விமோசனம், புண் உமிழ் குருதி (கல்யாண் ராமனின் புத்தகத்துக்குத் தலைப்பாக ஆகியிருக்கிறது), பழக்கம் போன்ற என்னைக் கவர்ந்த அமி கதைகள் பல இருக்கையில் இதை நான் தேர்ந்தெடுக்க என்ன காரணம் (நாலு பக்கத்தில் முடிந்துவிடுவதுதானே என்று கேட்காதீர்கள்) என்று எனக்கே சற்று வியப்புதான்.
உண்மையில் கதை என்னைத் தேர்ந்தெடுத்தது (அல்லது தானாகவே தன்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது) என்பதே சரி! நஞ்சன்கூடு பல்பொடி என்ற பெயர் மனசில் தங்கி சுற்றிக்கொண்டே இருந்தது. பார் சோப்பில் ஆரம்பித்து ராம்கோபால் மில் துணி, ஃபோட்டோவுக்காக நூல் நூற்கும் கதாநாயகியர், கைதி உடை, சைக்கிளை சுற்றுவது என்று தொடர்பற்ற பல படிமங்கள் நினைவை விட்டு அகலவில்லை. பெஞ்சு மேல் நின்றாலும் அதற்காக இவன்மேல் கோபப்படாத வகாப், புண் உமிழ் குருதியில் தர்ம அடி வாங்கிக்கொண்டு ‘உன் பணத்தை நான் எடுக்கலப்பா’ என்று அமைதியாக அகலும் கிழவரின் இன்னொரு வார்ப்பாகத் தோன்றினான்.
சிவசக்தி சரவணன் மொழிபெயர்த்த Khaddar இங்கே