து விடும் தீயவர்களின் முகத்தில் மண்டையோட்டு முத்திரையை பாதிக்கும் மோதிரம் கொண்ட வேதாளம் (phantom) என்னை அதிகம் ஈர்த்தார். அவர் வைத்திருந்ததைப் போல ஒரு மோதிரத்தை – நிஜத்தில் நான் குத்து விட யாரும் இல்லாவிட்டாலும் அந்த காலி மனையின் உலகில் என்னிடம் அடி வாங்க பல நாசகார சக்திகள் காத்திருந்தன – வாங்க வேண்டும் என்று மிகவும் விரும்பினேன். என் வீட்டிலும் அதை வாங்கித்தருவதாக சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அப்படியொரு மோதிரம் கிடைக்காது என்று அவர்கள் சொல்லி இருந்தால் நான் அன்றிருந்த மனநிலையில் அதை நம்பியிருக்க மாட்டேன் தான்.

மோதிரம் கிடைக்குமா கிடைக்காதா என நான் ஏங்கி இருந்தபோது தான் மணி என் தெருவிற்கு குடி வந்தான். ஒரே வகுப்பு என்றாலும், வேறு வேறு பள்ளிகளில் படித்து வந்தோம். காமிக்ஸ் ஆர்வம் எங்களை இணைத்தது. அவனிடம் வேதாளத்தின் மோதிரம் பற்றி நான் சொல்ல, கடைத்தெருவுக்கு சென்று பார்க்கலாம் என்று அவன் கூறினான். எங்களிடம் காசு இல்லாவிட்டாலும், எந்தக் கடையில் அது கிடைக்கிறது என்றாவது தெரிந்து கொள்ளலாமே என்பது அவன் வாதம். ஒரு சனிக்கிழமை காலை மோதிரத்தை தேடி கிளம்பினோம்.

80களில் பரிசுப் பொருட்களுக்கென்றோ, குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களுக்கென்றோ தனிப்பட்ட கடைகள் எதுவும் கிடையாது. ‘பேன்சி ஸ்டோர்’ என்ற பெயரொட்டோடு இருக்கும் சில கடைகளில் மட்டுமே மோதிரத்தை தேட வேண்டும். பஜாரில் நாங்கள் நுழைந்த முதல் கடையில், ‘வேதாள மோதிரம் இருக்கா’ என நாங்கள் கேட்க எங்களை கடைக்காரர் பார்த்த பார்வை அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. ஏதேனும் மந்திரவாதியின் அடிப்பொடிகளான குட்டிச்சாத்தான்கள் என எங்களை அவர் கருதி இருக்கக் கூடும் என்று நினைத்தோம். அடுத்த இரு கடைகளில் எங்களை வம்பு செய்ய வந்தவர்கள் என்று கருதி, ‘கடை தொறந்தவுடனேயே தரித்திரங்க வந்துடுச்சு’ போன்ற வசவுகளோடு துரத்தி விட்டார்கள். யாரும் நாங்கள் அப்படியொரு மோதிரத்தை தேடுகிறோம் என்பதை நம்பவே இல்லை. இன்னும் ஓரிரு கடைகள் மட்டும் பார்ப்போம் என்று முடிவு செய்து நாங்கள் நுழைந்த கடை தான் கணேசன் அண்ணனுடையது. நாங்கள் சொல்லியதைக் கேட்டதும் அவர் முகத்தில் தோன்றிய புன்னகையில், நக்கலோ, கிண்டலோ இல்லை. அத்தகைய மோதிரம் கடையில் இல்லையென்று சொன்னவர், ‘இதை பாருங்கள்’, என்று சில காமிக்ஸ் புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார். அண்ணனும் காமிக்ஸ் ஆர்வலர். கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தந்தைக்கு துணையாக கடையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மோதிரம் கிடைக்கவில்லை என்றாலும் அவருடன் ஏற்பட்ட தொடர்பு எங்களுக்கு உற்சாகமளித்தது (அவர் படிக்கத் தந்த புத்தகங்களும், பத்திரிக்கைகளும்தான்). ஒவ்வொரு சனி, ஞாயிறும் காலையில் சில மணி நேரம் அவர் கடையில் இருப்பதை பழக்கமாக்கிக் கொண்டோம். சில பல ஆண்டுகள் பழமையான (பெரும்பாலும் தமிழ்) காமிக்ஸ் புத்தங்களை அவர் வைத்திருந்தார். கடையில் வாடிக்கையாளர்களுடன் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, ஓரத்தில் அமர்ந்து அவற்றை படித்துக் கொண்டிருப்போம். யாருமில்லாத ஒரு நாளில் டார்ஜானுக்கும் வேதாளத்திற்கும் சண்டை வந்தால் யார் ஜெயிப்பார்கள் என்று அவருடன் படு சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் நுழைந்தார். வெளியே கிடந்த புத்தகங்களையும், எங்களையும் பார்த்து விட்டு, ‘நீ கெட்டது போறாதுன்னு இவங்களையும் கெடுக்கறையா”, என்று அண்ணனிடம் சண்டை பிடித்தார். நாங்கள் பயந்து ஓடி விட்டோம். ஓரிரு வாரங்கள் அந்தப் பக்கம் போகவில்லை. பிறகு ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு செல்ல, கடையில் அண்ணன் மட்டுமே இருந்தார்.

அவரை அன்று திட்டியது அவர் அப்பாவாம். தன்னைக் குறித்தும், தன் ஆசைகள் குறித்தும் அண்ணன் அப்போதுதான் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். சின்ன வயதிலிருந்தே அவருக்கு கதைகள் படிப்பதில் மிகுந்த ஆர்வம். அவர் தந்தைக்கு அதெல்லாம் வீண் வேலை என்ற எண்ணம். படிப்பு முடிந்த பின் ஏதேனும் அரசு வேலைக்கு மகன் செல்ல வேண்டும் என்பதே அவரது ஆசை. அண்ணன் செங்கல்பட்டிலேயே ஒரு வேலை பார்க்க வேண்டும் அல்லது கடையை நடத்த வேண்டும் என்று எண்ணியிருந்தார். அவரைப் போல செங்கல்பட்டை அங்குலம் அங்குலமாக சுற்றி வந்தவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். ‘பழைய பஸ்ஸ்டாண்ட்’ என்று அழைக்கப்படும் செங்கல்பட்டின் ஒரு எல்லையில் இருந்து, இன்னொரு எல்லை என்று சொல்லக்கூடிய கலெக்டர் ஆபீஸ்ஸை தாண்டி இருக்கும் பிள்ளையார் கோவில் வரை சைக்கிளில் சென்று திரும்புவார். (இந்த பிள்ளையார் கோவில் பிரசத்திப் பெற்றது. அந்த வழியே செல்லும் தொலைதூர வாகனங்கள் அங்கு நின்று தேங்காய் உடைத்துவிட்டுச் செல்வது வழக்கம். 60 களில் தமிழில் வெளியான ‘பஸ்’ முக்கிய பாத்திரமாக வரும் படம் -ரோட் மூவி என்று அதை வகைப்படுத்தலாமா என்று தெரியவில்லை – ஒன்றில் பஸ் இங்கு நின்று தேங்காய் உடைத்து செல்வதாக ஒரு காட்சி வரும். இதை 80களிலும் பெருமிதத்தோடு குறிப்பிட ஒரு சிலர் இருந்தார்கள்). இதிலும் ஒரே பாதையில் செல்லாமல், வேறு வேறு தெருக்களில் நுழைந்து வருவார். பெரியமணியக்காரத் தெருவில் நாங்கள் வசித்தோம் என்று சொன்ன போது , அதன் அருகில் இருந்த ‘டப்பா ஸ்கூல்’ என்று அழைக்கப்பட்ட, அதிகமும் -பல பள்ளி, கல்லூரி மாணவர்களாலும், – விளையாட்டு மைதானமாகவே உபயோகப்படுத்தப்பட்ட அரசு ஆரம்பப்பள்ளி பள்ளி, ராமர் கோவில், மிகவும் மாசுபடுத்தப்பட்ட கோவில் குளம் எல்லாவற்றையும் சரியாக குறிப்பிட்டார். அது மட்டுமல்ல, “உங்க தெருல ஒரு வீட்ல ஆளோட சிலை ஒண்ணு இருக்கும்ல” என்று கேட்டு எங்களை ஆச்சரியப்படுத்தினார்.

