ரகுராவணன்
வராத வாந்தி தலைசுற்றல் மயக்கம்
புளிக்காத மாங்காய்
தீராத சாம்பல்
வெளுத்துப் போன பாய்
அலுத்துப் போன உடல்
சலித்துப் போன சாமி
கொழுத்துப் போன டாக்டர்
நீளாத மாதம்
ஓயாத வாய்கள்
ஆட்டாத தொட்டில்
தூக்காத குழந்தை
போகாத கல்யாணம் காதுகுத்து
பெயர் சூட்டு பிறந்தநாள் விழாக்கள்.
இன்று பக்கத்து வீட்டில் சீமந்தம்.
அழுகின்ற குழந்தைக்கு ஆறுதல்
கூறுகிறான் கணவன்