சிறுகதை

இயந்திரம் [சிறுகதை]

பாலகுமார் விஜயராமன்

அலைபேசியில் பேசும் போதே குப்பென வியர்த்து விட்டது. உலகின் ஒட்டு மொத்த இயக்கமும் ஒரு நொடி நின்று போனது போலவே தோன்றியது. மனைவி கருவுற்றது உறுதியான நாளில் இருந்து, இந்த நாளுக்காகத்தான் காத்திருந்த்தான். சரியாக இப்போது பார்த்து இப்படியான சூழ்நிலை அமைந்து விட்டதே என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தான். எவ்வளவு சாதாரணமாக இருக்க முயன்றும், பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நேற்று காலை பரிசோதனைக்குச் செல்லும் போது கூட ஸ்கேன் செய்து பார்த்து விட்டு, குழந்தை தலை இன்னும் திரும்பவில்லை, இன்னும் பத்து நாட்களாவது ஆகும் என்று தான் மருத்துவர் கூறியிருந்தார். நீர்ச்சத்து மட்டும் சற்று குறைவாக இருப்பதால், இன்று காலை வந்து ஒரு ஊசி போட்டுக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள்.

இன்னும் பத்து நாட்களுக்கு அலுவலத்திற்கு விடுப்பு. எங்கும் வெளியே கூட செல்லப் போவதில்லை , மனைவி அருகிலேயே இருக்க வேண்டும் என்று நேற்று மாலை தான் நினைத்துக் கொண்டான். நினைத்த சற்று நேரத்திற்கெல்லாம், அலுவலகத்தின் தலையமையகத்திலிருந்து அதிமுக்கியமான அவசர அழைப்பு. ஹைதராபாத்தில் ஏதோ பெயர் தெரியாத ஊரின் ஆளரவமற்ற நெடுஞ்சாலையில் பழுதாகிக் கிடக்கும் இயந்திரத்தை இரண்டு நாட்களுக்குள் சரி செய்தால் தான் ஆச்சு என்று கட்டளை. மறுத்துக் கெஞ்சிய அத்தனை பதில்களுக்கும், கட்டாயம் செல்லவேண்டும், வேறு வழியில்லை என்ற ஒற்றை கட்டளை மட்டுமே மீண்டும் மீண்டும் வந்தது. சரி, பத்து நாள் இருக்கிறதே என்ற தைரியத்தில், பக்கத்து வீட்டு அக்காவை துணைக்கு இருக்கச் சொல்லி விட்டு வேறு வழியின்றி நேற்று இரவு தான் இரயிலேறினான். இரண்டு நாள் வேலை தான் என்றாலும் கிளம்பும் போதே சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. ஒன்றும் ஆகாது என்று மனதை சமாதானம் செய்து கொண்டு கிளம்பி வந்தால், இன்று சரியாக காலை பத்து மணிக்கு அலைபேசி அழைப்பு வந்து விட்டது.

என்னங்க, நீர்ச்சத்து ரொம்ப கம்மியா இருக்காம், இன்னிக்கே சிசேரியன் செய்யனும்னு டாக்டர் சொல்றாங்க!”

என்னப்பா சொல்ற, நேத்து தானே எல்லாம் நார்மலா இருக்குனு சொன்னாங்க?”

ஆமாங்க, இன்னிக்கு மறுபடியும் ஒரு ஸ்கேன் செஞ்சு பார்த்தாங்க. பேபி முழு வளர்ச்சி வந்திருச்சு. நீர்ச்சத்து கம்மியாயிட்டா மூச்சு முட்ட ஆரம்பிச்சுரும். ரிஸ்க் வேணாம் இன்னிக்கே எடுத்துறலாம்னு சொல்றாங்க

சரி, டாக்டர் என்ன சொல்றாங்களோ, அது மாதிரி செய்யுங்க. நீ ஒன்னும் பதட்டப்படாதே. எல்லாம் நல்லபடியா நடக்கும். அக்காட்ட ஃபோனை குடு

அக்கா, ஒன்னும் டென்ஷன் ஆகாதீங்க. நான் எவ்ளோ சீக்கிரம் கிளம்பி வர முடியுமோ  அவ்ளோ சீக்கிரம் வரப்பாக்குறேன். டாக்டரம்மாட்ட தெளிவா கேளுங்க. கண்டிப்பா சிசேரியன் தான் பண்ணனும், அதுவும் வெயிட் பண்ண முடியாதுஇன்னிக்கே பண்ணனும்னு சொன்னாங்கன்னா, சரின்னு சொல்லீருங்கவேற என்ன செய்ய.. ?”

வழக்கமாய், எதிர்பாராத நேரத்தில் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய வேலை தான் என்றாலும், கண்டிப்பாக பிரசவ நேரத்தில் உடன் இருக்க வேண்டும் என்று உறுதியாகத் தான் இருந்தான். அதற்காகவே இந்த ஒரு மாதத்திற்கு எந்த வெளியூர் வேலையும் இல்லாதவாறு அட்டவணை எல்லாம் அமைத்து வைத்திருந்தான். போதாக்குறைக்கு மேலாளரிடமும் அவசர வேலை எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் வேண்டாத குறையாய் சொல்லி வைத்திருந்தான். ஒருவன் எதைப்பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறோனோ, அதில் சொதப்ப வைப்பது தான் விதியின் விளையாட்டு.

ரெண்டு நாள் வேலை தான், ரொம்ப முக்கியமான பிராஜட். இங்கிருந்து போன மெஷின்ல ஏதோ பிரச்சனை, அதை சரி செய்ய மாட்டாம மொத்த வொர்க்கும் அப்படியே நின்னு போய் கிடக்கு. நீ போய்யிட்டு வந்துரு, என்ன?” என்று விதி முதலாளி குரலில் பேசும் போது ஊழியனின் மறுப்பெல்லாம் எடுபடவா போகிறது? இன்று தன் முதல் குழந்தையின் வரவுக்காக மருத்துவமனையின் வராண்டாக்களில் குறுக்கும் மறுக்குமாக கையை பிசைந்தபடி நடந்து கொண்டிருக்க வேண்டியவன், ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி கனரக வாகனங்கள் புழுதி இரைத்துச் செல்லும் இந்த மாநில நெடுஞ்சாலையின் பராமரிப்புப் பணிக்காக தாரும், டீசலும் கலந்த வாசனையோடு மூச்சு விட்டுக் கொண்டு நிற்கும் இந்த ராட்சச இயந்திரத்தை உயிர்ப்பிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றான்.

இரண்டு மணி நேர இடைவெளியில் மனைவியை அலைபேசியில் அழைத்தான்

என்னப்பா, டாக்டர் என்ன சொல்றாங்க?”

எத்தனை மணிக்கு ஆப்பரேஷன் வச்சுக்கலாம்னு கேட்டாங்க

இதென்ன, நம்மட்ட கேக்குறாங்க. அவங்களுக்குத் தெரியாதாமா?”

இல்லங்க நல்ல நேரம் பார்த்து சொல்லச் சொன்னாங்க

எல்லா நேரமும் நல்ல நேரம் தான், குழந்தைக்கு மூச்சு முட்டும்னு சொல்றாங்க, பார்த்து சீக்கிரமா பண்ணச் சொல்லுங்க

ம்ம்ம்நீங்க கூட இருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும், நீங்க எங்கேயோ போய் உட்கார்ந்திருக்கீங்க!”

என்ன லூசுத்தனமா பேசுற, நான் என்ன வேணும்னா வந்து விளையாட்டி இருக்கேன்சும்மா டென்ஷனைக் கிளப்பாதே  சரி நான் ஃபோனை வைக்குறேன். சார்ஜ் வேற கம்மியா இருக்கு

ஒருவனின் ஆற்றாமை தான் கடுஞ்சொற்களை உற்பத்தி செய்கிறது. ஆறுதலாய் இரண்டு வார்த்தை பேசுவதற்காக அலைபேசியை எடுத்தவன், கடைசியில் அவள் மனம் புண்படும்படி பேச நேர்ந்து விட்டதே என்று அலைபேசியை வைத்த பின் அவனுக்குத் தோன்றியது. மீண்டும் அவளை அழைக்கத் தோன்றிய எண்ணம் வேலை பளுவில் பின்னுக்குச் சென்றது.

சாதாரண வேலை என்று சொல்லி முதலாளி அனுப்பி வைத்து விட்டார். இங்கு வந்த பார்த்த பிறகு தான் தோண்டத் தோண்ட பூதம் போல கிளம்பி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. கிட்டத்தட்ட முழு இயந்திரத்தையும் கழற்றி மறுசீரமைப்பு செய்து மாட்ட வேண்டிய வேலை. இயந்திரம் பழுதாகி நிற்கும் நெடுஞ்சாலையின் சுற்று வட்டாரத்தில் மருந்துக்குக் கூட ஒரு கடை கண்ணி இல்லை. ஊற்றி வழியும் வியர்வையும், கிரீஸ் பிசுபிசுப்பும், தார் வாசமும், அவ்வப்பொழுது அடிக்கும் புழுதிக் காற்றும், காலையிலிருந்து எதுவும் சாப்பிடாத பசியும் சோர்வும் சேர்ந்து வேலையை இன்னும் கடுமையாக்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் கூட வேலையை சீக்கிரம் முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும் என்ற ஆர்வம், பணியை துரிதப்படுத்திக் கொண்டே இருந்தது. அந்த இயந்திரத்தோடு உழன்று கொண்டிருந்த பத்து மணி நேரமும், மனது மனப்பாடம் செய்த செய்யுளை ஒப்பிப்பது போல, “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும், மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தது.