அது நான் குடியிருந்த வீடு தான். அந்த மார்பளவுச் சிலை வீட்டின் சொந்தக்காரருடையது தான். அவர் மகன் தந்தை நினைவாக அதை வீட்டில் எழுப்பி இருந்தார். உயிருடன் இருக்கும் வரை தந்தையும் மகனும் அடித்துக் கொண்டதெல்லாம் வேறு கதை. வீட்டிலேயே சிலை வைத்தது அந்நாட்களில் எங்கள் தெருவில் பரபரப்பை கிளப்பிய விஷயம். ‘ செல இருக்கற வீடு தானே’ என்றே குறிப்பிடுவார்கள். என் நண்பர்கள் அதை வைத்து என்னை கிண்டல் செய்வதும் உண்டு. இப்போதும் நண்பர்களுடன் செங்கல்பட்டு நாட்களை பற்றி பேசும் போது, நான் குடியிருந்த வீட்டை ‘அந்த சிலை வீடு தானே ‘ என்று தான் குறிப்பிடுகிறார்கள். எங்கள் தெரு என்றில்லை, செங்கல்பட்டில் எந்த இடத்தை, தெருவை சொன்னாலும் அங்குள்ள அல்லது அருகிலுள்ள ஏதேனும் குறிப்பிடத்தக்க அடையாளச் சின்னத்தை அவரால் துல்லியமாக சொல்ல முடியும். ரயில் நிலையமருகே இருந்த- 60களில் அரசு மருத்துவமனையாக இருந்து கைவிடப்பட்ட – பாழடைந்த கட்டிடங்களுக்கு எங்களை அழைத்துச் சென்று, “இங்கு எத்தனை பேர் பிறந்திருப்பாங்க, இறந்திருப்பாங்க, எவ்வளவு பரபரப்பரா இருந்திருக்கும்” என்பதாக ஏதோ சொல்லி வந்தார். அப்போது பெரிதாக புரியாவிட்டாலும், வரலாறு (கடந்த காலம்) என்பது அரசர்கள், போர் என்பது மட்டுமே அல்ல, சிதிலங்கள் தோல்வியின் இடிபாடுகள் மட்டுமல்ல, கைவிடப்பட்ட முயற்சிகளின் மிச்சங்களாகவும் இருக்கலாம் என்ற எண்ணத்தை என்னுள் அவர்தான் விதைத்தார் என்று நினைக்கிறேன். வெற்றியோ தோல்வியோ, அல்லது எதிர்கொள்ளத் தவறிய யுத்தங்களோ, காலம் தன் முத்திரையைப் பதிக்கத் தவறுவதில்லை.

இத்தகைய மனநிலையில் இருந்தவருக்கு சொந்த ஊரை விட்டு பிரிய மனசே இல்லை என்பது இயல்பான ஒன்றுதான். அரசாங்க வேலையென்றால் பணியிட மாறுதலால் உள்ளூரில் தொடர்ந்து இருக்க முடியாது என்று அவர் நினைத்தார். வேலைக்கு போகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்கில்லை. செங்கல்பட்டில் தனியார் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகமில்லை என்பதால், தினமும் சென்று திரும்பும்படி சென்னையில் வேலை தேடினார், தனியார் நிறுவனமொன்றில் ஒரு வேலை கிடைத்தும் அரசு தேர்வுக்கு தயாராகவேண்டுமென்று அவர் தந்தை அதில் சேருவதிலிருந்து தடுத்து விட்டார்.

அவர்கள் கடையையேகூட வங்கியிலோ அல்லது தனியாரிடமோ கடன் வாங்கி விரிவாக்கும் எண்ணம் அவருக்கு இருந்தது. சென்னைக்கு சென்று அங்கு எந்த மாதிரியான புது பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றெல்லாம் கூட பார்த்து வந்தார். தன் மற்ற ஈடுபாடுகளுக்கு இடையேயும் வேலை, தொழில் குறித்து யோசித்துக் கொண்டு தான் இருப்பார். எங்கள் ஊரில் தசரா பண்டிகையின் இறுதி நாட்களில் சந்தை ஒன்று நடக்கும். ராட்டினம், (பொம்மை) துப்பாக்கி வைத்து சுடுதல், வளையத்தை எறிந்து அது எந்தப் பொருள் மீது விழுகிறதோ அதை சொந்தமாக்குதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன், நிறைய கடைகளும் போடப்படும். மேட்டுத் தெரு என பொதுவாக அழைக்கப்பட்ட பாதையில் 2-3 கிலோமீட்டர் வரை விரிந்திருக்கும் சந்தையின் ஒரு எல்லை எங்கள் வீட்டிற்கு அருகிலேயும் (ராமர் கோவில் குளத்தை ஒட்டி உள்ள தெருவில்) இருந்தாலும் எங்கள் வீட்டிற்கு மிக எங்கள் வயதைக் கருதி தனியாக அனுப்ப மாட்டார்கள் என்பதால், நாங்கள் நினைக்கும் அளவிற்கு அந்தச் சந்தையில் சுற்றித் திரிய முடியாது. அந்த வருடம் எங்களை அழைத்துச் செல்வதாக அண்ணன் கூறினார். எங்களை இரவில் தனியாக அனுப்ப வீட்டில் முதலில் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், நானும் மணியும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்போம் என்று கூறி சமாதானப் படுத்தி விட்டோம். பெரியவர்களின் அதீத கட்டுப்பாடு இல்லாமல் நாங்கள் கண்டு களித்த முதல் தசரா சந்தை அதுதான். பல கடைகளுக்கு எங்களை அழைத்துச் சென்றவர், பேன்சி பொருட்கள் விற்கப்படும் இடங்களில் அதிக நேரம் கழித்தார். என்ன மாதிரியான பொருட்கள் அதிகம் விற்கின்றன என்று கவனித்தவர், அவற்றை சந்தை முடிவதற்குள் தானும் கொஞ்சம் கொள்முதல் செய்யப்போவதாக சொன்னார்.

ஆனால் இதெல்லாம் அவர் தந்தையிடம் எடுபடவில்லை. மகன் அரசாங்க உத்தியோகத்தில் சேர்வது மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்தது. அண்ணன் வியாபாரத்தை கவனிப்பதையே அதிகம் விரும்பாதவர், அவர் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதையோ, புத்தகங்கள் படிப்பதையோ எப்படி ஏற்றுக்கொள்வார், இதில் அவர் கதைகளும் எழுதுகிறார் என்றால் சும்மா விடுவாரா? அண்ணன் கதைகளும் எழுதுவார் என்பது எங்களுக்கு வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. கூச்சத்துடன் ‘பூந்தளிர்’ இதழ் ஒன்றை எடுத்து அதில் வெளியாகி இருந்த ஒரு சிறுகதையை காட்டினார். அது புனைப்பெயரில் அவர் எழுதியது. பல கதைகள் எழுதி, சிலவற்றை அனுப்பியுள்ளதாகவும் அவற்றில் இது ஒன்று தான் பிரசுரமாகியுள்ளது என்று சொன்னார். எங்களுக்கு கொண்டாட்டம் அதிகமாகி விட்டது. அந்த கோடை விடுமுறையில் நிறைய நேரம் அவருடன் கழித்தோம். அவர் மனதில் இருந்த கருக்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வார், நாங்களும் எங்களுக்குத் தோன்றியதை சொல்வோம். அந்த மே மாதம் பூந்தளிரில் வெளியாகிய அவருடைய ஒரு கதையில் என்னுடைய பங்களிப்பும் கொஞ்சம் இருந்தது என்பது இன்றும் எனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. நானும் ஒரு வகையில் அச்சு ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்டேன் என்று எண்ணிக்கொள்கிறேன்.

சிறார் கதைகளைத் தவிரவும் வேறு சில கதைகளை அண்ணன் படிப்பார், எழுதுவார் என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது. அவர் கடையில் தான் முதன் முதலில் ‘கணையாழி’ பத்திரிக்கையைப் பார்த்தேன். நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து வருவார். நாங்கள் அவற்றைப் பற்றிக் கேட்டால், ‘நீங்கள் இதெல்லாம் கண்டிப்பா படிக்கணும், ஆனா இப்போ வேண்டாம்’ என்று சொல்லி விடுவார். “பெரியவங்க வேற மாதிரி படிப்பாங்க இல்ல அண்ணா ” என்று ஒருமுறை நாங்கள் கேட்க, ஒரு புத்தகத்தை எங்களிடம் காட்டி ‘நீங்க வேதாள மோதிரத்தை தேடி அலைஞ்சீங்க இல்ல, அதே போல் இந்த புத்தகத்துல வர பொண்ணு இருக்கற தெருவை தேடி சில பேர் கும்பகோணம் போறாங்க. விஷயம் வேணா வேறவா இருக்கலாம், ஆனா படிக்கறதுங்கறது ஒரே மாதிரியான கிறுக்கு தான் ” என்றார். என்னடா பெண்ணை தேடி போறாங்களே என்று அப்போது தோன்றினாலும் (பெண்களை கவனிக்காமல் இருப்பது தான் கௌரவம் என்ற பருவத்தில் அப்போது இருந்த எங்களுக்கு ,ஓரிரு ஆண்டுகளிலேயே அதன் பிழை தெரிந்து விட்டது என்பது வேறு விஷயம்) அந்தப் பெண் யார் என்பதும், அப்படி தேடித் செல்வது அந்தப் புத்தகத்தின் வாசகனைப் பொறுத்தவரை புனித யாத்திரையாக இருக்கும் என்பதும் நானும் கல்லூரி படிக்கும் காலத்தில் அந்த நாவலை வாசித்தபோதுதான் புரிந்தது.

