எழுத்து

ஒரு பயணமும் சில கதைகளும் – மாதவன் ஸ்ரீரங்கம்

ஒரு தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும்போல் தோன்றியது. மகாபலிபுரம் நுழைந்ததும் சாலையோர விடுதி ஒன்றில் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன். சாலையை பார்க்கும்படியான மேஜையொன்றில் அமர்ந்துகொண்டேன். சாலைக்கு எதிரிலிருந்து ஒருவன், ஒரு பார்வையற்ற பெரியவரை கைப்பிடித்து அழைத்துவந்து விடுதியில் விட்டுவிட்டுச் சென்றான்.

பெரியவர் பார்ப்பதற்கு, நல்ல உயரமாகப் பழைய கருப்புவெள்ளை திரைப்படங்களில் வரும் கவுபாய்க்கிழவர் போலிருந்தார். தொப்பி மட்டும்தான் இல்லை. அடர் கருப்பு நிறத்தில் அவர் அணிந்திருந்த கண்ணாடியில் சாலையில் சென்ற வாகனங்கள் பிரதிபலித்தன. என் தேநீரை அருந்தியபடியே அவரைக் கவனித்தேன். அவர் தனது தேநீரை ஒரு குழந்தையைப்போல ரசித்துக்குடித்துக்கொண்டிருந்தார். டீ மாஸ்டர் பெரியவரிடம் பேச்சுக்கொடுத்தார்.

“எங்க சார் மெட்ராசா போவனும்”?

அவர் குரல் வந்த திக்கில் குத்துமதிப்பாகத் திரும்பி பதிலளித்தார்.

” ஆமாப்பா. என்னைக்கொஞ்சம் பஸ்டாப்பில கொண்டுபோய் விட்ரமுடியுமா”? என்றார் தனது காலித்தம்ளரை அருகில் வைத்துவிட்டுச் சில்லறையை எடுத்தபடி.

நான் எழுந்து தேநீருக்கான காசைக்கொடுத்துவிட்டு வெளியில் வந்தேன். பெரியவரிடம் கேட்டேன்.

“நானும் சென்னைதான் போறேன் சார். வரீங்களா இறக்கிவிட்டிடறேன்”

இதில் சம்மதமென்பதை அவர் முகத்தின் மகிழ்ச்சியின்வழி உணர்ந்துகொண்டேன். என் முழங்கையைப் பிடித்துக்கொண்ட அவர் உள்ளங்கை உஷ்ணமாக இருந்தது. உள்ளே அமர்ந்தபின் நான் காரைக்கிளப்பியபடியே அவரிடம் கேட்டேன்.

“யாரையாவது கூட கூட்டிட்டு வந்திருக்கலாமே சார். தனியா போக்குவரத்தெல்லாம் கஷ்டமில்லங்களா”

அவர் நேராக முன்புறத்துச் சாலையின் திசையில் முகத்தை வைத்தபடி மெலிதாகச் சிரித்தார்.

“சுத்தியும் மனுஷங்க இருக்கும்போது எனக்கென்ன தம்பி கவலை. உதவற மனுஷங்க இன்னும் இருக்காங்க உலகத்தில”

நான் சற்று அமைதியாக இருந்தேன். கார் சவுக்குத்தோப்புகள் அடர்ந்த சாலையில் சென்றுகொண்டிருந்தது.

“தம்பியும் சென்னைதானா”?

” ஆமா சார். அஷோக் நகர். நீங்க”?

“திருவான்மியூர் தம்பி.

“இங்க சும்மா சுத்திப்பாக்க வந்தீங்களோ”?

” இல்ல சார். ஒரு கம்பெனில ஆர் எம்மா இருக்கேன். சைட் விஸிட்டிங்காக கடலூர் போயிட்டு வந்திட்டிருக்கேன்”

“அப்ப பொறந்து வளந்ததெல்லாமே சென்னைதான்னு சொல்லுங்க”

“ஆமா சார். நீங்க”?

” இப்பத்தான் தம்பி கொஞ்சநாளா சென்னைல இருக்கேன்”

“ஓ ! அப்ப அதுக்கும் முன்ன”?

” அதெல்லாம் பெரிய கதை தம்பி. எதுக்கு உங்களை போரடிக்கனும்”

நான் சிரித்துக்கொண்டேன்.

“அப்டியெல்லாம் இல்ல சார். நீங்க வயசுல பெரியவங்க. எத்தனையோ அனுபவங்க இருக்கும். எப்டியும் முக்கால் மணிநேரம் ஆவுமே”

அவர் தனக்குள்ளாகப் புன்னகைத்துக்கொண்டார்.

“சரி அப்ப ஒண்ணு செய்வோம். நா உங்களுக்கு சில கதைங்களைச் சொல்லுறேன். அதுல எந்தக் கேரக்டர் நான்னு நீங்க சொல்லுங்க”

எனக்கும் பெரியவரின் இந்தப் பீடிகை பிடித்திருந்தது. நான் சம்மதம் என்றதும் அவர் துவங்கினார்.

கதைக்குள் கதை
————————
கண்விழித்தபோது அவன் உடலெங்கும் வலித்தது. குறிப்பாக இடதுகால் ஆடுதசைப்பகுதியில் அதிகம் வலித்தது. அவன் கூரையின் துளைகள் வழி சூரியவெளிச்சம் வழிந்தது. பக்கத்தில் தகர டிரம் ஒன்றின்மீது அவன் சீருடை கசங்கலாகக் கிடந்தது. அவன் சுற்றிலும் நோட்டமிட்டான். நிறைய தட்டுமுட்டுச்சாமான்களுடன் ஒரு பழைய அம்பாஸிடர் காரும் நின்றிருந்தது. கார்ஷெட்டாக இருக்கலாமென்று யூகித்தான்.

ஒரு மூலையில் மர அடுக்குகளில் விதவிதமான பறவைகள் கத்திக்கொண்டிருந்தன. இருந்தன. ஷெட்டின் தகர கேட்டின் மெலிதான கிரீச்சிடலுடன் உள்ளே நுழைந்த அந்தப்பெண் முக்காடு அணிந்திருந்தாள். தொலைவில் எங்கோ ராணுவவிமானம் பறந்த ஒலியைத்தொடர்ந்து பெரும் வெடியோசை கேட்டதில் அவன் படுத்திருந்த கட்டில் அதிர்ந்தது. அவள் நெருங்குவந்து அவன் கால் காயத்தைப் பரிசோதித்தாள். அவன் வலியில் முனகினான்.

“இது என்ன எடம் ? நா எப்டி இங்கவந்தேன்”?

அவள் பதில்கூறாமல் கட்டை அவிழ்த்துவிட்டுப் புதிதாக கட்டிட்டாள். அவனுக்குத் துளிகூட வலித்துவிடக்கூடாது என்பதுபோல் அவள் செயல்பட்டது அவனுக்கு பிடித்திருந்தது.

அவன் தன் குரலில் ஒரு கம்பீரத்தை வரவழைத்துக்கொண்டான்.

” கேக்கிறேனில்ல ? இது என்ன இடம்”?

“உங்க கால்ல இருந்த புல்லட்டை எடுத்தாச்சி. ஆனா காயம் ஆறக்கொஞ்சம் நாளாவும். அதுவரை நீங்க ஓய்வுலதான் இருந்தாவனும்”

அவனுக்கு அப்போதுதான் கடைசியாக நிகழ்ந்தவை நினைவுக்கு வந்தது. அவன் சுடப்பட்டான். எந்த திசையிலிருந்து என்று கவனிக்கக்கூட வாய்பின்றி மயங்கிவிட்டான்.

“இல்ல நா ஒடனே போயாகனும். இது என்ன இடம்னு சொல்லு. பக்கத்தில போன் எங்க கெடைக்கும்”?

அதற்கு அவள் கூறிய பதிலில் அதிர்ந்துபோய்விட்டான். ஏனெனில் அவள் கூறிய ஊரிருந்தது எதிரி தேசத்தில். அவன் சண்டையிட்டுக்கொண்டிருந்த பிரதேசத்தின் அருகில். யார் கண்டது. இவளே கூட அந்த தேசத்தின் பெண்ணாயிருக்கலாம். அவன் அவளிடம் என்னவோ கேட்க வாயைத்திறக்க அவள் அவசரமாக கைகளால் பொத்தினாள்.

வாசலில் யாரோ அழைக்கும் ஓசை கேட்டது. வாயில் விரல்வைத்து அமைதியாயிருக்கும்படி சைகை செய்து விட்டு அவள் வெளியேறினாள். வெளியில் சிலவிநாடிகள் பேச்சுக்குரல்கள் கேட்டன. பறவைகள் கீச்சுக்கீச்சென கத்திக்கொண்டிருந்தன. மறுபடி அவள் உள்ளே வந்தபோது சற்று வருத்தத்துடனிருந்ததை கவனித்துக்கொண்டான்.

” இங்க பக்கத்துல போன் எதுவும் கெடையாது. உங்காளுங்க ஒண்ணுவிடாம எல்லாத்தையும் அழிச்சுட்டு போயிட்டாங்க”

“புரியல. சண்டைல யார் ஜெயிச்சது”?

” யாரும் ஜெயிக்கல. உங்காளுங்க பார்டர்லதான் கேம்ப் போட்டு தங்கிருக்காங்களாம். இங்க உள்ளவங்க திட்டம் போட்டுட்ருக்காங்க”

“நீ என்னை ஏன் கொல்லாம காப்பாத்தின”?

” நா ஒரு டாக்டர். நீ குண்டடிபட்டுக் கெடந்தப்ப அப்டியே விட்டுட்டு வரமுடில. அதான். நீ இங்க இருக்கிறதுகூட யாருக்கும் தெரியாது”

அவன் அவளை விசித்திரமாகப் பார்த்தான். இருந்தால் அவளுக்கு முப்பது வயதிருக்கலாம். சிவந்த அவள் உடலில் சில இடங்களில் வெண்மைபுள்ளிகள் தென்பட்டன. செம்பட்டைநிறத்து அவள் கூந்தல் குட்டையாக கத்திரிக்கப்பட்டிருந்தது.

“உன் வீட்ல உள்ளவங்க ஒண்ணும் சொல்லலியா”?

அவள் வசீகரமாக புன்னகைத்துவிட்டுக் கூறினாள்.

“ யாரு இருக்காங்க கேட்க. என் வீட்டுக்காரர் இறந்துபோயிட்டார். அவரும் உங்களை மாதிரி சிப்பாய்தான். அது இருக்கும் ரெண்டு வருஷம்”

“கொழந்தைங்க”?

அவள் மவுனமாக வெளியேறினாள்.

அதன்பிறகு வந்த நாட்களில் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. தினமும் அவள் அவனுக்கு உணவு கொண்டுவருவாள். புண்ணுக்கு மருந்திடுவாள். அங்கிருக்கும் பறவைகளுக்கு தானியங்கள் தூவுவாள். . மெல்ல மெல்ல அவன் கால் குணமானது. துணிவுபெற்ற ஒருநாளில் அவன் நடக்கமுயற்சித்தான். வலியிருந்தது. ஆனாலும் நடக்கமுடிந்ததில் மகிழ்ந்தான்.

ஒருநாள் அவள் கேட்டாள்

“ஒரு சிப்பாயா இருக்கிறதுக்காக என்னிக்காவது வருத்தப்பட்டிருக்கியா ? எதிர்ல நிக்கிற மனுஷங்களை கொல்றதுக்காக சங்கடப்பட்டிருக்கியா”?

” இது ரொம்ப கஷ்டமான கேள்வி. நீ ஒரு பொண்ணுங்கிறதால இப்டி யோசிக்கிறன்னு நெனைக்கிறேன்”

அவள் மவுனமாக புன்னகைத்தாள்.

“சரி நா இங்கிருக்கிறது தெரிஞ்சா உன்பக்கத்து ஆளுங்க உன்னை உயிரோட விடுவாங்களா”?

அதற்கும் அவள் பதில்கூறவில்லை. மறுநாள் அதிகாலையில் வந்தவள் அவசரமாக அவனைக் கிளம்பச்சொன்னாள். அவள் தேசத்து பட்டாளம் அதிகளவில் வந்துகொண்டிருப்பதாகவும், அங்கிருந்தால் அவன் பிடிபடுவான் என்றும் எச்சரித்தாள். அவனைத் தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு கொஞ்சதூரம் பயணித்து ஒரு காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டாள்.

” இதுக்குமேல என்னால உனக்கு உதவமுடியல மன்னிச்சிடு” என்றபோது அவள் கண்கள் கலங்கியிருந்தன. ஒரு சிறிய ட்ராவல் பேகில் உணவுப்பொருட்களும், டார்ச் லைட் மருந்து போன்ற சில பொருட்களும் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

அவள் நகர்ந்தபின்புதான் சட்டென்று சொல்லிவிட்டு நினைவிற்கு வந்தவனாக, காரைப்பின் தொடர்ந்தபடியே ஓடி கத்தினான்.

“உன் பேரென்ன”?

