பீட்டர் பொங்கல்

அம்மாவுக்காக – மஹ்மூத் தார்விஷ்

(ஆங்கில மொழியாக்கம் – ஏ. இசட். ஃபோர்மேன்)

என் அம்மாவின் ரொட்டிக்கு ஏங்குகிறேன்,
அம்மாவின் காப்பிக்கு;
அம்மாவின் தடவிச் செல்லும் ஸ்பரிசத்துக்கு..
ஒவ்வொரு நாளும்,
என்னுள் குழந்தைமை வளர்கிறது.
வாழ்வை அவ்வளவு நேசிக்கிறேன்-
ஏனெனில், நான் இறந்தால்
அம்மாவின் கண்ணீர் என்னை வெட்கச் செய்யும்..

என்றேனும் நான் திரும்ப நேர்ந்தால்,
உன் இமைகளில் போர்த்துக் கொள். உன் கையால்
என் எலும்புகள் மீது புற்களை வீசு;
புனித மண்போல்
களங்கமற்ற உன் காலடித்தடங்களால் பெயரிடப்பட்டவன்.
ஒரு கற்றை மயிரால் என்னைக் கட்டிக் கொள்,
உன் ஆடையின்பின் ஒரு நூலில் பிணைத்துக் கொள்.
நானும் தெய்வம் தொட முடியும்
என் ஆன்மா தெய்வம் தொட முடியும்
உன் இதயத்தின் சுவாசத்தை நான் தொட முடிந்தால்.

என்றேனும் நான் திரும்ப நேர்ந்தால்,
உன் அடுப்பில் சமைக்க என்னை எரியாக்கு,
கூரையில் துணியுலர்த்தும் கொடியாய் உன் கைகளில் விரித்துக் கொள்.
உன் தினசரி பிரார்த்தனைகளின்றி
என்னால் நிற்கவும் முடியாது..

எனக்கு வயதாகிவிட்டது..
என் குழந்தைமையின் நட்சத்திரங்களைக் கொடு,
வீடு நோக்கிய பாதையில் நான் செல்ல வேண்டும்.
வீடு திரும்பும் பறவைகளோடு
என்னை அழைக்கும் உன் கூட்டுக்கு.

நன்றி – http://poemsintranslation.blogspot.in/2009/12/mahmoud-darwish-to-my-mother-from.html

ஆவி சொன்ன கதை – சேத் சைமன்ஸ்

(Matchbook என்ற தளத்தில் Seth Simons எழுதிய குறுங்கதை)