அண்ணன் அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெறாதது அவர் தந்தைக்கு மிகவும் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பன்முக ஆளுமையும் ஆற்றலும் கொண்ட அவர் வேண்டுமென்றே தேர்வுக்காக பெரிதாக பிரயத்தனம் செய்யாமல் இருந்திருக்க வேண்டும் என்று எனக்கு சில வருடங்கள் கழித்து தான் சந்தேகம் வந்தது. அவர் தந்தைக்கு அது அப்போதே பிடிபட்டிருக்க வேண்டும். பெரும்பாலானப் பெற்றோர்களை போல ‘கால் கட்டு போட்டா சரியாகிவிடும்’ என்று முடிவு செய்து சொந்தத்திலேயே மணம் முடித்து விட்டார். திருமணம் செங்கல்பட்டில் தான் நடந்தது, அண்ணன் எங்களுக்குக்கூட பத்திரிகை வைத்தார். ஆனால் நாங்கள் செல்ல முடியாத சூழல். அண்ணனைப் பற்றியே வீட்டில் யாருக்கும் தெரியாத போது திடீரென்று எப்படி சொல்ல என்று போகாமல் இருந்து விட்டோம். திருமணம் முடிந்த ஓரிரு வாரங்கள் கழித்து கடைக்குச் சென்றபோது அவர் மனைவியும் அங்கிருந்தார். அண்ணன் எங்களை திருமணத்திற்கு வராததற்காக திட்டினார், பின் ‘நான் சொல்லல அந்தப் பசங்கதான்’ என அவர் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அக்கா என்று அவரை நான் முதலில் அழைக்க, ‘ஏண்டா நான் அண்ணன் இவ அக்காவா’ என்று சிரித்தபடி அவர் கேட்க, புரிந்தும் புரியாமலும் வெட்கமாகி விட்டது. பிறகு அவர் மனைவியை ‘மன்னி’ என்று அழைக்க ஆரம்பித்து விட்டேன். மன்னியும் அண்ணனை புரிந்து கொண்டது அவருடைய அதிர்ஷ்டம் தான் என்று சொல்ல வேண்டும். சொந்தமென்பதால் அண்ணனைப் பற்றி அவருக்கு முன்பே தெரிந்திருக்கக் கூடும். மன்னி அண்ணனின் கதைகளின் முதல் வாசகியானார்.

எத்தனை முறைதான் மோசமாக தேர்வெழுத முடியும். அந்த வருடமே அவருக்கு அரசுப் பணி கிடைத்தது. தென் தமிழகத்தில் பணி. அண்ணியுடன் கிளம்பிவிட்டார். கிளம்பும் முன் அவரைப் பார்க்க கடைக்குச் சென்றிருந்த போது, சோர்வாகவே இருந்தார். “சீக்கிரம் ட்ரான்ஸ்பர் வாங்கி வந்துடனும்” என்று வேலைக்குச் சேரும் முன்பே பணியிட மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கே அது குறித்த அதிக நம்பிக்கை இல்லை என்று தெரிந்தது. நாங்கள் கிளம்பும்போது “படிக்கறத மட்டும் விடாதீங்க, அப்பப்போ கடைப்பக்கம் வந்து பாருங்க” என்று சொல்லியவர் ,சில காமிக்ஸ் புத்தங்களை அன்பளிப்பாக கொடுத்தார். பிறகு நாங்கள் அவ்வப்போது கடைப் பக்கம் சென்றாலும் அவரை பார்க்க முடியவில்லை. அந்த வருட கோடையில் மணியின் தந்தையும் பணி மாற்றலாகி வேறு ஊர் செல்ல, அது ஒரு சேர வருத்தத்தையும், அண்ணனும் இதே போல் மீண்டும் செங்கல்பட்டு வரக்கூடும் என்ற நம்பிக்கையும் கொடுத்தது.

அப்படி எதுவும் நடக்கவில்லை. அடுத்த சில வருடங்களுக்கு அவரைப் பார்க்க முடியவில்லை என்றாலும், பஜார் பக்கம் செல்ல வேண்டியிருக்கும் போதெல்லாம் அண்ணனின் கடைவழியே செல்வேன், அவர் தந்தை தான் எப்போதும் இருப்பார். பூந்தளிர்,கோகுலம் போன்ற இதழ்களில் அவர் பெயரில் ஏதேனும் கதைகள் வெளிவந்திருக்கின்றனவா என்று தேடுவேன். நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு மாலை ஏதோ வேலையை முடித்துக் கொண்டு வழக்கம் போல் அவர் கடை வழியாகச் சென்ற போது அண்ணன் உள்ளே இருந்தார். அவரைக் கண்டதும் பரவசமாக இருந்தாலும், என்னை நினைவில் வைத்திருப்பாரா என்ற தயக்கத்துடன் உள்ளே சென்று என் பெயரைச் சொல்லி என்னைத் தெரிகிறதா என்று கேட்டேன். பெரிய சிரிப்புடன் ‘டேய் எப்படி டா மறக்க முடியும்” என்று என்னை தழுவிக் கொண்டார். பரஸ்பர தகவல்களை பரிமாறிக்கொண்டோம். மணி வேரூருக்குச் சென்றதையும், சில காலம் கழித்து அவனுடனும் தொடர்பறுந்து போனதையும், அதுவரை அவன் எனக்கு அனுப்பிய கடிதங்களில் அவரைப் பற்றி விசாரித்ததையும் தெரிவித்தேன்.

அண்ணனுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. ” வீட்டுக்கு வந்து பாப்பாவையும் உங்க மன்னியையும் பாரு” என்றார். லீவில் வந்திருக்கிறாரா என்று நான் கேட்டதற்கு “ஆமாம்டா, கடைய விக்கப் போறோம். அப்பாவால தனியா பாத்துக்க முடியல” என்றவர் “வீட்ட கூட இன்னும் கொஞ்ச மாசத்துல வித்துட்டு போயிடுவோம்” என்று சோர்வுடன் சொன்னார். “என்னன்னவோ நெனச்சிருந்தேன்” என்று தனக்குள்ளேயே ஆயாசத்துடன் கூறிக்கொண்டார். எதுவும் சொல்லத்தோன்றாமல் அமைதியாக இருந்தேன். சூழலை இலகுவாக்கும் என்று நினைத்தாரோ என்னவோ “என்னடா இன்னும் மோதிரத்தை தேடறயா” என்று அவர் கேட்க, சட்டென்று கண்ணில் நீர் தளும்பியது போல் இருந்தது. பேசினால் அழுது விடுவேன் என்று தோன்ற, எதுவும் சொல்லாமல், தொண்டையில் திரண்டுக் கொண்டிருந்த அழுகையை அடக்கியவாறு அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். “உன்ன பாத்ததும் நல்லதா போச்சு, நாளைக்கு சாயங்காலம் கடைக்கு வா. வீட்டுக் அழைச்சிட்டுப் போறேன், நெறய காமிக்ஸ் இருக்கு. எல்லாம் எடுத்துக்கோ, இனி அதுக்கெல்லாம் எங்க எடம்” என்றார். தலையாட்டி விட்டு கிளம்பியவன் அடுத்த நாள் அங்கு செல்லவில்லை. ரெண்டு மூன்று வருடங்கள் சென்ற பின்பே மீண்டும் அந்தத் தெரு வழியாகச் செல்லும் மனநிலை ஏற்பட்டது. ஆனாலும், 15 வருடங்கள் கழித்து நாங்களும் ஊரிலிருந்து கிளம்பும் வரையிலும் கூட, அந்தத் தெரு வழியாகச் செல்வதை முடிந்தளவு தவிர்க்கவே முயன்று கொண்டிருந்தேன்.

Does an Oil-mill Give Birth?

Translation and illustration: SiSu

oilmill 1
A trader was returning to his town with a pregnant mare he had just bought at a fair.

The sky darkened mid-way. As the mare was big with its baby, she struggled to take even one more step. So he approached a village to spend the night.

At the entrance of the village, there was an oil-merchant’s mill and a thatched shelter for keeping oilcakes and oil for sale. With the merchant’s permission, the trader tied up his mare to the oil-mill and lied down under the thatch.

Awfully tired, he fell sound asleep.

oilmill 2
When he woke up, it was broad daylight. He rolled up his stuff and got ready for the journey.

When he went to untie his mare from the oil-mill, a surprise was waiting for him.