கார் ஒரு சிறிய கிறீச்சிடலுடன் நின்றது. அவள் தலையை வெளியில் நீட்டி, தன்னுடைய வழக்கமான புன்னகையை வழியவிட்டபடி காரை வேகமெடுத்து மறைந்துபோனாள். அவன் தனது காலை விந்தியபடி நடக்கத்துவங்கினான்

“அப்புறம்”? என்றேன் நான்

” இப்போது அடுத்தகதை” என்றார் பெரியவர்

“அய்யோ அதுவே இன்னும் முடியலியே”

அவர் சிலவிநாடிகள் அமைதியாக இருந்தார். காரினுள் ஏஸியின் குளிர்கடந்தும் முன்புறத்து வெயில் உஷ்ணம் கூட்டியது.

கதைக்குள் கதை 2
——————————-
காலடியோசை கேட்டு அந்தச்சிறுவன் திடுக்கிட்டான்.

“வந்துட்டியா அக்கா”? என்றான்.. பதில் வராதுபோகவே மறுபடி சந்தேகமாக கேட்டான்

” யாரது”?

அதற்கும் பதில் வரவில்லை. அறையின் நிசப்தமும் காற்றின் ஓசையும், தொலைவில் பறவையொன்று கூவும் ஓசையும் மட்டும் கேட்டன. சிறுவன் தனது இருக்கையிலிருந்து மெல்ல சுவரைப்பிடித்தபடியே நடந்து வாசலுக்கு வந்தான். வாசற்படியருகே காலில் ஏதோ இடற, குனிந்து கைகளால் தடவிப்பார்த்தான். யாரோ ஒருவர் விழுந்துகிடப்பது தெரிந்து அதிர்ந்தான். கீழே கிடந்த உருவத்தின் முகத்தில் கைகளால் தட்டி உலுப்பினான்.

“யாரு ? யாருங்க ? என்னாச்சு

உருவம் மெல்ல அசைந்தது கைகளில் தெரிந்தது.

“தண்ணீ… தண்ணீ” என ஈனஸ்வரத்தில் முனகியது கேட்டது. சிறுவன் மறுபடி சுவரைப்பிடித்தபடியே சமையலறை சென்று, பழக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தான். வெடுக்கென்று பிடுங்கப்பட்டதில் சற்றே அஞ்சினாலும், வந்தவரின் தாகத்தை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

சற்றைக்கெல்லாம் அந்த உருவம் அவன் கைகளைப்பிடித்துக்கொண்டு படுக்கையறை வரை வந்தது.

“யார் நீங்க ? சாப்பிட எதாச்சும் வேணுமா ? அங்க ஒரு பெரிய பானையிருக்கு. அதுக்குள்ள கொஞ்சம் ரொட்டி இருக்கு. எடுத்துக்கோங்க” என்று ஒரு மூலையைக் காட்டினான். அந்தமூலைவரை சென்ற காலடியோசையில் அந்த உருவம் ரொட்டியை எடுத்திருப்பதை உணர்ந்துகொண்டான். பிறகு அவன் நாசியருகே சிகரெட்டின் நெடி படர்ந்தது.

காலருகே எதுவோ உரச, அவன் குனிந்து தடவினான். அவனது வளர்ப்புப்பூனை. மெல்ல அதைக்கைகளில் எடுத்து மடியில் வைத்து தடவிக்கொடுத்தபடியே கேட்டான்.

“அக்கா வெளிய போயிருக்காங்க. அவங்க இருந்தா டீயாவது வச்சித்தந்திருப்பாங்க. எனக்கு தெரியாது மன்னிச்சுக்கங்க”

இப்போது அந்த உருவம் அவனை நெருங்கி கட்டிலில் அமர்ந்துகொண்டது மெத்தையின் அழுந்தலில் தெரிந்தது. சிலவிநாடிகளில் சிறுவனுக்கு மருந்து நெடியடித்தது. சமயங்களில் அவன் தடுமாறி விழுந்து சிராய்த்துக்கொண்டால் அக்கா போட்டுவிடும் மருந்தின் வாசனை அது.

“உங்களுக்கு அடி பட்டிருக்கா ? மருந்து வாசனை வருதே”?

அவன் தலைமுடியை கோதிய விரல்களை பிடித்துக்கொண்டு கேட்டான்.

” உங்களுக்கு பேச வராதா ? எனக்கு பார்க்கமுடியாத மாதிரி “?

வாசலில் மாடுகளின் கனைப்பொலியும் கழுத்து மணியோசையும் கேட்டு சிறுவன் உற்சாகமானான்.

“அக்கா வந்துட்டியா ? ஏன்கா இவ்ளோ நேரம் ? நம்ம வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க பாரு”

அறையில் தடாரென்று எதுவோ விழும் ஓசையும், அகக்அவின் முனகல் ஒலியும் கேட்டது. கட்டிலின் கிரீச்சிடலிலிருந்து பக்கத்திலிருந்த உருவம் எழுந்துகொண்டுவிட்டதென்று உணர்ந்துகொண்டான்.

“அக்கா…. அக்கா… என்னாச்சுக்கா”? என்றபடியே தரைகளில் ஒரு குழந்தைபோல தவழ்ந்துசென்றான். கைகளில் தட்டுப்பட்ட அக்காவின் கால்கள் உதறிக்கொண்டிருந்தன. அவள் முனகல் முன்னிலும் அதிகமாக வெளிவந்தது. சிறுவன் மெல்ல நகர்ந்த அவள் முகத்தைத் தடவினான். அவள் வாயோரம் ஈரமாக வழிந்துகொண்டிருந்தது.

அவன் பயத்தில் அழத்தொடங்கினான். வாசலில் மாடுகள் கத்தத்துவங்கின. மெல்லிய குளிர்காற்று அறைக்குக் நுழைந்ததைத்தொடர்ந்து மழையோசை கேட்டது.

தடார் தடாரென்று குச்சியுடையும் சப்தம் கேட்டது.

” அக்கா என்னாச்சுக்கா உனக்கு ? அக்கா என்னை பயமுறுத்தாதக்கா. ஏங்க யாரு இங்க இருக்கிறது ? அக்காவுக்கு என்னாச்சு”?

இப்போது அவன் முதுகில் ஆதரவாகத் தடவிய ஒரு கை, அவனை அங்கிருந்து நகர்த்திச்சென்று அமரவைத்தது. பின் அவன் கைகளைத் தரையில் நகர்த்தியது. ஓரிடத்தில் சிறுவனின் கைகளில் அகப்பட்ட பொருள் நீளமாக வழுவழுவென இருந்தது. அதன்பேரிலும் ஈரமாக இருந்தது.

சமையலறையில் அடுப்பு பற்றவைக்கும் ஒலியைத்தொடர்ந்து தண்ணீர் கொதிக்கும் சப்தம் வந்தது. சற்றைக்கெல்லாம் அவன் அக்காவின் விரல்கள் அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டன. அவன் முடிகளை கோதிவிட்டன. மழை வலுவாகப் பெய்யத்தொடங்கியது. யாரோ வாசற்படியிறங்கி வெளியேறும் ஓசைகேட்டது.

*

இந்த இடத்தில் பெரியவர் நிறுத்திவிட்டார். கார் வீஜிபியைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. நான் கேட்டேன்.

“ஆக்சுவலா அந்தப்பொண்ணுக்கு என்னாச்சு சார்”?

” இப்ப அடுத்தது” என்றார்.

“ஏன் இப்டி பாதில பாதில விடுறீங்க”?

அவர் எனக்கு பதிலளிக்காமல் புன்னகைத்தபடியே அடுத்ததைத் தொடங்கினார்.

கதைக்குள் கதை 3
——————————
அவன் உடல் அசதியில் சோர்ந்துவிழுந்தபோது அவர்கள் நான்குபேர்களும் அவனைச் சுற்றிவளைத்துக்கொண்டார்கள். அவனால் அவர்களை முழுமையாகப் பார்க்கக்கூட இயலாதபடி கண்கள் இருளடைந்துகிடந்தது. இடதுகாலைக் கழற்றியெறிந்துவிடவேண்டும்போல் வலித்தது. அவர்கள் விழுந்துகிடந்த இவனைப்பற்றி பரிகாசமாக பேசிச்சிரித்தனர்.

ஒருவன் அவன் தோள்பையினை ஆராய்ந்தான். ஒரு டார்ச் லைட்டும், கத்தியும் சில துணிகளும் ஒரு மருந்துப்புட்டியும் பஞ்சு உருண்டையும், மதுப்புட்டியும் கிடைத்தன.

ஒருவன் கேட்டான்,

“யார் நீ ? இந்தக்காட்டுக்குள்ள என்ன செய்யிற”?

இவன் சிலகணங்கள் தயங்கினான். கண்களை நான்குமுறை மூடிமூடித்திறந்துகொண்டான்.

” நா ஒரு பிரயாணி. இந்த மாதிரி காடுகள்ல அலைஞ்சு திரிஞ்சு ஆய்வு பண்ணிட்ருக்கேன்”

“கால்ல எப்டி அடிபட்டிருக்கு”?

” வழில ஒரு பாம்பு கடிச்சிடுச்சி”

அவன் கையிலிருந்த ரேடியோப்பெட்டி அலறியது. அதில்யாரோ கரகரப்பாக பேசினார்கள். அவர்கள் தங்களுக்குள் உடனே கிளம்பவேண்டுமென பேசிக்கொண்டே இவனைப்பார்த்தார்கள். பிறகு இவன் உடைகளை அகற்றி நிர்வாணமாக்கி சோதனையிட்டார்கள். இப்போது அங்கே இன்னும் சிலர் வந்தார்கள்.

இவனுக்கான சான்று அட்டைகளோ இன்னபிறவோ இல்லாததில் சந்தேகித்தார்கள். வழியில் அனைத்தும் ஒரு நதி அடித்துச்சென்றுவிட்டதாக இவன் கூறியதை அவர்கள் நம்பத்தயாரில்லை. அருகிலுள்ள உயரமான மரத்தின் உச்சியில் கிளைதாவிக்கொண்டிருந்த மந்திகளைப் பார்த்தபடியிருந்தான் இவன். சிகரெட் பற்றவைத்துக்கொண்ட ஒருவனிடம் கைநீட்டினான் இவன். கோட்டுக்குள்ளிருந்து ஒரு பாக்கெட்டை இவன் பக்கம் எறிந்தான்.

தொலைவில் எங்கோ தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தம் கேட்க, அவர்கள் அவசரமாக இவனது மதுப்புட்டியை பறித்துக்கொண்டு தன் வழியே சென்றார்கள். இவன் தனது காலை விந்தியபடி நடக்கத்துவங்கினான். அருகில் எங்கோ மாடுகளின் கழுத்துமணியொலி கேட்டது.

*

கார் நீலாங்கரையைக் கடந்து திருவான்மியூரை நெருங்கிக்கொண்டிருந்தது.

“திருவான்மியூர்ல டெர்மினஸ்கிட்ட விட்ருங்க தம்பி. அதுக்குப்புறம் நான் போயிப்பேன்”

“ஆனா நீங்க அந்தக்கதைகளை முழுசாச் சொல்லிருக்கலாம்” என்றேன் ஆதங்கத்துடன்.

“நாந்தான் எல்லாத்தையுமே சொல்லிட்டனே தம்பி” என்றார்.

அவர் கூறியதின் பொருள் எனக்குப்புரியவில்லை. டெர்மினஸில் இறங்கிக்கொண்டு எனக்குக்கையை நீட்டினார். நான் அவர் கையைப்பிடித்துக் குலுக்கினேன். அவர் மெல்ல அருகிலிருந்த யாரிடமோ என்னவோ கேட்டார். பின்புறத்திலிருந்து பேருந்து ஒன்று விடாமல் ஹாரனிக்க நான் காரை நகர்த்தியபடியே ரியர்வியூ மிரரில் பார்த்தேன். யாரோ ஒருவரின் கையைப்பிடித்தபடி சாலையைக் கடந்துகொண்டிருந்தார் பெரியவர்.

KHADDAR by Ashokamitran

Translated by Sivasakthi Saravanan

Father bought four bathing soaps , a long soap bar for laundry , a tin of Milk Maid, and half a seer chocolate at the shop, paid a five-rupee note, and collected the balance of two rupees, nine annas and three paise. The shopkeeper handed a cloth bag to help them carry the purchase. Quite surprisingly, it had Tamil words on it: ‘Nanjankoodu Toothpowder’. He carried it home along with the snakegourd that Father bought at a vegetable shop.

The first thing he did on reaching home was to search for Nanjankoodu in the Taj Mahal Atlas. It was his hunch that Nanjankoodu must be the name of a place. He looked up all the continents in the Taj Mahal Atlas but couldn’t find Nanjankoodu.

He could ask Father; but that astrologer-guest was chattering with him all the time. Mother suspected that since Nanjankoodu sounded similar to thenkoodu, which in Tamil meant a beehive, it must be some nest. He felt a sudden desire to brush his teeth with Nanjankoodu toothpowder. But no one in his family used toothpowder. They pounded some stuff bought from a shop of herbal remedies and used its powder. It left a hot tingle in the mouth for an hour after brushing.

