எழுத்து

தீவிர இலக்கியம் ஓர் ஆன்மிக அனுபவம் -கேன் ஷூவே

(Can Xue எழுதிய “The Fair-haired Princess” and Serious Literature என்ற கட்டுரையை Karen Gernant, Chen Zeping ஆகிய இருவரும் Words Without Borders என்ற தளத்தில் ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளனர். அதன் தமிழ் வடிவம் இது)

அப்பாவின் புத்தக அலமாரிகளில் பெருமளவு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் புத்தகங்கள் நிறைந்திருக்கும். அடுக்கப்பட்ட புத்தகங்களின் பக்கவாட்டு அட்டைகளில் பொறிக்கப்பட்டிருந்த சில தலைப்புகள் நினைவிருக்கின்றன. புரிந்துகொள்ளக் கடினமாக இருந்த சில தலைப்புகளை மறந்து விட்டேன். தினமும் அப்பாவின் புத்தக அலமாரியைச் சுற்றி வந்து கொண்டிருப்பேன். அப்போது ஒருநாள் திடீரென்று லைப்ரரியிலிருந்து சில ஃபேரி டேல்களை அப்பா வீட்டுக்குக் கொண்டு வந்தார் (அவர் அப்போது நூலக வேலைக்கு அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்தார்- “உழைப்பு வழி மறுகல்வி” என்று இது அழைக்கப்பட்டது). என் அக்கா படிப்பதற்காக அவர் இந்தப் புத்தகங்களை எடுத்து வந்தார். அவள் அப்போது ப்ரைமரி ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தாள், நிறைய சொற்களை அறிந்திருந்தாள். அவர் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் ஒன்றுதான், “பொற்சிகை இளவரசி” (ராபுன்ஸல்). அப்பா புத்தகத்தின் பெயரை ஒரு முறைதான் சொன்னார், ஆனால் எனக்கு அது மறக்க முடியாததாகிவிட்டது. புத்தகத்தின் அட்டையை ஒரு இளவரசியின் படம் அலங்கரித்தது, அவளது பொன்னிற தலைமுடி, கணுக்கால்வரை நீண்டிருந்தது. நான் அந்தப் படத்தை விரிந்த கண்களுடன் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு அழகிய மஞ்சள் வண்ண முடி யாருக்கு இருக்க முடியும்? அந்தப் பொன்னிற முடியின் ஒரு கற்றையாவது எனக்குக் கிடைத்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்! (more…)

கல் விழுங்கிய நாரை

ஸ்ரீதர் நாராயணன்
cranes

“காதலில் இருந்த இரண்டு நாரைகளில் ஒன்றை மட்டும் கொன்றுபோட்ட வேடனே! நீ நாசமாகப் போக”

கோபத்துடன் சீறியது நான்தானா என்று ஆச்சரியமாக இருந்தது. இது என் குரல்தானா? என்னாலே நம்பமுடியவில்லை. மனம் உருவாக்கும் சொற்களெல்லாம் உருக்கொண்டு வெளிவராமல் கரைந்து காணாமல் போய்க் வெகுகாலம் ஆகியிருந்தது. கடைசியாக எப்போது பேசுவதற்கு முயன்றேன் என்றே நினைவில்லை. இன்பத்தில் முயங்கிக் கொண்டிருந்த நாரை ஜோடியை மதிமயங்கி எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேனோ, அந்த அம்பு பறந்து வந்து தாக்கியதை முதலில் கவனிக்கவில்லை.

மரக்கிளையில் ஒரு நொடி தடுமாறிய நாரை சுற்றி சுழன்று கீழே ‘தட்’ என பாறைக்கு அப்பால் போய் விழுந்ததும், அற்புதமான கனவு கலைந்து போன அதிர்ச்சியில் விதிர்விதித்துப் போனேன். உடனே பாய்ந்துபோய் பாறைக்கு பின்னால் விழுந்த பறவையை இருகைகளாலும் பற்றி தூக்கிக் கொண்டு திரும்பிப்பார்த்தால். அங்கே அவன் நின்றுகொண்டிருந்தான். அவன் நிறத்தையும், ஆளையும் பார்த்தாலே தெரிகிறது வேடன் என்று. போதாக்குறைக்கு கையில் ஆளுயரத்துக்கு வில் வேறு.

நாரை அடிபட்டதைவிட அதன் மோனநிலை கலைந்துவிட்டதுதான் மிக துயரமாக இருந்தது. துயரெல்லாம் சினமாக அவன் மேல் குவிய கடுஞ்சொற்கள் உருவெடுத்து வெளிக்கொட்டிவிட்டது. (more…)

காதலைச் சொன்னது

என்ன செய்வேன்? என் மோகம் தீர்வது எப்படி?
அந்த முத்தழகியை யார் என்னிடம் அழைத்து வருவார்கள்?

தாமரை போன்ற முக அழகை வரைந்தேன்
அதன் நறுமணத்தை என்னால் வரைய முடியவில்லை
உன் கள்ளூரும் உதடுகளை, அழகியே, நான் வரைந்தேன்
அதன் தீஞ்சுவையை என்னால் வரைய முடியவில்லை

வசீகரிப்பவளே! சொக்கும் உன் கண்களை வரைந்தேனே தவிர,
அவை மிரளுவதை என்னால் வரைய முடியவில்லை
உன் கழுத்தின் மென்கோடுகள் தெரிய வரைந்தேனே தவிர
அதில் எழும் குயிலோசையை என்னால் வரைய முடியவில்லை

இள மங்கையே! நம் கூடலை நாகபந்தமாய் வரைந்தேன்-
ஆனால் பரவசத்துடன் முவ்வகோபாலா வாடா,
என்று ரதிகேளிக்கைக்கு மீண்டும் அழைக்கும்
உன்னை என்னால் வரைய முடியவில்லை.

– தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது – க்ஷேத்ரையா, 126)

வீடு திரும்பும் வழிகள் – அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ரா, ஒரு மதிப்பீடு

(அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ராவின் Ways of Going Home என்ற நாவல் குறித்து கார்டியன் நாளிதழில் மினா ஹாலந்த் எழுதிய மதிப்பீடு)

பினோஷே ஆட்சி குறித்து இசபெல் ஆலண்டே எழுதியிருக்கிறார் என்பதைத் தவிர்த்து உலக அளவில் புகழ்பெற்ற சிலேவிய எழுத்து ஒப்பீட்டளவில் அரிதாகவே காணக் கிடைக்கிறது. ஒரு தேசமாகப் பார்க்கும்போது சிலேவியர்கள் தங்களை அதிகம் வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பதை இது பிரதிபலிக்கிறதா? லத்தின் அமெரிக்கர்கள் இப்படிதான் எழுதுவார்கள் என்ற நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, கடந்தகால வன்முறையின் பின்விளைவாய் சிலேவியர்கள் அமைதியான வார்ப்பாகவே இருக்கின்றனர். 1990ல் அவர் பதவி விலகிய பின்னரும், அந்த முன்னாள் சர்வாதிகாரி பற்றி பல்லாண்டுகளாய் தனி உரையாடல்களில் மட்டுமே பேசப்பட்டு வந்திருக்கின்றது. அதே போல், சிலே வரலாற்றின் இந்த காலகட்டம் குறித்த நாவல்களும் அதிக அளவில் வெளிவரவில்லை. சிலேவின் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் வரும்வரை இந்த நிலைதான் இருந்திருக்கிறது. அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ரா இந்தப் புதிய தலைமுறை எழுத்தாளர். (more…)