கருப்பு ஆந்தை

 எஸ். சுரேஷ் –

 

கண்ணாடி ஜன்னலில் இருந்த சிறு ஓட்டை வழியாக
கருப்பு ஆந்தை ஒன்று தினமும் நள்ளிரவில் உள்ளே வந்து
தலைமாட்டில் உட்கார்ந்து ​கொண்டு
இரத்தத்திற்கு பதிலாக அவர் நினைவுகளைக் குடிக்கிறது.

“அவன் வந்தானாடா இன்னிக்கி?”
“யாருப்பா?”
“அதான்டா. அவன் பேர் மறந்துட்டேன். இன்னக்கி வரேன்னானே அவன்”

சரளமாக​க் குடித்துக் கொண்டிருந்த ஆந்தை
இப்பொழுதெல்லாம் ​​தேடித் தேடிக் குடிக்க வேண்டியிருக்கிறது.

“இவங்க யாரு?”
“இவதான் உங்க பொண்ணு”
“ஓஹோ, அந்த நர்சிங் இன்னும் வரலையா?”

ஆழத்தில் அழுத்தமாக பதிந்திருக்கும் நினைவுகளைக்
குடிக்க முயன்று தோற்றாலும் கருப்பு ஆந்தை
தினமும் மேலோட்டமாகச் ​சேரும் நினைவுகளைக் குடித்துவிடுகிறது.

“நாளைக்கு பாரு காங்கிரஸ் தோக்கற​த.
மொரார்ஜி தேசாய் எப்படியும் ஜெயிப்பார்.
நர்சிங் இன்னுமா வரல?”

கருப்பு ஆந்தைக்கு இனி இங்கு தீனி இல்லா​ததால்
உடைந்த ​வேறொரு ​கண்ணாடி ஜன்னலையும்
நிறைந்த நினைவுகளை​யும் ​தேடிச் செல்கிறது.

“இவங்கல்லாம் யாரு?”​

image credit : ArtlbleLandscape with Grave Coffin and Owl , Caspar David Friedrich

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.