Eventually, the astrologer left after a week, and when Father looked amiable, he immediately asked him about the bag. He was right about Nanjankoodu: when they searched the map together, they did spot it!

But he lost interest in Nanjankoodu after what Father had to say further about the bag: it was made of khaddar cloth.

To Father, khaddar was like the fabled blossom from Devaloga— always talked about, but never seen. People believed you would be arrested immediately if you wore khaddar. About two miles down the road to Silkalguda from where his home was, you could see the Mashirabad prison complex. He had   taken that road all by himself quite a few times. The prison had imposing walls thick with broken glass pieces on top of it. He could see those on the other side of the wall only through his mind’s eye. He knew from the occasional picture in the magazines and the heroes of films that prisoners were dressed in checquered clothes; But whether pictures or heroes, they didn’t look similar in their prison uniform, so he concluded that even those who drew those pictures and made those movies couldn’t have seen the inside of Mashirabad Jail. You had to wear khaddar to get there.

He wished to go to jail. At least he must have a khaddar shirt to get into the jail. But where could he get one?

They bought a full length piece of Ramgopal Mill cloth and made shirts, jackets, and skirts for them all. Ramgopal Mill cloths had very few patterns.   They were heavy; always had stripes or checks in grey—or stripes or checks in brick red; once, he thought they had purchased what must surely have been meant for the prisoners: it had a design of large, black squares. Going to school, he felt like he was a prisoner, except that there was no police in pursuit of him.

The only Tamil magazines available in the town were Kalki and Ananda Vikatan. It was just after the Second World War. Like everything else, khaddar too was scarce. One could get clothing material in khaddar only if they bartered it with the yarns they had spun.

He earnestly wanted to try his hand at the spinning wheel, whether or not he could actually exchange it for khaddar cloth.

But the images in the magazine, the movie heroines, they were recurrent; they turned the wheel oh so beautifully, sitting on the floor with folded legs. But where would he get a spinning wheel? He stood his cycle on its stand, sat down by it, and turned the pedal fast as if turning the spinning wheel. A mountain of yarn poured out; the whole world would be inundated with khaddar; all must wear khaddar, prisoners and policemen included.

But no, the only khaddar he could get to see was that bag with ‘Nanjankoodu Toothpowder’ printed on it.

He started to carry it to school instead of the more convenient canvas bag. The khaddar bag was broader, but it wasn’t deep enough. His books piled up at one end, the bag itself hung out of shape. They even fell out if he was not careful enough. A slight drizzle would drench them thoroughly. But the biggest worry of all came in the form of Wahab.

In those days teachers were not afraid to detain the students Wahab, who turned out to be a friend as well as an enemy, joined him in class seven and sat next to him. It was his second year in that class for Wahab. He slept during class without fear. He didn’t worry about not being able to give an answer in the class. At first Wahab didn’t pay much attention to him. But he had a bad day when he answered a question that Wahab couldn’t, and his voice must have betrayed some pride. Wahab hated him from that day. Later, it occurred to him that he needn’t have been so conceited after all.

It was the start of a long drawn out war between Wahab and him. If he placed his pencil on the desk, Wahab would push it down and break the tip; Wahab would paste a sticker on his back, with the word ‘Fool’ written on it; and would push his bag of books from the desk. Wahab not only pushed down the khaddar bag but kicked it too . He might have kept quiet and ignored the bully, had it been him that got the kick; but Wahab had kicked his bag; the khaddar bag—made from the threads spun by Mahatma Gandhi.

He did something thoughtless: when everybody was rushing out after class, he pushed Wahab down from behind. Wahab was a big boy but he hadn’t expected it and fell down. Looking at him with fiery eyes, Wahab said, “kya pe sala”.

‘But why did you kick my bag?’, he asked in return in Urdu. His question confirmed Wahab’s suspicions. He had been pushed down intentionally.

Wahab sprang on him. He held tight to Wahab’s arms. They tried to trip each other. In the melee, the big toe of Wahab’s right leg got caught in his pyjama. Before Wahab could free his foot, he pushed him down. The back of Wahab’s head hit the ground when he fell down. It was known as ‘sidh’ in kushti parlance. He loosened his hold and stood up as he felt satisfied that he had performed sidh on Wahab. But this wasn’t a bout in the kushti ring. Kushti rules were out of place there. As a result of this inappropriate act, Wahab retaliated with heavy blows on his head and shoulders before running off.

There was great commotion at home. They took him to the hospital which was a mile away and salved the wounds. They were told to apply boric powder and hot pack for the bumps. He kept quiet about who had hit him or why. But how could he conceal news about the fight that started because of a little bag, that too out in the open?

Mother prodded Father who set out for Wahab. Wahab was terrified. Still, Wahab could have told Father that he was not solely responsible for the whole episode. Father approached the class teacher. Wahab stood on the bench for a whole day. But he didn’t hold any grudge against him for that.

Soon after, the bag turned dirty, and when washed hard started tearing, and finally had to be consigned as a rag used for cleaning the cycle. It took in all its grime with much affection and became disfigured. He did not see it as a sacrifice, though he felt sad; he was disappointed at khaddar’s impermanence. Later on in life he did get his chance to wear khaddar. But Nanjankoodu Toothpowder proved elusive.

oOo

Taken from:

Ashokamitran Sirukathaikal published by Kavitha Pathippagam

Disclaimer: this is an unauthorised translation intended for educational and non-commercial purpose. Owners of copyright may contact editor@padhaakai.com by mail or @padhaakai on twitter to take down the post, though we hope you spare us

அகமும் புறமும் உயிர் கொள்ளும் துர்க்கனவுகள் – பென் ஒக்ரியின் (Ben Okri) ‘Stars of the New Curfew’

அஜய் ஆர்

starsofthenewcurfew

பென் ஒக்ரியின் (Ben Okri) ‘Stars of the New Curfew‘ தொகுப்பில் ”Worlds that flourish‘ கதையின் கதைசொல்லியிடம் அவர் அண்டை வீட்டுக்காரர், “விழி இழந்தவன் போல் நடந்து கொள்கிறாயே” என்று கேட்கிறார். கதைசொல்லி விழி இழந்தவர் அல்ல என்றாலும் எதையும் கூர்ந்து கவனிப்பதில்லை என்பதைச் சுட்டும் விதமாக அவ்வாறு கேட்கிறார். ஒரு கட்டத்தில் தன்னைச் சுற்றி நடப்பதை அவர் கூர்ந்து நோக்க ஆரம்பிக்கும்போது, தான் இதுவரை கவனிக்காத, கொடுங்கனவாய் தோற்றமளிக்கும் வாழ்விலிருந்து தப்பிக்க எண்ணி நகரை விட்டு நீங்கி ஆன்மாக்களின் (spirits) உறைவிடமாக உள்ள ஓர் உலகினுள் பிரவேசிக்க நேர்கிறது. அந்த உலகும் பீதியளிப்பதாக இருக்கவே, கதைசொல்லி அதிலிருந்தும் மீட்சி தேட வேண்டியதாகிறது..

பணத்திற்காக அடிக்கடி ரத்த தானம் செய்பவர்கள், 5-6 இராணுவ வீரர்களால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உடலுறவை வெறுத்து வேறு சில இராணுவ வீரர்கள் தன்னை நெருங்குவதைக் கண்டு மணிக்கட்டை அறுத்துக் கொள்ளும் பெண், நாட்டை ஆள்பவரின் பிறந்த நாள் கேளிக்கைகளை காணச் சென்று இறுதியில் வானூர்திகள் தூவிச் செல்லும் துண்டுப் பிராசார காகிதங்களை பசியோடு தங்கள் வெறுமை சூழ்ந்த மனைகளுக்கு எடுத்துச் செல்பவர்கள் என கொடுங்கனவாக உருவெடுக்கும் புற/அக உலகங்களின் பிறழ்ச்சியை முதல் முறையாக காண நேர்ந்த பின், ஒன்றிலிருந்து தப்ப இன்னொன்றில் சிக்கி, எவ்வுலகிலும் ஆசுவாசம் அடையமுடியாத இக்கட்டில் உள்ள மனிதர்களை இந்தக் கதைத் தொகுப்பில் பார்க்கிறோம்.

வெளிப்படையாக பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் ‘Laos’ நகர்/ அதன் புறநகர்/ கிராமப்புற பகுதிகளே இந்தக் கதைகளின் களன் என்று புரிந்து கொள்ளலாம். மூன்றாம் உலக நாடுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை மேற்குலகு தகமவைத்துக் கொள்ள/ உறுதிப்படுத்திக் கொள்ள பயன்படும், அவர்களை வாசக இலக்காகக் கொண்ட எழுத்து என்று தேசிய கோணத்தில் இத்தொகுதியை ஒருவர் விமர்சிக்கலாம். அப்படிச் செய்வதெனில் ‘The Wizard of the Crow‘ முதல் ‘தர்பாரி ராகம்‘ வரையிலான நாவல்களையும் இதே கோணத்திலிருந்தே எளிதில் புறந்தள்ள முடியும். தொகுப்பின் களத்தில் வாழ்ந்தவர் ஒருவரே, அவரும் கூட தன் அனுபவங்களுக்கேற்ப மட்டுமே இந்தக் களத்தை பற்றி கூற முடியும் என்ற நிலையில் அத்தகைய விமர்சனத்தை இத்தொகுதி குறித்து அவசர கதியில் முன்வைக்க முகாந்திரம் இல்லை.

ஜனநாயக நடைமுறையற்ற அதிகார துஷ்பிரயோகத்தை, அதன்கீழ் மக்கள் நசுக்கப்படுவதை முகத்திலறையும் விதமாக நேரடியாகவோ அல்லது பகடியில் பொதிந்து வைத்தோ இந்தக் கதைகள் பேசுவதில்லை. “Everything shimmered like mirages in an omnipotent heat” என்று ஒக்ரி விவரிப்பதற்கேற்ப, எங்கும்/ எப்போதும் நிறைந்திருக்கும் வெப்பம், அவ்வெப்பத்தினூடாக அன்றாட வாழ்வை கடத்த முயலும் மக்கள் திரள், அத்திரளின் மூச்சடைக்க வைக்கும் வியர்வை வீச்சம், இவையனைத்தையும் மட்டுப்படுத்த முயன்று அதில் பரிதாபமாக தோற்கும் மின்விசிறிகள் என்ற மெய்ம்மையுடன் புற உலகு உருவாக்கும் நெருக்கடி இட்டுச் செல்லும் சுய அழிப்பு பாதையின் – பாத்திரங்களின் அகக் கொந்தளிப்புக்கான குறியீடாக உள்ள – கானல் நீராக தோற்றமளிக்கும், மீன் மழை பொழிதல், நீர் பெருக்கெடுத்துச் செல்லும் சாக்கடைகளில் மிதந்து வரும் குழந்தைகளின் உடல்கள், மூன்று தலை மனிதர்கள், என்ற இணை உலகை முயங்கச் செய்கிறார். இத்தகைய மிக விரிவான காட்சிப் படிமங்களை ஒக்ரி உருவாக்குவது அவர் எழுத்தின் வெற்றி என்றாலும், அவற்றுள் அவர் பொதிந்து வைத்திருப்பதை வாசகன் கடந்து சென்று, அவனைச் சலனப்படுத்தும் காட்சி பிம்பங்களாக மட்டுமே இக்கதைகள் தங்கிவிட வாய்ப்புள்ளது.

Stars of the New Curfew‘ கதையில் இதை விரிவாக பார்க்கலாம். இதன் கதைசொல்லி, முறையாக பரிசோதனை செய்யப்படாமல் சந்தைப்படுத்தப்படும் மருந்துகளின் விற்பனையாளராக உள்ளார். இம்மருந்துகளால் பல மோசமான பக்க விளைவுகள் உருவாகின்றன (குடல் புழுக்களை அழிக்க அளிக்கப்படும் மருந்து குடலையே வெளியேற்றும் அளவிற்கு சக்திவாய்ந்ததாக உள்ளது). கதையின் ஆரம்பத்தில் கதைசொல்லி மருந்து விற்கும் பேருந்துகளில் உள்ள கூட்ட நெரிசல், விற்பனை செய்ய அவர் செய்யும் கோமாளி சேஷ்டைகள், அவர் முதலாளியின் விசித்திர நடவடிக்கைகள் (விற்பனைக்குச் செல்லும் முன் அனைத்து விற்பனையாளர்களுக்கும் வலுக்கட்டாயமாக அவர்கள் விற்பனை செய்யும் மருந்தையே புகட்டுவது) என அவல நகைச்சுவையோடு நகரும் கதை, கதைசொல்லி தான் விற்பனை செய்யும் மருந்துகளால் பலர் பாதிக்கப்படுவது குறித்த கனவுகளால் (முதலாளி இவர் உடலின் பாகங்களை ஏலம் விடுகிறார்) உறங்க முடியாத அளவிற்கு அல்லலுறுவது என வேறு தடத்திற்கு மாறுகிறது. பிறகு ஒரு நிகழ்வின் பாதிப்பிலிருந்து தப்பிக்க தான் பிறந்து வளர்ந்த நகருக்குச் செல்லும் அவர், தன் பால்ய கால நண்பர்களை சந்திக்கிறார். இரு பெரும்புள்ளிகளின் போட்டிக்களமாக உள்ள அவர் நகரில், மாந்த்ரீகம், அதைச் சார்ந்த சடங்குகளின் பின்னணியில் இன்னொரு யுத்தமாக ஒரு விழா நடக்கிறது. அதில் அவர் காணும் காட்சிகள் அவரைத் துரத்த திரும்பி வந்து மீண்டும் அதே மருந்து விற்பனை வேலையில் சேர்கிறார்.