இத்தனை நாளும் கணவன் மனைவிக்குள் மகனா, மகளா என்று ஒரு பெரிய போட்டியே நடந்து வந்தது. இவன் எப்போதும் தங்களுக்கு மகள் தான் பிறக்கும் என்று உறுதியாய் நம்பிக் கொண்டிருந்தான். அவளோ,என் வயித்துல இருக்க பிள்ள எனக்குத் தெரியாதா, நிச்சயம் பையன் தான்என்று வாதிடுவாள்

பையன், பையன்னு சொல்லிட்டு இருக்க, கடைசீல பொண்ணு பிறக்குறப்ப ஏமாந்து போயிடாதேஎன்று அவளை வம்பிழுப்பாள்

அதெல்லாம் இல்ல, பையன் தான் பிறப்பான். நீங்க பார்க்கத்தானே போறீங்க!” என்று அவளும் விடாமல் அடம் பிடிப்பாள்

பாரு, ஏழாவது மாச ஸ்கேன்ல ஒன்னும் சொல்லலேல்ல, அப்ப பொண்னு தான், பையன்னா நர்ஸ்மார்க குறிப்பால சொல்லிருப்பாங்க

நீங்க என்ன வேண்ணா சொல்லுங்க என் பையனை எனக்குத் தெரியாதா!”

சரி, எந்தக்குழந்தைன்னா என்ன, நல்லபடியா பிறந்தா சரி தான்என்று இவன் தான் கடைசியில் இறங்கிப் போவான்.

இன்று காலையில் இருந்து அவனையும் அறியாமல் மனம்மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்என்று வேண்டுவது ஏனென்று அவனுக்கும் புரியவில்லை. இரண்டு நாட்கள் பிடிக்கும் வேலையை முழுமூச்சாய் பத்து மணி நேரத்தில் சரி செய்து விட்டான். ஒரு வழியாய் வேலையை முடித்து இயந்திரத்தை முழுத்திறனில் இயக்க விட்டு சோதித்ததில் முழு திருப்தி. மேலாளரை அழைத்து தகவலை சொல்லி விட்டுக் கிளம்பலாம் என்று அலைபேசியில் எடுத்தால் சிக்னல் சுத்தமாக இல்லை. பிறகு சிறிது தூரம் நடந்து அலைபேசியை தூக்கிப் பிடித்துப் பார்க்கும் போது ஒற்றைக் கோடு வந்தது. அவசரமாய் மேலாளரை அழைத்து வேலை முடிந்த விஷயத்தை சொல்லி விட்டு வைக்கும் போது பேட்டரி 1 சதவீதத்தில் இருந்தது. இன்னும் ஒரு அழைப்புத் தாங்கும் என்று நினைத்தவனாய் மனைவிக்கு அழைத்தான். பதிலில்லை. மீண்டும் முயற்சித்தான். அப்பொழுதும் பதிலில்லை.

சரி, உடனிருக்கும் அக்காவை அழைக்கலாமென அவர்கள் எண்ணுக்கு அடித்தான். நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு, எவ்ளோ நேரமாப்பா, உன் நம்பருக்கு ட்ரை பண்றது. அவள இப்போ தான் ஆப்பரேஷ்ன் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போறாங்க. அதுக்கு முன்னாடி அவ உன்கிட்ட ஒரு வார்த்தை பேசனும்னு முயற்சி செஞ்சுட்டே இருந்தாஉன் ஃபோன் நாட் ரீச்சபிளாவே இருந்தது…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அலைபேசி உயிரை விட்டு விட்டது.

சில தருணங்கள் அப்படித்தான் அமைந்து விடுகிறது. எழுதி வைத்து நிகழ்ச்சி நிரல் படி நடக்குற விஷயமெல்லாம் வாழ்க்கையில் எதிர்பார்க்க முடியுமா என்ன? பெற்று வளர்த்த அம்மா அப்பாவை விட்டு விட்டு எந்த நம்பிக்கையில் தன்னோடு வந்தாளோ அதனை இன்றளவு இம்மி பிசகாது காப்பாற்றி வருவதாகத் தான் நம்புகிறான். இருந்தும் இப்படி ஒரு சூழ்நிலை இன்று அமைந்து விட்டது. தான் உடலளவில் அவள் அருகில் இல்லாவிட்டாலும் கூட தனது நினைவு முழுதும் அவளைச் சுற்றிக் கொண்டிருப்பதை அவளும் இந்நேரம் உணர்ந்து கொண்டு தான் இருப்பாள் என முழுதாக நம்பினான். அத்தகைய புரிதல் இல்லாமல் என்ன தாம்பத்யம்!.  முன்னும் பின்னுமாக நினைவுகள் முந்தியடிக்க ஸ்தம்பித்தவனாய்ச் சிறிது நேரம் அசைவற்று நின்றான்.

பின் சுதாரித்துக் கொண்டவன் மனதில், சரி, அறுவை சிகிச்சை முடிய எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். அதற்குள் நகர எல்லையை அடைந்து விட்டால், அங்கிருந்து தொலைபேசி செய்து தகவலை தெரிந்து கொள்ளலாம், அதற்கு முன் இங்கிருந்து உடனே கிளம்பு, உடனே கிளம்பு, என பரபரக்கத் துவங்கியது. நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்த கனரக வாகனங்களுக்கு சைகை காட்டி நிறுத்த முயற்சித்தான். நான்கைந்து வண்டிகள் நிற்காமல் செல்ல, பின் வந்து நின்ற லாரி ஒன்றில் தொற்றிக் கொண்டான். நகரத்திற்குள் சென்றதும், அங்கிருந்து ஏதேனும் வாடகை ஊர்தியோ, அல்லது லிஃப்டோ கேட்டு அரை மணி நேரத்தில் இரயில் நிலையத்தை அடைந்து விட்டால் எப்படியும் நள்ளிரவு பணிரெண்டு மணி இரயிலை பிடித்து விடலாம். அப்படியானால் நாளை இரவுக்குள் ஊருக்குச் சென்று பொண்டாட்டியையும், பிள்ளையையும் பார்த்து விடலாம். நினைத்துக் கொண்டே வந்தவனுக்கு கண்களில் இருந்து நீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும், மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்என்ற பிரார்த்தனை வலுத்துக் கொண்டே வந்தது.

வீடுபேறு அடைதல் – ஷைன்சன் அனார்க்கி

நான் முன்னால் இருந்த அறையைக் காலி பண்ண வேண்டி வந்ததற்குக் காரணம் நான் அல்ல. ஒரு வீட்டின் மேல்தளங்கள் இரண்டை வாடகைக்கு எடுத்து மகான் மாதவன்* ஒரு தங்கும் விடுதி நடத்தி வந்தார். அங்கே தங்கியிருந்த பத்து பேரில் நானும் ஒருவன்.

(* மகான் என்பது அவரது பெயரின் பகுதியன்று. ஆனால் அவரது பேச்சு அவர் முற்றும் துறந்த ஞானி என்பதற்கு சான்றாக இருக்கும். எ.டு: இவ்வீட்டுக்கு நான் ஒன்றரை லட்சம் வாடகை கொடுக்கிறேன்; அதனால் எனக்கு ஒரு லட்சம் நஷ்டமாகிறது. இக்கூற்றை உண்மை என்று கொண்டால் அவர் இச்சென்னை மாநகரிலே பெரும் மகான். ஆனால், அவர் பொய் சொல்லுதல் என்னும் பெருங்குற்றமிழைக்கிறார் என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது.)

எங்கள் அறையில் நான்கு பேர். அந்த தளத்தைப் பொறுத்த வரையில் அது சாதாரண அறை அல்ல, சமையல் அறை. எக்கச்சக்கமான ஷெல்ஃபுகளும், கிச்சன் ஸிங்கும் அந்த உண்மையை உரக்க சொல்லிக் கொண்டிருந்தன. பாத்திரங்களுக்குப் பதிலாக நான் புத்தகங்களை அடுக்கிக் கொள்ள வசதியாக இருந்தது.

ஆளுக்கு 3500 ரூபாய் வாடகை. மின்கட்டணம், நீர்கட்டணம், துணி துவைத்தல், அயர்ன் பண்ணுதல், வீடு பெருக்குதல் என அனைத்தும் அதற்குள் அடங்கும். அறையும் நன்றாகத் தான் இருந்தது. ஆனாலும் எனக்கேயுரிய தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தன. ஹாலில் இயங்கும் தொலைக்காட்சியின் சப்தம் படிப்பதற்கு மனதை ஒருமுகப்படுத்த விடாமல் செய்தது. இரவு பத்து மணிக்கு மேல் வரும் பக்கத்து படுக்கை சிங் டியூப்லைட்டைப் போடும் போது தூக்கம் போனது. அதுவும் அவர் அன்றைக்குக் காதலியிடம் பேசத் தொடங்கினாரானால் அன்றிரவு விழித்திருப்பவனின் இரவு தான். வெளிச்சத்துக்கும், சப்தத்துக்கும் எனக்கு இருந்த hypersensitiveness அப்போது தான் புரிந்தது. தனியறை எடுக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அண்ணாநகரில் அதற்கு எங்கே போவது? இந்த இடத்தில் எப்படியாவது இரண்டு மாதங்கள் ஓட்டிவிட்டு அதற்கப்புறம் தேடிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்த போது தான் வீட்டு உரிமையாளர்கள்* மாதவனிடம் காலி பண்ணச் சொன்னார்கள்.

