எழுத்து

திரும்பப்பெறுதல்

Frigyes Karinthy

ஃப்ரிக்ஸ் கேரிந்தி (Frigyes Karinthy) ஹங்கேரிய எழுத்தாளர். ஜோனதான் ஸ்விஃப்ட், ஹெய்ன்ரிச் ஹெய்ன் மற்றும் மார்க் ட்வைன் போன்றோரின் எழுத்துகளை நவீன ஹங்கேரிக்கு மொழிமாற்றம் செய்ததன் மூலமாக அங்கதத்தை ஹங்கேரிக்கு கொண்டு வந்தவர். எல்லா தரப்பு வாசகர்களுக்குமான எழுத்தை கொண்டவர்.

Refund (கல்விக்கட்டணத்தை திருப்புதல்) அங்கத ஓரங்க நாடகம். பழைய மாணவனொருவன் தான் பயின்ற பள்ளிக்கூடத்திற்கு திரும்பி வந்து நிகழ்த்தும் கூத்துகளும், அதற்கு பதிலடியாக ஆசிரியர்களின் திட்டங்களுமாக, முடிவில் எவர் வென்றார் என்று ஆவலுடன் எதிர்நோக்க வைக்கும் நாடகம்.

(தமிழாக்கம்: ஸ்ரீதர் நாராயணன்)

ஒரு மேல்நிலைப் பள்ளியில், முதல்வர் (Principal) தன்னுடைய அலுவலகத்தில் தட்டையான மேஜை முன் அமர்ந்திருக்கிறார். ஒரு பணியாள் நுழைகிறார்.

முத:- என்ன விஷயம்?

பணி:- வெளியே ஓராள் ஐயா. உங்களைப் பார்க்க வேண்டுமாம்.

முத [பின்னால் சாய்ந்ந்துகொண்டு நெட்டி முறித்தவாறு]:- நான் அலுவலக நேரத்தில் மட்டுமே பெற்றோர்களை பார்ப்பேன். அந்த குறிப்பிட்ட அலுவல் நேரம் அறிவிப்பு பலகையில் போட்டிருக்கிறது. அவரிடம் அதை சொல்லு.

பணி:- ஆமாம் ஐயா. ஆமாம் ஐயா. ஆனால் இவர் பெற்றோர் இல்லை ஐயா.

முத:- மாணவரா?

பணி:- அப்படியில்லை என்று நினைக்கிறேன். அவருக்கு தாடியெல்லாம் இருக்கிறது. (more…)

Z – கனவில் நடிக்க ஆள் தேவை.

றியாஸ் குரானா

 

நாங்கள் வந்து பார்த்ததிலிருந்து,
கனவுக்குள்ளே அதிக நேரம் காத்திருக்கிறார்
மிகத் தொலைவுக்கு அப்பால்
மீண்டும் அந்த தெரு தொடங்கலாம்
கீழே தண்ணீர்
வேறு எதுவும் அங்கில்லை
கூப்பிட்டேன்
கனவிலிருந்து திரும்பி வருகிறார்.
கனவில் வந்தவர்,
உங்கள் அனைத்துக் கனவிலும்
தானே நடிக்க விரும்புவதாகவும்
அனுமதி தரும்படியும் கேட்டுக்கொண்டார்
பிறகு அவரோடு பேச இருக்கிறேன்.

கனவில் நடிக்க ஆள் தேவை.

ஒரேயொரு நிபந்தனை
இதற்கு முன் நடித்த கனவுகளில்
ஏதாவதொன்றை
நடித்துக் காட்ட வேண்டும்.
அதுவும், பெண்ணின் கனவு என்றால்
முன்னுரிமை வழங்கப்படும்.

நடுவர்களாக இருப்பவர்களை
விரைவில் அறிவிப்பேன்.

நடுவர்கள் தேவை.

 

கவியின் கண் – “மரணத்தைப் பற்றி, மிகையின்றி”

 எஸ். சுரேஷ் –

மரணத்தைப் பற்றி, மிகையின்றி

நகைச்சுவை புரியாது,
நட்சத்திரத்தைக் கண்டெடுக்கத் தெரியாது,
பாலம் கட்ட முடியாது.
வலை பின்னவோ, சுரங்கம் வெட்டவோ,
வயல் உழவோ, கப்பல் கட்டவோ,
கேக் ஒன்றை பேக் செய்யவோ தெரியாது.

நாளைக்கான நம் திட்டத்தில்
அது முடிவாய்ச் சொல்வதே சட்டம்,
ஆனால் இதைப் பேசி ஒரு பயனுமில்லை

தன் வேலை நிமித்தமாய்
ஒரு காரியத்தையும் செய்து கொள்ளத் தெரியாது:
இடுகுழி வெட்டவோ,
கல்லறைப் பெட்டி செய்யவோ,
தனக்கப்புறம் துடைத்துக் கொடுக்கவோ,
அதனால் முடியாது.

கொலைத்தொழில் ஒன்றே நினைப்பாய் இருந்தாலும்
தன் வேலையை உருப்படியாய்ச் செய்வதில்லை,
நாம் ஒவ்வொருத்தரும்தான் அதன் முதல் பலி போல்
ஒரு ஒழுங்குமுறை கிடையாது, ஒரு திறமை இல்லை

அதற்கும் வெற்றிகள் உண்டே,
ஆனால் அதன் எண்ணற்ற தோல்விகளைப் பாருங்கள்,
குறி தவறிய அடிகள்
திரும்பத் திரும்ப எத்தனை முயற்சிகள்! (more…)

குரு வணக்கம்

 எஸ். சுரேஷ் –

ஒரு கையில் கல்லும் மறு கையில் மைக்குமாய்
சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தவனை நோக்கி,
அந்த பக்கம் வந்த குள்ள நரி,
“வணக்கம் வாத்யாரே. நல்லா கீரியா?
ஆசிரியர் தின வாழ்த்துகள். வர்ட்டா?”
என்று கேட்டுச் சென்றது.
“பாருடா, ஓல்ட் ஸ்டுடென்ட்ஸ் எல்லாம்
என்னை இன்னாமா ஞாபகம் வச்சிக்கினுகுறாங்கோ”
என்று கண்கள் கலங்க, நாத்தழுதழுக்க கூறினான்
அந்தப் பேச்சாளன்.

வயசுக்கோளாறு

நான் பஸ் ஏறியவுடன் அவள் பார்த்த அரை நொடிப் பார்வை
இதயத்திற்கு ஒத்தடம் கொடுத்தது போல் இருந்தது

வட்டமான வெள்ளை முகம், கரிய அடர்த்தியான கூந்தல்,
சிவப்பு நிற சுடிதார் மற்றும் கழுத்தில் கருகமணி மாலை

காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு
பஸ் ஏறியிருப்பாளோ?
அல்லது அவள் அம்மாவோ மாமியாரோ
அந்த வேலையைச் செய்திருப்பார்களோ?
ஆபிஸ் வேலை சரியாகச் செய்வாளா?
அல்லது வீட்டைப் பற்றிய கவலையில்

வேலையை கோட்டை விடுவாளா?
மாதவிலக்கு சமயத்தில் கணவன் மேல் எரிந்து விழுவாளா?
மாமியாருடன் அடிக்கடி சண்டை போடுவாளா?

மனதை வருடிய ஒரு பார்வை
எண்ணற்ற கேள்விகள்