எழுத்து

தவளை இளவரசன்

எஸ். சுரேஷ்

தாமரை இலை மேல் அமைதியாய்
உட்கார்ந்துக் கொண்டிருந்த தவளை
அந்த வழியாக குதிரை மேல் செல்லும்
இளவரசியைப் பார்த்து கத்தியது
இளவரசி அருகில் வந்து தவளைக்கு முத்தமிட
ஓர் இளவரசனாய் மாறியது தவளை
அவனைக் கண்டு திடுக்கிட்ட இளவரசி
“ஐயோ, இவ்வளவு அசிங்கமான இளவரசனை
நான் பார்த்ததில்லை” என்று கூறிவிட்டு
குதிரை மேல் ஏறி அங்கிருந்து பறந்தாள்
இளவரசன் கண்ணில் நீர் மல்க
அவள் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்தான்
இதை மரத்தின் மேலிருந்து பார்த்த பாம்பு கூறியது
“நுணலும் தன் வாயால் கெடும்”

வீடு திரும்பும் வழிகள்

(Alejandro Zambra எழுதியுள்ள “Ways of Going Home” என்ற நாவலின் சில பகுதிகள்)

ஹாலில் இருக்கும் புத்தக அலமாரியைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அது நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. “இங்கே லைப்ரரி இருப்பதால் உன் அம்மா படிக்கத் துவங்கி விட்டாள், நானும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உனக்கே தெரியும், எனக்கு சினிமா பார்க்கத்தான் பிடிக்கும்,” என்கிறார் அப்பா. அவர் கிளாடியாவைப் பார்ப்பதில்லை, மிகவும் கண்ணியமாக, கவனமாக நடந்து கொள்கிறார்.

மதியப்பொழுது, நிதானமான உரையாடலில் கழிகிறது- சில குறிப்பிட்ட கணங்களில், அது நாங்கள் குடித்துக் கொண்டிருக்கும் pisco sourகளின் ரிதத்திற்கு ஏற்ற வடிவம் எடுத்துக் கொள்கிறது. நாங்கள் கிளம்பவிருக்கும்போது என் அம்மா இறைச்சித் துண்டங்களையும் உருளைக்கிழங்குகளையும் எடுத்து வந்து டின்னர் செய்ய ஆரம்பிக்கிறாள் – மாற்று உணவாக வெஜிடேரியனும் சமைக்கிறாள்.

அம்மாவின் கேள்விக்கு, “நான் வெஜிடேரியன் அல்ல,” என்று கிளாடியா பதில் சொல்கிறாள்.

“இது வித்தியாசமாக இருக்கிறது, என் பிள்ளை எப்போதும் வெஜிடேரியன்களைதான் விரும்பியிருக்கிறான்,” என்கிறாள் அம்மா. எனக்கு கோபம் வருகிறது, ஆனால் கிளாடியா இயல்பாய், நெருக்கமாய்ச் சிரிக்கிறாள். (more…)

கலைக்கப்படும் அமைதி

 நந்தா குமாரன்

சித்தப்பா
பின்னால் எரிந்து கொண்டிருக்கிறார்
Tata Sumo-விற்குள் நான்
தம்பியின் கைகளைப் பற்றியபடி
முன் இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்
பின் பக்கமிருந்து பாட்டியின்
அழுகுரல் கேட்கிறது
“எம் புள்ளைகள தகப்பனில்லாத
அனாதைகளாக்கிட்டு போயிட்டீங்களே”
Driver கூடப் புலம்புகிறார்
“நீங்க அழுதுட்டீங்க
என்னால உள்ளயும் சொல்ல முடியல
வெளியவும் சொல்ல முடியல சார்”
முந்தின தினம் மருத்துவமனையில்
நிகழ்ந்தவை நினைவிற்கு வருகின்றன
தங்கை Car-இல் இருந்து இறங்குகிறாள்
என்னை நோக்கித் திரும்புகிறாள்
“அண்ணா … அண்ணா …
அப்பாவுக்கு என்ன ஆச்சு அண்ணா …
அண்ணா அப்பா எங்கே அண்ணா …”
ஆறுதலுமில்லாமல் மாறுதலுமில்லாமல் நான்
“இனிமேல அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது”
“அண்ணா … அண்ணா … Please … Please …
இப்படியெல்லாம் சொல்லாதீங்க அண்ணா …
ஆண்டவா அப்பாவுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது”
“Office-லையே நேர்மையானவர்னு பேரெடுத்தவருங்க”
“எங்கே போனாலும் நடந்தே சலிப்பாரு”
சித்தியின் தேம்பல் நெஞ்சை அறுக்கிறது
“என் தம்பி கல்யாணத்துல இப்படி ஆகியிருச்சே … ஐயோ …”

‘அமைதியைக் கலைக்காமல் தத்துவத்தை போதிப்பது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை’
– ஸ்பினோஸா

உயிரோசை
06.10.2008
Issue No. – 6​

ooOoo

இதுவரை நீங்கள் எழுதிய கவிதைகளை எப்படி பார்க்கிறீர்கள்? இனி எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்ள விரும்புகிறீர்கள்?

