எழுத்து

நான் இப்பொழுது குடிக்கும் பியர்

நந்தா குமாரன்

உள்ளங்கையில் துள்ளும் கடல் மீது
ததும்பும் நார்சிசப் பிம்பம்
அந்த காலத்தில் பேய்கள் இருந்தன
என்றது
பேயோட்டிய பின்
போய் அமர்ந்த private beach கடற்கரை மணலில்
நட்ட பீர் பாட்டிலை
சைத்தானென்று
நாலு mug குடித்த பின்னும்
நான் இப்பொழுது குடிக்கும் பியர்
பிதுங்கும் கோப்பையில் விழுகிறது
கை நீட்டி உணர்ந்த மழை
ஊதித் தள்ளிய பியர் நுரை
கலக்கிறது கடல் நுரையுடன்
மழை மீது பெய்யும் மழை
கடல் மீதும் பெய்கிறது
என் மீதும் பெய்கிறது
கோபம் வீணடிக்கும்
அன்பின் வழி வந்த வெப்பம்
மேலே எழுந்தது
மஹாஜனங்களின் மீது
மழையாகிப் பொழிந்தது

கவிதை மொழியைப் புதுப்பிக்கிறது என்று சொல்லப்படுவது உண்டு, அனுபவங்களைப் புதுப்பிக்கிறது என்றும் சொல்லப்படுவது உண்டு. நீங்கள் கவிதை எழுதும் கணங்களில் எது புதுப்பிக்கப்படுகிறது என்று உணர்கிறீர்கள்?​

இரண்டுமேதான். உதாரணம், “நான் இப்பொழுது குடிக்கும் பியர்” கவிதை. சமாதானமும் அன்பும் தான் இந்தக் கவிதையின் உட்பொருள் … போதை அல்ல. “மழை மீது பெய்யும் மழை” என்ற வரி ஒரு புதிய கவனிப்பை முன் வைக்கிறது … அதன் மூலம் மழை எனும் அனுபவத்தை விஸ்தரிக்கிறது. அனுபவம் எல்லோருக்கும் எப்போதுமே ஒரே மாதிரி இல்லாமல் போவதற்குக் காரணம் – அது விழிப்புணர்வு சார்ந்தது என்பதால் தான். அதாவது ஒருவரின் விழிப்புணர்வு சார்ந்து ஒரு அனுபவம் தனித்துவம் நிறைந்ததாக மாறுகிறது. அதனால் தான் ஒரு சூரியோதயமும் சூரியாஸ்தமனமும் கூட வேறு வேறு மனிதர்களுக்கு வேறு வேறு உணர்வுகளை கிளர்த்திச் செல்கின்றன. கவிதைகளும் கூட இதனாலேயே உங்களுக்கு ஒரு அர்த்தமும் எனக்கு ஒரு அர்த்தமும் தருகின்றன. இதற்கு மொழியும் ஒரு முக்கிய காரணி என்பதை விளக்க வேண்டியதில்லை. ஒரு ஓவியத்திற்கும் இசைக்கும் இதே சக்தி இருப்பதை உணரலாம். ஆனால் நான் சொல்லும் இந்த சக்தி அதைப் பார்க்கும் கேட்கும் மனிதரின் மனதில் இருக்கிறது. இந்த விழிப்புணர்வு (கவனியுங்கள் நான் அறிவு என்று சொல்லவில்லை) இல்லாவிடில் அப்புறம் அனுபவத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.

“மழை மீது பெய்யும் மழை” என்ற வரி அதுவரை எழுதப்படாதது என நினைக்கிறேன். ஒரு பிரபல கவிஞரின் சமீபத்திய முகநூல் கவிதை ஒன்றில் இதே வரியைப் பார்த்தேன். யாரும் சுலபமாக சிந்திக்கக் கூடிய வரி தான் இது என்றாலும், இது காட்டும் அனுபவம் புதிது. கவிதை என்பது ஒரு அனுபவத் தீவு என்று பார்த்தோம். ஆனால் இதற்கு மொழியின் பங்கு மிக முக்கியமானது. திரி தூண்டப்பட்டாலொழிய ஜோதி எரிந்து சுடராது.

