நிறப்பிரிகை : ஒன்று – ச்யாமளம்

சரவணன் அபி

அடர்
ஆதி வெம்மையினின்று
ஒழுகி வந்த
ஒற்றை முலையமுதம்
ச்யாமளம்

கனவின் ஆழம்
அறியமுடியா உன்னதம்

பேதமறியா
அந்தக உலகின்
அந்தமில்லா வாசி
சியாமளீ

இன்னும் பின்னும்
தேடியடைய
விழையும் கருக்கூடு
ஆடி அடங்கும் புலன்
சாயும் மடி ச்யாமளம்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.