கா. சிவா கவிதை- சொல்லற்ற மொழி

கா. சிவா

பூத்துக் குலுங்கும் மரத்தை
குறிக்கும்போது
காய்த்துத் தொங்குவதை
எண்ணிக் கொள்கிறாள்

நறுந்தேன் மலரை உரைக்கையில்
காகிதப் பூக்களை
கைக்கொள்கிறாள்

மரியானா டிரின்ஞ்சை விளக்கும்போது
டீதிஸ் கடலை கற்பனைக்கிறாள்

சொல்ல விழைவதின்
சிறு பகுதியை
உறிஞ்சிக் கொள்கின்றன
கடத்தற் கூலியாக,
சொற்கள்

அறிவதெப்படி,
சொற்களின் துணையின்றி
கச்சிதமாக உணர்த்தும்
மலர்களின் மொழியை.

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.