இந்தக் கவிதையை விளக்கத் தேவையில்லை. இதன் சோகம் உடனடியாகப் புரிந்துவிடுகிறது. இப்படிப்பட்ட கவிதைகளே விரிந்த வாசகர் பரப்பை உருவாக்குகின்றன.

“-[மைனஸ் ஒன்]1” கவிதைத் தொகுதியில், பகடி, தத்துவம், ஹைக்கூ, விஞ்ஞானப் புனைவு, அதீதக் கற்பனை, படிமம், குறியீடு, முரண் நகை, இருண்மை என பலதரப்பட்ட வடிவங்களை முயற்சித்திருக்கிறேன். லிமரிக் மற்றும் வெண்பாக்கள் தான் அதில் இல்லை. புதிர் தன்மை கொண்ட அரூப வடிவிலான இருண்மைக் கவிதைகளின் வசீகரம் என்னை எப்போதும் கவர்ந்ததாகவே இருக்கிறது. ஆனாலும் எளிமையாக, உடனடிப் புரிதலுடன், நேரடி உரையாடல் வகையிலான கவிதைகளையே இப்போது அதிகம் எழுத விரும்புகிறேன். கவிதையின் அடுத்த கட்டம் என்பது ஒரு நீண்ட கட்டுரைக்கான விஷயம். சுயகழிவிரக்க வார்த்தைகளைத் தவிர்க்க இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

கவியின் கண்- மகத்தான காதல்

 எஸ். சுரேஷ்

அவளுக்கு வயது அறுபது. தன் வாழ்வின்
மகத்தான காதலை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

தன் நேசத்துக்குரியவன் கைகோர்த்துச் செல்கிறாள்.
காற்றில் ஆடுகிறது அவளது கேசம்.
அவளை நேசிப்பவன் சொல்கிறான்::
“உன் முடி முத்து போல் இருக்கின்றது:”.

:முட்டாள் கிழம்”
என்கின்றனர் அவள் பிள்ளைகள்.

– அன்னா ஸ்விர்ஸ்டின்ஸ்கஹா  

இதே தொடரில், முதியோரின் பிரச்சினைகள் பற்றி எழுதியபோது, இது குறித்து இன்னும் பேச வேண்டியிருக்கிறது என்றார் நண்பர் ஸ்ரீதர்.

முதுமையை வேறொரு கோணத்தில் இப்போது பார்க்கலாம் – இந்தக் கவிதை அதற்கொரு நல்ல அறிமுகம்.

முதுமை, அல்லது மத்திய பருவத்தின் பின்காலம் (இதற்கொரு சொல் உண்டா என்ன?), உன்னை தனிமை தொடரும் பருவம். நகர்ப்புறச் சூழலில்தான் இதைச் சொல்கிறேன், கிராமங்களின் கதை வேறு. (more…)

நவீனத்துவம், மாயம், புனைபடுதல் – 2

(சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சில சுதந்திரங்கள் எடுத்துக்கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை இது. கலைச்சொற்களின் தமிழாக்கமும் நம்பத்தகுந்ததாய் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பிழை எது, சரி எது என்பதை சுயமாய்ச் சிந்தித்தறிய தூண்டுதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மட்டுமே இந்த மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. விஷயத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள விரும்புபவர்கள், Michael Saler எழுதிய மூலக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம் )

இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதி இங்கே – இப்படி முடிந்திருந்தது.

(நவீனத்துவம் மற்றும் மாயம் குறித்து நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் சொல்லாடல் விருப்பு வெறுப்பற்ற கதை கூறலல்ல, அது மதிப்பீடுகளை முன்வைக்கிறது. மாயமகற்றல் என்பது சமயமின்மைக்குச் சமமாகிறது, அதிருப்திக்கும் இணையாகிறது. இந்தச் சொல்லாடல், உலகின் மாயமின்மையை விவரிப்பதோடு உலகின் வசீகரமின்மையையும் ஒப்புக்கொள்கிறது. உண்மையில், பத்தொன்பதாம் நூற்றாண்டில், ‘disenchantment’ என்ற ஆங்கிலச் சொல் பெரும்பாலும் ‘பண்பாட்டு அவநம்பிக்கை’யின் இணைச்சொல்லாக இருந்து வந்தது. ஆர்தர் ஷோபன்ஹார் மற்றும் அவரது மாணவர்கள் அறிவுலகில் இத்தரப்பை முன்வைத்தனர்.

உதாரணத்துக்கு, 1885ஆம் ஆண்டு எட்கார் சால்டஸ் எழுதிய, The Philosophy of Disenchantment என்ற நூல், சமயசார்பின்மையின் வரலாற்றை விவரிக்கவில்லை, மாறாய் சமகால பண்பாட்டு அவநம்பிக்கையின் வரலாறாகவே இருந்தது, வெபரின் entzauberung (“removal of magic”) என்ற சொல், ஆங்கிலத்தில் ‘மாயம் அகற்றல்’ என்று மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாய், disenchantment என்று மொழிபெயர்க்கப்பட்டபோது, ஏற்கனவே நிலவி வரும் பண்பாட்டு அவநம்பிக்கையின் சாயல்கள் வெபரின் கருத்துக்கு அளிக்கப்பட்டன.)

இனி- (more…)