(*இந்த வீட்டுக்கு உரிமையாளர் ஒரு நபர் தான். ஒரு வயதான பாட்டி. ஆனால் அந்த குடும்பத்துக்காரர்கள் அனைவரும், அதாவது அந்த பாட்டியின் பத்து வயது பேரப்பையன் வரைக்கும் அந்த வீட்டு சொந்தக்காரன் போலவே உரிமையுடன் எங்கள் அறைகளை அடிக்கடி சூப்பர்வைஸ் செய்வதால் உரிமையாளர்கள் என பன்மையில் அழைக்க வேண்டியது அவசியமாகிறது)

காலி பண்ணச் சொன்னதற்கான காரணங்களைப் பற்றி எக்கச்சக்கமான கருதுகோள்கள் உலவின. விடுதியில் இருந்தவர்கள், அதாவது நாங்கள், குடித்து விட்டு கலாட்டா செய்தோம் என்பது ஒரு கருதுகோள். குடித்து விட்டு கலாட்டா செய்தது உண்மையே, அதனால் பாத்ரூம் கதவு உடைந்ததும் உண்மையே என்ற போதும் அதற்காகத் தான் எங்களைக் காலி பண்ணச் சொன்னார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. சுவாரசியமான மற்றொரு கருதுகோள் – மாதவன் ஒழுங்காக வாடகை கொடுக்கவில்லை. இவ்விரு பெரும் கருதுகோள்களுக்கிடையே சிறு , குறு கருதுகோள்கள் நீர்க்குமிழிகளைப் போல் ஒரு உரையாடலுக்குள்ளேயே தோன்றியுடையும்.

ஒழுங்காய், லட்சணமாய் வேலைக்குப் போக வேண்டிய வயதில் சென்னையில் ஒரு அறையில் உட்கார்ந்து அரசியல், வரலாறு, புவியியல், சில கணக்குகளைப் போடுவதற்கான common sense என பள்ளியில் கற்றுக் கொண்டது அனைத்தையும் மீண்டும் கற்றுக் கொண்டு, செய்தித்தாள்களையும் தவறாமல் படித்து, இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் ஒரு அரசுப்பணியோ, அரசு சார்ந்த நிறுவனப்பணியோ கிடைக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு சிறிதும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல தகவல் வேதாளங்களைப் பிடித்தே நாட்களைக் கழிப்பது, படிக்காத சமயங்களில் பேரபத்தமாகப் பட்டது. அத்தகைய எதிர்மறை சிந்தனைகளுக்கு இடமளிக்கக் கூடாது என படிப்பில் மூழ்கி யாருங்காணாத ஆழத்துக்குப் போய் படிப்பைத் தியானம் போல் மாற்ற வேண்டும் என முயன்றாலும் தொலைக்காட்சி சப்தத்தாலும், அறை நடமாட்டங்களால் ஏற்படும் கடுந்தொந்தரவுகளாலும் அம்முயற்சிகள் தோல்வியடைந்தன.

அறை மாற்றப்படுவதால் எழுந்த கவலையால் படிக்க முடியாமற் போகவே என் உளச்சிக்கல்கள் மிகுந்தன. எந்த முகவரிக்கு மாறப் போகிறோம் என்பதை மாதவன் சொல்லாமற் போனதால் நான் அறைக்கு தபால் மூலம் வருவித்துக் கொண்டிருந்த வார, மாதமிருமுறை இதழ்களை எம்முகவரிக்கு மாற்றி அனுப்பக் கோருவது என்பதை அறியாமல் அல்லாடிக் கொண்டிருந்தேன். 25ம் தேதி மாதவன் ஒரு முகவரியைத் தந்தார் அம்முகவரியை மின்னஞ்சலில் பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்பி என்னுடைய ஒரு பிரச்சினை முடிவுக்கு வந்தது என்ற சந்தோஷத்தில் சரவண பவனிலிருந்து ஸ்பெஷல் சாப்பாடு வாங்கி வந்து அறையில் உட்கார்ந்து சாம்பார் கவளங்களையும், புளிக்கறி கவளங்களையும், ரச கவளங்களையும் விழுங்கி, மோர்க்கவளங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரே மாதவன் வந்து அமர்ந்தார். கையில் பாதி உருவாகியிருந்த மோர்க்கவளத்தை தட்டில் வைத்து நிமிர்ந்தேன்.

“அந்த ரூமுக்கு இப்ப மாற முடியாதுப்பா” என்றார்.

பதில் சொல்லவில்லை. முகத்தை ஒரு வட்ட வடிவ கேள்விக்குறியாக மாற்றிக் கொண்டேன். “அக்ரிமென்ட்டுக்குப் பேசும் போதே ரொம்ப குளறுபடி பண்றாங்க. அது தான் அந்த இடம் வேண்டாம்னு விட்டுட்டேன்”, முந்தின நாள் முகவரியைத் தந்து வெள்ளையடிக்கும் வேலை நடந்து கொண்டிருப்பதாகச் சொன்ன அதே மகான் மாதவன் தான் இதையும் சொன்னார். பாதி உருவாகி தட்டில் இருந்த மோர்க்கவளத்தை எடுத்து அவரின் முகத்தில் அடித்து, கவளத்தைப் பருக்கைகளாக மாற்றி பறக்க விட வேண்டும் என்று என் மனதுக்குள் எழுந்த அதீத ஆசையை நிறைவேற்றுவதற்கு அவகாசம் தராமல் எழுந்து கொண்ட மாதவன் சொன்னார், “நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க தம்பி, நம்மகிட்ட இன்னொரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. அங்க இப்போதைக்கு நீங்க எல்லாரும் தங்கிக்லாம். சீக்கிரமா புதுவீடு பாக்றேன்”.

எனவே, இப்போது போகப் போகிற அறையும் நிரந்தரமானது அல்ல. நிரந்தரமான முகவரிக்கு மாறும் வரை பத்திரிகைகள் அனுப்புவதைத் தற்காலிகமாக நிறுத்தச் சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டியது தான். ஒரு பத்திரிகை எளிதாகக் கிடைத்து விடும். இன்னொரு பத்திரிகை கிடைப்பது கஷ்டம். அப்படியே கிடைத்தாலும் இடையிடையே சில வாரங்களுக்கான இதழ்கள் விட்டுப் போகக் கூடும். ஏற்கனவே இருந்த திருப்தி கரைந்து போயிருக்க சாப்பாடும் எந்த உற்சாகமும் ஊட்டவில்லை. நல்லவேளை, தலப்பாகட்டி சிக்கன் சாப்பிட்டிருந்தால் காசு அதிகமாகச் செலவான கவலையும் கூடவே சேர்ந்திருக்கும்.

நேற்றைக்குக் கொடுத்துப் போன முகவரி நிஜ முகவரியா, இல்லையென்றால் வெறும் சமாளிப்பா என்பதைப் போய்ப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஆனால், அதற்கு இரண்டு அவென்யூக்களைக் கடந்து போக வேண்டும். எப்பொழுதும் வாகனங்கள் பறந்து கொண்டேயிருக்கும் சாலைகள். கவனக்குறைவாலோ, உளச்சிக்கலால் வேண்டுமென்றோ ஏதேனும் வாகனத்தின் முன் குதித்து விடுவேன் என்று என்மேலே எனக்கு சந்தேகம் இருந்ததால் அந்த யோசனையைக் கைவிட்டேன்.

 பக்கத்திலிருந்த மளிகைக்கடையில் அட்டைப் பெட்டிகளை வாங்கி, எடுத்துப் போக வேண்டிய பொருட்களை அவற்றுள் நிறைக்கத் தொடங்கினேன். ஆறு பெட்டிகள் நிறைந்தன. ஐந்து பெட்டிகளில் இருந்த புத்தகங்களுக்கும் அரசாங்க வேலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவற்றை எடுத்து வீட்டில் போய் போட்டு விட வேண்டியது தான். திரும்ப அறை மாறும் போது சுமையாவது குறையும்.

இருபத்தேழாந் தேதியே புதிய ரூமுக்குப் போக வேண்டியதாயிற்று. போன பின்பு தான் அது தங்கும் அறையே இல்லை என்று புரிந்தது. டைனிங் ஹாலில் நான்கு கட்டில்களை கொஞ்சங்கூட இடைவெளியில்லாமல் நெருக்கி, அவற்றை சுவரோடும் ஒட்டிப் போட்டு எங்கள் ‘அறையை’த் தயார் செய்திருந்தார் மாதவன். அந்த அறையில் மூன்று அறைகளின் கதவுகள் திறந்தன. கிச்சனில் தண்ணீர் குடிக்கப் போகிறவர்கள் அந்த அறையைத் தாண்டித் தான் போக வேண்டும். பல் தேய்க்க, முகங்கழுவ எல்லோரும் அந்த அறையில் இருந்த வாஷ்பேசினைத் தான் பயன்படுத்தினார்கள். பரபரப்பான ஒரு தெருவின் நடுவே கிடப்பதைப் போன்ற உணர்ச்சி. எனது கேரளக் காதலி டயானாவின் முகத்தை மடிக்கணினி திரைமுழுக்க வியாபிக்கச் செய்து, பின்னணியில் ஸ்விரிடோவின் “பனிப்புயல்” (Snowstorm) என்ற வால்ட்ஸ் இசைத்துணுக்கை ஒலிக்க விட்டு அவள் முகத்தின் ஒவ்வோர் அணுவையும் ரசிப்பது எனக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. அதை இங்கே செய்யமுடியாது.