யதார்த்தமும், அதிகற்பனையும் மாறி மாறி வரும் இந்தக் கதையில் முதல் பதிவாக அதன் காட்சிப் பிம்பங்களே நிற்கின்றன. ஆனால் வேறு வேலை கிடைக்காததால்தான் இதில் சேர்ந்ததாகச் சொல்லும் கதைசொல்லி, “Everybody seemed to need a cure for something” என்றுரைக்கும்போது, அவரது இயலாமையை மட்டுமல்ல, சிகிச்சை மனிதர்களின் உடலுக்கும்/ உள்ளத்திற்கும் மட்டுமல்ல, அந்நாட்டிற்கே தேவை என்பதாக புரிந்து கொள்ளலாம்.

மீண்டும் வேலைக்குச் சேர்ந்தப் பின் அவரைத் துரத்திய துர்க்கனவுகள் நீங்குகின்றன. ஆனால் “I had begun to see our lives as a bit of a nightmare. I think I prefer my former condition,” என்று கதை முடியும்போது, தூக்கத்தைத் தொலைத்து, பயங்கர காட்சிகள் தோன்றும் கனவிலி வாழ்வைவிட அன்றாட வாழ்வு அதிகம் அச்சுறுத்துவதாக உள்ளது என ஒருவர் சொல்லும்போது, அவ்வாழ்வை வாசகன் எவ்வாறு புரிந்து கொள்ள?

கனவிலி வாழ்வை மேம்பட்டது என இவர்கள் எண்ணினாலும், இவ்வுலகை கைவிடவும் இவர்கள் விரும்புவது இல்லை. அதனால் தான் வாழ்விற்கும்/ இறப்பிற்கும் இடையிலேயான காலகட்டத்தை ஆன்மாக்களின் உலகில் கழிக்கும் ”’Worlds that flourish‘ மற்றும் ‘What the Tapster saw‘ கதைகளின் கதைசொல்லிகள் மீண்டும் நம் உலகிற்கே திரும்புகிறார்கள். வாழ்வின் விழைவே இவர்களை தாங்கள் அன்றாடம் சந்திக்கும் இடர்ப்பாடுகளைத் தாண்டிச் செல்ல உந்துகிறது. போலி மருந்து விற்பனை, ரத்த தானம், ஜேப்படி செய்வது என தார்மீக ரீதியில் இவர்கள் செய்வது சரி அல்ல என்று சொல்வதை விட, உண் அல்லது உண்ணப்படு என்ற விதியமைந்துள்ள உலகில் அவர்களின் தேர்வை இயல்பான ஒன்றாகவே பார்க்க முடிகிறது.

நனவிலிக்கும் கனவிலிக்கும் இடையிலேயான நடனம் ‘When the lights return‘ என்ற கதையில் உச்சத்தை அடைகிறது. ஏட்டே (Edde) என்னும் இசைக் கலைஞன் தான் பிணக்கு கொண்டு கடிந்து கொண்ட, சில வாரங்களாக சென்று பார்க்காத தன் காதலியைப் பார்க்க நகரமெங்கும் மின்வெட்டு நேர்ந்துள்ள ஒரு பின்மாலை/ முன்னிரவு நேரத்தில் செல்கிறான். வாகனங்கள் கொஞ்சம் கூட நகர முடியாத போக்குவரத்து நெரிசலால், வீடுகளிலும்/ கடைகளும் ஏற்றி வைக்கப்பட்டுள்ள மெழுகுவர்த்திகள்/ விளக்குகளின் ஒளியில் எங்கும் சூழ்ந்துள்ள புகை/ தூசியினூடே அவள் வீட்டிற்கு நடந்தே செல்கிறான். பெரும்பாலும் இருள் சூழ்ந்துள்ள அந்நேரத்தில் அவன் தன்னைச் சுற்றியுள்ளவற்றை பார்க்க ஆரம்பிக்கிறான் என்பது ஒரு நகைமுரண். குப்பைக்கூளத்தில் எறியப்பட்டிருக்கும் – திடீரென எழுந்து புரட்சி செய்யச் சொல்லும் – பிணம், பதாகை ஏந்திய தீர்க்கதரிசினி என அவன் காணும் காட்சிகள் அவன் மனத்தைக் குலைக்கின்றன. அதை கவனித்துக் கொண்டே இருப்பதில் இராணுவ வீரன் ஒருவனுடன் அவனுக்குப் பிணக்கு ஏற்படுகிறது. பின் அவன் எப்படியோ காதலி வீட்டை அடைய, கதை துன்ப முடிவு அடைகிறது. “It was as if a nameless instrument, whose terrible music is fashioned out of the extremes of human chaos, were being strained to cracking point,” என்று அவன் எண்ணுவது அவன் நடந்து செல்லும் வழியில் காணும் ஒழுங்கின்மையை மட்டுமல்ல, இத்தொகுப்பின் அடிநாதமாக உள்ள அந்நாட்டின் எல்லாத் துறைகளிலும் பரவியுள்ள பெரும் சீர்குலைவின் பிரதிபலிப்பாகும்.

‘In the Shadow of War’ கதையில் ஒமொவோ (Omovo) என்ற சிறுவன் தன் கிராமத்தில் ஒரு பெண் குறிப்பிட்ட நேரத்தில் அருகில் உள்ள காட்டிற்குள் செல்வதைக் கவனிக்கிறான். புரட்சியாளர்களுக்கு உதவி செய்பவரான அப்பெண்ணை ஒரு நாள் அவன் தொடர்ந்து செல்ல, அவள் இராணுவ வீரர்களால் கொல்லப்படுவதைப் பார்த்து பயந்து ஓடும் போது தடுமாறி விழுந்து மயங்கி விடுகிறான். மீண்டும் சுய நினைவு வந்து அலறும்போது அவன் வீட்டில் இருக்கிறான். அவன் அறைக்கு வரும் தந்தையுடன் அந்த இராணுவ வீரர்களைப் பார்த்து அவன் ஏதோ சொல்ல முயல, அவன் தந்தை இவர்கள் தான் உன்னைக் காப்பாற்றினார்கள் என்று சொல்கிறார். ஒமொவோ தான் கண்டதைச் சொல்ல ஆரம்பிக்க, அவ்வீரர்களை நோக்கி மன்னிப்புக் கோரும் சிரிப்பை உதிர்த்தவாறு அவனை படுக்கை அறைக்கு தூக்கிச் செல்கிறார் அவன் தந்தை. கதை இங்கு முடிகிறது. மகனைக் காக்க வேண்டும் என்ற அத்தந்தையின் நோக்கம் நமக்குப் புரிகிறது. அவன் கண்டது ஒரு கனவு என்றோ அவன் கண்டதை தவறாகப் புரிந்து கொண்டான் என்றோ அவனை அவர் சமாதானப்படுத்தக்கூடும். ஆனால் அதனால் சாதகமான விளைவு ஏதேனும் ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவே. ஒமொவோவின் அக/புற விழிகள் திறக்கப்பட்டு விட்டன. அவற்றின் பார்வையில் செழித்து வளரப்போகும் உலகங்களுக்கான (‘Worlds that flourish‘) அடித்தளம் அவன் அகத்தில் போடப்பட்டு விட்டது. இன்னும் சில காலத்திற்குள், இத்தொகுப்பின் மற்றப் பாத்திரங்களைப் போல, அப் புற/அக உலகங்கள் உருவாக்கும் நெருக்கடிகளை அவனும் தன் வாழ்நாள் முழுதும் எதிர்கொண்டிருப்பான்.

பெரும்பாலும் குறுங்கவிதைகள், பேயோன்- ஒரு பார்வை

பீட்டர் பொங்கல்

கவிதை எழுதுவதை ‘thought crime’ ஆக குற்றவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள் என்று சொல்லி, கவி பாடுவதை ஒரு குற்றச் செயலாகப் பேசுகிறது “பெரும்பாலும் குறுங்கவிதைகள்” தொகுப்பின் முன்னுரை. தமிழ் நாட்டில் உள்ளவர்கள் ஏறத்தாழ எல்லாரும் கவிதை எழுதுவதாக இதில் குறிப்பிடப்பட்டிருப்பதால், பேயோன் ஒட்டுமொத்த தமிழ்ச்சூழலையே குற்றவாளிமயமாக்குகிறார் என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்பிருக்கிறது. ஆனால், “கவிதை ஓர் ஆயுதமாகக் கருதப்படாதிருக்க, சட்டபூர்வமான நடவடிக்கையாக மிஞ்சியிருக்க அதன் நிவாரண குணமே காரணம்,” என்றும் அவர் கூறிவிடுவதால் அதை ஆக்கப்பூர்வமான ஒரு சமூக பணியாகவே அவர் நம்புவதாகத் தெரிகிறது. “இதனால்தான் எல்லோரும் கவிதை எழுத வேண்டும்,” என்று அழைப்பும் விடுக்கிறார் அவர். இது தவிர, தானும் கவிதை எழுதுவதாகவும், இனியும் எழுதப் போவதாகவும் ஒப்புக் கொண்டிருப்பதால் கவிஞர்கள் விஷயத்தில் பிளாட்டோனிய கண்டனத்தைவிட, மனசாட்சி இன்னும் முளைவிடாத சிறுபிள்ளைச் சேட்டைகளை அதன் விபரீத பின்விளைவுகளைப் பொருட்படுத்தாது அங்கீகரிக்கும் சலுகை மனப்பான்மைதான் அவரிடம் வெளிப்படுகிறது. (இதே முன்னுரையில், லோகியா ஸார் பற்றி அவர் அளித்திருக்கும் பெருவிரல் சித்திரம் சுவாரசியமானது).

இனி கவிதைகள்.

குவியல்‘ அன்னியப்படுதலைப் பேசும் கவிதை. மனிதன் சமூக அங்கமாக இருக்கும்போதே அதில் தனியனாகவும் இருந்துகொண்டிருக்கும்போது அவனது கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள ஏதோ ஒரு விபத்தின் காரணமாக அவன் அன்னியப்படுத்தப்பட்டு தன்னைத் தனியனாக உணர்வதை நினைவுபடுத்தும் கவிதை. இந்தக் கவிதை நம் எல்லோரிடமும் பேசுகிறது. இதனோடு ஒப்பு நோக்கப்பட வேண்டிய  கவிதை, “தனியன்“. துக்கத்தில் கண்கள் கலங்குகின்றன, கோபத்தில் நாசி விடைக்கிறது, பீதியில் வயிறு கலங்குகிறது (சிலருக்கு விரைகள் சுருங்குகின்றன என்கிறார்கள்)- இதயத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இப்படி என் உணர்வுகளில் பங்கேற்கும் பல அங்கங்கள் என்னுள் இருந்தாலும் நானொரு தனியன்தானே, என்ற கேள்விக்கும், இவை எல்லாம் என்னை ஏன் ஒரு கூட்டுத்தொகையாய் உருவகப்படுத்தாமல் தனியனாய் கட்டமைக்கின்றன, என்ற கேள்விக்கும் இக்கவிதை இடம் தருகிறது. இவை இரண்டும் சிந்தனைக் கவிதைகள்.

சுகம்‘ என்ற கவிதை தம்பதியரிடையே நிகழும் சம்பாஷணைகளில் குறிப்பிட்ட ஒரு தரப்பினரின் வழக்கை நினைவுபடுத்தினாலும், அது அப்படியில்லை. வன்முறையின் வெறுமையை என்று சொல்ல முடியாவிட்டாலும், வலிமையான எதிர்வினைகளின் பிரயோசனமின்மையைப் பேசுகிறது. முள்ளம்பன்றிகளுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு, நம் முட்கள் நம்மையும் குத்துகின்றன என்பதுதான்.

பொதுவாக பேயோன் எழுத்து வெறும் வார்த்தை விளையாட்டு என்பதாக ஒரு விமரிசனம் உண்டு. இதை ஏற்றுக் கொண்டாலும், இதில் பொருள் விளங்கும் நாட்டமும் இருக்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறேன். சொற்கள் ஏதோவொரு பொருளில் குறிகள் என்று சொன்னால், அதன் குழப்பங்கள் சொற்களின் இயல்பு, பொருளின் இயல்பு என்று போய் நம் அனுபவத்தின் இயல்பையே கட்டம் கட்டுகின்றன என்பதை எப்படி என்று ஆய்வதில் பேயோனுக்கு அசாதாரண ஆர்வம் உண்டு. ‘பேசும் பலகை‘ அப்படிப்பட்ட கவிதை. இந்தக் கவிதையைப் படிக்கும் எவரும் “பூக்களைப் பறிக்காதீர்கள்” என்ற பலகையை, பேயோன் போல் முத்தம் கொடுக்க முன்வராவிட்டாலும், கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுவிட முடியாது. நம் நகர்ப்புற வாழ்வில் எத்தனை அவசரம் இருந்தாலும் ஒரு கணம் நிதானித்து நாம் இனி பூக்களைப் பார்த்துதான் ஆக வேண்டும். இது பூக்களுக்காகப் பேசும் கவிதை.