Yes, his mare had given birth to a beautiful little foal!

Happily, the trader untied his mare and started leaving along with the foal. Just then, he heard the call, “Stop!” The trader stood stunned.

The mill-owning merchant came running.

“Mister horseman! Why sir, you are making away with the foal that my oil-mill has birthed…” he threatened.

The trader could not understand a thing.

“Mister…you came here with just a mare. So leave with the mare only…the foal was birthed by my oil-mill…” he thundered indignantly.

The flustered trader went to the village elders and they gathered the village council. The council made up of utter fools as it were, asked, “How do we know that it was indeed the mare who birthed the foal? What is the proof?”

Hmm…poor trader, what answer could he give?

Finally, since it could not be proved that it was surely the mare who gave birth to the foal, they passed judgment that the foal belonged to the milliner. The saddened trader turned to go home. On the way he bumped into a fox.

oilmill 3

“Brother sir! Why do you look so worried?” it asked. The horseman told the fox all that had happened and cried.

After thinking a bit, the fox told him, “You go back and call the council. I will speak the law for you.” Following the fox’s instructions, the trader went back and again gathered the village council. He also told them that ‘Mr Fox’ was going to plead for him. The crowd gathered. Everybody eagerly waited for Mr Fox to come.

Time was running out. The trader lost hope that the fox would ever show up. But just when he was about to walk away, Mr Fox came running in hastily. The proceedings began. Both the parties related their arguments. Without even lending an ear to them, the fox yawned and nodded off ever so sleepily.

oilmill 4

The village elders became infuriated.

One of them bellowed, “What is this Mr.Fox? Are you sleeping in the council only to humiliate us?”

Without the slightest alarm, the fox replied, “Sir, don’t be angry. I did not sleep a wink last night. I was wide awake till dawn…”

“Why…”

“Oh, the ocean in our village had caught fire, and we had a rough time putting it out. All our villagers had to toil and toil till dawn!” fabled the fox.

The entire gathering guffawed with laughter!

“Why do you lie through your nose? Where in the world does an ocean – for that matter, water – ever catch fire?” they asked the fox.

The fox asked back, “Why sirs…in such times when an oil-mill can give birth to a foal, is it so surprising that an ocean can catch fire?” The village elders were taken aback by this question.

They started murmuring among themselves.

‘Ofcourse…how can an oil-mill ever give birth to a baby foal?!’

‘This is madness!’

– there were so many such voices.

And then…? According to the new judgment, the trader got back his foal along with the mare and drove them both towards his home!

***

(Compiled and written by Vira.Velusami,  Edited by Ki.Rajanarayanan)

யாருமற்ற மனை

காலத்துகள்

செங்கல்பட்டில் நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்புறத்தில் -சகோதர பூசலினால் யாரும் பயன்படுத்தாத – காலி மனையொன்றும், அதன் ஒரு புறம் பங்களா பாணியிலான, யாரும் வசிக்காத வீடொன்றும், இன்னொரு புறம் முதியவர் ஒருவர் மட்டுமே வசிக்கும் பழமையான சத்திரமும் இருந்தது. சிறுவர்களான எங்களுக்கு இந்தச் சூழல் தந்திருக்கக் கூடிய உற்சாகத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை.

அந்த வீட்டில் சில பல பேர் கொன்று புதைக்கப்பட்டிருப்பதாகவும் பேய் ஒன்று உலவுவதாகவும் ஒரு புரளி தெருவில் உலவியது. இந்திய பேய்களின் தேசிய உடையான வெள்ளைச் சேலையில் இல்லாமல் கறுப்புப் புள்ளிகள் நிறைந்த மஞ்சள் நிற புடவையில் உலா வருவதாக புரளியை கிளப்பி விட்டவனின் கற்பனை வளம் இன்றும் வியப்பளிக்கிறது. அப்பேய் வழக்கம் போல் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு உலவியதா அல்லது விசேஷ தலையலங்காரம் ஏதேனும் செய்திருந்ததா என்பது குறித்து இப்போது எனக்கு சரியாக நினைவில்லை.

இப்படிப்பட்டச் சூழலில், மனையில் கிரிக்கெட் விளையாடும்போது, பந்து பங்களாக்குள் சென்று விட்டால் அதை எடுத்து வருவதை சாகசமாகவே கருதினோம். ஒருமுறை அப்படி பந்தெடுக்கச் சென்றபோது எலும்புத் துண்டு ஒன்று தட்டுப்பட அதை மனித எலும்பென்று முடிவு செய்து , யார்/ எப்படி கொலை செய்யப்பட்டார்கள், யார் செய்தார்கள் என்றெல்லாம் எங்களை நாங்களே துப்பறிவாளர்களாக பாவித்து சில நாட்கள் அது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். வீட்டில் இருந்த கிணற்றை எட்டிப் பார்த்து, ஏதேனும் உடல் தெரிகிறதா -அது எப்படி சாத்தியம் என்றெல்லாம் யோசிக்கலாம் – என்றும் பார்ப்போம்.

எட்டாம் வகுப்பு ஆண்டுப் பரீட்சை முடிந்த அந்த கோடை விடுமுறையில் அந்த பங்களா கிளப்பாக மாற்றப்படுகிறது என்று அறிந்தோம். கிளப் என்றவுடன் எங்கள் மனக்கண்ணில் தோன்றிய வண்ண வண்ண விளக்குக்கள் , காபரே, சீட்டாட்ட, குடிகாரச் சண்டைகள் இவையெல்லாம் இல்லாமல், ஒரு சிறு போர்ட் மட்டும் தொங்க விடப்பட்டு, மாலையில் சிலர் வந்து எந்த பிரச்சனையும் செய்யாமல் செல்வது மட்டுமே நடந்தது எங்களுக்கு சற்று ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. அப்போது தான் அவன் கிளப்பில் வேலைக்குச் சேர்ந்தான்.

செங்கல்பட்டிற்கு அருகிலிலுள்ள கிராமமொன்றில் இருந்து வந்திருந்த அவன் எங்களைவிட ஓரிரு வயது மூத்தவன். ஏதோ ஒரு கட்டத்தில் -நாங்கள் பந்தை கிளப்பில் இருந்து எடுக்க சென்ற போதாக இருக்கலாம் – எங்களுடன் பழக ஆரம்பித்தான். அவனுடைய தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி இருந்தார். சித்திக் கொடுமையெல்லாம் இல்லையென்றும், தனக்கு படிப்பில் விருப்பமில்லாததனாலும், வறுமை காரணமாகவும் தெரிந்தவர் மூலம் இங்கு வேலைக்கு சேர்ந்ததாகச் சொன்னான். அங்கேயே தங்கி இடத்தை சுத்தப் படுத்துவது, கடையிலிருந்து வேண்டிய பொருட்களை வாங்கி வருவது போன்ற வேலைகளை செய்து வந்தான்.

எப்போது என்ன வேலை வரும் என்று சொல்ல முடியாததால் அவன் தினமும் எங்கள் விளையாட்டில் கலந்து கொள்வான் என்று சொல்ல முடியாது, சில நேரங்களில் பாதி விளையாட்டில் சென்று விடுவான். ஓரிரு நாட்கள் அவனைக் காணவே முடியாது, அல்லது அவன் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம். ஆனால் மீண்டும் எப்போது அவன் எங்களுடன் கலந்து கொண்டாலும், அந்த இடைவெளியே தெரியாதவாறு, தொடர்ந்து எங்களுடன் பழகிக் கொண்டிருப்பவன் போல சேர்ந்து கொள்வான். பந்து வீச்சு, பேட்டிங் செய்வது, விக்கெட் கீப்பிங் என அனைத்தையும் அனாயசமாக செய்தான். நாங்கள் கூச்சலிட்டபடி ஒவ்வொரு பந்தையும், ரன்னையும், விக்கெட்டையும் எதிர்கொண்டிருக்க , 1 ரன் மட்டுமே எடுத்தாலும் அதையும் எந்த பிரயத்தனமும் இல்லாமல் செய்த உணர்வையே அவன் தருவான். அவன் களத்தில் இருக்கும் போது எங்கள் கிரிக்கெட் திறனைக் குறித்த தாழ்வுணர்ச்சியை உருவாக்கி விடுவான். கிளப்பில் உள்ள மற்ற வேலையாட்களுடனும் கூட மிக இயல்பாகவே அவன் பழகுவதை பார்த்திருக்கிறேன். மற்றவர்கள் யாரும் விளையாட இல்லாத போதும் வீட்டின் பின்புறச் சுவற்றில் உட்கார்ந்து அவனுடன் பேசிக்கொண்டிருப்பேன்.