மெயின் ஹாலில் இருந்த தொலைக்காட்சியின் இரைச்சல் எத்தடையுமின்றி அறைக்குள் நுழைந்து சித்திரவதை செய்தது. முதல் நாளிலேயே தலை இரண்டாகப் பிளப்பதைப் போல் கடுமையான தலைவலி. அங்கிருந்து தப்பி தெருக்களில் அலைந்து இரவு ஒன்பது மணிக்கு மேல் அறைக்கு வந்தேன்.

(* ஒன்பது மணிக்கு மேல் தெருக்களில் அலைய பயம். அந்தப் பகுதியில் அமைச்சர்களின் வீடுகளும், அரசு அதிகாரிகளின் வீடுகளும் இருந்தன. இந்த சூழலில் என்னைப் போல் ஒருவன் இரவில் தெருக்களில் அலைந்து கொண்டிருந்தால் சந்தேகக் கேஸில் பிடித்துப் போய் விடுவார்கள். அக்காளின் கணவர் சென்னையில் இன்ஸ்பெக்டர் தான். ஆனால் அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காமல் அடிக்கத் துவங்கிவிட்டால்?)

அடுத்த நாள் வந்த மாதவனிடம் சொன்னேன், “இன்னும் ஒரு மாசத்துக்குள்ளார ரூம் காலி பண்ணிடுறேன்.”

“என்ன ஆச்சு? எங்க போற?”

“ஃப்ரண்டஸ்லாம் வெளிய ரூம் பாத்துகிட்ருக்காங்க. அங்க போலாம்னு இருக்கேன்”

“உனக்கு யாருப்பா ஃப்ரெண்டஸ்? நீ யார்கூட பேசியும் பாத்ததில்லேயே. உன் ரூம்மேட்ஸ் கிட்ட கூட பேச மாட்டேங்க்ற”. மாதவன் சொன்னதிலும் ஓரளவு உண்மை உண்டு. கிட்டத்தட்ட எப்போதுமே படித்துக் கொண்டிருப்பதால், அறைத் தோழர்களிடம் பேசுவதே குறைவு. ஆனால் எனக்கு அதைத் தாண்டி நண்பர்கள் உண்டு. அவரவர் அறைகளில் ஏற்கனவே செட்டில் ஆகி விட்டார்கள். வேறு அறை எதுவும் பார்க்கவில்லை. நான் தான் பார்க்க வேண்டும். ஆனால் எனக்கு இருக்கும் / இல்லாத நண்பர்களைப் பற்றிப் பேசுவதற்கு மாதவன் யார்?

“என் ஃப்ரெண்ட்ஸ் யாருமில்லேன்னா சிங்கிள் ரூம் எடுத்துகிட்டுப் போயிடுவேன். அவுட்டர் ஏரியாவானாலும் பரவாயில்லை”. மாதவனின் முகம் கூம்பிப் போவதைப் பார்க்கும் போது குதூகலமாகவே இருந்தது.

பேச வேண்டியதைப் பேசியாயிற்று. இனி ரூம் பார்க்க வேண்டியது தான். மகான் மாதவன் என் அட்வான்ஸ் ஐயாயிரத்தைத் திருப்பித் தருவாரா, இல்லையென்றால் தனது நஷ்டத்தை ஈடுகட்ட அதைப் பயன்படுத்திக் கொள்வாரா என்று தெரியவில்லை. இதைப் போன்ற விளம்பரங்களுக்கென்றே இருக்கும் இணையதளங்களில் எனது தேவையைப் பதிவு செய்தேன். “குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இல்லாத திருமணமாகாத இளைஞருக்கு (குடிமைப்பணித் தேர்வுகளுக்காகப் படித்துக் கொண்டிருப்பவர்) தனியறை தேவை”.

அடுத்த நாளிலிருந்தே அவ்விளம்பரத்துக்குப் பதில்கள் வரத் தொடங்கின. முதலில் பேசியவர் ஒரு பெண். அவர் முழுக்க ஆங்கிலத்திலேயே பேச நானும் ஆங்கிலத்திலேயே தட்டுத்தடுமாற வேண்டியதாயிற்று. மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட பல வசதிகளுடன் எனக்கு ஏற்ற மாதிரி ஒரு அறை இருப்பதாகச் சொன்னார். மைக்ரோவேவ் ஓவனை நான் அதற்கு முன்னால் சில ஆங்கிலப்படங்களில் நிச்சயமாகப் பார்த்திருக்கிறேன். சில ஹோட்டல்களில் பார்த்ததைப் போல் தோன்றினாலும் நினைவு சரியாக இல்லை. ஆனால் எந்த வீடுகளிலும் நான் அதைப் பார்த்ததில்லை. ஒரு ஆம்லெட் கூட வட்ட வடிவில் ஒழுங்காகப் போடத் தெரியாத எனக்கு ஒரு மைக்ரோவேவ் ஓவன் எவ்வகையில் வசதி என்றும் புரியவில்லை.

தொடர்ந்து மின்னஞ்சலில் அவ்வறையின் புகைப்படங்களை எனக்கு அனுப்பினார். பல்வேறு கோணங்களில் அவ்வறையின் பல்வேறு பகுதிகளை புகைப்படமெடுத்து அனுப்பியிருந்தார். அடுக்களையில் மைக்ரோவேவ் ஓவன்; படுக்கையறையில் தரை மட்டத்தின் மேல் உயர்த்திப் போடப்பட்ட மேடையில் இரண்டு பெரிய படுக்கைகள்; நவீன மேற்கத்திய பாணி கழிவறை. இரண்டு பேருக்கான அறை அது. மொத்த வாடகை 10000 ரூபாய். என்னோடு இன்னொரு நபர் யாரும் இல்லாததால் நானே அவ்வளவையும் கொடுக்க வேண்டும். எனக்கு ஒரு மாதத்துக்கான மொத்த செலவே அவ்வளவு தான். வீட்டில் அதற்கு மேல் காசு கேட்க சங்கடமாக இருந்தது. அதுவே அதிகம் என்று சமயங்களில் தோன்றியது.

ஆனால் அந்த அறைவீடு இரண்டு பேருக்கு ரம்மியமானதாக இருக்கும். கலியாணமானவுடன் ஒரு நீண்ட தேனிலவை அக்கட்டில்களில் உருண்டு புரண்டு கொண்டாடலாம். ஆனால் கலியாணம் ஆக வேண்டும். வேலையில்லாமல் இருக்கும் போது கலியாணத்தைப் பற்றி யோசிப்பதே பாவம். ஆனால் வேலையில்லை என்று இனப்பெருக்க சுரப்பிகளும் வேலையற்று இருந்து விடுகிறதா என்ன? காதலி இருந்தாலாவது அச்சுரப்புகள் வீணாய்ப் போகாது என்ற நிச்சயம் இருக்கும்.

 காதலைப் பற்றி நினைத்தவுடன் முதலில் ஜூலியின் முகம் நினைவுக்கு வந்தது.பள்ளியில் கூடப் படித்தவள். அவளுக்கு காதல் தொல்லை கொடுத்து அவள் அண்ணனிடமிருந்து திட்டு, மிரட்டல் எல்லாம் வாங்கியிருக்கிறேன். இப்போது திருவனந்தபுரத்தில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். 20000 சம்பளம் இருக்கும். அவள் சென்னைக்கெல்லாம் வரமுடியாது. முடிந்தாலும் எனக்காகவெல்லாம் வரமாட்டாள். இப்போது என்னை மறந்தே போயிருப்பாள்.

அடுத்து டயானா. கேரளத்துக் காதலி. கல்லூரியில் கூடப்படித்தவள். வடகேரளத்தில் ஒரு பாலிடெக்னிக்கில் லெக்சரராக இருக்கிறாள். ஒரே கல்லூரியில் படித்திருந்தாலும் அவளுக்கு நான் யாரென்றே தெரியாது. அடுத்த காதலி காவ்யஸ்ரீ. அவள் பதிவயதில் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய காலந்தொட்டு அவளை நான் காதலிக்கிறேன். அவளுடனேயே வளர்ந்தேன். அவளுக்கும் என் வயதென்பதால் வசதியாகப் போனது. இப்போது அவள் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் மிகப் பிரபலமான கதாநாயகி. அவளை நான் நேரில் பார்த்தது கூட கிடையாது.

இப்படி எனக்கு ஒன்றுக்கு மூன்றாக காதலிகள் இருந்தாலும், அவர்கள் யாரும் என்னைக் காதலிக்கவில்லையாதலால் எனக்கு அந்த வீடு வேண்டாம்.