பேயோனின் வார்த்தை விளையாட்டில் பொருள் விளங்கும் நாட்டமும், அதாவது குறி- குறிக்கப்படுவது- குறியியக்கம் குறித்த ஆர்வமும், இருக்கிறது என்று முன்னொரு பத்தியில் எழுதியிருந்தேன். “நீர்” என்ற கவிதையில் அதைப் பார்க்கலாம். நீர் என்ன, பிரதிபலிப்பு என்ன, என்று நம்மைக் கேட்டுக் கொள்ளச் செய்யும் இந்தக் கவிதை, மொழியால் கட்டமைக்கப்படும் வாழ்வனுபவத்தை இலக்கண மோபியஸ் ஸ்ட்ரிப்புக்குள் போட்டுப் பார்க்கிறது. சொற்களின் பொருளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் இருப்பதானால், பேயோனின் எழுத்தில் பெரும்பான்மையானவை அவரது ஆன்டாலஜிக்கல் மற்றும் எபிஸ்டமாலஜிக்கல் அக்கறைகளை வெளிப்படுத்துகின்றன என்று சொல்லலாம். தத்துவ நாட்டம் கொண்டவர்களுக்கான கவிதை இது.

உதிர்தல்‘ என்ற கவிதையும் அதைத் தொடரும் சில கவிதைகளும் ஜென் போல் ஒலிக்கின்றன- அதாவது, புரிந்து கொள்ள முயற்சி எதுவும் செய்ய வேண்டாம், கற்பனை செய்யக்கூட முயற்சிக்க வேண்டாம், படித்த கையோடு அப்படியே உட்கார்ந்திருந்தால் போதும் என்ற நிலைக்கு நம்மைத் தள்ளும் கவிதை. ஆன்மீக வறட்சியை உணரும் கணங்களில் தாராளமாய் இந்தக் கவிதையில் கால் நனைக்கலாம். இதன் அவல அழகியலையே. “வேர்” என்ற கவிதையும் வெளிப்படுத்துகிறது. இந்த இரண்டு கவிதைகளும் அழகுக் கண் கொண்டு மரணத்துக்கு பழிப்பு காட்டுகின்றன என்று சொல்லலாம்.

பொதுவாகவே துயரை மட்டுமல்ல, அசௌகரிய உணர்வுகளையும் சிரிப்பால் கடப்பது பேயோனுக்குக் கை வந்த கலை. “விரைதல்” என்ற கவிதை நம் கண் முன் எழுப்பும் சித்திரம் உரக்கச் சிரிக்க வைப்பது. ஆனால் இதை மிகவும் மகிழ்ச்சியான தருணத்தில் அவர் எழுதியிருக்கக்கூடும் என்ற சந்தேகமும் நம் மனதில் மூலையில் எழுகிறது. “தரையில் பாவாத கால்கள்” என்று கைகளைச் சொல்வது அசாத்திய கற்பனை. கால்களால் நடந்த முதல் குரங்கு இப்படிதான் விரைந்திருக்க வேண்டும். இந்தக் கவிதையைப் பார்க்கும்போது விரைதல் மட்டுமல்ல, பறத்தலும் நம் உணர்வாகிறது. இது போன்ற கவிதைகள்தான் பேயோனின் ஜீனியசுக்கு கட்டியம் கூறுகின்றன.

மழை பெய்து குட்டை குட்டையாய் தண்ணீர் தேங்கியிருக்கும் சாலையில் இரவுப் பொழுதின் குளிரில் ஒரே ஒரு தெரு நாய் ஓடுகிறது – “நிலையாப் பிராண்டல்களை மழைக்குட்டைகளில் பதித்து” (மழைக்குட்டை). நிலையாப் பிறாண்டல்கள், எலும்பும் தோலுமாய் ஒரே ஒரு தெரு நாய், அனாமத்து ஒளிகள், புழுதியாய்ப் படரும் குளிர்க்காற்று, அரைகுறை நிலவு- நகரப்புரச் சூழலில் இப்படியொரு இருண்மை நிறைந்த காத்திக் காட்சியை, ஊதினால் பறந்து விடுவது போன்ற எடையற்ற சொற்களில் எழுத பேயோனைத் தவிர யாரால் முடியும்? இந்த ஊரில் வெட்டிப் போட்டாலும் கேட்க ஆளிருக்காது என்பது உறுதி.

இன்றைக்குக் காலையில்‘ என்ற கவிதை கணப்பொழுது கவிஞர்களின் உதவியில்லாமலேயே நிரந்தரமாகி விடுவதைப் பேசுகிறது. வழக்கமாக, “இன்றைக்குக் காலையில் பார்த்தபோதுகூட நன்றாக இருந்த மனிதர்…” என்று யாராவது பேச வந்தால், “அச்சச்சோ ஐயோ பாவம், எப்ப எடுக்கறாங்க?” என்று கேட்கத் தயாராகி விடுகிறோம். ஆனால் பேயோன் அத்தகைய வம்புப் பேச்சுகளுக்குத் தீனி போடத் தயாராக இல்லை. இந்தக் கவிதையில் அவர் ஒரு ஜென் பாய்ச்சலில் நம் மனதை உறையச் செய்கிறார். அப்போது நன்றாக இருந்தவர் இப்போதும் நன்றாகத்தானே இருக்க வேண்டும்? அப்போதும் இப்போதாவதில் உள்ளது சூக்குமம். இதுவும் ஆன்மீக அன்பர்களுக்கான கவிதை.

Busonகு” என்ற கவிதையும் தலைப்பு மற்றும் புதிர்த்தன்மை காரணமாக இவ்வகைப்பட்டதாய் இருக்க வேண்டும் என்று மட்டும் ஊகிக்க முடிகிறது. ஆனால், இதே ஜென் பாவனையில் “போதும்” என்ற கவிதையைப் பேசலாம். தன்னை ஒரு ஆள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருத்தரும் மகத்தானவற்றை நோக்கி பொடிநடையாய்ப் போய்க் கொண்டிருக்கையில் (“தினமும் கொஞ்சம் செஞ்சா 24*7*365 கணக்கு போட்டுப் பாருங்க, எவ்வளவோ சாதிக்கலாம் ஸார்!”) துறவு மனப்பான்மையை நினைவூட்டுகிறது இந்தக் கவிதை. அருவி, “ராட்சத நீர்த்துளி மூட்டம்” காட்டுகிறது என்ற கவித்துவம் பேயோன் கவிதைகளில் காணக் கிடைக்காத ஒன்று. அதனாலேயே இந்தக் கவிதை அவர் எழுதியவற்றில் அபூர்வமானதும்கூட.

பேயோன் அழகனுபவம் பேசும் கவிதைகளும் எழுதுகிறார் (“கூடத்துக் குருவிகளே“). பேயோன் பகடி செய்பவர் என்ற பிம்பத்தோடு இந்தக் கவிதையை வாசிப்பவர்களைத் தவிர பிறர், இது மனம் மேற்கொள்ளும் பாவனைகளை ரசிக்கிறது என்பதைக் கண்டு கொள்வார்கள். பதினேழாம் நூற்றாண்டு ஜப்பானியக் கவிஞர்களுக்காகப் பேசும் கவிதை. நாம் அந்த ஃபிரேமுக்குள் போய்தான் இதை ரசிக்க முடியும். இந்த வகையில்தான் “ஒப்பீடு” என்ற கவிதையும் சேர்கிறது. “கோடை நிலவை எதனுடன் ஒப்பிட?” என்ற கேள்வி தெளிவாகவே ஜப்பானிய ஹைக்கூகளை எதிரொலிக்கிறது. என்றாலும், “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?” என்ற எதிர்க்கேள்வி நிலவொளியின் உன்மத்தங்களை மிகத் தெளிவாகவே நினைவூட்டுகிறது. “விளையாட்டு” என்ற அழகிய கவிதையோ ஒரு கன்றுக்குட்டி குதூகலமாய் இங்குமங்கும் ஓடுவதை அழகாகப் படம் பிடித்துக் காட்டும்போதே “சாலையின் பரபரப்பு லட்சியமில்லை” என்று துணுக்குறச் செய்கிறது. துணுக்குறச் செய்தல் மீயதார்த்த உத்திகளில் ஒன்று எனில், அதன் மிகைகளைத் தவிர்ப்பதில் பெரும்பாலும் வெற்றி பெறுகிறார் பேயோன். “நிலப்பரப்பு” என்ற கவிதையெல்லாம் சான்சே இல்லை (“ஆட்டோ எவ்வளவு கேட்பான்?“). பேயோன் மட்டும் பிரஞ்சுக்காரராக இருந்திருந்தால் நாலு புத்தக அளவு விமரிசனக் கட்டுரைகள் கிடைத்திருக்கும்.

காதல் கவிதைகளின் பிரகடனப்படுத்தப்படாத எதிரி பேயோன் என்பதால் காதல் கவிதைகளில் அவர் பிரமாதமாக அதிர வைக்கிறார். ‘மலர்ப்பாதை‘ இதற்கு நல்ல உதாரணம். நியாயமாகப் பார்த்தால் காதலியைப் பார்த்துப் பாடப்பட்டிருக்க வேண்டிய கவிதை, கடைசி வரியில் பிணத்தைப் பார்த்துப் பாடியதாக மாறி விடுகிறது. இப்போதும்கூட ஒன்றும் கெட்டு விடவில்லை, காதலர்கள் கடைசி வரியை மட்டும் எடிட் செய்து தங்கள் நல்நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவே செய்யலாம். “கடத்தல்” என்ற கவிதையும் காதலர்களுக்காக எழுதப்பட்டது, பாடை வரும் வரிகளை நீக்கிப் பயன்படுத்துவது நல்லது (“இந்தப் பாடையைப் போல்/ என்னைச் சுமந்து செல்லேன்“). காதலையும் மரணத்தையும் பேயோன் ஒருசேர தொடர்புறுத்துவது ஃபிராய்டியர்களின் கவனத்துக்குரியது, எனவே அவர்களுக்கும் பேயோன் கவிதைகளைப் பரிந்துரைக்கிறேன்.

பேயோனின் அழகனுபவ கவிதைகள் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளைப் பெரும்பாலும் நினைவுபடுத்துகின்றன. எனவே, இது ஜென் கவிதை மாதிரி, இது அழகனுபவ கவிதை மாதிரி என்று வகைப்படுத்துவது ஒரு வசதிக்குத்தான். அழகு என்றாலே நிலவுதானே, அதனால்தான், “விடாமல் பெய்த இரவு மழையால் நிலவைப் பார்த்து நாளாயிற்று,” என்று வருந்துகிறார் பேயோன் (“கணக்கு“). அப்புறம், “இருந்தாலும் நஷ்டமில்லை,” என்று உடனே விஷயத்தை முடிவுக்கும் கொண்டு வந்து விடுகிறார். சாதாரண விஷயம் மாதிரிதான் இருக்கிறது. டூரிஸ்டு கைடுகளில் டிக் அடித்துக் கொண்டே பார்க்க வேண்டிய இடம் ஒவ்வொன்றாய்க் கடந்து செல்லும் கூட்டங்களைப் பற்றி கதைகளில் படித்திருப்போம், நிலவை ரசிப்பது அப்படியெல்லாம் கணக்கு பண்ணக்கூடிய சம்பிரதாய அனுபவமல்லவே. இந்தக் கவிதை, நிலவைப் பார்க்காவிட்டால் ஒன்றும் குடிமுழுகிப் போய் விடாது என்று மட்டும் சொல்லவில்லை, என்ன எழவுக்கு இதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்கிறாய், என்றும் கேட்கிறது.

ஜென் மனநிலைகளைப் பேசுவதால் பேயோனை ஒரு ஜென் கவிஞர் என்று நம்பிவிட முடியாது. பேயோனும் நம்மைப் போல்தான் என்பதை “எத்தனை” என்ற கவிதையில் காணலாம். எவ்வளவு சீக்கிரம் லோகக்ஷேமம் குறித்த கவலைகள் லோகாயத படுகுழியில் வீழ்ந்துபடுகின்றன என்பதைச் சித்தரிக்கும் கவிதை இது. பொதுவாக, பேயோன் அறச்சாயங்கள் பூசிக் கொள்வதில்லை, அப்படியே விளையாட்டாய் பூசிக் கொண்டாலும் அவை உடனடியாகக் கரைந்து விடுகின்றன என்பது ஆறுதல். ஹவுசிங் லோன் போட்டு வீடு வாங்கியவர்கள் இந்தக் கவிதையைப் படிக்கலாம்.

