அனுகிரஹா

ஒற்றைப் புன்னகை வெளிச்சம் – ராண்டோ

 

 

நடுநிசி நேரத்தில் நான் அங்கு வந்து சேர்ந்தேன்.
காரிருளில் மூழ்கி இருந்த அந்த பங்களாவுக்குள்
பணியாள் காட்டிய மெல்லிய டார்ச் ஒளியில்
தட்டுத் தடுமாறி பயத்துடன் சென்று கொண்டிருந்தவனுக்கு
பரவசம் அளித்தது பக்கத்து அறையில் இருந்த
சுந்தரியின் ஒற்றை புன்னகை

வெளிச்சத்தில் அடுத்த நாள் காலை பார்த்தபோதுதான்
தெரிந்தது அது ஒரு சிரிக்கும் கருங்குரங்கு பொம்மை.

– எஸ். சுரேஷ் (more…)

ஒரு நாள் முடிகிறது

சிவா கிருஷ்ணமூர்த்தி

 IMG_1969

ஓரிரு வருடங்கள்தான் ஆகியிருக்கும். அப்போது நான் ஒரு வருடமாக காதன்பர்க்கில், ஸ்வீடனில் வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு ராஜஸ்தானிய நண்பரின் ப்ளாட்டில் நானும் ஒண்டிக்கொண்டிருந்தேன்.

என்னுடன் இன்னொரு நபரும் ஒட்டிக்கொண்டிருந்தான். என்னை விட பல வருடங்கள் இளையவன் என்பதாலும் ஒரு வாஞ்சையாலும் அந்த ஆந்திரனை அவன், இவன் என்ற ஏகவசனம் அவ்வளவுதான்!

அதுவோர் இலையுதிர் காலம். மதியம் தாண்டியவுடன் காலம் ஸ்தம்பித்து நின்றுவிடும். முடிவே இல்லாத மாலை. அத்தனை வெளிச்சத்தை காலை மணி ஒன்பது என்றால் நம்பலாமே தவிர இரவு மணி ஒன்பது என்று சொல்லவே முடியாது. (more…)

அன்பெனும் மழை – ராண்டோ

 

“மேகங்கள் கறுத்து மழை பெய்யாவிட்டால் என்ன?
நம் ஊரில் என்றும் பெய்கிறது அன்பெனும் மழை”
என்று முழங்கிக் கொண்டிருந்தார் பேச்சாளர்

அந்த வழியாக சென்றுகொண்டிருந்த
அழுக்கு வெள்ளை நாய் ஒன்று
அவரைப் பார்த்து ஆக்ரோஷமாக குரைத்தது

பேச்சை நிறுத்திவிட்டு அவர் நாயை முறைத்தார்
குரைப்பதை நிறுத்திவிட்டு நாய் அவரை முறைத்தது

நாய் ஒய்ந்துவிட்டதாக நினைத்து அவர் பேச்சை தொடந்தார்
நாய் மறுபடியும் கோபமாக குரைத்தது

கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்தார்
நாய் அவரைப் பார்த்து பலமாக சிரித்துக்கொண்டே
அங்கிருந்து ஓடி விட்டது.

ஒரு கையில் கல்லும்
மறு கையில் மைக்கும் வைத்துக் கொண்டு
பிரசங்கத்தை தொடர்ந்தார் பேச்சாளர்

(எஸ். சுரேஷ்) (more…)

புலியின் வாயில் – ராண்டோ

 

புலியின் வாயில் சிக்கிய முள்கரண்டி.
வாய்மூட முடியாதபடி படுவேதனை.
மரத்தடியில் இளைப்பாறிய புலி
சங்கடவிழிகள் மின்னுவதை
ஊரார் கண்டனர்.

அன்று ஒரு நாளைக்கு
அடர்கானகம் சற்றே தளர்ந்தது.

நீர் சொட்டி சடைதரித்த
பக்கத்து காட்டுப் புனுகுப்பூனை
அடங்கமாட்டாமல் சிரித்தது.

தலையைத் தூக்கி முதலைகள் விசாரித்தன.
இளைய இருமுயல்கள்
சற்றே கூடிநின்று ஒளிமணி மூக்கு
சுழித்துச் சென்றன.

மரக்கிளைமேல் குரங்கு;புதர் மறைவில் மான்
ராச்சுற்றி திரும்பிய ஓநாய்.

சில நிமிட சிரிப்புக்குப்பின்
எல்லாவற்றுக்கும் ஒரே கேள்வி
மீதமிருக்கும் கேக் எங்கே?

(ரா கிரிதரன்) (more…)

காண்கவிதை – “தகுதி”

தகுதி

thaguthi copy

கவிஞர் : திரு.ராஜசுந்தரராஜன்

படம் : ச.அனுக்ரஹா