கீறல்
கடவுள் எது
கல் எது
வித்தியாசம்
என்று ஒன்றிருந்தால்
அது நூலிழை அளவு தான்
ஜெஜூரியில்
இருக்கும் கற்களில் பாதி
கடவுள் அல்லது அவரது பங்காளி
எந்த விளைச்சலுமில்லை
கடவுளைத் தவிர
கடவுளே இங்கு விளைச்சலாகிறார்
வருடம் முழுவதும்
நாள் முழுவதும்
தரிசு நிலத்தில் இருந்தும்
பாறாங்கல்லில் இருந்தும்
ஒரு படுக்கை அறை அளவு பெரிய
அந்த ராட்சதப் பாறை
கல்லாய் மாறிய காண்டோபரின் மனைவி
அதில் நீள்வெட்டாய் உள்ள பிளவு
ஒருமுறை பெருங்கோபத்தில்
அவள் மீது அவர் வாள் வீசியபோது
ஏற்பட்ட தழும்பு
ஒரு கல்லைக் கீறிப்பார்
ஒரு பழங்கதை உயிர்த்தெழும்