டோல்கீன் தன் ‘பேவோல்ஃப்’ மொழிபெயர்ப்பைத் தனியாய் எடுத்து வைத்திருக்கலாம், ஆனால் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப்பின் அவர் இது குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். அந்தக் கவிதை குறித்த மிகச் சிறந்த கட்டுரை என்று மட்டுமல்ல, பலர், இது ஆங்கில இலக்கியத்தின் மிக அருமையான கட்டுரைகளில் ஒன்று என்றும் கருதுகின்றனர். இதுதான் அந்தக் கட்டுரை “பேவொல்ஃப்: மான்ஸ்டர்களும் விமரிசகர்களும்”. விமரிசகர்களுக்கு மான்ஸ்டர்கள் மேல் என்று நினைத்தார் டோல்கீன். கவிதையின் பொருள் புறக்கணிக்கப்பட்டு, தொல்பொருள் மற்றும் மொழியியல் ஆய்வுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது என்பது அவரது கருத்தாக இருந்தது. பேவொல்ஃப்பில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது, எந்த அளவுக்கு கற்பனை உள்ளது? அண்மையில் கண்டெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்புகளுக்கு அதனுடன் உள்ள உறவு என்ன?