எழுத்து

காமமோ பெரிது?

எஸ். சுரேஷ்

‘சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவ சிறிது காமமோ பெரிதே”
தூக்கம் வராமல்
புலம்பிக் கொண்டிருந்தாள்
சங்க நாயகி
“அம்மா தாயே, கொஞ்சம் வாயை மூடறையா,
உன் குரல் கேட்டு ஒரு எலிகூட வெளியில வரல”
கூரை மேல் அமர்ந்திருந்த ஆந்தை
அவளைக் கடிந்து கொண்டது
“உன் காம நோயோ பெரிது ஆனால்
என் வயிற்றுப் பசி அதைவிடப் பெரிது”

முயலும் ஆமையும்

எஸ். சுரேஷ்

மாலையுடன் பினிஷ் லைனில்
சீப் கெஸ்ட் காத்திருக்க
துப்பாக்கி சப்தம் கேட்டு
புல்லெட் வேகத்தில் புறப்பட்டது முயல்

தகிக்கும் வெயிலில், வறண்ட காட்டுக்குள்
ஓடிக்கொண்டிருந்தது

தாகம் எடுக்க, சிறு குட்டையில் தேங்கியிருந்த
நீரைக் குடித்து, மரநிழலில் படுத்து தூங்கிவிட்டது

அடிமேல் அடிவைத்து வந்த ஆமை
தூங்கிக்கொண்டிருந்த முயலின் வாலைக் கடித்தது

“அம்மா” என்று அலறி எழுந்த முயல் வேகமாக ஓட
தண்ணீரை குடித்துவிட்டு மரநிழலில் தூங்கியது ஆமை

கவியின் கண்- மேலாண்மைப் பண்புகள்

ஆன்மாக்களைக் காத்தல்
                          — டெனிஸ் லேவர்டாவ்
 
துக்கங்களுக்கும் கனவுகளுக்கும்
பொறுப்பேற்றுக் கொண்டவன்
 
அடுத்த வயல் நோக்கி
மிகக் கவனமாக.
 
தன் மந்தையைச் செலுத்துகிறான்.
கோவில் மணியோசை
 
கேட்டு விட்டான்.
ஆனால் ஆடுகள்
 
புல்லுக்குப் பசித்திருக்கின்றன,
இன்றும் ஒவ்வொரு நாளும்.
 
அவனது பொறுமை, அழகியது. 
நீண்ட அவன் நிழலும், 
 
சமவெளியூடே. மந்தைகள் 
அலையலையாய்ச் செல்லும் 
 
ஓசையும்.
 
௦௦௦
 
‘தலைமைத் திறன்கள்’: நிர்வாகத்துறையில் இருப்பவர்கள் இந்தச் சொற்களைப் பல முறை கேட்டிருப்பார்கள்.  அதிலும் குறிப்பாக, உங்களுக்கு ஐடீ துறையில் அனுபவமிருந்தால் இவை மிகவும் பழக்கப்பட்டுப்போன சொற்களாய் இருக்கும். முன்னெல்லாம், தலைமைப் பதவியில் மிகக் குறைவானவர்கள்தான் இருப்பார்கள்- ஆனால் இப்போது, அதிலும் குறிப்பாக தகவல்தொழில்நுட்பத் துறை, அனைவரும் தலைமைப் பதவிக்குத் தயாராக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தலைமைக்குரிய பண்புகளை உருவாக்கிக் கொண்டாக வேண்டியிருக்கிறது. முன்னெல்லாம், ஒரு பணியில் பத்தாண்டுகள் நிலைத்திருந்தால், குமாஸ்தாவாக வேலைக்கு வந்தவன் படிப்படியாக முன்னேறி தலைமை குமாஸ்தா இருக்கையில் அமர்வான். ஓய்வு பெறுவதற்கு முன் ஜெனரல் மானேஜராகவோ அடிஷனல் ஜெனரல் மானேஜராகவோ இருந்தால் அது ஒரு மகத்தான சாதனையாக இருக்கும். வைஸ் பிரசிடண்ட் ஆவதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. சீப் மானேஜிங் டைரக்டர்கள் வேற்று உலகத்திலிருந்து வந்தவர்கள்.

