விமர்சனம்

கவிதையைத் திருத்தி எழுதுதல் – எலியட்டும் பவுண்டும் – ஹ்யூ கென்னர்

(எலியட், பவுண்ட் மற்றும் பாழ்நிலம் கவிதையின் முக்கியத்துவம் குறித்து எம். டி. முத்துக்குமாரசாமி மிகச் சிறப்பான ஆவணப் பதிவொன்றைச் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு சிறந்த கவிதையும்கூட பிறருடன் கலந்தாலோசித்து, முழுமையாகத் திருத்தி எழுதப்பட்ட ஒன்றுதான் என்பதை உணர்த்தும் நோக்கத்தில் ஹ்யூ கென்னர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி தமிழாக்கம் செய்யப்படுகிறது.)

எலியட்டை விட வயதில் மூத்த பவுண்ட் எலியட்டை விட எராளமாக எழுதிக் குவித்த பவுண்ட், எலியட்டையே கவி என்று கொண்டாடினார். நவீன காப்பியமான யுலிசஸ் எழுதிய ஜாய்ஸ், தத்துவ அறிஞரும் கடவுள் மறுப்பாளருமான ரஸ்ஸல், எலியட்டையே கவி என்றறிந்திருந்தனர். எதனால்? எலியட்டின் கவிதையிலே வாசகனின் அகத்தோடு ஆத்மார்த்தமாய் பேசக்கூடிய குரல் இருந்தது. முதலாம் உலகப்போருக்குப் பின் எழுதுகிற எலியட்டின் கவிதையில் பேசுகிற குரல் ஐரோப்பிய சமூக ஆன்மாவின் குரல். பாழ் நிலத்தில் அந்தக்குரல் தெள்ளத்தெளிவாய் Four quartets ஐ விட அணுக்கமாக வாசகனிடத்தே பேசுகிறது. அந்தக் குரல் உடைந்து போயிருக்கிறது; அவநம்பிக்கையுடனிருக்கிறது. கடவுள் கைவிட்டுவிட்ட குரல் அது. அல்லது கடவுளை கை விட்டு விட்டதால் பாதுகாப்பற்று அமைதியின்மையில் அலைவுறும் குரல். எதையாவது பற்றிக்கொள்ள முடியாதா என்று பரிதவித்து இலக்கிய பிரதிகளெங்கும் அலைந்து உகந்த வரிகளைத் தேடி அவைகளை கோர்த்து கோர்த்து சில சமயம் உரையாடலாய் சில சமயம் பிதற்றலாய் சில சமயம் தெருச்சொல்லாய் பிருகதாரண்ய உபநிடத்திலிருந்து சில வரிகளையும் சேர்த்துக்கொண்டு ஹிரானிமோ மீண்டும் பைத்தியமாகிவிட்டான் ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஒரு collage ஆக அமைகிறது. போருக்குப் பிந்ததைய சமூகத்தின் தீவிர நெருக்கடி ஒவ்வொரு பிரஜையின் மனத்திலிருக்க அந்த மனத்தின் குரலாகவே எலியட்டின் கவித்துவ குரல் பாழ் நிலத்தில் அந்தரங்க சுத்தியுடன் பேசுகிறது. எலியட்டின் ஆத்மார்த்தமாகப் பேசும் கவித்துவ குரலை பவுண்டின் மேதமையே உடனடியாக அடையாளம் காணுகிறது.

“ஆத்மார்த்தமாக பேசும் கவிக்குரல்கள்: பாரதியும் டி.எஸ்.எலியட்டும்”, எம். டி. முத்துக்குமாரசாமி

(more…)

ஆடனின் ரகசிய வாழ்க்கை – எட்வார்ட் மென்டல்ஸன்

நான் எதிர்பாராமல் அறிய வந்த விஷயம் இது. நானோ வேறு பிறரோ அறிந்திருப்பதைவிட மிக அதிக அளவில் இது போன்ற நிகழ்வுகள் இருந்திருக்கலாம்.

விருந்தொன்றில் ஒரு முறை நான் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். 1950களில் ஆடன் ந்யூ யார்க்கில் வழிபட்டு வந்த செயின்ட் மார்க்ஸ் இன் த பவரி எபிஸ்கோப்பல் தேவாலயத்தில் வழிபாடுகள் செய்துவந்த பெண் அவர். அதன் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வந்தவர்களில் ஒரு மூதாட்டி கடுமையான அச்சம் காரணமாக உறக்கம் வராமல் அவதிப்படுவதாக ஆடனுக்குத் தெரிய வந்தது என்றார் அந்தப் பெண். எனவே ஆடன் ஒரு கம்பளியை எடுத்துச் சென்று, அவரது அபார்ட்மெண்ட் கதவுக்கு வெளியே இருந்த ஹால்வேயில் உறங்குவதைப் பழக்கப்படுத்திக் கொண்டார். அந்த மூதாட்டியின் அச்சம் நீங்கும்வரை ஆடன் அங்குதான் உறங்கினார். (more…)

கவியின் கண் 8 – ‘கையிருப்பில் இல்லாத காரணத்தால்’

– எஸ். சுரேஷ்-

MUSEUM –  Wislawa Szymborska

Here are plates with no appetite.
And wedding rings, but the requited love
has been gone now for some three hundred years.

Here’s a fan–where is the maiden’s blush?
Here are swords–where is the ire?
Nor will the lute sound at the twilight hour. (more…)

கவியின்கண் 7 – “கடுவிசை உருமின்”

– எஸ். சுரேஷ்-

நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மா மழை
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை
துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனோ.
– குறுந்தொகை, 158 (more…)

விழுமியங்களின் வீழ்ச்சியும், அதிகாரத்தின் முடிவும்

– அஜய். ஆர்-

தென் அமெரிக்காவை ஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து மீட்டு ஒரு கட்டத்தில் சர்வ வல்லமையுடன் இருந்த ( ‘The Liberator’ என்றழைக்கப்பட்ட) சீமோன் பொலிவர் (Simon Bolivar), தன் தூக்கம், உணவு, பாதுகாப்பு குறித்து அசட்டையாக இருந்ததை,

“… his disinterest was not lack of awareness or fatalism, but rather the melancholic certainty that he would die in his bed, poor and naked and without the consolation of public gratitude.”

என்று ‘மார்கேஸ்’ (Gabriel Garcia Marquez) தன்னுடைய ‘The General in His Labyrinth’ நாவலில் குறிப்பிடுகிறார். நாவலின் முடிவில் கிட்டத்தட்ட அப்படியே நடக்கவும் செய்கிறது.

வரலாற்றிலும் சர்வாதிகாரிகளின் முடிவு ஒன்று பதவியில் இருக்கும்போது கொல்லப்படுவதாகவோ அல்லது பதவியிலிருந்து அகற்றப்பட்டு அல்லது புகழின் வெளிச்சத்திலிருந்து விலக்கப்பட்டு, தங்கள் இறுதி காலத்தை அநாமதேயமாகக் கழிப்பதாகவோ உள்ளது. வெகு சிலரே இறுதிவரை பதவியையும், அதிகாரத்தையும் தம்மிடம் தக்க வைத்திருந்துள்ளனர். (more…)