எஸ். சுரேஷ்

இந்தக் கதை குழந்தைகளுக்கு மட்டும்

– எஸ். சுரேஷ்-

கடும் வெயில்
தாகம்
தொண்டை வற்றியிருந்தது

நடந்து அந்த கிணற்றை அடைந்தேன்
கயிறும் இல்லை வாளியும் இல்லை
கீழே பளபளக்கும் குளிர் நீர்

“ஆஆஆஆ” என்று நீரை பார்த்து கத்தினேன்

கிணற்றுக்கருகில் உட்கார்ந்திருந்த காக்கை
பீதியுடன் அங்கிருந்து பறந்தது
சற்று நேரம் கழித்து வாயில் ஒரு கல்லுடன் வந்து
மறுபடியும் கிணற்றுச் சுவர் மேல் உட்கார்ந்து

கல்லை தண்ணீரில் போட்டுவிட்டு
என்னை பார்த்து புருவத்தை உயர்த்தியது

மூக முனி

– எஸ். சுரேஷ் –

“இவன் ரஷீத் பாய் அழுதத ஒரு தடவை பார்த்தானாம். ரஷீத் பாய் அழுவாரா? அவரு ஒரு சின்ன தாதா. இவன் காஸ் விடறான்” என்று அருணைக் கைகாட்டி பஷீர் பாயிடம் சொன்னேன்.

“எங்க பார்த்த? எப்போ பார்த்த?” என்று அருணிடம் பஷீர் பாய் கேட்டார்.

நான் முஸ்தபா சார்கிட்ட ட்யூஷன் படிச்சுக்கிட்டிருந்தப்போ பார்த்தேன். அன்றைக்கு நீங்களும் ரஷீத் பாயும் அங்க வந்தீங்க. அப்போதான் ரஷீத் பாய் முஸ்தபா சார்கிட்ட ஏதோ சொல்லி அழுதார். நான் பார்த்தேன்”, என்றான் அருண்.

“நிஜம்தான்” என்றார் பஷீர் பாய்.

“நிஜமா? ரஷீத் பாய் எவ்வளவு பலசாலி. அவர் எதுக்கு அழுதாரு?” என்று ஆச்சரியத்துடன் நாங்கள் எல்லோரும் கேட்டோம்.

“அது ஒரு பெரிய கதை. உட்காருங்க. சொல்றேன்”, என்றார் பஷீர் பாய். (more…)

தவறாத குறி

 – எஸ். சுரேஷ் –

 

 

உயரே ஆகாயத்திலிருந்து பருந்து
தண்ணீரில் இருக்கும் அந்த மீனை பார்த்தது
தன் குருநாதர் சொல்லிக்கொடுத்தபடி மீனின்
கண்ணை பார்த்தது

விரிந்திருந்த தன் சிறகை மூடிக்கொண்டு
உடம்பு ஒரு வில் போல் காற்றை கிழிக்க
மீனை நோக்கி இறங்கியது

அதன் குறி அந்த மீன், அதன் கண்ணை,
அதை மட்டும் பார்த்துக்கொண்டு
குறி தவறாமல் இறங்கியது

மீனின் கண்
மீனின் கண்
மீனின் கண்
மீனின் கண்

அதற்கு தண்ணீரில் ஆடும் தாமரை
கண்ணில் படவில்லை
கரையோரம் இருக்கும் மாமரமும்
கண்ணில் படவில்லை
அதே மீனைப் பார்த்து மரக்கிளையிலிருந்து
புறப்பட்ட மீன்கொத்தி பறவையும்
கண்ணில் படவில்லை

 

புகைப்பட உதவி : விக்கிபீடியா

மனம்

– எஸ். சுரேஷ்

 

மரத்தடியில் உட்கார்ந்திருந்தேன்.
பக்கத்தில் ஒரு ஆப்பிள் விழுந்தது.
கையில் எடுத்தேன்.
ஆதாம் ஏவாள்,
நியூட்டன், கலீலியோ, காபேர்நிகஸ்,
பூமியைச் சுற்றும் சூரியன்,
தட்டை உலகம்,
சர்ச்சும் அதன் தண்டனைகளும்,
விஞ்ஞானத்திற்கும் மதத்திற்கும் மத்தியில்
நிகழும் போராட்டம்,
என்று சிந்தனை பல இடங்களை அடுத்தடுத்து
தொட்டுக் கொண்டிருக்கும்பொழுது
மரத்திலிருந்து இறங்கிய மந்தி
என் கையிலிருந்த ஆப்பிளை பிடுங்கிக் கொண்டு
தலையில் ஓங்கிக் குட்டிவிட்டு
விழுதை பிடித்துத் தாவி ஊஞ்சலாடியது.

கல் நந்தியல்ல அதிகாரநந்தி

எஸ். சுரேஷ்

சிவனுக்கு முன் வந்து உட்கார்ந்து கொண்ட நந்தி
எங்கோ வெறித்துக் கொண்டிருக்கிறது.

“சற்றே விலகி நில்லும் அய்யா,
தரிஷனம் மறைக்குது”
என்று கதறிக்கொண்டிருக்கிறான் நந்தன்.