கதவு திறந்திருக்க
மனோகர் நினைத்தான்
இன்னொரு கோயிலென
உள்ளே பார்த்தான்
எந்தச்சாமி இருக்குமோ
என்ற எதிர்பார்ப்பில்
அகன்ற கண்கள்
கொண்ட கன்று ஒன்று
திரும்பிப் பார்க்கவும்
இஃதொன்றும்
கோயில் அல்ல
மாட்டுத்தொழுவம் மட்டுமே
என்றான் மனோகர்
௦௦௦
அருண் கொலாட்கரின் Manohar என்ற கவிதை தமிழாக்கம்