நான் உன்னை பயமுறுத்த வரவில்லை. அதற்குதான் வருகிறேன் என்று பல பேர் நினைக்கிறார்கள், ஆனால் அப்படியல்ல. இங்கு தரைப்பலகைகள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. நீ கவனித்தாயா தெரியவில்லை. நிலவறையில் பல ஆண்டுகளாக பூஞ்சை படிந்து கொண்டிருக்கிறது.. அது நச்சாக இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை. என்னால் இப்போதெல்லாம் வண்ணங்களைப் பார்க்க முடிவதில்லை. நிழல்கள் மட்டும்தான். வெளிச்சம், அல்லது இருள். எனவே, நிலவறைக்குப் போகாதே. சத்தியமாகச் சொல்கிறேன், நான் உன்னை பயமுறுத்த வரவில்லை. நீ மேலே கூரையை இன்சுலேட் செய்வது பற்றி யோசிக்க வேண்டும். அங்கு கடைசியாக கை வைத்தபோது ஆஸ்பெஸ்டாஸ் என்பது வெறும் வார்த்தையாகத்தான் இருந்தது. யாருக்கும் எதுவும் தெரியவில்லை. நிச்சயம் எனக்கு எதுவும் தெரியவில்லை. எப்போதும் அதிகம் தெரிந்து கொண்டிருந்ததும் கிடையாது. உனக்கு நினைவிருக்கிறதா- இல்லை, உனக்கு நினைவிருக்காது, இல்லையா? எனக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் என்னை விட்டுப் போய்விட்டாள். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள் அவர்களும் என்னை விட்டுப் போய்விட்டார்கள். ஒரு நாய் இருந்தது, ஜாக்சன். தெருவுக்கு ஓடிப் போனது, பிறகு திரும்பவும் ஒடி வந்துவிட்டது. அவன்தான் அதிர்ஷ்டக்காரன். இங்கே எத்தனையோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள். உன்னைப் போன்றவர்கள். என்னைப் போன்றவர்கள். வேறு பல பேரின் புகைப்படங்களை மாட்டி வைத்தார்கள், சட்டம் போட்ட படங்கள். நீயும் அப்படிச் செய்யலாம், உனக்கு விருப்பமிருந்தால். நான் உன்னைத் தடுக்க மாட்டேன். என்னால் தடுக்கவும் முடியாது என்று நினைக்கிறேன். இந்தச் சுவர்களை நான்தான் எழுப்பினேன், தெரியுமா? அவள் ஒரு சின்னப்பெண் போலிருந்தாள், அப்போது, வெயிற்கால உடையில் இருந்தாள், தலைமுடியில் ஒரு ரிப்பன் கட்டிக் கொண்டிருந்தாள். அதன் வண்ணங்களை நினைவு வைத்திருக்க இப்போதெல்லாம் முடிவதில்லை. சிவப்பாக இருக்கலாம், அல்லது நீலமாக இருக்கலாம். அவளது பற்கள் வெண்மையாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை. ஓடை வரை அவள் பின்னால் போனேன். அவள் தன் காலணிகளைக் கழட்டினாள். தண்ணீருக்குள் இறங்கினாள். கற்களின்மேல் குதிகால் உயர்த்தி கால் பதித்து நடந்தாள். கூர்மையான கல் ஒன்று அவள் காலின் கட்டை விரலைத் தைத்தது. சிறு கப்பல்கள் கடலில் செல்வது போல் எங்களைச் சுற்றி பருத்தி பறந்தது. புகைபோல் தண்ணீரில் ரத்தம். இப்போது என்னால் எல்லாவற்றையும் பார்க்க முடியும். சுவர்களுக்கு இடையே எலிகள் இருக்கின்றன. உடைந்த செஙகற்கள். காட்டில் பல ஆண்டுகளுக்கு முந்தைய பைன் மரச் சருகுகளுக்குக் கீழ் கொடரியின் உடைந்த கைப்பிடியொன்று கிடக்கிறது. வானொளிச் சாளரத்தில் சிலந்தி வலைகள். பார், ஓடிக் கொண்டிருக்கும் காட்டெருமைக் கூட்டத்தினிடையே என் பேரப்பிள்ளைகளும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். என்னால் அவர்களைப் பார்க்க முடிகிறது. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கத்திக் கொண்டிருக்கிறார்கள். சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னை அழைக்கிறார்கள். நான் அவர்களைத் தூக்கி வைத்துக் கொள்கிறேன். குழந்தைகள், இப்போது. நாம் எல்லாரும். சுவர்க்காகிதங்களில் நிழல்கள். பழைய தாமிரக் குழாய்கள். வண்டுக்கூடுகள். எலும்புகள். நான். அவள். எல்லாரும். மந்தையாய் மிதித்துச் செல்லும் காட்டெருமைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. சமவெளிகளில் இடிமுழக்கம். இது எப்போதும் நடக்காத ஒன்று. எப்போதும் நடக்கும் ஒன்று”.

நான் ஒரு டம்ளர் பால் ஊற்றிக் கொள்கிறேன். வெளியே, இரு பொன்பாடிப் பறவைகள் ஃபீடரின் உள்ளிருக்கும் இறைச்சியைக் கொத்துகின்றன. வேனிற்காலத்து மஞ்சள் ஆடையை ஒன்று ஏற்கனவே இழந்து விட்டது. மற்றொன்று இன்னும் இழந்து கொண்டிருக்கிறது, அதன் சிறகுகளில் திட்டுத்திட்டாகப் பளீரிடும் வண்ணங்கள், அதன் வயிற்றில். கிளென் தன் தோட்டத்தில் இலைகள் கூட்டிக் கொண்டிருக்கிறான். கருவாலி மரங்கள் வளைந்திருப்பதைப் பார்க்கும்போது காற்றடிப்பது தெரிகிறது, தாழ, ஆனால் நிதானமாக வீசும் காற்று. கிட்டத்தட்ட உன் காதில் விழாமலே உன்னைக் கடந்துச் செல்லும் காற்று.

