எஸ் வீ. ராஜன்.
அலங்கரித்து
வண்டீர்க்கத்
தயாராய் நின்ற
பூச்செடிக்கு
பனிமுத்தமிட்டுச்
செல்லும்
ஐப்பசி
அதிகாலை.
இளம்சிவப்புச்
சூரிய வட்டத்தின்
குறுக்காக
நிழல்கோடிட்டபடி
கடந்து செல்லும்
அழகைக்கவனியெனும்
பறவைக்கூட்டபவனி.
குளக்கன்னத்தில்
குழிவிழக்
குதித்துக்களிக்கும்
தவளைக்கு
பயந்தார்ப்போல
தாமரையிலைமேல்
தவ்வியேறும்
நீர்த்திவலை.
இதையெல்லாம்
பார்ப்பதற்கே
சீக்கிரம்
எழுப்பிவிட்டதாய்
சொல்லத்தெரியாத
என்
இயற்கை அழைப்பு.