அந்த இடத்தில் தனியே அமர்ந்திருப்பது நாங்கள் அந்த வீட்டிற்கு குடிவந்ததில் இருந்து எனக்கிருந்த பழக்கம். காலி மனையின் ஒரு ஓரத்தில் இரு தென்னை மரங்களும், பஞ்சு மரம் ஒன்றும் இருந்தன. யாரும் கவனிக்காததால் பஞ்சு தானே வெடித்து தென்னை மரத்தின் காற்றில் பறக்கும்போது அவற்றைப் பிடிக்க முயல்வேன். இரவு நேரத்தில் சில நேரங்களில் அங்கு மின்மினிப் பூச்சிகள் தென்படும், அவற்றை ஜாடியில் அடைக்க நினைத்தாலும், இரவு நேரத்தில் அந்த மனைக்குச் செல்ல வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். அங்கு முளைத்திருக்கும் புதர்களில் பட்டாம்பூச்சிகள் வந்தமரும். நான் ஆறாவது படிக்கும்போது ஏதோவொரு புத்தகத்தைப் படித்துவிட்டு, அவற்றைக் கையாலேயே பிடிக்க முயன்று (அவற்றை பிடிக்க பயன்படும் வலையை இன்றுவரை நான் நேரில் பார்த்ததில்லை அலர்ஜி ஏற்பட்டு) -ஏதேனும் பூச்சி கடித்திருக்க வேண்டும் -, வீட்டில் கடும் திட்டு வாங்கினேன். அத்துடன் இயற்கையியலாளர் ஆகும் என் முயற்சி முடிவுக்கு வந்தது. இத்தகைய ஒரு இடத்தில் நாங்கள் சில வருடங்கள் கிரிக்கெட் விளையாடினோம் என்பதை நினைக்கும்போது இப்போது மிகவும் வியப்பாக இருக்கிறது. நான் கற்பனையில் செய்யும் சாகசங்களை அரங்கேற்றும் இடமாகவும் அது இருந்திருக்கிறது. யாருமற்ற மனையை பார்த்தபடி என் வீர தீர பராக்கிரமங்களை மனதில் சொல்லிக்கொண்டிருப்பேன்.

அந்த விடுமுறையில் அடுத்த தெருவில் இருந்த முரளியிடம் சில ஸ்டாம்ப்களை பார்ப்பதற்காக வாங்கியிருந்த நான் அவற்றை தொலைத்து விட்டேன். அவற்றுக்கீடாக அதே மதிப்பில் உள்ள சில ஸ்டாம்ப்களை தருவதாக சொல்லியும் அவன் கேட்காமல் 3 ருபாய் தர வேண்டும், இல்லையென்றால் வீட்டிற்கு வந்து சொல்லி விடுவேன் என்று கறாராக கூறி விட்டான். 80களின் இறுதிப்பகுதிகளில் மத்தியதர குடும்பப் பையனிற்கு 3 ருபாய் என்பது பெரிய தொகை என்பதால் நான் மிரண்டு விட்டேன். இதைப் பற்றி நான் அந்தப் பையனிடம் புலம்பிக்கொண்டிருக்க, முரளியிடம் தான் பேசுவதாக சொன்ன அவன் அதன் படியே பேசி, நான் தொலைத்தவற்றுக்கு ஈடாக மாற்று ஸ்டாம்ப்களை ஏற்கத் செய்து விட்டான். இத்தனைக்கும் அவனக்கு ஸ்டாம்ப் பற்றி எதுவும் தெரியாது, நான் முரளியிடம் முதலில் என்ன சொல்லி அது ஒப்புக்கொள்ளப்படவில்லையோ, அதையேதான் அவனும் கூறினான். ஆனால் அவன் சொன்னதை முரளி ஏற்றுக்கொண்டான் என்பது தான் விஷயம் (இதை என்னுடைய அசமஞ்சத்தனத்திற்கான பால்ய கால நிரூபணம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்) .

இப்போது யோசிக்கையில் இப்படி எந்த (பழகிய/பழகாத) சூழ்நிலையிலும் தன்னை எந்த பிரயத்தனமும் இல்லை எளிதில் பொருத்திக் கொள்ளும் குணம் தான் அவனுடைய சிறப்பம்சம் என்று தோன்றுகிறது. அதனால் தான் சத்திரத்து தாத்தாவுடன் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

70 வயதிற்கும் மேல் இருந்திருக்கக்கூடிய அவருக்கு ஒரு கண்ணில் மட்டுமே பார்வையுண்டு. அவரைப் பற்றியும் சில சுவாரஸ்ய புரளிகள் தெருவில் உலவின. பந்து சத்திரத்தினுள் சென்றால் எடுக்கச் செல்லும் போது அவரைப் பார்ப்போம். அதட்டவோ, மிரட்டவோ செய்யாமல் எங்களை பந்தை எடுத்துச் செல்ல அனுமதிப்பார். எனினும் அவருடன் நாங்கள் பேசியதெல்லாம் இல்லை, எனவே இவன் அவரைக் குறித்து சொன்ன விஷயங்கள் எங்களுக்கு புதிதாகவும் ஆச்சர்யமாகவும் இருந்ததன. தாத்தா நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவராம். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதால், அவர்களுடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்து வந்து விட்டார். அவர் பங்காக கிடைத்தவற்றை மற்றவர்களுக்கு உதவி செய்வதில் செலவழித்து விட , அந்த – இப்போது யாரும் வாடகைக்கு எடுக்காத – பழமையான சத்திரம் மட்டுமே அவரிடம் இருந்தது. அங்கேயே தங்கி, சமைத்து, மீதியிருக்கும் சிறு கையிருப்பை வைத்துக் கொண்டு, காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார். இவற்றை விட அவர் பார்வை போன விதம் பற்றி அவன் எங்களுக்குச் சொன்னது தான் எங்களை நெகிழ்த்தியது. சிறு குழந்தையொன்றை விபத்திலிருந்து காப்பாற்றும் போது தான் இப்படியானதாம்.

இதையெல்லாம் கேட்டப் பின் மிகவும் ஆர்வமுண்டாக, அவனுடன் அவரைச் சந்தித்தோம். ஆனால் எங்களைக் குறித்து கேட்டுத் தெரிந்துகொண்ட அளவிற்கு தன்னைக் குறித்து அதிகம் பேச அவர் விரும்பவில்லை. சுதந்திர போராட்டத்தில் அவர் பங்களிப்பு, பின்னர் அவர் ஆற்றிய சேவைகள் பற்றி “சொல்ல பெருசா ஒண்ணும் இல்லை” என்று கடந்து சென்று விட்டார். குழந்தையை காப்பாற்றியதைக் குறிப்பிட்டு “நீங்க ஒரு ஹீரோ தாத்தா” என்று மணி சொன்ன போது மட்டும் “அப்படிலாம் இல்லை, அந்த நேரத்துல நான் எதையுமே யோசிக்கல, அந்த நேரத்துல தோணினதை செஞ்சேன் அவ்வளவு தான்” என்று பதிலளித்தார். அதன் பின் தாத்தா குறித்து நாங்கள் எப்போதும் கேட்டாலும் அவனும் பிடி கொடுக்காமல் தான் பேசினான்.

(அவன், தாத்தா என்றே இருவரையும் குறிப்பிடக் காரணம் அவர்களிருவரின் பெயர் எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை என்பதால் தான். சொல்லப்போனால் தாத்தாவின் பெயரை அப்போதே கூட நாங்கள் அறிந்திருக்கவில்லை. அந்தப் பையனைப் பற்றி பல விஷயங்கள் ஞாபகத்தில் இருந்தும் பெயரை மட்டும் எப்படி மறந்தேன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருவருக்கும் ஏதேனும் பெயர் வைக்கலாம் என்று தான் நினைத்தேன். இதைப் பற்றி பெரியவர் முற்றுப்புள்ளியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்தான், உனக்கு எப்படி ஞாபகம் வருகிறதோ அப்படியே எழுது, என்றார். தான் நிஜத்தில் பார்த்ததை, உணர்ந்ததை, உண்மையின் வீச்சு உள்ளதை மட்டுமே எழுத வேண்டும் என்ற கொள்கை உடையவர் அவர். அதில் எனக்கு முழுதும் ஏற்பு இல்லையென்றாலும், இந்தக் கதையைப் பொறுத்தவரை பெயரைக் குறிப்பிடாமல் சொல்லும் போது, விலகலும் நெருக்கமும் கொண்ட நினைவுகள் குறித்த நகைமுரண் கிடைப்பதாக தோன்றியதால் அப்படியே செய்தேன். பொதுவாக ஏன், எப்படி எழுதினேன் என்றெல்லாம் கோனார் உரை போடுவதெல்லாம் இலக்கியத்தில் தேவையில்லை என்று நினைப்பவன் நான். இருந்தாலும் முற்றுப்புள்ளியின் உதவியை பதிவு செய்ய வேண்டுமென்பதால் இதை எழுதுகிறேன். மேலும், இதைப் பார்த்து அவருக்கும் தன் கதைகளைப் பொதுவும் பகிரும் எண்ணம் தோன்றக் கூடும் என்றும் எதிர்பார்க்கிறேன்).