அடுத்தும் சிலர் பேசினார்கள். பத்தாயிரம் வாடகை, லட்சம் அட்வான்ஸ் என்றார் ஒருத்தர். லட்சத்துக்கு நான் எங்கே போக? வீட்டில் கேட்க முடியாது. இன்னொருத்தர் வடசென்னையில் இருந்து பேசுவதாகச் சொன்னார். “குமார் பேசுறேன்” என்று அவர் சொன்னவுடன் பெயருக்கு முன்னால் கொக்கி இருக்கிறதா என்று கேட்க வேண்டும் போலிருந்தது. அப்படி இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் கேட்காமலேயே கைகள் நடுங்க தொலைபேசினேன். வேறு எங்குமே கிடைக்காவிட்டால் அவரிடம் தஞ்சம் புக வேண்டியது தான்.

அண்ணாநகரிலா வீடுகள் கிடைக்காது? என்போன்ற அகதிகள் எத்தனை ஆயிரம் உண்டு அண்ணாநகரிலே? தடுக்கி விழுந்தால் எழுப்பி விட்டு, “பாஸ், நான் சிவில் சர்வீசசுக்கு பிரிப்பேர் பண்றேன். நீங்க?” என்று கேட்பவர்கள் அண்ணாநகரின் ஒரிஜினல் ஜனத்தொகைக்கு சமமாகவோ அதிகமாகவோ இருக்கக் கூடும். சக அகதி என்ற முறையில் பழக்கமான ஒரு தோழனிடம் சொல்லி வைத்திருந்தேன். அவன் அவனுக்குத் தெரிந்த ஒரு சக அகதியிடம் சொல்லி ஒரு அறைக்கு அழைத்துப் போனான். இரண்டு பேர் தங்கும் அறை; ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் மூன்றாம் தளத்தில் இருந்தது. ஒரு முன்னறை, ஒரு பின்னறை, இடையில் ஒரு இந்தியப் பாணி கழிவறை, ஒரு சமையலறை. சமையலறை கிட்டத்தட்ட ஷெல்புகளால் ஆனதைப் போலிருந்தது. ஷெல்புகளில் தொட்டால் பொடியாகும் நிலையில் மூன்று பழம்புத்தகங்கள் இருந்தன. அவற்றைத் தொட்டுப் பொடியாக்கி கரைத்துக் குடிக்கும் மனநிலையில் நான் அப்போது இல்லையாதலால் அப்புத்தகங்கள் உயிர் பிழைத்தன.

இரண்டு பேர் தங்கலாம். சரி தான். ஆனால் இரண்டாவது நபரை எங்கே போய்த் தேடுவது? என்னை அழைத்துச் சென்ற அகதியிடமே “நீ இப்போது அறை மாறும் உத்தேசம் ஏதுமுண்டா?” என்று கேட்டேன். அவன் அத்தகைய உத்தேசங்கள் எதுவும் தனக்கு இல்லை என்பதைக் காண்பிக்கும் வகையில் மிக அழுத்தமாகவும், ஆழமாகவும் தலையசைத்து மறுத்தான். அதற்கும் இணையத்தில் விளம்பரம் கொடுக்கலாமா? ஆனால் அதைப் பார்த்து இரண்டாவது நபர் வருவதற்குள் வேறிருவர் வந்து வாடகை பிடித்தால் என்ன செய்வது?

என்ன செய்வதென்று அறியாமல் மனக்கரங்களால் மூளையைப் பிசைந்து கொண்டும், சதைக்கரங்களால் தலையைச் சொறிந்து கொண்டும் அறைக்குப் போகும் போது என்னைப் போல் மோகனுக்கும், ராஜீவுக்கும் அறை பிடிக்காமல் போயிருந்தது. அவர்கள் அடுத்தநாள் புதிதாக வேறொரு விடுதி பார்க்கக் கிளம்பினார்கள்.அவர்களுடனேனயே ஒட்டிக் கொண்டேன்.

முதலில் கிங்ஸ் கெஸ்ட் ஹவுஸ். பெரிய அறைகளை கண்ணாடித் தடுப்புகளால் சிறிய அறைகளாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் மூன்று இரண்டடுக்கு படுக்கைகளைப் போட்டிருந்தார்கள். அப்படி ஒரு அறையில் மொத்தம் ஆறு அரசர்கள். எப்படி அரசர்கள் ஆட்டுக் கொட்டகை போன்ற அறைகளில் தங்க சம்மதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. உணவுடன் சேர்த்து மாதம் 6500 ரூபாய். மோகனுக்கும் ராஜீவுக்கும் பிடித்துப் போனது. எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அறைக்குள் இருந்த ஏற்புணர்வு வெளியே வந்ததும் வடிந்து போனதால், அடுத்த அறையைத் தேடிப் போவதைப் பற்றி அவர்களுக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை.

மீண்டும் தெருக்களை அளந்தோம். கொஞ்ச தூரத்தில் இன்னொரு விடுதி. இரண்டு பேர் தங்கிக் கொள்வது மாதிரியான அறைகள். ஆனால் முழுதாக நிரம்பியிருந்தது அவ்விடுதி. அந்த விடுதியின் சொந்தக்காரர் வைஷ்ணவுக்கு அதைப் போல் இன்னும் சில விடுதிகள் இருப்பதாகச் சொல்லி அங்கே தங்கியிருந்தவர் ஒரு மொபைல் நம்பரைத் தந்தார்.

மோகன் வைஷ்ணவுக்கு ஃபோன் பண்ணினான். காலியிடங்கள் இருக்கும் இன்னொரு விடுதிக்கு போக வழி சொன்னார் அவர். சென்னைக்குள்ளேயே குக்கிராமம் போன்ற பகுதியில் அமைந்திருந்தது. உள்ளே சாலைகள் எதுவும் இல்லை. அரிசி மண்டியொன்றின் மூன்றாம் மாடியில் இருந்தது அது. அறை வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது. இரண்டு பேர் ஒரு அறைக்குள் தாராளமாகத் தங்கலாம். சாப்பாடோடு சேர்த்து 5500 ரூபாய். மூன்று பேருக்கும் பிடித்திருந்தாலும் அதைவிட நன்றாக ஒரு அறை கிடைக்காதா என்கிற நப்பாசை/ பேராசையில் யோசித்து சொல்கிறோம் என்று சொல்லி வெளியே வந்து விட்டோம்.

எங்கள் நப்பாசை நிறைவேறவில்லை. அதற்கப்புறம் பார்த்தவையெல்லாம் காற்றோட்டமில்லாமல், இருட்குகைகளைப் போலவும், மாட்டுத் தொழுவங்களைப் போலவும் இருந்தன. வைஷ்ணவை அடுத்த நாள் போனில் கூப்பிட்டு அந்த விடுதி ஓகே என்றோம். அடுத்தநாள் தான் அந்த அறைக்கு வருவதாகவும், அங்கே வந்து அட்வான்ஸ தரவும் சொன்னார் அவர். காலையிலேயே மூன்று பேரும் ஆளுக்கு ஐயாயிரத்துடன் கிளம்பி விட்டோம். வைஷ்ணவ் மாதவனை போன்றவராக இல்லாதவரைக்கும் நல்லது தான். சீக்கிரமாக வந்து விட்டோமா என்றெண்ணி அரிசி மண்டி வாட்ச்மேனிடம் “வைஷ்ணவ் சார்…” என்றோம். அவர் மேலே கைகாட்டினார்.

அன்றைக்குப் பார்த்த அறையின் கதவைத் திறந்து உள்நுழைந்தோம். வைஷ்ணவ் உட்கார்ந்திருந்தார். இல்லை, மாதவன் உட்கார்ந்திருந்தார். அப்படியும் சொல்ல முடியாது. சிலரால் வைஷ்ணவ் என்றும், சிலரால் மாதவன் என்றும், எங்களால் அவ்விரு பெயர்களாலும் அழைக்கப்பட்டிருந்த அந்நபர் உட்கார்ந்திருந்தார். நாங்கள் அறியாத வேறு பெயர்களும் அந்நபருக்கு இருக்கலாம்.

எங்களைப் பார்த்தவருக்கு எந்த அதிர்ச்சியுமில்லை. எங்களை எதிர்பார்த்திருந்தவர் போன்றே அமர்ந்திருந்தார். நாங்கள் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் நின்றிருந்தோம். “என்ன பாக்றீங்க? எல்லாருமே நான்தான். எங்க போனாலும் சுத்தி சுத்தி எங்கிட்ட தான் வரணும். சென்னை முழுசா என்னுது தான், ஒலகம் முழுசுமே என்னுது தான். வேணும்னா பாக்றீங்களா?” என்று வாயை விரிவாய்த் திறந்தார்.

சென்னை நகரம் அந்தச் சிறுவாய் முழுக்க நிறைய சிறுவாய் பெருவாயாகிக் கொண்டே போனது. கூவத்தின் வாடை அறைமுழுக்க வியாபிக்கவே திடுக்கிட்டு வாயை மூடிக் கொண்டார் சென்னையின் கடவுளான வைஷ்ணவ்/மாதவன்/பெயரற்றவர்.

கூலிக்காரன்

மு வெங்கடேஷ்

“ஏ கணவதியக்கா ஒரு நிமிஷம் இங்க ஓடியாங்களேன்” என்று கத்தினாள் மலர்.

கழுவிக் கொண்டிருந்த பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தாள் கணபதி அக்கா.

“என்னடி மலரு எதுக்கு இப்படி அயம்போடுற?”

“இங்க வந்து உங்க மவன் ச்சங்கரு பண்ற வேலையப் பாருங்க.”

“என்னடி என்ன பண்றான்?”

“காலைல இருந்து நா மாத்தி சரசு, சரசு மாத்தி நான்னு இதுவரைக்கும் 37 தடவ இந்தக் கூலிக்காரன் கதைய சொல்லிட்டான்.”

