இரு பெண்கள். நிம்மதியற்ற இணை வாழ்வுகள். நெகிழ்வற்ற சமூக அமைப்புக்கு எதிராய்க் குமுறிப் போராடி உடையும் உயிர்கள். எஸ்தரும் காவேரியும்.
சில்வியா ப்ளாத்தின் பெருமையை எனக்கு உணர்த்திய நண்பருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவரது துயர வாழ்வையும் முடிவையும் வாசித்தபோதுதான் ப்ளாத்தின் பெயரையே முதன்முறை கேள்விப்படுகிறேன். எழுத்தாளர் டெட் ஹ்யூஸுடன் அமைதியில்லாத மணவாழ்வு. ப்ளாத்தை அறியும் பயணம் இறுதியில் அவரது கிளாசிக் படைப்பான பெல் ஜாருக்கு என்னை இட்டுச் சென்றது (The Bell Jar). மேதைமையின் என்னவொரு அற்புதப் படைப்பு. அமைதியற்ற தன் உள்ளத்தின் இருண்ட பகுதிகளிலிருந்து அவர் எஸ்தர் கிரீன்வுட்டை உருவாக்கினார். எஸ்தரைப் பற்றி படிப்பதற்கு முன்பே எனக்கு அவளைத் தெரியும் என்ற உணர்வு ஏன் தொடர்ந்து இருந்து வந்தது? இந்த அனுபவம் எனக்கு முன்னரே ஏற்பட்டிருக்கிறது, இந்தப் பக்கங்களை நான் முன்னரே வாசித்திருக்கிறேன் என்ற ஆழ்ந்த உணர்வு ஏன் ஏற்பட்டது? பின்னர்தான் காவேரியின் சாயல்களைக் கொண்டவள் எஸ்தர் என்ற உண்மை புலப்பட்டது. (more…)