இதையெல்லாம் படிக்கும் போது இந்தச் சம்பவங்கள் பல காலமாக நடந்து வந்தவை போல் தோன்றினாலும், உண்மையில் அந்தக் கோடை விடுமுறை, பின் பள்ளி திறந்து 3-4 மாதங்கள, என்ற காலகட்டத்திற்குள்ளேயே இவையனைத்தும் நிகழ்ந்தன. ஒரு வாரஇறுதியில் ஊருக்குச் சென்ற அவன் திரும்பி வரவில்லை. முதலில் அதை கவனிக்காத நாங்கள் ஓரிரு வாரங்கள் கழித்தே- பந்தை எடுக்க சத்திரத்திற்கு செல்லும் போது அவனைக் குறித்து தாத்தா கேட்டதும் தான் – உணர்ந்தோம். கிளப்பில் வேலை செய்பவர்களிடம் கேட்க எங்களுக்கு பயம் அல்லது கேட்கத் தோன்றவில்லை, ஒன்றிரெண்டு மாதங்களில் அவனை கிட்டத்தட்ட மறந்து விட்டோம், அவனில்லை என்பதால் தாத்தவுடனும் பேச்சு இல்லாமல் போனது. அவரும் பிறகு அவனைப் பற்றி எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. சில மாதங்களில் வரவு இல்லையென்று கிளப்பையும் மூடி விட்டார்கள். மீண்டும் யாருமற்றுப் போனாலும், அங்கு மனிதர்களின் நடமாட்டத்தைப் பார்த்தப் பிறகு, அந்த இடத்தை குறித்த நாங்கள் உருவாக்கி வைத்திருந்த மர்மங்கள் அர்த்தமற்றதாக தோன்ற முன்பைப் போல பேய், எலும்புகள் என்று பங்களவைக் குறித்த கிளர்ச்சிகளை எங்களால் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை.

பத்தாவது பொது தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில், தாத்தா காலமாகி விட்டார் என்ற செய்தி கிடைத்தது. இரவில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. நாங்கள் பள்ளிக்குச் சென்று விட்டிருக்க, அன்றே அவர் சொந்தக்காரர்கள் இறுதிச் சடங்குகளை செய்து விட்டார்கள் என்று தெருவில் பேசிக்கொண்டார்கள். இவையெல்லாம் எங்களுக்கு அடுத்த நாள் தான் தெரிய வந்தது. சில நாட்கள் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருந்து விட்டு, பரீட்சை, இன்னொரு கோடை விடுமுறை கொண்டாட்டம் என்று அவரையும் கடந்து சென்று விட்டோம்.

பதினொன்றாம் வகுப்பில் என்.என்.ஸில் சேர்ந்தேன் ( சேர்க்கப்பட்டேன் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்). என்.என்.எஸ் சார்பில் எங்களூரில் இருந்த சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அரைநாள் முகாமிற்கு ஒரு ஞாயிறன்று சென்றோம். அன்றைய முதல் அதிர்ச்சியாக அந்தப் பையனை அங்கு சந்தித்தேன். என்னுடைய வியப்பிற்கு நேர்மாறாக எப்போதும் போல் இயல்பாகவே என்னை அவன் எதிர்கொண்டு, இங்கு எப்படி வந்தான் என்பதைச் சொன்னான். சிறுவயதிலிருந்தே அவனுடன் படித்த சிறுமியுடன் அவனுக்கு நெருங்கிய நட்பிருந்தது (காதல் என்றெல்லாம் அவன் சொன்னது போல் ஞாபகம் இல்லை, பிரியத்துக்குரியவள் என்று மட்டும் பொருள்படும்படியான வார்த்தைகளை அவன் உபயோகித்தான் என்று நினைக்கிறேன்). அவளை கூடப் படித்த இன்னொரு மாணவன் கிண்டல் செய்திருக்கிறான். இவன் ஊருக்குச் சென்ற அந்த வார இறுதியில், இது குறித்து அவனுக்குத் தெரிய வர, அந்த மாணவனை எதிர்கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் பேச்சு முற்றி அந்த மாணவனை மிரட்ட இவன் அடிக்கப் போக, அவன் தலையைத் திரும்பியதால் பின் மண்டையில் அடி பட அம்மாணவன் இறந்து விட்டான். இவன் இங்கு சேர்க்கப்பட்டான். “அவனை கொல்லணும்லாம் யோசிக்கல, அவ பிரச்னையை தீர்க்கணும்னு நெனச்சேன், இப்படியாகிப் போச்சு” என்று சொன்னவன், கிளப் குறித்தும், மற்ற நண்பர்கள் குறித்தும் கேட்டான். பிறகு தாத்தா எப்படி இருக்கார் என்றவனிடம், அவர் மறைவைப் பற்றிச் சொன்னேன். அடுத்த வியப்பான செய்தியாக தாத்தா குறித்து அவன் என்னிடம் சில விஷயங்களை சொன்னான்.

இவன் திரும்பி வராததால், கிளப்பிற்குச் சென்று விசாரித்த தாத்தா நடந்ததை அறிந்து, இவனுடன் தொடர்பு கொண்டு, அவ்வப்போது இவனைப் பார்க்க சீர்திருத்தப் பள்ளிக்கு வருவாராம். இவன் இங்கு சேர்க்கப்பட்ட பின் இவனைப் பார்க்க எப்போதேனும் மட்டுமே வந்து கொண்டிருந்த இவன் தந்தை, சில மாதங்களிலேயே யாருக்கும் எதுவும் சொல்லாமல் ஊரை விட்டுச் சென்றதையும் தாத்தாதான் -அவன் தந்தையைத் தேடி ஊருக்குச் சென்ற போது இதை அறிந்து – இவனிடம் சொல்லி இருக்கிறார். அதன் பின் அவருடைய வருகை மட்டுமே அவனுக்கிருக்கும் ஒரே ஆசுவாசமாக இருந்திருக்கிறது. சில மாதங்களாக தாத்தா ஏன் வரவில்லை என்று குழம்பி இருந்தவன், நான் சொன்னதைக் கேட்டு நொறுங்கி விட்டான். “நீ திரும்பி வந்ததும் நல்ல வழி பண்றேன்” என்று தாத்தா சொன்னதாக சொல்லும் போது உடைந்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்க விட ஒருவாறு அவனை தேற்றினேன். அவன் சமநிலை குலைந்ததை அப்போது தான் பார்த்தேன். நாங்கள் கிளம்ப வேண்டிய நேரம் வர, மீண்டும் வந்து பார்பதாகச் சொல்லி விடை பெற்றேன்.

அவனுடைய சுபாவம் அவனை அவனிருந்த சூழலில் இருந்து மீளச் செய்தது என்று சொல்ல விரும்பினாலும் நீங்கள் இந்நேரம் சரியாக யூகித்திருப்பதைப் போல, அவனை நான் மீண்டும் சென்று பார்க்கவில்லை. இருந்தாலும் அவனை பார்க்கச் செல்லாத குற்றவுணர்ச்சியை மட்டுப்படுத்த அவன் மீண்டிருப்பான் என்றே நம்ப விரும்புகிறேன். படிப்பின் அழுத்தம், வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்வார்களோ என்ற அச்சம் என என் செய்கைக்கு எவ்வளவோ காரணங்கள் சொல்லலாம் என்றாலும், உண்மையில் அவனையும் தாத்தாவையும் எங்கள் அன்றாட வாழ்வின் ஒரு ஓரத்தில் இருப்பவர்களாகவே எங்களின் ஓட்டத்தில் அவ்வப்போது நின்று, பாதுகாப்பான தூரத்திலிருந்து பார்க்கப்படவேண்டியவர்களாகவே அணுகினோம் என்பதே உண்மை (தாத்தா இதை உணர்ந்திருந்ததால் தான் பல ஆண்டுகள் அருகிலேயே வசித்த எங்களை விட, புதிதாய் வந்த அவனிடம் சில நாட்களிலேயே நெருக்கமாக உணர்ந்திருக்க வேண்டும்). ஆனால், அவனை இறுதியாகப் பார்த்த அன்று ஊரே -80களில் தமிழ்நாட்டில் எந்தவொரு வார இறுதியின் மிக முக்கிய நிகழ்வான – ஞாயிறு மாலை தமிழ் படத்தில்- ஐக்கியமாகி இருக்க, நான் மட்டும் வீட்டின் பின்புறச் சுவற்றில் அமர்ந்து, ஆகஸ்ட் மாத மாலை நேர தென்றலை எப்போதும் போல் அனுபவிக்க முடியாமல், யாரும் இருந்ததற்கான தடயமே இல்லாதிருந்த பங்களாவையும், சத்திரத்தையும் அவற்றினிடையே இருந்த வெற்று மனையையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சுமை

மு வெங்கடேஷ்

“எங்கடி போயிருந்த, நாலு நாளா ஆளையேக் காணும்?” என்று புகையிலைத் துண்டை விண்டு வாயில் போட்டபடியேக் கேட்டாள் பேச்சியம்மாள்.

