தவளை இளவரசன்

எஸ். சுரேஷ்

தாமரை இலை மேல் அமைதியாய்
உட்கார்ந்துக் கொண்டிருந்த தவளை
அந்த வழியாக குதிரை மேல் செல்லும்
இளவரசியைப் பார்த்து கத்தியது
இளவரசி அருகில் வந்து தவளைக்கு முத்தமிட
ஓர் இளவரசனாய் மாறியது தவளை
அவனைக் கண்டு திடுக்கிட்ட இளவரசி
“ஐயோ, இவ்வளவு அசிங்கமான இளவரசனை
நான் பார்த்ததில்லை” என்று கூறிவிட்டு
குதிரை மேல் ஏறி அங்கிருந்து பறந்தாள்
இளவரசன் கண்ணில் நீர் மல்க
அவள் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்தான்
இதை மரத்தின் மேலிருந்து பார்த்த பாம்பு கூறியது
“நுணலும் தன் வாயால் கெடும்”

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.