“ச்சீ இம்புட்டுத்தானா? நாகூட என்னவோ ஏதோ பாம்புதான் வந்துட்டு போலன்னு பயந்துட்டேன்.”

“இம்புட்டுத்தானாவா? அந்தப் பாம்புக்கடியக்கூடத் தாங்கிக்கலாம் போல, இந்தப்பய கடியத் தாங்க முடியல.”

“அக்காளும் தங்கச்சியும் சேந்து எம்புள்ளைய எதுக்குடி கொற சொல்றீங்க? நீங்கதானட்டி போன வாரம் கூலிக்காரன் படம் பாத்துட்டு வந்த புள்ளய கத சொல்லுனு கேட்டீங்க?”

“ஆமாக்கா நாங்க கேட்டதுதான் தப்பாப் போச்சு. போன வாரத்துல இருந்து இதுவரைக்கும் ஓராயிரம் தடவ கத சொல்லிட்டான். காதுல இருந்து ரெத்தமே வந்துட்டு.”

“வரட்டும் வரட்டும் நல்லா வரட்டும்.”

“நல்லாச் சொல்லுவீகளே வரட்டும்னு, நாங்க படுற கஷ்டம் எங்களுக்குத் தானத் தெரியும். அந்தா சரசு படுற பாட்டப் பாருங்க கொஞ்சம்.”

இருவரும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். சரசின் மடியில் அமர்ந்திருந்த சங்கர், “டுமீல்னு வெடிக்குமா, தப்பு பண்ணிட்டு அந்த வில்லன் ஓடிப் போனானா, அப்போ கூலிக்காரன் பறந்து வந்து அடிப்பான். அப்போ டம்முன்னு கார் வெடிக்குமா அப்போ தீ வருமா, அப்போ அந்த தங்கமெல்லாம் உருகி வடியுமா” என்று கதை சொல்லிக் கொண்டிருந்தான்.

“எக்கா இதாது பரவா இல்ல இப்போ பாருங்க” என்றாள் சரசு.

“ஏ ச்சங்கரு நீ பெரியாளானப்புறம் என்னவா ஆகப் போறல?”

“நானா? நா கூலிக்காரன் ஆகப் போறேன். கூலிக்காரனா ஆகி தப்பு பண்ற எல்லாத்தையும் அடிக்கப் போறேன்” என்றான் ச்சங்கர்.

“அப்படியா? யாரல மொதல்ல அடிப்ப?” என்று கேட்டாள் மலர்.

“எங்கம்மாவத்தான்.”

“யாம்ல?”

“அவங்கதான் என்ன இங்க விடமாட்டேன்னு சொல்றாங்கள்லா, அதான்.”

“அடி சிரிக்கிகளா, எம்புள்ளைய இப்படி கெடுத்து வச்சிருக்கீங்கலேட்டி! ஏல ஐயா, நிறுத்துய்யா உங்கதைய, வா நாம தூங்கப் போலாம்” என்றாள் சங்கரின் அம்மா கணபதி.

“நா வரல, நா இங்கயே சரசக்கா கூடத் தூங்கிக்கிறேன். நீங்க போங்க.”

“ஒத வாங்கப் போற. ஒழுங்கா அம்மாகூட வந்துரு. காலைல பள்ளிக்கூடம் போனும்லா.”

“நா வரல.”

“சரிக்கா இங்கயே படுத்துக்கட்டும் காலைல நா வந்து விட்டுறேன்”, என்றாள் சரசு.

சரி, அப்படி என்னடி சொக்குப் பொடி போட்ட? எப்ப பாத்தாலும் சரசக்கா சரசக்கானே சொல்லிட்டு இருக்கான்?”

“அட போங்கக்கா நீங்க வேற” என்றாள் சரசு.

சற்று நேரத்தில் பாயை விரித்துத் தானும் படுத்துக் கொண்டு அருகில் சங்கரையும் படுக்க வைத்தாள் சரசு. 38வது முறையாக கூலிக்காரன் கதை தொடங்கியது.

ஊரின் ஒதுக்குப் புறத்தில் கடைசியாக இருக்கும் மூன்று வீடுகள். நடுவே சங்கரின் வீடு, இடதுபுறம் சரசக்காவின் வீடும், வலது புறம் சித்தி இராசம்மாவின் வீடும். ஊரிலுள்ள அழகான ஒரு சில பெண்களில் சரஸ்வதி என்ற சரசுக்கு முதல் இடம். பார்ப்பதற்கு சினிமா நடிகை ராதாவைப் போலவே இருப்பாள். ஒரு சிலர் அவளைக் குட்டி ராதா என்றே கூப்பிடுவார்கள்.

சங்கருக்குத் தன் சொந்த அக்கா மகேஸ்வரியை விட சரசக்காவைத்தான் மிகவும் பிடிக்கும். முறைக்கு அத்தையானாலும் சிறு வயதிலிருந்தே சரசக்கா சரசக்கா என்று கூப்பிட்டதால் சரசு அத்தை சரசக்கா ஆனாள். சங்கர் தன் வீட்டில் இருப்பதைவிட சரசக்கா வீட்டில் இருக்கும் நேரம்தான் அதிகம். ஒரு சில நேரங்களில் சரசக்கா மடியிலேயே தூங்கிய இரவுகளும் உண்டு.

சரசக்காவுக்கும் அதே போலத்தான். தனக்கு ஒரு தம்பி இல்லையென்று ஒரு நாளும் நினைத்ததில்லை. சங்கரைத் தன் உடன் பிறந்தத் தம்பியாகவே நினைத்தாள். அவனுக்கு சோறூட்டுவதும், குளிக்க வைப்பதும், தூங்க வைப்பதும் எல்லாமே அவள்தான்.

சங்கர் அந்த ஊரிலுள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். சரசக்கா தையல் பயிற்சிப் பள்ளியில் தையல் டீச்சர். தினமும் வேலைக்குப் போய்விட்டு வரும்பொழுது சங்கருக்கு 2 தேன் மிட்டாய் வாங்கி வருவாள்.

“ஏல ச்சங்கரு, இன்னைக்கு ஒனக்கு லீவுதான? அக்காகூடத் தையல் கிளாஸ் வாரியா?” என்றாள் சரசக்கா.

“ஓ வாரேனே” என்று குஷியாகக் கிளம்பினான் சங்கர்.

சரசக்கா தையல் கற்றுக் கொடுத்துவிட்டு வரும்வரை அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தான்.

தையல் கிளாஸ் முடித்துவிட்டு வரும் வழியில், “ஏல ச்சங்கரு பேசாம குனிஞ்சிட்டே வால” என்றாள் சரசக்கா.

“ஏங்கா?”

“அங்க நிக்கிறானுவ பாரு, அவனுவ ரௌடிப் பயலுவ. அக்காவ கிண்டல் பண்ணுவானுவ.”

“அப்படியாக்கா?”

“ஆமால, பேசாம வா.”

“நா வேணா போய் கூலிக்காரன கூட்டீட்டு வரவாக்கா?”

சிரித்துக் கொண்டே, “பேசாம வா எங்கூட”, என்றாள் சரசக்கா.

“சொல்லுக்கா.”

“பேசாம வாய மூடிட்டு வால.”

மறுநாள், கோவிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சரசக்கா துணைக்கு சங்கரையும் அழைத்தாள். சரசக்கா கூப்பிட்டு வராமல் இருப்பானா? அவள் கைபிடித்து நடக்கத் தொடங்கினான்.

“ஏல ச்சங்கரு இப்படி அக்கா காலயே சுத்திட்டு வாரயே, அக்காக்கு கல்யாணம் முடிஞ்சி வேற ஊருக்குப் போயிட்டேம்னா என்னல பண்ணுவ?” என்று கேட்டாள் சரசு.

“நானும் ஒங்கூட வருவேன்.”

“ஏல அதுக்கு எம்புருசன் சம்மதிக்கனும்லால?”

“சம்மதிக்கலேன்னா நா கூலிக்காரன கூட்டிட்டு வந்துருவேன்.”

“இதுக்கும் கூலிக்காரந்தானா?” சங்கரை அணைத்து, முத்தமிட்டு, இடுப்பில் தூக்கி வைத்து நடையைத் தொடர்ந்தாள்.

இப்படியே சரசக்காவுடன் சந்தோசமாக காலம் கழிந்து கொண்டிருந்தபோது ஒரு நாள், “ச்சங்கரு நம்ம ஆச்சிக்கு ஒடம்புக்கு முடியலையாம், நாம போய் பாத்துட்டு வரலாம் வா” என்று சங்கரை அழைத்தாள் அவன் அம்மா.

“இல்லம்மா நா வரல, நா சரசக்கா கூடவே இருக்குறேன்.நீங்க போய் பாத்துட்டு வாங்கம்மா.”

“நாலு நாள்ல வந்துரலாம்டா வா. ஆச்சி ஒன்னியப் பாக்கணுமாம்.”

“எம்மா நா வரலம்மா,” என்று அழுதான் சங்கர்.

“அதெல்லாம் முடியாது. ஒழுங்கா வந்துரு,| என்று அழுகின்ற பிள்ளையைத் தரதரவென்று இழுத்துச் சென்றாள் அம்மா. சங்கரோ, “சரசக்கா சரசக்கா” என்று அழுதவாறே சென்றான்.