ஒரு ரோஜா ஒரு ரோஜா ஒரு ரோஜா” (A rose is a rose is a rose) என்று ஜெர்ட்ரூட் ஸ்டீன் கூறியது உலகப் பிரசித்தம். ரோஜா என்ற பெயர் கொண்ட ஒரு பெண்ணை ரோஜா என்று அழைக்கும்போது ரோஜாவை ரோஜா என்று அழைக்கிறோம். அதனால் ரோஜா ஒரு ரோஜா. ரோஜா ஒரு ரோஜா என்று சொல்லும்போது ரோஜாவைப் பேசுகிறோம், எனவே ரோஜா ஒரு ரோஜா என்பதும் ரோஜாதான், என்று இதற்கு விளக்கம் சொல்கிறார்கள். ஒரு விஷயத்தைப் படைக்கும்போது அது படைப்பாகிறது. அதற்கடுத்த நிலையில், ஒரு படைப்பைப் படைப்பு என்று சுட்டும்போது, அந்தச் சுட்டுதலே ஒரு படைப்பாகிறது. மேற்கண்ட வாக்கியத்தை ஸ்டீன் எழுதியதே “Composition as Explanation” கட்டுரையில்தான் என்பதால் இதை எல்லாம் பூச்சாண்டி காட்டுகிற வேலையாக தயவு செய்து நினைக்க வேண்டாம். ஸ்டீனுக்கான எதிர்வினையை பேயோன் எவ்வளவு அழகாக நிகழ்த்துகிறார் பாருங்கள்-

ரோஜாக்கள்

ரோஜாவைப் பார்க்கும்போது
உன் ஞாபகம் வருகிறது
உன் பெயர் ரோஜா
என்பதாலோ என்னவோ.
ஆனால் ரோஜாக்களைப்
பார்க்கும்போது வருவதில்லை
உன் பெயர் ரோஜாக்கள் அல்ல
என்பதாலோ என்னவோ

என்று எழுதுகிறார் அவர். வார்த்தை விளையாட்டு மாதிரிதான் தெரிகிறது, ஆனால் சொற்கள் பொருள் கொள்ளும் திறனைச் சோதித்துப் பார்க்கிறார். ஸ்டீன் எழுதுவதோடெல்லாம் ஒப்பிடுவதா என்றால் பேயோனை அந்த ரேஞ்சில்தான் பேச வேண்டும். அதற்கு முன்னால் அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும், தமிழர்களும் பேயோனையும் ஸ்டீன்களையும் இன்னும் கவனமாக வாசிக்க வேண்டும்.

ஆனால் பேயோனிடமும் குறைகள் இருப்பதை இதே மூச்சில் சொல்லி விடுகிறேன்- “அதுதானோ?” என்ற கவிதை எபிஸ்டமிக் நாட்டம் கொண்டவர்களை சந்தோஷப்படுத்தலாம். மற்றபடி இது பேயோனின் மறக்கப்படக்கூடிய கவிதைகளில் ஒன்று என்று நினைக்கிறேன் (காலம் வளர்கிறது, உருவம் சிதைகிறது என்ற வாசிப்புக்கு “வளர்சிதை மாற்றம்” என்ற பயன்பாடு இடம் கொடுக்கிறது. ஆனால் கவிதைக்கு புத்திசாலித்தனம் போதுமா, அதைவிட முக்கியமாக, தேவைதானா?). பேயோனின் எபிஸ்டமிக் நாட்டத்துக்கு இது என்றால், ‘போக்குவரத்து‘ அவரது ஆன்டாலஜிக் தேடலின் பிரதிநிதியாகிறது. “சுற்றி என்னென்னவோ நடக்கிறது மூச்சு மட்டும் அது பாட்டுக்கு போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறது” என்பதுதான் கவிதை. இந்த விஷயத்தில் என்னதான் நடக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. நன்றாக இருந்தாலும், “எதிர்காலம் கேள்விக்குறி” என்ற கவிதையும் ஆன்டாலஜிக்தான் (“என் வீடெங்கே?/ நேற்றும் இன்றும் பார்த்த நாங்கள்/ நாளைக்கும் இருப்போமா?“)

பேயோனிடம் நமக்குப் பிடிக்காத முகம் ஒன்று இருக்கிறது – அவ்வப்போது வெளிப்படும் இந்த முகம் மனிதர்களைக் காணச் சகியாமல் முகம் திருப்பிக் கொள்கிறது. ஆங்கிலத்தில் மிசாந்திரோப்புகள் என்று இவர்களைச் சொல்வார்கள். பேயோனும் அப்படிப்பட்ட ஒருவராக இருக்க முடியும் என்பதை, “இவ்வுலகு” என்ற கவிதை நினைவூட்டுகிறது, பேயோன் விஷயத்தில் நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் மறந்துவிடக் கூடாது.. இதே மிசாந்திரோப்பிக் கவிதை வரிசையில்தான் அடுத்து வரும் “அதிகாலைகள்” என்ற கவிதையையும் தொகுக்க வேண்டும்- “அதிகாலைகள் அழகாய் இருக்கக் காரணம் மனிதர்கள் அதிகம் கண்ணில் படாமை” என்ற நேரடி அறிவிப்பு இது. நண்பர் ஒருவர் எதைக் காட்டினாலும், “இது எப்படி கவிதையாகிறது?”, என்று கேட்பது நினைவுக்கு வருகிறது. இதே செய்தி, “விஷயம்” என்ற கவிதையில் சொல்லப்படுகிறது. ஆனால் அங்கு தேர்ந்த அங்கதத்தை நாம் பார்க்கிறோம் (“பாவம், சாருக்கு விஷயமே தெரியாது“) புத்தாண்டு வாழ்த்துகளுக்கு எதிரான “வாழ்த்து” என்ற கவிதை அப்பட்டமான, வெட்கமேயில்லாத மிசாந்திரோப்பி.

பேயோனின் மிசாந்திரோப்பிக் இம்பல்சுகளுக்கான அரங்காக அவரது சமூக நலக் கவிதைகள் இருக்கின்றன. தெருவின் ஒரு கோடியில் இருக்கும் பேயோனுக்கு மறு கோடியில் நிற்பவன் மீது என்ன புகார் இருந்து விட முடியும்? இருந்தாலும், “தெருக்கோடிக்காரனின் பீடிப்புகை இக்கோடியில் சூழ்கிறது என்னை” என்று குற்றம் சாட்டுகிறார் அவர் (“போல“). சக மனிதன் புகைத்து மறு சுழற்சிக்கு விடும் சிகரெட் பீடிப்புகை இரண்டாம் நிலை புற்று நோய்க்கு வித்திடும் அபாயம் உள்ளது என்னவோ உண்மைதான். ஆனால், “ஒளியாண்டுகளுக்கு முன்பு மரித்த/ நட்சத்திரங்களின் வெளிச்சம் போல” என்று பாரனாய்ட் லெவலில் இது குறித்து கவலைப்படுகிறார் அவர். “முழம் பத்து ரூபாய் கிடைப்பதோ இத்தனூண்டு” என்று தன் காதலி அல்லது மனைவியின் கூந்தலில் மல்லிகை மலர்களைச் சூட்ட முடியவில்லையே என்று அதன் (கூந்தலின்) அளவு குறித்து கவலைப்படுகிறார் (“முழம்“). இதில் மிக நுட்பமாக தன் காதலி/ மனைவியை விமரிசித்திருக்கிறார். பெண்கள் விஷயத்தில் அவரை மிசொஜினிஸ்டிக் என்றும்கூட அடையாளப்படுத்தலாம் (கல்லெறிபவர்களுக்கு வசதியாக). ஆனாலும் பேயோன் ஒரு தேர்ந்த கவிஞர் என்பதில் சந்தேகமில்லை. “மழை இரவு” அதன் அழகிய வர்ணனைகள் மற்றும் இறுதி துணுக்குறல் (“குடிபோதையின் பெருங்குரலில்/ பாலும் பழமும் பாடுகிறான்/ ஒரு லூசுக்கூ“) என்று எங்கும் மிசாந்திரோப்பி விரவியிருந்தாலும் நம்மில் ஒரு வன்மையான எதிரொலியை எழுப்பி தன்னை ஓர் உயர்ந்த கவிதையாக நிறுவிக் கொள்கிறது.

இனி உதிரிக் கவிதைகள்.

இவை தவிர உதிரியாக இரு கவிதைகளில் ஆளில்லாக் கிழவன் வருகிறான். ஒன்றில் “இரவின் வாராவதி மேல்” காத்திருக்கிறான் (‘நினைவாக’), இன்னொன்றில், “வரப்பிடை ஒற்றையடிப் பாதையில்” நடந்து சென்று கொண்டிருக்கிறான் (“கடைசி ஒளி“). இரண்டு கவிதைகளும் எனக்குப் புரியவில்லை, சமகால இலக்கிய கவிதையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இது குறித்து எதுவும் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது.. “விபத்துகள்” என்ற தொகுப்பிலேயே நீண்ட கவிதையும் எழுதி பார்த்த கவிதை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சிலருக்கு அதில் ஒரு தனி வசீகரம் இருக்கலாம். கவிதையாகக் குறை சொல்ல முடியாது, ஆனால் பேயோன் கவிதையாக முத்திரை குத்த முடியுமா என்பது தெரியவில்லை. “தேநீர் எறும்பு” மற்றுமொரு உதிரிக் கவிதை. இது எறும்பு விழுந்த தேநீரில் கைபடாமல் எறும்பு நீக்கி அருந்தும் சாகசத்தை விவரிக்கிறது (“கண்ணாடிச் சுவரில்/ சமைந்து நிற்கிறது எறும்பு“- சப்பாடாகியிருக்க வேண்டும் போல). “கனல் தாரகை மதியத்திலே” எழுதிப் பார்த்த கவிதையாய் இருந்திருக்க வேண்டும் (“ஜன்னலடியான் என் மீதுன் பார்வை படுமோடி?”) அது போலவே “ஈக்களைப் பற்றி ஒரு/இரு கவிதை(கள்)” மற்றுமொரு சோதனை முயற்சி, இன்னும் தொடர்ந்திருக்கலாம், என்ன ஒன்று, தலைப்பைக் கொஞ்சம் மாற்ற வேண்டியிருந்திருக்கும்.

பேயோன் கவிதைகளை சீரியஸாக எடுத்துக் கொண்டு ஒரே மூச்சில் வாசிப்பதில் தோன்றும் உணர்வை ஒற்றை வரியில் தொகுத்துச் சொல்ல வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்- பேயோனின் எழுத்தில் பொறி தெறிக்க உரசிக் கொள்ளும் மொழி, நம் நகைப்புக்குரிய நிழலிருப்பை, சொற்களும் கருத்துவாக்கங்களும் போர்த்து மறைக்கும் அதன் இருண்ட வார்ப்புருக்களிலிருந்து கெல்லி கணப்பொழுது சுடரொளியில் வெளிச்சமிட்டு,  மௌனியின் புகழ்பெற்ற “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” என்ற கேள்வியை, “எவற்றின் நடமாடும் பகடிகள் நாம்?” என்று மாற்றிவிடுகிறது.

பெரும்பாலும் குறுங்கவிதைகள்- பேயோன்
மின்னூல், freetamilebooks.com 
விலையில்லாப் பதிப்பு

விலக்கம்

எஸ். சுரேஷ்

இன்று, ஆகஸ்ட் பதினெட்டு, 1998, என்னால் மறக்க முடியாத நாளாகி விட்டது. இதே போல் மறக்க முடியாத இன்னொரு நாள், டிசம்பர் எட்டு 1985. அன்றுதான் விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் ஆட்கள் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். நான் எங்கள் ஜெயநகர் வீட்டின் மொட்டை மாடியில் என் தோழி பத்மாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது சிலர் உரக்கப் பேசுவது எங்கள் காதில் விழுந்தது. அதில் ஒரு குரல் அப்பாவுடையது.

நானும் பத்மாவும் கீழே இறங்கி வந்தோம். அப்பாவிற்கும் மூன்று ஆட்களுக்கும் வாக்குவாதம் பலமாக நடந்து கொண்டிருந்தது. என்ன பிரச்சினை என்று எனக்கு புரியவில்லை. அப்பா ஏதோ உரக்க கத்திக் கொண்டிருந்தார். வந்தவர்களில் ஒருவன் சபாரி சூட்டில் இருந்தான். அவன் பதிலுக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். இவர்கள் சத்தமாகப் பேசுவதைக் கேட்டு ரோட்டில் போகிறவர்கள் எங்கள் கேட் முன் நின்று உள்ளே எட்டிப் பார்த்தார்கள். வந்திருந்த மூவரில் ஒருவன் கேட் பக்கம் சென்று, “ஹோகி ஹோகி’ என்று எல்லோரையும் விரட்ட ஆரம்பித்தான்.

