அப்போது விடிந்து
கொண்டிருந்தது
நீண்ட இரவானதால் வரும் பகலை
வெகுவாக ஏங்கினாள்
அஞ்சி நடுங்க வேண்டியதில்லை இனி
கழிவறைக்குள் மௌனமாக கதறியழ இருக்காது
போலிப் பாவனைகளை
விரும்பி அணியும் அசிங்கமில்லை
ஒவ்வொரு இரவும் ஒரு பயங்கரமாகும்
விபத்தை தவிர்த்துவிடலாம்
சொற்களின் வெக்கையில் வாடி
துவண்டு போகும் கொடுங்கணங்கள்
வரவே வராது
இளங்காலைகளை விரும்பிய வண்ணம்
போர்வைக்குள் களிக்கலாம்
வரும் பகல்களை பதற்றமின்றி
கைகுலுக்கி அனுப்பிவைக்கலாம்
வீடடைந்தவளை வரவேற்றது
இருள் உறைந்த அம்மாவின் முகம்
One comment