ஸ்தலபுராணம் IV : ஆடு தாண்டும் ஆறு

நந்தா குமாரன்

சிறுநீர் கழிக்கப் பதினைத்து ரூபாய்
கொடுத்துக் குடித்த ஹோட்டல் காஃபி
சுவை துடைத்து
மகவின் குரங்கு பயம் போக்கிச்
சுமந்து கடந்து
ஆற்று ஆலாக்கள் மீன் பிடிக்கும்
அர்காவதி இணையும்
காவிரி சங்கமம் தாண்டி
பள்ளத்தாக்கில்
பாயும் பஸ் பயணம் முடிய
நட்ட குழிப் பாறைகளில் வழுக்கப் பார்த்த
சாகசப்பெண் கண்ட சாகசஆண் தோன்றும்
வெய்யில் மூச்சு படர்ந்த
புவியில்
உடல் பசிக்க
புளி சாதம் கலந்து உண்ட
ஜிலேபி மீன் வறுவல் சுவை போற்றி
உள்ளூர் கைத்தடி தாத்தா வழிகாட்டியாகிக் காட்டிய
அருவி போற்றி
“இடையா இதை உன்
ஆடு தாண்டுமா …”
“மடையா இதை உன்
கவிதை தாண்டுமா …”
வேண்டாம் என்றால் கொடுத்து
வேண்டிக் கொண்டால் தடுத்து
ஆடும் லீலை நிறுத்து

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.