நன்றி – Matchbox

சோப்பு தேவதை – ஜாக் ஸ்டாப்

 ஜாக் ஸ்டாப் – 

வீட்டுக்கு அருகில் உள்ள முட்கம்பி வேலிகளுக்குள் அவள் தன் மிருகங்களை வைத்திருந்தாள். நான் நடந்து செல்லும்போது அவற்றின் மிழற்றல்களையும் அந்த மிருகத்தின் பால்மடிகள் ஏழும் புல்தரையில் தேய்த்துக் கொள்வதையும் காட்டுக்குள்ளிருந்தும், என்னால் கேட்க முடிந்தது. அவை ஒரு கூட்டமாய் மலைமேல் ஒரு கருமேகமாய் தொங்கிக் கொண்டு இருந்திருக்கலாம், அல்லது தானியக் கிடங்கின் மூலைக்குத் தள்ளப்பட்ட கொழுத்த பெண் பன்றிஅது ஒன்றே ஒன்று மட்டும் இருந்திருக்கலாம்-..

ஒவ்வொரு இரவும் நான் அவளது கதவடிக்கு வந்தபோது என் கரங்களின் சருமத்தைத் தொட்டுத் தடவிப் பார்ப்பாள், நெருப்பருகே இப்புறமும் அப்புறமும் அவற்றைத் திருப்பிப் பார்ப்பாள். அவை ஏற்கனவே டிடர்ஜென்ட்கள் காரணமாய் பிளவுபட்டு ரத்தம் வடிந்து கொண்டிருக்கவில்லை எனில், எந்த மருந்து கொண்டு அவற்றைப் பிணைத்திருந்தாலும் வயல்வெளிகளைக் கடந்து அவளது அபார்ட்மெண்ட்டுக்குச் செல்லும் நீண்ட பயணம் அதை உறையச் செய்திருக்கும். முகத்தில் சினக்குறியோடு அவள் என் மணிக்கட்டைப் பற்றி உள்ளே இழுத்துச் சென்று என் மயிர்க்கால்களிலும் விரல்முடிச்சுகளிலும் க்ரீம் தேய்த்து விடுவாள். தட்டுகளிலும் அடுப்புக்கு மேலிருந்த கூரையிலும் எப்போதும் கெட்டித்து உறைந்திருந்த கொதிபால் நுரைக்கும் மணம் அறையை நிறைந்திருந்தது. மரத்தாலான குறுகிய அந்த அபார்ட்மெண்ட் ஒரு ப்ரெட்பாக்ஸின் உட்புறம் போலிருந்தது, அல்லது, கிழக்கு நோக்கியிருப்பின்,, கண்ணீர் வடிக்கும் எங்கள் காலணிகளை நெருப்புக்கருகில் வைத்திருக்கும் சவப்பெட்டி போலிருந்தது. (more…)

அரேபிய இலக்கியத்தை ஆங்கிலத்தில் முழுமையாய் புரிந்து கொள்வது சாத்தியமா? – எம். லின்க்ஸ் க்வேலி

(The National என்ற தளத்தில், Can Arabic literature ever be fully understood in English? என்ற தலைப்பில் M Lynx Qualey எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.)

1987ஆம் ஆண்டுக்கு முன் நவீன அரேபிய இலக்கியம் ஆங்கில இலக்கிய உலகில் அறியப்படாத ஒன்றாக இருந்தது. அவ்வாண்டு நாகூப் மாஃபூஸ் நோபல் பரிசு பெற்றபோது மாஃபூஸ் போலவே, ஆங்கில இலக்கியத்தை நேசிப்பவர்களுக்கும் அது ஒரு அதிர்ச்சியான செய்தியாக வந்தது.