ஒரு இணுக்கை பிட்டு வாயில் அதக்கிய பொண்ணுத்தாயி, ” டவுணுக்குத்தேன். பெரியாசுபத்திரில ரெண்டு நா கெடக்க வேண்டிதாப் போச்சு. எல்லாம் நா வாங்கி வந்த வரம்”

“பெரியாசுபத்திரிக்கா? அடிப்பாவி. இப்படி சொல்லாமக் கொள்ளாம போயிட்டு வந்திருக்கியே. என்னத்தேன் ஆச்சு” எனப் பதறினாள் பேச்சியம்மாள்.

“என்னத்த ஆச்சு. நாளு தள்ளிப் போச்சுன்னு போயிட்டு வந்தேன்” விரக்தியோடு சொல்லிக் கொண்டிருந்தவள் சட்டென சுதாரித்துக் கொண்டு “யார்டையும் சொல்லிராதடி, மாரியப்பனுக்குக் கூட சொல்லல” எனக் கெஞ்சலோடு பேச்சியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

“அடிப்பாவி” பேச்சியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

“கெரகம்…. இந்தாள்ட்ட சொன்னாலும் கேக்க மாட்டிக்கிறாரு. காலம் போன காலத்துல இது வேற. மாரியப்பந்தேன் கெடந்து செரமபட்டுக்கிட்டு சின்னதுக ரெண்டையும் பாத்துக்கிட்டிருக்கான் . இதுல நாலாவதுன்னு ஒண்ணு நம்மாள முடியுமா?” சொல்லி முடிக்குமுன்னர் பொன்னுத்தாயின் கண்கள் தளும்பின.

“ஏய்… ஆனது ஆயிப்போச்சி. நீ ஏங்கெடந்து கண்ண கசக்குற? இனியாவது அந்தாளக் கொஞ்சம் அடங்கி நடக்கச் சொல்லு. உம்பையன நெனச்சா பாவமாத்தான் இருக்கு”

“என்னத்தப் பாத்து நடக்கிறது. ஒத்தப் பைசா சம்பாத்தியமில்ல. ஆனா அப்பப்ப காச மட்டும் பிடுங்கிட்டுப் போயி…’ சொல்லும்போதே பொன்னுத்தாயின் குரல் விம்ம, “ இதெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சா…”

“விடு விடு. ஒன்னும் ஆகாது. ஆண்டவன் இருக்கான்” என்று சொல்லிவிட்டுத் தண்ணீர் குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கிளம்பினாள் பேச்சியம்மாள்.

மூத்தவன் மாரியப்பன் அதற்கடுத்து பன்னிரெண்டு வருடங்கள் கழித்து தனலட்சுமியும், காசிநாதனும் என இரட்டையர்கள். முத்துக்கருப்பனுக்கு வேலையென எதுவும் கிடையாது. குடித்துவிட்டுத் திரியும் ஊதாரி. பலமுறை சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. மாரியப்பன்தான் ஒற்றை ஆளாக குடும்ப பாரத்தைத் தூக்கிச் சுமப்பவன். தன் படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டு தம்பி தங்கையை எப்படியாவது நல்ல படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று பொட்டிக் கடை வைத்திருந்தான். தனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அப்பாவிடம் ஒரு வார்த்தைகூட பேசியதில்லை. அப்பாவென்று சொன்னதுகூட கிடையாது. “அந்த ஆள்” தான். முத்துக்கருப்பனுக்கு தினமும் குடித்தாக வேண்டும். வாரத்துக்கு நான்கு நாட்கள் டவுணுக்குப் போய் ஆட்டம் என்றால் மீதி நாட்கள் செல்லத்துரை தோப்பில் போய் கும்மாளம். தினமும் பொன்னுத்தாயுடன் வம்பு வரத்துதான். சமயத்தில் அடிதடி வேறு. அவரைக் கண்டாலே மாரியப்பனுக்கு ஆகாது. அவருக்கும் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை சாடைமாடையாக அவரை குற்றம் சொல்வது பற்றிக் கொண்டு வரும்.

தண்ணீர் பிடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பொன்னுத்தாயி, மகனுக்கு வீட்டிற்குள்ளும் கணவனுக்குத் திண்ணையிலும் சோறு வைத்துவிட்டு காத்திருந்தாள். ”அவன போலீஸ் கூப்டு போயிருக்காங்க” என்று முத்துக்கருப்பன் சொல்ல, “போலீசா எதுக்கு? என்னன்னு தெரியலயே” மனசு படபடத்தது. புலம்பிக் கொண்டிருந்தாள் மாரியப்பன் திரும்பி வரும் வரை.

“என்னப்பா ஆச்சு?எதுக்கு கூப்டாக?” மகன் வரவும் கேட்டாள்.

“அது ஒன்னும் இல்லம்மா நேத்து தெருல சின்ன சண்ட. அது விசயமா”

“ஒனக்கு ஒன்னுமில்லேலா?”

“ஒன்னுமில்லம்மா”

“எதுக்குப்பா தேவ இல்லாம ஊர்ப் பிரச்சன நமக்கு?”

“எம்மா நா போவல. எதும்னா ஒன்ட்ட சொல்ல மாட்டனா? இது வரைக்கும் ஏதாது மறச்சிருக்கனா? சரி அத விடு நீ மொத சோறப் போடு, சாப்ட்டு கடைக்குப் போனும்”

“ஒம்மேல எனக்கு நம்பிக்கை இருக்குய்யா. நீ எந்த தப்பும் பண்ண மாட்ட, எதயும் என்ட மறைக்க மாட்டேன்னு தெரியும் இருந்தாலும் கொஞ்சம் சூதானமா இருந்துக்கோய்யா”

“சரிம்மா நா பாத்துக்குறேன். நீ பயப்படாத”

வெயிலுக்கு மறைப்பாக அஞ்சால் மருந்து பேனரை கடை முன் இறக்கி விட்டுவிட்டு, உட்கார்ந்திருந்தபோது, வட்டிப்பணம் கேட்டு பால்பாண்டி வந்தான்.

“அண்ணே குடுத்த இடத்துல இருந்து இன்னும் வரல. இன்னும் ரெண்டு நாள் டயம் குடுங்க. தந்துறேன்” என்றான். “ஏல என்னிய என்ன இளிச்சவாயன்னு நெனச்சியா? நாலு மாச தவணை தப்பிருச்சு. சாயந்திரம் வர்றேன். வட்டிப்பணமாச்சும் எடுத்து வை. ஏதோ கவுரவமா கடை வச்சிருக்கேன்னு சின்னப்பையன நம்பி பணம் கொடுத்தா இஷ்டத்துக்கு இழுத்து அடிக்கிறியே. அப்புறம் அசிங்கமாயிரும் பாத்துக்கோ” என்று மிரட்டி விட்டுச் சென்றான்.

கல்லாப் பெட்டியைத் திறந்து பார்த்தான். முழு பத்து ரூபாய் நோட்டும், சில்லறை நாலு ரூபாய் ஐம்பது காசும் கிடந்தது. இவன் சம்பந்தமே வேண்டாமென மொத்தத்தையும் திருப்பிவிடலாம் என்றால், முப்பதாயிரம் உடனடியாகக் கொடுக்க வேண்டும். என்ன செய்வது? இருந்த மொத்த பணத்தையும் வழித்து துடைத்து நேற்றுத்தான் தம்பிக்கும் தங்கைக்கும் ஃபீஸ் கட்டி ஆயிற்று. ஒன்றும் புரியவில்லை, தலை சுற்றியது. யார்யாரிடமோ கேட்டுப் பார்த்தான். ஐந்து ரூபாய் கூடத் தேறவில்லை. கடைசியாக டவுணில் இருக்கும் நண்பன் பழனிக்குப் போன் செய்தான்.

“தெரியும்டே. ஏதாச்சும் தேவைன்னாத்தான் இந்தப் பழனிய உனக்கு நெனப்பு வரும். சொல்லு” என்றான் பழனி.

“அப்டில்லாம் இல்லடா. ஒரு சின்ன உதவிதான்” என இழுத்தான் மாரியப்பன்.

” மேட்டர் என்னச் சொல்லு”

” அவசரமா ஒரு முப்பதாயிரம் பணம் வேணும்”

“போதுமா? நீங்க என்ன அம்பானிக்குப் போட்டியா எதும் தொழில் பண்ணப் போறீகளா?”