மறுநாள், “ஏ ச்சங்கரு ஆச்சி ஒன்ன கூப்டுறா பாரு, இங்க வாயேன்” என்று சங்கரைக் கூப்பிட்டாள் அம்மா.

பதில் ஏதும் இல்லை.

“காதுல விழுதா இல்லையா? இங்க வந்துட்டுப் போயேன்” என்று மீண்டும் அழைத்தாள்.

விருப்பமில்லாமல் சென்று ஆச்சியைப் பார்த்துவிட்டு வந்து, மீண்டும் அதே திண்ணையில் அமர்ந்து கொண்டான்.

சங்கர் சோகமாக இருப்பதைப் பார்த்த அவன் அத்தை செல்வி, “ஏல ஒங்க ஆச்சி ஒன்னும் பொட்டுன்னு போயிற மாட்டா, அவா யமனையே வந்து பாருன்னுலா சொல்லுவா. நீ கவலபடாத தங்கம்” என்றாள்.

சரசக்காவைப் பிரிந்து நரகத்தில் இருப்பதுபோல் உணர்ந்தான் சங்கர். எப்படா மீண்டும் ஊருக்குச் செல்வோம், சரசக்காவைப் பார்ப்போம் என்று ஏங்கிக்கொண்டிருந்தான் அவன். எப்போதும் துறுதுறுவென்று இருப்பவன் இப்போது அமைதியாக திண்ணையில் அமர்ந்து சரசக்காவையே நினைத்துக் கொண்டிருந்தான். திண்ணையில் அமர்ந்தவாரே ஒரு வாரம் கழிந்தது.

சிவந்திபுரம் வந்து பஸ் நின்றதுதான் தாமதம், இறங்கி ஓடத் தொடங்கினான்.

“ஏல வந்ததும் வராததுமா எங்கல ஓடுற?” என்றாள் அம்மா.

“சரசக்கா வீட்டுக்கு” என்று பதில் வந்தது.

சரசக்கா வீட்டைச் சுற்றி ஏகப்பட்ட கூட்டம். எல்லோரையும் விலக்கிக் கொண்டு புகுந்து ஓடினான். மலரக்கா வந்து சங்கரைத் தடுத்து நிறுத்தி, தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.

“சரசக்கா எங்கக்கா?” என்று கேட்டான்.

“அவளுக்கு ஒடம்பு சரி இல்லப்பா. அப்பறம் பாக்கலாம்” என்றாள் மலரக்கா.

“இல்ல முடியாது, எனக்கு இப்பவே பாக்கணும்.”

“அது முடியாதுப்பா. சொன்னா கேளு.”

“இல்ல எனக்கு இப்பவே பாக்கணும்” என்று அழத் தொடங்கினான்.

சற்று நேரத்தில் சங்கரின் அம்மா அங்கு வர, வெளியே நின்று கொண்டிருந்த சுந்தரியிடம் என்னவென்று கேட்டாள்.

“அந்தக் கொடுமைய ஏங் கேக்குறீங்க மைனி, போன செவ்வாய் கெழம மத்தியானம் உச்சி வெயில்ல ஆத்துக்குப் போயிருக்கா சரசு. அப்போ ஆத்துக்குப் பக்கத்துல இருக்கானே சாணக்கட வடிவேலு, அவன் பொண்டாட்டி கருப்பாயி, போன மாசங்கூடத் தூக்கு போட்டு செத்துப் போனாளே, அவ வந்து நம்ம சரசு மேல அப்பிக்கிட்டா. பாவம் புள்ள அதுல இருந்து இப்படிதான் கெடக்கு. இன்னைக்குத்தான் கேரளால இருந்து ஏதோ ஒரு சாமியாரு வந்துருக்காரு ஓட்றதுக்கு. அன்னில இருந்து இன்னைக்கு வரைக்கும் யாரும் கிட்டப் போகல. போறதுக்கே பயமா இருக்கு” என்றாள்.

சங்கருக்கு ஒன்றும் புரியவில்லை. அவனை யாரும் வீட்டினுள் விடவுமில்லை. வெளியே அழுது கொண்டிருந்த சங்கருக்கு, உள்ளிருந்து சரசக்காவின் அழுகுரல் மட்டும்தான் கேட்டது. அவ்வப்போது சரசக்காவை யாரோ அடிப்பது போலவும், இழுப்பது போலவும், அதற்கு அவள் “என்ன விட்டுருங்க என்ன விட்டுருங்க” என்று கத்துவதும்தான் கேட்டது.

சற்று நேரத்தில் சரசக்காவின் அழுகுரல் ஓய்ந்தது. விழுந்த அடியும்தான். வெளியில் வந்த சாமியார், “இன்னைக்கு ஒத்து வரல வர்ற வெள்ளிக்கிழம வாரேன் அது வரைக்கும் இந்த மூதிய கட்டியே போட்டுருங்க” என்று சொல்லிச் சென்றார்.

எல்லோரும் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். யாருக்கும் தெரியாமல் எழுந்து சென்ற சங்கர், தன் வீட்டு பின்புறத்திலுள்ள தண்ணீர்த் தொட்டி மீது ஏறி, அங்கிருந்து சரசக்கா வீட்டை எட்டிப் பார்த்தான்.

சரசக்கா. குட்டி ராதா என்று அழைக்கப்பட்ட அதே சரசக்கா இப்போது தலைவிரி கோலமாய், ரத்தக் காயங்களுடன், கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டு அழுது கொண்டிருந்தாள். அருகில் ஒரு தட்டில் வைத்த சாப்பாடு அப்படியே இருந்தது.

“சரசக்கா, சரசக்கா…” என்றான் சங்கர்.

மெதுவாகத் தலையை நிமிர்ந்து பார்த்த சரசக்கா, “ச்சங்கரு, என் தங்கம், எங்கடா போன இவ்ளோ நாளா? அக்காவ விட்டுட்டுப் போய்ட்டேல்ல, இப்போ அக்காவப் பாரு, அக்கா நெலமையப் பாரு, நீ அக்காவ விட்டுட்டுப் போனதுனாலதான் இப்படி. நீ மட்டும் இங்க இருந்துருந்தேன்னா அக்காக்கு இப்படி ஆயிருக்குமா?” என்று அழுதாள்.

“அக்காக்கு ஒன்னும் இல்லடா. சொன்னா யாரும் கேக்க மாட்டேங்குராங்கடா. இங்க பாரு கால்ல சங்கிலி போட்டு கட்டி வச்சிருக்காங்க பாரு, யாரும் கிட்டயே வர மாட்டேங்குராங்க. இந்த ரூம்ல போட்டு அடச்சி வச்சிட்டாங்கடா. அக்காக்கு ஒன்னுமில்லடா, நீயாது நம்புடா, என்ன விட்டுறச் சொல்லுடா கெஞ்சிக் கேக்குறேன்டா. அக்காவ விட்றச் சொல்லுடா” என்று சொல்லி மேலும் அழுதாள்.

இத்தனையையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சங்கர், “இருக்கா நா போய் கூலிக்காரன கூட்டிட்டு வாரேன்” என்று ஓடினான். “ஏல ச்சங்கரு ச்சங்கரு” என்று கத்திய சரசக்காவின் குரலைக் கேட்காமல், கூலிக்காரனைக் கூப்பிட ஓடினான்.

இரவு 8 மணி வரை சங்கரை யாரும் தேடவில்லை. இரவு சாப்பாட்டைத் தயார் செய்து விட்டு கொஞ்சம் ஓய்ந்து உட்கார்ந்தாள் சங்கரின் அம்மா. அப்போதுதான் அவளுக்கு சங்கரின் ஞாபகமே வந்தது.

“ஆமா இந்த ச்சங்கருப் பயல எங்க?” என்றாள்.

வீட்டிலிருந்த அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு விழித்துக் கொண்டிருந்தனர். பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்குச் சென்று சங்கரைத் தேடத் தொடங்கினர். சிலர் வீட்டில் தேட, சிலர் கடைத் தெருவில் தேட, சிலர் வயக்காட்டில் தேட, சிலர் காட்டுக்குள் தேட, எங்கு தேடியும் இரவு 10 மணி ஆனபின்பும் கிடைக்கவில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை. யானை மிதித்திருக்குமோ, நரி கடித்திருக்குமோ, பாம்பு கொத்தியிருக்குமோ என்று.

திடீரென்று ஒரு சத்தம்.

“ஏ கணவதியக்கா ஒரு நிமிஷம் இங்க ஓடியாங்களேன்” என்று கத்தினாள் மலர்.

ஓடிவந்தவளிடம், “எக்கா இங்க பாருங்களேன்” என்றாள் மலர். இருவரும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர்.

சரசக்காவின் மடியில் அமர்ந்திருந்த சங்கர், “டுமீல்னு வெடிக்குமா, தப்பு பண்ணிட்டு அந்த வில்லன் ஓடிப் போனானா, அப்போ கூலிக்காரன் பறந்து வந்து அடிப்பான். அப்போ டம்முன்னு கார் வெடிக்குமா, அப்போ தீ வருமா, அப்போ அந்த தங்கமெல்லாம் உருகி வடியுமா” என்று கதை சொல்லிக் கொண்டிருந்தான்.