தலைசிறந்த அந்த எழுத்தாளரின் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் தகுதி வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் யாரும் இல்லை என்று அப்போதுதான் கெய்ரோ பிரஸ்ஸில் அமெரிக்கன் யுனிவர்சிட்டி சொல்லியிருந்தது. அப்போது அவர்கள் குழுக்களாய் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தனர். சில சமயம் நான்கு கல்வியியலாளர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்கள் தம் ஒவ்வொருவரின் மொழிபெயர்ப்பையும் சரி பார்த்துக் கொடுத்துக் கொள்வதுண்டு.

1987ஆம் ஆண்டுக்குப்பின் நவீன அரேபிய இலக்கியத்தின் இருப்பை பதிப்பகத்தினர் உணர்ந்து கொண்டனர். மெல்ல மெல்ல அரேபிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் வர ஆரம்பித்தன. சிறுதுளிகளாய் இருந்தது செப்டம்பர் 2001க்குப்பின் நீர்த்தடம் போலாயிற்று. இப்போது அது ஒரு சிற்றோடை போன்ற நிலையைத் தொட்டிருக்கிறது.

இன்று காலை, ஷுப்பக் பெஸ்டிவல் கலந்துரையாடலில் நாங்கள் ஒரு குழுவினராய், “ஆங்கில மொழியில் அரேபிய இலக்கியத்தின் வளர்ச்சிஎன்ற தலைப்பில் பேசப்போகிறோம். இந்த வளர்ச்சியை எப்படி புரிந்து கொள்வது என்பது குறித்து கருத்து வேற்றுமை இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்இது நன்மையா தீமையா என்று. (more…)

வாழ்க்கை நம்மை என்னவெல்லாம் செய்கிறது- மிகைல் ஷிஷ்கின்

(Mikhail Shishkin, and what life does to us என்ற தலைப்பில் Cynthia Haven எழுதியுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

ஏறத்தாழ எப்போதும் நான் பல்வேறு காலக்கெடுக்களில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு பத்திரிக்கையைச் சுருட்டி என்மேல் ஒரு போடு போட்டால்தான் என் கவனத்தை நீங்கள் கவர முடியும். எனவே, டீப் வெலம் பதிப்பித்த காலிகிராபி லெஸ்சன்தொகுக்கப்பட்ட கதைகள்என்ற மிகைல் ஷிஷ்கினின் அற்புதமான தொகுப்பைக் கொண்டு என் நண்பர் ஸ்காட் எஸ்பாஸிடோ ஒரு மாதிரியான உவமேய, சைபர்ஸ்பேஸ் வகையில் அதைச் செய்திருக்கிறார் என்று நான் நன்றி சொல்ல வேண்டும்.

த டேக்கிங் ஆப் இஸ்மய்ல்என்ற நூலுக்காக 2000ஆம் ஆண்டு புக்கர் பரிசும், “மெய்டன்ஹேர்” (ஒப்பன் லெட்டர், 2012) என்ற நூலுக்காக 2005 நேஷனல் பெஸ்ட்செல்லர் பரிசும் 2006 நேஷனல் பிக்புக்பரிசும் வென்ற ஷிஷ்கினை மேற்கத்திய உலகில் முதல்முறை படிக்கும் கடைசி ஆள் நானாகத்தான் இருக்கிறேன் போலிருக்கிறது, தெரியும். அப்படி பார்த்தால், இப்போதும் எனக்கு ஷிஷ்கின் பற்றி தெரியாது, அவரது நாவல்களை நான் படித்ததில்லை. இந்தப் புதிய தொகுப்பில் உள்ள சிறுகதைகள், நினைவுக்குறிப்புகள், ஆய்வுகளில் சிறிதளவுதான் படிக்க முடிந்தது. இன்னும் சில காலக்கெடுக்களை நான் கடந்து செல்லும்வரை, தள்ளி வைக்கப்பட்ட என் சந்தோஷங்கள் பலவற்றில் இதுவும் ஒன்றாக இருக்கப் போகிறது
(more…)