(more…)

கவிதை வாசிப்பு மனநிலை

நந்தா குமாரன்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னிதிக்கு, சுகப்பிரசவ வேண்டுதல் நிறைவேற்றும் பொருட்டு வாழைத்தார் படைக்க, 2009இல் குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்பொழுது இந்தக் கவிதையின் தலைப்பும் சில வரிகளும் (மழைஉளி செதுக்கிய மேகவிக்ரஹ பிரதிஷ்டை) தோன்றின. பின் பெங்களூர் திரும்பியதும் கவிதையை முழுவதுமாக எழுதி முடித்தேன். இந்தக் கவிதையின் அடிநாதம் பிறப்பு / படைப்பு / ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குப் போவது, என்பதெல்லாம் சொல்லாமலே புரியும் என நினைக்கிறேன்.

nundhaa2

கேள்வி – “கவிதை வாசிக்கப் பழகும் புதுவாசகன் மேற்கொள்ள வேண்டிய மனநிலை எத்தகையதாக இருப்பது நல்லது?
உங்கள் கவிதையை அணுகுவது / புரிந்து கொள்வது எப்படி என நாசூக்காகக் கேட்கிறீர்கள். இது குறித்துப் பேசும் முன் …

-[மைனஸ் ஒன்]1: விடுபட்ட முன்னுரை

கொந்தளிப்பிற்குச் சற்று முன் அணைக்கப்படும் எரிமலைக் குழம்பைத் தேநீராகப் பருகும் உதாசீனத்தையும், எல்லோரும் உறங்கிய பிறகு கிடைக்கும் தனிமையான அமைதியின் நிம்மதியையும், சதா கொண்டாட்டத்தின் மீதே மிதக்க விரும்பும் உயிரின் ஏக்கத்தையும், வெளிப்படுத்தும் இக்கவிதைகளின் வாசகர் படைத்தவரல்லாது வேறொருவர் என்றாகும் போது அந்தப் புதிய வாசகருக்கு இந்த மொழி-நடை சிக்கலாகவும் அதனாலேயே சவாலாகவும் அமைந்துவிடுகிறது. வாசகர் வேண்டிய அர்தத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை அளிக்கும் இக்கவிதைகள் நுண்புல நிலையில் இயங்குகின்றன. பலவகைப்பட்ட கவிதைகளையும் பரீட்சார்த்த ரீதியில் அணுகிப் பார்க்கும் இந்தப் பயணத்தில் பங்கு கொள்வதும் வெறுமனே வேடிக்கை பார்ப்பதும் அவரவர் விருப்பம். இவற்றின் மர்மங்களைத் திறக்கும் சாவிகளை வாசகரே தயாரித்துக் கொள்ளலாம். புனைவின் சுதந்திர வெளியை முழுவதும் அளந்து காட்ட முயலும் இக்கவிதைகள் படிமங்களாலும் கற்பனைகளாலும் ஒரு விநோத உலகின் இருப்பை உருவாக்கி அதை சாத்தியப்படுத்த வாசகரின் புத்தி பரிமாணத்தைச் சார்ந்து கிடக்கின்றன. ஒரு சித்திரமோ ஒளிப்படமோ முற்றிலும் வெளிப்படுத்தாமல் விடும் அதே ரகசிய அனுபவங்களை அமானுஷ்யமாகவோ அரூபமாகவோ இக்கவிதைகள் தருகின்றன; கனவில் நகரும் பிம்பங்களையும் பிரதியெடுத்துவிடுகின்றன.

