![]()
அன்று சிரமட்டார் காளியம்மன் திருவிழாவின் கடைசி நாள், பிராமண மண்டகப்படி. வைத்தியர் வீடு திமிலோகப்பட்டது. வைத்தியர் குடும்பத்து பங்காளிகள் எந்த மூலையில் இருந்தாலும் ஆடிக் கிருத்திகை அன்று ஊருக்கு வந்துவிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஏனெனில் அன்று அவர்கள் குடும்ப தெய்வமான அன்னசௌரக்ஷாம்பிகைக்கு நோன்பு நோற்பது வழக்கம். அதன் பின்னர் அனைவரும் கலந்துகொள்ளும் சமபந்திபோஜனம் நடைபெறும். அதிசயமாக இந்த முறை இரண்டு திருநாள்களும் ஒரே நேரத்தில் வந்துவிட்டன.
இழவு விழுந்து பண்டிகைகள் இல்லாத ஆண்டுகளிலும்கூட இந்த பூஜையும் சமபந்தி போஜனமும் நிச்சயம் உண்டு. சபரியின் தாத்தாவிற்கு விபரம் தெரிந்ததிலிருந்து வருடம் தவறாமல் இது நடந்துவருகிறது. முதலில் லலிதா சஹஸ்ரநாமம் கூட்டாக பாராயணம் செய்வார்கள். பாலிலும் தேனிலும் தயிரிலும் பஞ்சாமிருததிலும் அபிஷேகம் செய்துவிட்டு மஞ்சள் குங்குமத்தில் அலங்காரம் செய்து பட்டுநூல் சார்த்தி, சிவப்பு அவல் பாயசம் நைவேத்தியம் செய்துவிட்டு தீபாராதனை காட்டுவார்கள். நோன்புக் கதையை வீட்டின் மூத்த சுமங்கலி சொல்லக் கேட்டுவிட்டு வீட்டுப் பெண்களெல்லாம் கையில் தோரம் கட்டிக்கொள்வது வழக்கம். (more…)