பாரின் ரிட்டர்ன் – ராண்டோ

(பிரபல மொழிபெயர்ப்பாளர் திரு கல்யாணராமன் அவர்களின் அவதானிப்பைத் தொடர்ந்து 26.11.2014 அன்று, சங்கப் பாடல் மற்றும் ஏ கே ராமானுஜன் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை இணைத்து இப்பதிவு திருத்தப்பட்டது)

ஏ கே ராமானுஜம் செய்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்புகள், இடைவெளிகளுக்கு முக்கியத்துவம் தருபவை, அவற்றின் உணர்வுச் செறிவில் மௌனத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால், மூல மொழியில் உள்ளதையும் மொழிபெயர்ப்பில் உள்ளதையும் ஒப்பிட்டு நோக்கும்போது, சில விடுபடல்கள் கேள்விக்குறியனவாகத் தெரிகின்றன, தமிழறியாத ஒருவர் ஆங்கிலச் சொற்களை மட்டுமே கொண்டு அடையக்கூடிய பொருள், தமிழில் உள்ளதற்கு இணையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு சோதனை முயற்சியாக, ஏ கே ராமானுஜனின் ஆங்கிலக் கவிதைகளை நெருக்கமாக ஒட்டி, அவர் மொழிபெயர்த்த சில சங்கப் பாடல்களின் தமிழாக்கம் இங்கு அளிக்கப்படுகிறது. சரி தவறுகளுக்கு அப்பால், ஏ கே ராமானுஜனின் மொழிபெயர்ப்பை மீண்டும் வாசிக்கச் செய்ததெனில், இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம்.

கௌவை யஞ்சிற் காம மெய்க்கும்
எள்ளற விடினே யுள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை யொசிய லற்றே
கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே.

Look, friend,
fear of scandal will, only thin out passion.
And if I should just give up my love
to end this dirty talk,
I will be left only with my shame.

My virgin self of which he partook
is now like a branch half broken
by an elephant,
bent, not yet fallen to the ground,
still attached to the mother tree 
by the fiber of its bark.

கேள், தோழி,
பழிச்சொல் பயம், காமத்தை குறைக்கத்தான் செய்கிறது.
என் காதலை விட்டுக் கொடுத்தாலாவது
இந்த இழிபேச்சை நிறுத்தலாம் என்றால்,
எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சும்.

அவன் கொண்ட என் பெண்மை
பெரும் களிற்றால்,
பாதி முறிந்த கிளைபோல
வளைந்து, ஆனால் மண்ணில் விழாது,
அதன் பட்டையின் நாரால்
இன்னமும் தாய்மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீதர் நாராயணன் (“Fear of Scandal” ) (more…)

டேவிட் மிட்சல்

The Bone Clocks அல்லது Cloud Atlas போன்ற நாவல்கள், ஓரளவுக்காவது கதைசொல்லும் கட்டமைப்பில் தேர்ச்சியைக் கோருவதாகக் கருதுகிறீர்களா? – வெவ்வேறு கதையாடல்களை ஒன்றோடொன்று இணைப்பது, காலத் தாவல்கள், நினைவுகூரல்கள், இது போன்றவை. உங்கள் நாவல்களின் இறுதி வடிவம் உருவம் பெறும்வரை நீங்கள் எத்தனை வரைவு வடிவங்களைத் திருத்தி எழுத வேண்டியிருக்கிறது?

முதலில் சோதனை முயற்சியாகத் துவக்கப்படும் வரைவு வடிவத்துக்கும் முடிவில் புத்தகமாகப் பதிப்பிப்படும் இறுதி வடிவத்துக்கும் உள்ள உறவு, ஒரு கிறுக்கலுக்கும் ஆயில் பெயிண்டிங்குக்கும் உள்ளது போன்றது, ஆனால் எதையும் துவக்குவதற்கு ஏதோ ஒரு இடம் தேவைப்படுகிறது. முதலில் கலங்கலான, சாதாரணமான, துல்லியமற்ற, கச்சிதமற்ற ஏதோ ஒன்று தோன்றுகிறது. இந்த நாவலில் எத்தனை பகுதிகள் இருக்கப் போகிறது என்பது பற்றிய ஒரு எண்ணம் அப்போது கிடைக்கிறது – நாவலை, பகுதிகளாகப் பிரித்துக் கொண்டாக வேண்டும்- இந்த நாவலில் ஆறு.

என்னென்ன பகுதிகள் இருக்கப் போகின்றன என்பது தெரிந்ததும், மீனின் எலும்புக்கூடு போன்ற ஒரு படம் போடுகிறேன், நேராக ஒரு பக்கவாட்டுக் கோடு, அதன் இரு புறங்களிலும் கைகள் மாதிரி கோடுகள். அதன்பின் ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு ஐடியாவாக எழுதிக் கொண்டு வருகிறேன். அடிப்படையில் ஒவ்வொரு கையும் ஒரு காட்சி. இப்படிச் செய்யும்போது, என்னென்ன காட்சிகள் இருக்கின்றன என்பது தனித்தனியாகவும் தெரிகிறது, சரியான வரிசையிலும் தெரிகிறது. இந்தக் கைகளிலிருந்து பிற கோடுகள் கிளைக்கலாம்- பார்ப்பதற்கு நிறைய முடி முளைத்திருப்பது போல் தெரியும்- அதன்பின், ஒரு திசையில், ஏதோ ஒரு திசையில் உரையாடல் எழுத ஆரம்பிக்கிறேன், அதற்குக் கீழே இடம் இருந்தால், அங்கு இன்னொன்று எழுதுகிறேன்- என்ன செய்வது என்று தெரியாதபோது, நான் அங்கே ஒரு பாத்திரத்தின் முகம் கூட வரையக்கூடும்.