கவிதைகளே பரவாயில்லை … சும்மா பயம் காட்டாதே என்கிறீர்களா … எனக்கே சற்று கூடுதலாகத் தான் தெரிந்தது, அதனால் தான் முன்னுரை வேண்டாம் என விட்டேன். இருண்மையான கவிதைகளை வாசிக்க எனக்குத் தெரிந்த ஒரு சூத்திரம் – புரிந்து கொள்வது என்பதை ஒரு நோக்கமாகக் கொண்டு அணுகாமல் அனுபவித்தல் என்ற திறந்த மனதோடு அணுக வேண்டும். சுயபரிசோதனை மற்றும் நினைவுகூறல் என்ற இரு முறைகளில் கவிதைகள் எழுதப்படலாம். நினைவுகூறல் வகைக் கவிதைகளில் ஒரு வாசகர் தன்னைத் தேடிக் கண்டடைவது எளிது … ஏனெனில் அவை வாசகரின் வாழ்வு மற்றும் அனுபவங்களை ஒரு ஏக்கமான நினைவாக மீட்டுத் தரும். ஆனால் சுயபரிசோதனை வகைக் கவிதைகள் கவிஞரின் அல்லது கவிதையின் பாடுபொருளின் உட்புற அகக் காட்சிகளாக விரிபவை. அவ்வகைக் கவிதைகள் முதல் முறை வாசகரை ஒரே வாசிப்பில் உடனடியாகத் தூண்டிவிடத் தவறலாம். ஆனால் தேர்ந்த வாசகர் இது தெரிந்து தான் இதற்குத் துணிந்து தான் உள்ளே வருவார். நேரடித் தன்மை கொண்ட கவிதைகளின் அழைப்பு விடுத்தல் பாணி, அரூபக் கவிதைகளில் குறைவு தான். கதவு சாத்தித் தான் இருக்கும், திறந்து கொண்டு தான் உள்ளே போக வேண்டும். வாசல் கதவைத் திறந்த வைத்து வாங்க வாங்க என்று எல்லாக் கவிதைகளும் சொல்லாது தான். ஆனால் நட்புணர்வோடு உங்களை அணுகும் பல கவிதைகளை இந்த மைனஸ் ஒன் தொகுப்பிலேயே காண முடியும். முற்றும் விளங்க வேண்டும் என முயற்சிக்கத் தேவையில்லை. ஒரு அளவிற்கு மேல் புரிந்து கொள்ள முயல்வது கட்டுடைத்துப் பார்ப்பது தேவையில்லை. புரிதலை எங்கே நிறுத்த வேண்டும் என்ற தெரிவு ஒரு வகை புத்திசாலித்தனமே. கவிஞர் சொல்வதைத் தான் வாசகர் புரிந்து கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமுமில்லை. தவறாகக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் என்னை வந்து கேட்டால் அது அப்படி இல்லை அல்லது அப்படியும் இருக்கலாம் என்று நான் மையமாக மறுத்துவிடவும் கூடும்.

என் பரிந்துரையாக தமிழ் நவீன கவிதைகள், கவிஞர்களின் வகைமைகள், வாசிப்பு முறைகள் குறித்து விவாதிக்கும் / விவரிக்கும் பின்வரும் உரைகளை வாசித்துப் பார்க்கலாம்:

1) உலகெல்லாம் சூரியன் – கலாப்ரியா – கவிதைத் தொகுதிக்கு சுஜாதா எழுதிய முன்னுரை
2) தோற்றப் பிழை – யுவன் சந்திரசேகர் (எம்.யுவன்) – கவிதைத் தொகுதிக்கு யுவன் சந்திரசேகர் எழுதிய கவிதை புரியும் கணம் முன்னுரை –http://jyovramsundar.blogspot.in/2010/02/blog-post_22.html
3) அதீதனின் இதிகாசம் – பிரேம் ரமேஷ் – புத்தகத் தொகுதிக்கு யவனிகா ஶ்ரீராம் எழுதிய முன்னுரை
4) ஜென்மயில் – பிரம்மராஜன் – கவிதைத் தொகுதிக்கு ஆனந்த் எழுதிய முன்னுரை
5) கவிதைக்காக – ஞானக்கூத்தன்
6) கலாச்சாரம்: அ-கலாச்சாரம்: எதிர்-கலாச்சாரம் – நாகார்ஜீனன்
7) வார்த்தையின் ரஸவாதம் – பிரம்மராஜன்
8) பிரம்மராஜன் கவிதைகள் – நகுலன் http://www.thenkoodu.in/manage_blogs.php?blogid=27301&url=azhiyasudargal.blogspot.com/2012/06/blog-post_23.html

நான்கு கன்னட கவிகள் – ராண்டோ

ஒரு சோதனை முயற்சியாக, மூல மொழியைக் கருதாமல்,  திரு ஏ கே ராமானுஜன் அவர்களின் Speaking of Shiva என்ற தொகுப்பில் உள்ள  ஆங்கில மொழிபெயர்ப்புகள் தமிழாக்கம் செய்யப்படுகின்றன – கலவை விளைவுகளுடன்!

 

கால்களாய்
ஓடும் ஆறு.
வாய்களாய்
தகனிக்கும் நெருப்பு.
கைகளாய்
வருடும் தென்றல்.

அடியார்க்கு

குறியீடுளாய் விரிகிறது
முழைஞ்சுறை பெருமானின்
அவயவம்.
(அல்லம பிரபு)
 .
 .

(more…)