அப்பொழுது ஒரு போலிஸ் ஜீப் கேட்டுக்கு முன் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு இன்ஸ்பெக்டர் இறங்கி கேட்டை திறந்து உள்ளே வந்தார். அங்கு நின்றிருந்தவன் அவருக்கு சல்யூட் அடித்தான். நான் இன்ஸ்பெக்டரைப் பார்த்தவுடன் பயந்து போனேன். அந்த பயம் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும். பத்மா என் தோள்களை அணைத்துக் கொண்டாள். “ஒன்றும் ஆகாது, பயப்படாதே”, என்றாள்.

உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டர் சபாரி ஆளைப் பார்த்தார். பிறகு அப்பாவிடம், “உங்களை கைது செய்ய வேண்டும். இதோ ஆர்டர்ஸ்” என்று ஏதோ காகிதத்தை நீட்டினார். நான் ஒன்றும் புரியாமல் அப்பாவைப் பார்த்தேன். இவ்வளவு நேரம் உரக்க பேசிக்கொண்டிருந்த அப்பா மௌனமானார். தலை குனிந்து, ‘சரி’ என்பது போல் ஆட்டினார். பிறகு என்னைப் பார்த்து, “நீ இங்கேயே இரு. மஞ்சுநாத் வருவான். அவன் எல்லாம் பாத்துப்பான்”, என்று சொல்லிவிட்டு, “பன்னி” என்று இன்ஸ்பெக்டரை பார்த்து சொல்லிவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்று போலிஸ் ஜீப்பில் ஏறிக்கொண்டார்.

“அப்பா அப்பா. என்ன ஆச்சு? அப்பா, அப்பா…” என்று நான் அவரை பார்த்து கேட்டுக் கொண்டிருக்கையில் ஜீப் கிளம்பியது. “ஏனு இல்லா. நான் சீக்கிரமே வரேன்,” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் ஜீப் ரொம்ப தூரம் சென்று விட்டது.

அழுது கொண்டிருந்த என்னை பக்கத்து வீட்டுக்காரர்கள் வேடிக்கை பார்த்தார்கள். பத்மாவைப் பார்த்து, “ஏனு ஆயித்து?” என்று கேள்வி கேட்டார்கள். எங்களுக்கு வலது புறம் வீட்டில் இருக்கும் சாவித்திரி ஆண்ட்டி ஓடி வந்தாள். “அழாதே. ஒன்னும் ஆகியிருக்காது. சீக்கிரமே அப்பா வந்துடுவார்,” என்று என்னை உள்ளே அழைத்துச் சென்றாள். எதிர் வீட்டில் இருக்கும் லீனா ஆண்ட்டியும் வந்து ஆறுதல் சொன்னாள்.

கால் மணி நேரம் கழித்து மஞ்சுநாத் அங்கிள் வந்தார். எல்லோரும் அவரிடம் விஷயம் என்ன என்று கேட்டார்கள். அவரோ, “ஏதோ ஆபிஸ் விஷயம். நீங்க வீட்டுக்கு போங்க. நாளைக்கு எல்லாம் சரியாகிவிடும்” என்று எல்லோரையும் துரத்தினார். வேண்டா வெறுப்பாக எல்லோரும் வீட்டை விட்டு விலகிப் போனார்கள்.

மஞ்சுநாத் அங்கிள் என்னிடம், “வித்யா, நீ ஒன்றும் கவலைப்படாதே. இது ஆபிஸ் விஷயம். நாளைக்கு நான் போலிஸ் ஸ்டேஷன் போய் அவனை வீட்டுக்குக் கொண்டு வருகிறேன். நீ ஒன்றும் கவலைப்படாதே” என்றார். என்னதான் ஆயிற்று என்று நான் பல முறை கேட்டும் அவர் இதே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். பிறகு பத்மாவை என்னுடன் இரவு தங்கியிருக்கச் சொல்லிவிட்டு மஞ்சுநாத் அங்கிள் தன் வீட்டிற்கு சென்றார். அவருக்கு அடுத்த நாள் காலை நியூஸ் பேப்பரில் அந்த செய்தி வரும் என்று தெரிந்திருக்கவில்லை.

“ஊழல் வழக்கில் நால்வர் கைது” என்று கொட்டை எழுத்தில், முதல் பக்கத்தில் அந்தச் செய்தி வந்தது. அதைப் படித்துக்கொண்டிருந்த பத்மா என்னைப் பார்த்ததும் பேப்பரை நீட்டினாள். தலைப்புச் செய்தியுடன் கூட அப்பாவின் புகைப்படமும் முதல் பக்கத்தில் இருந்தது. போலிஸ் மற்றும் அந்த சபாரி சூட் ஆள் சூழ அப்பா நடுவில் இருக்கும் புகைப்படம். நடுத்தர உயரம், தடிமனான கருப்பு பிரேம் போட்ட கண்ணாடி. எந்த சலனமும் இல்லாத முகம். அப்பாவைத் தவிர அப்பாவுடன் வேலை செய்யும் மூன்று பேரின் படங்கள் இருந்தன. அதில் சதானந்த் அங்கிள் எனக்கு நன்றாகத் தெரியும். அவர் அடிக்கடி வீட்டிற்கு வருவார். இன்னொருவர் அப்பாவுடைய பாஸ்.

செய்தியைப் படித்துவிட்டு நான் அழுவேனோ என்று என் முகத்தை பத்மா உற்று நோக்கிகொண்டிருந்தாள். ஆனால் எனக்கு அழுகை வரவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. இந்த குழப்பம் கோபமாகவும் ஆத்திரமாகவும் மாற இரண்டு மாதங்கள் வேண்டியிருந்தது.

oOo

இன்றைக்கு, ஆகஸ்ட் பதினெட்டு, 1998, இப்பொழுதும் எனக்கு அதே குழப்பம். பத்திரிகையில் ஜிம் பார்சன் புகைப்படம் வந்திருக்கிறது. ஆனால் இது வரும் என்று முதல் நாளே தெரியும். அன்றிரவு என்னிடம் ஜிம், தான் நாளை கைதாகலாம் என்று சொன்னான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஜிம் ஒரு பார்மா கம்பெனியில் வேலை செய்கிறான். அவனை ஏன் போலிஸ் கைது செய்ய வேண்டும்? ‘இன்சைடர் ட்ரேடிங்’ என்றான் ஜிம்.

தன் கம்பெனியில் நடக்கும் சில விஷயங்களை ஸ்டாக் மார்க்கெட்டில் விளையாடும் சிலருக்கு ஜிம் சொல்லியிருக்கிறான். இதனால் அவர்களுக்கு கொள்ளை லாபமாம். ‘நான் செய்வது தவறு என்று நான் உணரவில்லை” என்று கூறி ஒரு குழந்தை போல் அழ ஆரம்பித்தான். இப்பொழுது பத்திரிகையில் ஜிம் பார்சனின் பெயரும் புகைப்படமும் வந்திருக்கிறது. நீல நிறக் கண்கள், பொன்னிற தலைமுடி, சவரம் செய்யப்பட்ட உருண்டை முகம். இதழ்களில் புன்னகை. அவன் காலேஜில் படிக்கும்பொழுது எடுத்த படமாக இருக்கும். ‘Jim Parson involved in insider trading’ என்று கொட்டை எழுத்தில் தலைப்பு.

oOo

நான் மஞ்சுநாத் அங்கிளுக்கு போன் செய்தேன். “பேப்பர் பாத்தேம்மா. உங்கப்பா ஒண்ணும் தப்பு செய்யல்ல. அவன் எப்போவுமே லஞ்சம் வாங்காத நேர்மையான ஆபிசர். அதுனால அவனுக்கு நிறைய எதிரிகள். அதுல எவனோதான் வேணும்னு மாட்டி விட்டிருக்கான்,” என்றார். இதைக் கேட்டு எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

ஆனால் அந்த நிம்மதி காலை பதினொரு மணி வரையில் தான் நீடித்தது. பதினொரு மணியளவில் நான்கு விஜிலன்ஸ் ஆட்கள் கையில் ஏதோ பேப்பருடன் வந்தார்கள். மஞ்சுநாத் அங்கிள் அப்பொழுது வீட்டில் இருந்தார். விஜிலன்ஸ் ஆட்கள் வீடு முழுவதும் தேடினார்கள். கடைசியில் என் முன் கட்டுகட்டாக நூறு ருபாய் நோட்டுக்களை அடுக்கிக் காட்டிவிட்டு என்னிடம் ஒரு பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னார்கள். அவர்கள் போனபிறகு மஞ்சுநாத் அங்கிளிடம் இதெல்லாம் என்ன என்று கேட்டேன். “பயப்படாதே. உன் அப்பா வந்து எல்லா விஷயமும் சொல்லுவான்” என்று சமாதானம் சொன்னார்.

அப்பா வருவதற்குள் பலர் என்னை விளக்கம் கேட்க ஆரம்பித்தார்கள். பக்கத்தில் இருப்பவர்கள், என் உறவினர்கள், நண்பர்கள், கடையில் வேலை செய்பவர்கள், காய்கறி விற்பவர்கள் என்று சகலரும் என்னை துக்கம் விசாரிப்பது போல் விசாரித்தார்கள். எனக்கு வீட்டை விட்டு வெளியே செல்லவே பிடிக்கவில்லை. அப்பா எப்பொழுது வருவார், எப்பொழுது எனக்கு பதில் சொல்வார், நான் எப்பொழுது வெளியே சென்று, “என் அப்பா ஒரு தவறும் செய்யவில்லை’ என்று கூறுவேன் என்று காத்துக் கிடந்தேன்.

ஆனால் அப்பா ஒன்றும் சொல்லவில்லை. ஒரு வாரம் கழித்து அப்பா பெயில் கிடைத்து வீட்டிற்கு வந்தார். ஒன்றுமே ஆகாதது போல் நடந்து கொண்டார். நான் பல முறை அவரிடம், “என்ன நடந்தது, உண்மை என்ன?” என்று கேட்டேன். ஆனால் அவரோ “ஏனில்ல”, என்று ஒரே வார்த்தையில் என் கேள்விகளைக் கடந்து சென்றார். நான் பல முறை அவர் முன் அழுது கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் எந்த பதிலும் சொன்னதில்லை.

oOo

ஜிம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தான், ஆனால் அவன் என்ன பேசுகிறான் என்று எனக்கு உரைக்கவில்லை. என் மனம் முழுதும் அந்தப் பத்திரிகையில் உள்ள ஜிம் மேல் தான் இருந்தது. “இவன் என்னை ஏமாற்றமாட்டான் என்றுதானே திருமணம் செய்து கொண்டேன். இப்பொழுது இப்படிச் செய்துவிட்டு வந்து நிற்கிறானே துரோகி,” என்றது என் மனம். நான் சட்டென்று பத்திரிகையை வீசிவிட்டு பெட்ரூம் போனேன். ஜிம் என்னுடன் உள்ளே வர பார்த்தான். ‘ப்ளீஸ் லீவ் மீ அலோன்’ என்று சொன்னவுடன் வெளியே நின்றுவிட்டான். நான் படுக்கையில் விழுந்தேன்.

oOo

ஒரு நாள் மாலை அப்பாவின் நண்பர்கள் வீட்டிற்கு வந்தார்கள். எல்லோரும் சேர்ந்து மது அருந்த ஆரம்பித்தார்கள். நான் என் அறையில் இருந்தேன். அப்பா மது அருந்துவது சகஜம். அவர் நண்பர்களும் அடிக்கடி வருவார்கள். எல்லோரும் மது அருந்திவிட்டு செல்வார்கள். எல்லாமே மிதமாகதான் இருக்கும். சிரிப்பொலி இருக்குமே தவிர கூச்சல் கலாட்டா என்று பலர் நினைப்பது போல் எதுவும் இருக்காது. எல்லோரும் தெளிவாகவே இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு குரல்கள் அவ்வப்போது உயர்ந்தன. “நம்ப மாத்திரமா லஞ்சம் வாங்கினோம்? பூரா டிபார்ட்மெண்ட் வாங்குது. தேவடியா மகன் நம்பள மட்டும் என் அரெஸ்ட் பண்ணனும்?”, என்று சதானந்த் அங்கிள் புலம்பினார். “நீ ஏன்டா வீட்ல பணத்த வச்ச. இப்போ பணமும் போச்சு அவங்க கேஸ் ஸ்ட்ராங் ஆயிடிச்சி” என்று இன்னொரு குரல் கேட்டது. அவர்கள் எல்லோரும் வீட்டுக்குச் செல்வதற்குள் அப்பா லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்று எனக்கு சந்தேகமில்லாமல் தெரிந்துவிட்டது.

அடுத்த நாள் காலை எனக்கு அப்பாவை பார்க்கவே பிடிக்கவில்லை. எங்களிடையே பேச்சு குறைய ஆரம்பித்தது. நான் அவருடன் வெளியே செல்வதைத் தவிர்த்தேன். ஆனால் அவர் செய்த செயல் என்னை சுட்டது. கல்லூரியில் என்னுடன் படிக்கும் ஒருவன், நான் அவனுக்கு விடைத்தாள் காட்டவில்லை என்பதற்காக, “அப்பனப் போல இருக்கா. லஞ்சம் குடுத்தா தான் ஆன்சர் காமிப்பா” என்று சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள். பக்கத்து வீட்டு மாமி ஒரு நாள் என்னைப் பார்த்து, “உங்க வீட்டுக்கு மாடி போர்ஷன் கட்டலாமே. உங்களுக்கு பணத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லையே,” என்றாள். எந்த நிமிடமும் காதலனாக மாறக்கூடிய நெருங்கிய சிநேகிதன் ஸ்ரீகாந்த் என்னை விட்டு மெல்ல விலகிச் சென்றான். எனக்கு அடி மேல் அடி விழுவது போல் இருந்தது.