“லேய் விளையாடாத, அவசரம் அதான்”

“சரி வந்துத் தொல, தங்கச்சி கல்யாணத்துக்கு வச்சிருக்கதுடா. ஒரு மாசத்துல திருப்பித் தந்துரு”

“ஒரு வாரத்துல தந்துர்றேன்”

வெயில் இறங்கும் நேரம், கொஞ்சம் சுருக்கவே கடையை அடைத்து விட்டு, இருந்த பதினான்கு ரூபாய் ஐம்பது காசை எடுத்துக் கொண்டு டவுண் பஸ் ஏறினான். பால்பாண்டி தொல்லையை முதலில் தீர்த்து விடனும். மானம் போகிறது. பழனிக்குப் பணத்தைக் கொடுக்க இன்னொரு வழி கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அதற்கு இன்னொரு வாரமாவது நேரம் இருக்கிறது. நேராக பழனி கடைக்குச் சென்றான். பூட்டி இருந்தது. அருகிலிருக்கும் டெலிபோன் பூத்திலிருந்து பழனிக்கு மீண்டும் போன் செய்தான்.

“மன்னிச்சிக்கோ மாப்ள. தங்கச்சியக் கூப்பிட மதுர போ வேண்டியதாப் போயிட்டு, நீ ஒண்ணு பன்னு, நம்ம சின்னதுரை அண்ணன்ட கடச்சாவி இருக்கு, வாங்கி அங்க படுத்துக்கோ. நா காலைல வெரசா வந்துருறேன்” என்றான்.

“சரி மாப்ள. பணம்?”

“அதான் சொன்னேன்ல காலைல வந்துருவேன்னு. வந்ததும் தாரேன்”

“கண்டிப்பா கெடச்சிரும்லா?”

“கண்டிப்பா”

ஒரு ரூபாய்க்கான நேரம் முடிந்திருந்தது. போனை வைத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான். எதிரிலிருக்கும் மதுக்கடையில் தெரிந்த முகமாக இருக்கிறதே எனப் பார்த்தால், முத்துக்கருப்பனேதான். “இந்த ஆள்” எதுக்கு இங்க இருக்காரு என்று யோசித்தவாறே வெளியில் வந்தான். அவருக்கு பக்கத்திலே தொற்றிக் கொண்டாற் போலொரு பெண்மணி. அலட்டலும் அலப்பறையுமாக அவள் பேசிக்கொண்டே போவதைப் பார்த்ததும் மாரியப்பன் திடுக்கிட்டான். இதென்ன கூத்து என்றபடியே அவர்களைப் பின் தொடர்ந்தான். நேராகச் சென்ற அவர்கள் வலது பக்கம் திரும்பி பின் இடது பக்கம் உள்ள தெருவில் திரும்பினார்கள். அங்குமிங்கும் திரும்பிப் பார்த்துவிட்டு அந்த ஆள் ஒரு வீட்டிற்குள் நுழைய, அவருடைய அல்லாடலை கிண்டலடித்தபடியே கூடவே அந்தப் பெண்மணியும் சென்றாள்.

மாரியப்பனுக்குக் கோபமும் கழிவிரக்கமுமாகப் பொங்கியது. தகப்பனை எந்த நிலையில் பார்க்கக் கூடாதோ அப்படிப் பார்த்தான். கண்களில் கண்ணீர் வழிந்தது, அம்மாவை நினைத்து. கோபத்தில் அருகிலிருக்கும் பலகையில் ஓங்கிக் குத்த, சத்தம் கேட்டு முத்துக்கருப்பன் பதட்டத்துடன் வெளியில் எட்டிப் பார்த்தார். திண்ணையின் குறை வெளிச்சத்தில், அவரை நன்றாக நிறுத்திப் பார்த்துவிட்டு மாரியப்பன் விறுவிறுவென நடந்தான்.

மறுபடியும் அதே போன் பூத் எதிர்ப்பட்டதும், கையில் இருந்த கடைசி ரூபாய் காய்னைப் போட்டு போன் அடித்தான்.

“அலோ யார் பேசுறது?”

“நாந்தாம்மா மாரி” குரல் தழுதழுத்தது.

“எங்கயா போன? பால்பாண்டி வந்தான். கொள்ளநாளா கடன் தவணை கட்டலன்னு ஒரே கூப்பாடு. சின்னவ என்னமோ வார்த்தய விட, ஏகத்துக்கு சண்டயா போயிட்டுப்பா. ஊரையே கூட்டிட்டு, ஒரே.அசிங்கமாப் போச்சு. என்னயா ஆச்சு? “

“அவனுக்குப் பணம் தரணும். ரெடி பண்ணிட்டேன்” மாரியப்பனுக்கு தொண்டை அடைத்தது.

“இருக்குல்லா? நீ எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டன்னு தெரியும்.ஒம்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு இருந்தாலும் சீக்கிரம் வந்துரு.சரி இப்போ எங்க இருக்க?”

“டவுண்ல”

“இந்தாள வேறக் காணும். எங்க போயித் தொலஞ்சாருன்னேத் தெரியல”

“இங்க தான் இருக்காரு”

“அங்கயா? ஒங்கூடையா?”

ற்று மௌனத்திற்குப் பின் “எங்கூட இல்ல. இன்னொருத்தி கூட” என்று சொல்லிவிட்டுக் குமுறி அழுதான். ஒரு ரூபாய்க்கான நேரம் முடிந்தது.

இரவு முழுவதும் தூக்கம் வராமல் அம்மாவையே நினைத்துக் கொண்டிருந்தான் மாரியப்பன். அவள் முகத்தை எப்படிப் பார்ப்பது, இப்படி போனில் போட்டு உடைத்திருக்கக்கூடாதோ? கேட்டு அவள் எப்படியெல்லாம் வேதனைப்பட்டாளோ என்று ஒன்றும் தெரியவில்லை. யோசித்துக் கொண்டிருக்கும்போதே கண் அசந்தது. மறுநாள் காலை ஆறு மணிக்கே வந்த பழனி, அவன் கேட்ட முப்பதாயிரம் பணத்தைக் கொடுத்தான். உடனேக் கிளம்பினால் வெள்ளென ஊர் போய் சேர்ந்து விடலாம். அம்மாவை நினைத்தால்தான் மனம் ஆறவேயில்லை. அவளை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பஸ்ஸில் இருந்து இறங்கியதும் வீட்டை நோக்கி ஓட்டமான நடைதான்.

மாரியப்பனின் தலை தெரிந்ததும், தம்பி காசி கத்தினான்.

“எப்பா இந்தக் கொலைகாரப் பாவி வாராம் பாரு”. தலையை விரித்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த தனமும் கூடவே கத்தினாள். ‘இப்படி கொன்னுப்போட்டியேண்ணே’.

“ஏல, நீ எல்லாம் நல்லாருப்பியா? கடன வாங்கிக் கூத்தடிச்சதுக்கு, ஆத்தாள காவு வாங்கிட்டியேடா,” என்றார் அந்த ஆள்.

“பொறுப்பானவன்னு பாத்தா இப்படி ஊதாரித்தனமா கடன வாங்கிப்புட்டானே…. அவ ரோசமுள்ளவா. அவமானம் தாங்க முடியாம தூக்குல தொங்கிட்டா,” என்று ஊரே ஒப்பாரி வைத்தது.

துக்க வீட்டின் அத்தனை அபத்தங்களுடன் சண்டை நடந்தேறியது. காசி கல்லை எடுத்துக் கொண்டு பாய்ந்தான். தனம் சுவற்றில் முட்டிக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாள். முத்துக்கருப்பன் ஆட்டம்தான் மிகவும் அதிகமாக இருந்தது. கண்டபடி ஏசிக்கொண்டே செருப்பை எடுத்துக் கொண்டு பாய்ந்து வந்தார். முந்தாநாள் மாரியப்பன் அவரை வெறுப்போடு பார்த்த பார்வை அவரால் மறக்க முடியவில்லை.

துக்கம் கேட்க வந்த கூட்டத்தில் பால்பாண்டியும் இருந்தான். பொறுக்க முடியாமல் அவனுடைய கணக்கை அங்கேயே பைசல் செய்தான் மாரியப்பன். அம்மாவின் முகத்தைப் பார்த்து பொங்கி அழக்கூட ஒரு நேரம் வாய்க்காமல் மாரியப்பன் மரத்துப் போய் நின்றிருந்தான்.

இரவு மசானக்காட்டில் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்த வெட்டியான், “விடுப்பா. சொல்லு தாங்க முடியாம போயிட்டா புண்ணியவதி. அதுக்கும் ஒரு கொடுப்பினை வேணுமே” என்றான்.

ஒன்றும் பேசாமல் அம்மாவையேப் பார்த்துக் கொண்டிருந்தான் மாரியப்பன்.