கலைந்த கீதம்,காலம், பிசகு – பானுமதி கவிதைகள்

கலைந்த கீதம்

சிறு வட்டம் பின்
பெருவட்டம் எனச்
சுற்றியது தனித்து
கடந்த கூட்டுப் பறவைகள்
வியந்து பார்த்து விரைந்து போயின
வான் மேக வீணைக் குடங்கள்
தொட்டு தந்தி மீட்டிப் பார்த்த புள்
கலைந்த கீதம் எதையோ கேட்டது.

காலம்

இலை வகிட்டில் தத்தித்தத்தி ஒரு நடனம்
அகல் விளக்கை சுற்றும் சிறு காற்று
மணல் மேட்டில் நெளியும் ஒரு நாகம்
சிதை காட்டில் எரியும் இந்த சடலம்.

பிசகு

செம்பழுப்பும், மஞ்சளும் கலந்த புள்ளி
நீலமும் பச்சையும் உலவும் ஒளித் தினவு
பால் வெண்ணீறீன் சாயத்தில் தோய்த்த அழகு
பறவை என்றால் இதைத்தான் நினைக்கிறாய்
கருஞ் சிறகுகள் கவனத்திலுமா பிசகும்?

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.