– அஜய் ஆர். –
டானா டார்ட்டின் முதல் நாவலான “ரகசிய வரலாறு” (The Secret History) தலைப்பை பார்த்தோ, பின்னட்டை ‘டயோனிசியச் சடங்குகள்’ (‘Dionysian rites’) என்று குறிப்பிடுவதைப் பார்த்து மர்மக்கதை என்றோ த்ரில்லர் என்றோ எண்ணினால் அது தவறாகும்.
ஆம், இந்த நாவலின் துவக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது, ஆனால் கொலைகாரர்கள் யார் என்பது நமக்கு அப்போதே தெரிந்துவிடுகிறது. நாவல் அதைத் தொடர்ந்து பின்னோக்கிச் சென்று கொலைக்குக் காரணமான நிகழ்வுகளைப் பேசிவிட்ட, அந்தக் கொலைக்குப் பின்னான நிகழ்வுகளையும் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதையும் விவரிக்கிறது, என்பதால் இந்த நாவலை ‘bildungsroman’ நாவல் என்றும் கல்லூரி வாழ்க்கை பற்றி பேசுவதால், ‘Campus Novel’ என்றும் குறிப்பிடலாம். குற்றம், அதற்கான காரணம், அந்த குற்றம் எப்படி குற்றம் செய்தவர்களையே பாதிக்கிறது என்று பேசுவதால் உளவியலைப் பற்றிய நாவல் என்றும் சொல்லலாம். ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் மட்டுமே பொருத்தப்படக் கூடிய நாவல் அல்ல இது. மர்மக் கதையை எதிர்பார்த்து இதை வாசிக்கத் துவங்கினால் ஏமாற்றமளிக்கும். (more…)