அப்பா குடியில் மூழ்கலானார். “ஏன்டா இப்படி பண்ற. உனக்கு ஒரு பெண் இருக்கா. இன்னும் ஒரு வருஷத்துல ரிடைர் ஆகப் போற. எதுக்கு இப்படி குடிக்கற?” என்று மஞ்சுநாத் அங்கிள் எவ்வளவு சொல்லியும் அப்பா குடியை நிறுத்தவில்லை. ஒரு நாள் என் நண்பர்களுடன் நான் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் இருக்கும்பொழுது அப்பா அங்கே போதையில் எங்கள் முன் மயங்கி விழுந்தார். எனக்கு அவமானம் தாளவில்லை. இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

oOo

பத்திரிகையில் செய்தி வந்த மாலை, கிரேக் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஜிம் செல்லும் சர்ச்சில் கிரேக்தான் பாதிரியார். கிரேக் என்னிடம் ஒரு மணி நேரம் பேசினார். ஜிம் மனம் திருந்திவிட்டதாகவும், தான் செய்த தவறை சொல்லி பாவ மன்னிப்பு கேட்டதாகவும், அவன் அப்ரூவராக மாறப் போவதாகவும், நான் அவனை மன்னித்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அன்று இரவு ஜிம் என் கையைப் பிடித்துக்கொண்டு, நான் இனி இது போல் எதுவும் செய்ய மாட்டேன், என்று சத்தியம் செய்தான். நான் ஒன்றும் சொல்லாததால் அழ ஆரம்பித்தான். என்னால் அதை தாங்க முடியவில்லை. அவனை இறுகக் கட்டிக்கொண்டு “இட்ஸ் ஓகே, இட்ஸ் ஓகே”, என்று சமாதானப்படுத்தினேன்.

oOo

எங்கள் உறவுக்காரர்கள் வருவதை நிறுத்திவிட்டிருந்தார்கள். அப்பாவிற்கு சொந்த சகோதர சகோதரிகள் கிடையாது. எல்லோரும் தூரத்து சொந்தம்தான். அம்மா பக்கத்து உறவினர்கள் சிலர் வந்தார்கள். அப்பா இருக்கும் நிலைமையை பார்த்துவிட்டு என்னை சோகக் கண்களுடம் பார்த்தவிட்டு, “எல்லாம் விதி” என்று கூறிவிட்டு சென்றார்கள். என் பெரியம்மா தில்லியில் இருந்தார். எப்பொழுதாவது போன் செய்வார். அப்பா மீது அவருக்கு பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை. மஞ்சுநாத் அங்கிள் மட்டும் தினமும் வந்து அப்பாவைத் திட்டிவிட்டு செல்வார்.

எனக்கு முதலில் அமெரிக்கா போகவேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. ஆனால் அங்கு பல இந்தியர்கள் வருவார்கள். நம்மவர்கள் நம் குடும்பத்தை பற்றி கேட்காமல் இருக்க மாட்டார்கள். அதனால் ஐரோப்பாவில் எங்காவது செல்ல நினைத்தேன். பின்லாந்தில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. நான் படிக்க ஊரைவிட்டு செல்கிறேன் என்று சொன்னபொழுது அப்பா வெறும் ‘உம்’ என்றார்.

நான் ஊரைவிட்டு கிளம்பும்பொழுது அவர் குடிபோதையில் மயங்கிக் கிடந்தார். மஞ்சுநாத் அங்கிள்தான் என்னை ஏர்போர்ட்டில் டிராப் செய்தார்.

oOo

ஜிம் மாறிக்கொண்டிருந்தான். அப்ரூவராக மாறிய பிறகு சோஷல் சர்வீஸில் ஈடுபட்டான். நான் அவனை நான்கு ஆண்டுகளுக்கு முன் மணந்திருந்தேன். பின்லாந்தில் படித்துவிட்டு, ஜெர்மனியில் வேலைக்கு சேர்ந்து, அமெரிக்கனான ஜிம்மைச் சந்தித்து, எங்களுக்குள் காதல் மலர்ந்து, அவனை திருமணம் செய்து கொண்டேன். நான் என் பழைய வாழ்க்கையை பற்றி அவனுக்கு சொல்லவில்லை. சில முறை கேட்டு பார்த்தான். ஆனால் எனக்கு அதை பற்றி பேச பிடிக்கவில்லை என்பதை அவன் உணர்ந்து கொண்டான். பிறகு அதை பற்றி அவனும் பேசுவதில்லை, நானும் பேசியதில்லை.

திருமணம் ஆன இரண்டு வருடங்கள் கழித்து நாங்கள் அமெரிக்கா வந்தோம். அப்பொழுதெல்லாம் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்த ஜிம் இப்பொழுது ஒரு பொறுப்புள்ள குடிமகன் போல் மாறிவிட்டான்.

oOo

நான் பின்லாந்த் வந்து சேர்ந்தவுடன் மஞ்சுநாத் அங்கிளுக்குதான் கடிதம் எழுதினேன். அப்பாவிற்கு எழுதவில்லை. மஞ்சுநாத் அங்கிள் அப்பாவைப் பற்றிதான் கவலைப்படுவதாக பதில் எழுதினார். ஒரு வருடம் கழித்து அப்பாவிற்கு ஒரு வருட சிறை தண்டனை கிடைத்ததை பற்றி மிகுந்த வருத்தத்துடன் எழுதினார். இனி இந்தியா பக்கமே போகக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

oOo

ஒரு வருடம் கழித்து தீர்ப்பு வந்தது. அன்று நானும் ஜிம்முடன் கோர்ட்டுக்கு சென்றிருந்தேன். பலருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. ஜிம்மின் வாக்குமூலம் இதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. கோர்ட்டை விட்டு வெளியே வரும் பொழுது பலர் ஜிம்மின் கையை குலுக்கினார்கள். என்னையும் எல்லோரும் பாராட்டினார்கள். “யூ நெவெர் கேவ் அப். ஜிம்முக்கு பலமே நீ தான்” என்று புகழ்ந்தார்கள். அடுத்த நாள் பத்திரிகையில் எங்கள் இருவர் படமும் வந்தது. ஜிம் எப்படி ஒரு கண்ணியமான குடிமகனாக மாறி இருக்கிறான் என்பதை சிலாகித்து எழுதியிருந்தார்கள். எனக்கு அதைப் படித்தவுடன், அப்பாவை பார்க்க வேண்டும் என்று முதல்முறையாக தோன்றியது.

ஜிம்மிடம் நான் இந்தியா போக வேண்டும் என்றேன். புருவங்களை உயர்த்தி “இந்தியா?” என்றான். “எஸ்” என்றேன். “நானும் கூட வரவேண்டுமா?” என்றான். “இல்லை. நான் தனியாக செல்ல வேண்டும்” என்றேன். “நீ என்னை கைவிட மாட்டாய் அல்லவா” என்றான். “இல்லை. இது நீ சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. சீக்கிரம் திரும்பிவிடுவேன்” என்று சொன்ன பிறகு தான் அவனுக்கு ஆறுதலாக இருந்தது.

பெங்களூருக்கு வந்து எம்.ஜி. ரோட்டில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கினேன். ஒரு வாரம் கழித்து ரிடர்ன் டிக்கெட். ஒவ்வொரு நாளும் கிளம்ப வேண்டும் என்று நினைக்கும்பொழுது எனக்கு தைரியம் வராது. பயம் கவ்விக் கொள்ளும். ஹோட்டலிலேயே தங்கி விடுவேன்.

இப்படியே ஒரு வாரம் ஓடி விட்டது. நான் மறுபடியும் அமெரிக்காவிற்கு கிளம்ப வேண்டிய நாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு கார் ஏற்பாடு செய்து ஜெயநகர் நோக்கி புறப்பட்டேன். அப்பாவைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நேரே ஏர்போர்ட் செல்ல ப்ளான் செய்திருந்தேன்.

அப்பா அந்த வீட்டில்தான் இருப்பாரா? இப்பொழுது எப்படி இருக்கிறாரோ?  அப்பாவுடன் இருந்த ஒரே தொடர்பான மஞ்சுநாத் அங்கிள் மூன்று வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். எனக்கு அதை நினைக்கும்பொழுது மிகுந்த பயமாக இருந்தது. கார் மெதுவாக எங்கள் வீதிக்குள் நுழைந்தது. என் பயம் அதிகரித்தது. வேர்வையை துடைத்துக்கொண்டு வெளியே எட்டி பார்த்தேன்.

பக்கத்தில் இருந்த வீடுகள் எல்லாம் காம்ப்ளெக்ஸாக மாறிவிட்டிருந்தன. எங்கள் வீடு மட்டும் அப்படியே இருந்தது. அப்படியே அல்ல. சற்று அழுது வடிந்து கொண்டிருந்தது. நான் விட்டுச் சென்ற பிறகு பெயிண்ட் அடிக்கவில்லை போலிருந்தது. சில இடங்களில் பெயிண்ட் காணாமல் போய் செங்கல் பல்லை இளித்தது. காம்பவுண்ட் அருகில் எப்பொழுதும் பூத்திருக்கும் செடிகள் இப்பொழுது இல்லை.

வீட்டைத் தாண்டி டிரைவர் காரை நிறுத்தினான். நான் மெதுவாக நடந்து கேட் அருகில் வந்தேன். நடப்பதே கடினமாக இருந்தது. அப்பா இப்பொழுது எந்த நிலையில் இருப்பாரோ?

கேட் அருகே வந்தவுடன் அவரை பார்த்தேன். இன்னும் மாலை மங்கவில்லை. அவர் எனக்கு முதுகைக் காட்டி நின்றுக்கொண்டிருந்தார். தலை மயிர் நரைத்திருந்தது, ஆனால் அவர் உடல் வாகு அப்படியே தான் இருந்தது. நான் கேட் திறக்கும் சப்தம் கேட்டு அவர் திரும்பினார். என்னை அறியாமல் நான் ஸ்தம்பித்து நின்றேன். அவர் என்னை உற்று பார்த்தார். நான் மிகவும் மாறியிருந்தேன். பாப் கட், ஜீன்ஸ் மற்றும் மேக்கப் போட்டிருந்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா? இல்லை அவரால் நான் திரும்பி வந்தேன் என்பதை நம்ப முடியவில்லையா?

உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவர் சட்டேன்று சிரித்தார். நான் என் இள வயதில் பார்த்த அப்பாவாக மாறினார். பழைய நினைவுகள் என்னைத் தாக்கி விழியோரம் நீர் கோர்த்துக்கொண்டது. சிரித்துக்கொண்டே என்னை நோக்கி நடந்து வந்தார். “குருபிரசாத் நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட் குடுத்து அனுப்பினானா? எங்க சர்டிபிகேட் காமி” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்பொழுது வீட்டுக்குளிருந்து ஒரு பெண்மணி வெளியே வந்தார். “இங்க இருக்கீங்களா. உள்ள வாங்க காபி தரேன்” என்றார். “ஒரு நிமிஷம் இரு. குரு பிரசாத் இவங்கள அனுபியிருக்கான். நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட் இருந்தா வண்டி ரெஜிஸ்ட்ரேஷன் மாத்திடலாம்” என்றார். அந்தப் பெண்மணி தலையில் அடித்துக்கொண்டு, “இவங்கள யாரும் அனுப்பல. ஏதோ அட்ரஸ் கேட்டு வந்திருக்காங்க” என்றாள்.

அவர் மறுபடியும் என்னை உற்றுப் பார்த்துவிட்டு, அந்த பெண்மணி பக்கம் திரும்பி, “நீ ஏன் எனக்கு இன்னும் லஞ்ச் போடல. ஒரே பசிக்கறது” என்றார். “லஞ்ச் எப்போவோ சாப்பிட்டு டிபனும் ஆச்சு. இப்போ காபி குடிக்க வாங்க” என்று கூறி அவர் கையைப் பிடித்து மெதுவாக அழைத்துச் செல்கையில் என்னை பார்த்து, “நான் வந்து அட்ரஸ் சொல்றேன்” என்றார்.

அதற்கு பிறகு என்ன நடந்தது என்று இன்று வரை எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. அந்தப் பெண்மணி அப்பாவை கையை பிடித்து உள்ளே அழைத்து போவதைப் பார்க்கிறேன். அதற்கு பிறகு பெங்களுரு விட்டு ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். டாக்ஸி ஏர்போர்ட் நோக்கி விரைந்துக் கொண்டிருந்ததுதான் நினைவிருக்கிறது.