என் எழுத்தின் வரைவு வடிவம் இப்படிதான் இருக்கிறது. நான் எழுதி முடிப்பது இதையொட்டி இருக்கலாம், அல்லது மாறுபடலாம், ஆனால் எப்படி பார்த்தாலும் வெறுமையை வைத்துக் கொண்டு திண்டாடுவதில்லை. வெற்றுத்திரைதான் எதிரி. ஒன்றுமில்லாத இடத்தில் எதையும் மேம்படுத்த முடியாது. ஏதோ ஒன்று இருந்தால்தான் மேம்படுத்த முடியும், அது எவ்வளவு மோசமாக, துண்டு துண்டாக, அரைகுறையாக இருந்தாலும பரவாயில்லை. ஏதோ ஒன்று கிடைத்துவிட்டபின், வேலை செய்யத் துவங்கலாம் (more…)

மாடர்ன் லவ் ஸ்டோரி

எஸ். சுரேஷ்

“இன்னிக்கி ராகுல் என்கிட்டே ‘ஐ லவ் யூ ’ சொன்னான்” என்றாள் வர்ஷிதா

“அவனுமா?” என்றேன் நான். “நீ என்ன சொன்ன?”

“சாரி சொன்னேன். ‘உன்ன நான் ரிஜெக்ட் பண்ணல. நீ சொன்னத ரிஜெக்ட் பண்றேன்’ன்னு சொன்னேன்”

“ஆஹா. இவங்க எல்லாரும் சேந்து உன்ன ஒரு தத்துவஞானி ஆக்கிடுவாங்க போல இருக்கு” என்று சொல்லிவிட்டு சிரித்தேன். “இந்த ஆபிஸ் சேர்ந்தப்புறம் இது என்ன மூணாவது பிரபோஸலா? நீ எங்கயோ போற போ”

“சும்மா கிண்டல் பண்ணாதடா. வெறுப்பா இருக்கு. ஒரு ரெண்டு நாள் சிரிச்சு பழகினா போதும் பிரபோஸல்லோட வந்துடறாங்க”

வர்ஷிதாவும் நானும் சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். எங்களுக்குள் காதல் மலராது என்று சொல்லாமலே இருவருக்கும் தெரிந்து விட்டது. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவளுக்கு நான்தான் முக்கியமான நண்பன். நடக்கும் எல்லா விஷயங்களையும் என்னிடம் கூறுவாள்.

“சரி விடு. அரசியல்ல இதெல்லாம் சகஜம்தான். வேற என்ன விஷயம்?” (more…)

David Mitchell – நாவல் வடிவங்கள்/ வகைமைகளைக் கடந்து செல்லும் கதைசொல்லி

அஜய் ஆர்

அறிவியல்/ குற்ற/ அதிபுனைவுகளை ழானர் எழுத்து என்று வகைப்படுத்தி, அவற்றை இலக்கியப் புனைவுகளிடம் இருந்து வேறுபடுத்தக் கூடாது என்றும், எந்தப் புனைவாக இருந்தாலும் அதன் தரம் மட்டுமே அதற்கான இடத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் பேசும் குரல்கள் பல காலமாக இருந்து வந்துள்ளன என்றாலும், இது குறித்த விவாதங்கள் சமீபத்தில் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.. Guardian இதழில் இது குறித்து இந்த வருடம் நடந்த தொடர் விவாதங்களின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.

ழானர்- இலக்கிய எழுத்துக்கள் என்ற வேறுபாடு இன்னும் தொடர்ந்தாலும், இலக்கியப் படைப்பாளிகள் என்றழைக்கப்படுபவர்களில் சிலர் ழானர் எழுத்துக்களை சாதகமாகவே பார்க்கிறார்கள். “I lament what I take to be a trend against the genres. It might well be agreed that the best of serious fiction, so to call it, is better than anything any genre can offer. But this best is horribly rare, and a clumsy dissection of the heart is so much worse than boring as to be painful, and most contemporary novels are like spy novels with no spies or crime novels with no crimes, and John D. MacDonald is by any standards a better writer than Saul Bellow, only MacDonald writes thrillers and Bellow is a human-heart chap, so guess who wears the top-grade laurels?” என்கிறார் Kingsley Amis. (more…)