௦௦௦

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

Death of an Elephant – a story by Carvakan

Translated by: Nakul Vāc

Ranganathan could sense his anger and irritation exceeding their bounds. He had already raised his hand and almost gave the child a thump on its back. The child, as if it were taking up Satyagraha refused to budge from the old man who had laid out his ware of plastic dolls right in the middle of that dusty street where people always jostled each other and which reeked of rotting vegetables and sweat. He grasped the child’s hand forcefully and the anger that was simmering within him caused him to breathe heavily as he harshly said to the child “Are you coming with me now or should I walk away and leave you here?” The child looked up at him its eyes glistening like dragonfly wings. “I want that elephant Daddy” it pleaded with a distressed voice.

Ever since he had taken the child to look at an elephant at the Kanchipuram Temple it had kept up this refrain day and night. I want an elephant, I want an Elephant Pa! It took him two weeks just to get the child to understand that his financial situation precluded any possibility of feeding an elephant. It was only during the last four days that he had managed to forget the elephant and yet here it was, back again.

After giving the old sidewalk hawker a bitter look he said “There are no elephants here, come, let’s go home” and tugged at the child’s hand. “Look, there is one right here” the child stretched out its hand and pointed towards a corner. Surprisingly there really was an Elephant there with a parrot-green body, gold filigreed back, rosy mouth and solid lemon-yellow tusks. Showing the rose colored underside of its lifted trunk it was standing in a ‘Saluting’ posture. Cursing the sharpness of the child’s vision that had managed to spot the elephant amidst all those worthless knickknacks he reached for money in his pocket with an intent to buy the damn thing. As his sight fell on that elephant again something tickled his aesthetic sense, that sense he was very proud of. It felt as if that elephant was lifting its trunk and showing its rosy mouth to mock him. Not just him, but it felt as if that green elephant were mocking elephants past present and future including the mytho-religious ones from Iravatham to the one at Varatharajar Temple. Suddenly, he felt towards it an uncontrollable surge of anger and rage.

“Chee! Not this, it looks yucky. Whoever heard of a green elephant? I will buy a black one tomorrow. Come let’s go home now.” He said and tried dragging the child once again. The child lifted its face and looked at him wide-eyed.

“Promise?”

“Promise, you wait and see”

After he had made his promise both of them started walking towards their home.

Although he probably would have, that child didn’t let him forget the elephant. “Where is my elephant, where is my elephant, you promised to buy me one… “It pestered him relentlessly.

“The ones in this town are no good. I will get you one when I come back from my trip. Promise”Only after this reassurance did it stop nagging him.

He did keep his promise. It was a wooden elephant. Even though it wasn’t an astounding work of art it was at least black- well, almost black. It had a trunk and white tusks but did not have a rosy mouth. It definitely did not mock him and the entire race of elephants.

One of the fallouts of all this was that the child and the elephant became inseparable. The elephant had to be served food during meal times and the child would go to bed only after ensuring the elephant had gone to sleep. The elephant’s likes and dislikes, its stubbornness, anger and playfulness all of these turned the daily life of that household upside down.

He felt that there was something sinister in all of this. Although a kid, the child was still six years old. That doll elephant masquerading as a real one and creating a ruckus in the house as if it were a spoilt brat of an elephant just didn’t feel right. It was a doll, just wood… It didn’t eat sugar-candy or drink Horlicks; it couldn’t ask for peanuts or sugarcane; he repeatedly tried telling these to the child which threw temper tantrums all day long, insisting that it was indeed a real elephant and not just a doll. The next day both the child and the elephant refused to speak with him.

After three days of distress he couldn’t take it any longer and apologized to the child “This is a real elephant, it was my fault that I didn’t look at it carefully earlier.” Beaming with joy the child immediately replied “See you didn’t get what I said” “It has a trunk, has tusks. Look at its ear, like a winnow. Black body… Who can say this not an elephant… the elephant loves you so much, see how it is coming to pet you… ” The child went on and on.

From that day forward the elephant had two friends, the child and Ranganathan. They would give it a bath, feed it, and go hunting with it. They would dress it when it got hurt and beat it when it angered them. They would mete out punishment by starving it and when it pleaded with them in repentance they would even give it words of advice. They would hide from it when it was angry and would teach it circus tricks when it was in a friendlier mood. The upshot of all these joint activities was that Ranganathan became very familiar with the elephant. Its moods, likes and dislikes, by now he knew all this by rote. Sometimes during the child’s absence the elephant would come to play with him or stand with obstinate restiveness.

He had to go out of town once again on an official trip. Throughout the return back home he was assailed by memories of the “Child Elephant”. He had even fully thought out a brand new game which involved training the elephant to catch fish. It had to waddle its trunk in the mud and fetch lampreys. Instead of bait they would attach a worm to its trunk and lure the fish. And so much more….

When he reached home from the railway station both the child and the elephant were nowhere to be seen! He assumed they must have gone outside to play. He had to go out on an errand and by the time he returned home it was quite late. The child had gone to sleep. Oh Well! I will teach them the new game tomorrow, he tried consoling himself.

Next morning as soon as he saw the child, he immediately noticed that it was not holding the elephant in its hands and hence the first question that popped out of his mouth was “Where is the elephant”. “It must be somewhere” the child replied without much enthusiasm. Not being able to make head or tail of it he felt both disappointed and angry.

“Did you make it disappear or did it run away to the forest?” he asked. To his ears it didn’t sound like an ordinary matter of fact question. Perhaps he was bullying or crying?

” Bah! It must be lying around someplace here” it replied and went off to brush its teeth. ”

“Hey, I found a new elephant game… A game where we catch fish ” he followed it.

He spotted the elephant lying forlorn in a corner amidst dirty unwashed clothes. “Poor thing, looks like it’s sick, do you have fever… Shall we go to the hospital and get you some medicine? ” “Hey, look, the elephant is right here” he informed tenderly and as he bent to pick up the elephant the child’s reply startled him and he straightened up

“What are you saying Dad, nothing will happen to it. Is it a real elephant? Whoever heard of a doll getting fever and dysentery ” the child replied and opened the cupboard.”Have you seen this? It has real tires; do you want to see how it goes? ” It showed him a red metallic car with mini tires.” I won’t give it to you, the woman next door gave it to me,” the child boasted.

Unable to make sense of what was happening he stared at the child. With a mischievous smile it was trying to hide its hand behind its back while the car it was holding bared its metallic teeth and made a fool of him.

He turned his head and looked down at the dead elephant’s corpse. “I am just a piece of wood. Not an elephant” it murmured and died again. He couldn’t make sense of it at all.

“Dad, did you say anything?” the child asked as it tried to make the toy car go.

He still couldn’t make any sense of it.

oOo
 (யானையின் சாவு – சார்வாகன்)

ஆறாவது விரல்

– கலைச்செல்வி –

நீரைத் தொட்டு மேலெழும்பி வருடலாக நகர்ந்த சில்லென்றச் சாரல் காற்று தனது சுவாசத்தை வேகப்படுத்தி அடர்வாகியதில் மழைக்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கியிருந்தன. மரங்களின் இண்டு இடுக்குகளில் நுழைந்து வெளிச்சம் பரப்பிய சூரியன் சாரலுக்கு வெட்கி எங்கோ நகர்ந்து விட கூரைகளற்றுப் போன உயர்மரங்களுக்கு கருமேகங்கள் மேற்புற கவசமிட்டன. காற்றுக்கும் அவனின் மேற்சட்டைக்குமானப் போராட்டத்தில் சட்டை விலகி காற்றுக்கு வழிவிட்டு உப்பலாகிப் போனது. சற்றே தொளதொளத்த முழுக்கால்சட்டை வம்புச் செய்யும் மனமின்றி காற்றின் போக்குக்கு தன்னை அனுசரித்துக். கொண்டதை படபடப்பாக வெளிப்படுத்தியது. சாரல் அடர்வாகி மழையானதில் காற்று ஈடுக்கொடுக்க முடியாமல் நகர்ந்து விட ஈரமான உடல் அனிச்சையாக நடுங்கத் தொடங்கியது

ஜீப்பை நோக்கி மெதுவாகவே நடந்தான் அவன். கியர்ராடில் ஒரு கையும் ஸ்டியரிங்கில் ஒரு கையுமாக வைத்தவனுக்கு கிளம்ப மனமின்றி போனதில் சாவியை திருகி இன்ஜினை அணைத்தான். கைகளைக் கட்டிக் கொண்டு ஆசுவாசமாக பார்வையை வெளியே செலுத்தினான். காட்டு ஓடை அது. நெல்லிக்கனிகளைச் சாக்குப்பையிலிருந்து சிதற விட்டதுப் போல கூழாங்கற்கள் விதவிதமாக அளவுகளில் ஓடையை நிரப்பியிருந்தன. மிக மெல்லிய ஓட்டத்தில் ஆழமற்று ஸ்படிகம் போல் தெளிந்திருந்தது ஓடை நீர். அதில் கண்ணாடியாய் தெரிந்த மணல் விரிப்பில் சிறு மீன்கள் அங்குமிங்கும் வாலை ஆட்டிக் கொண்டு ஓடின.

கரிய சிறிய மீன்கள். கைக்கு அகப்பட விரும்புதில்லை. அவன் அமர்ந்திருந்த பாறை மழையில் நனைந்திருந்தது. கீழே ஒடுங்கலாகவும் மேலே பரந்துமிருந்த அந்தப் பாறை கால்களை தொங்க விட்டுக் கொண்டு உட்கார ஏதுவாக இருந்ததில் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. தோழர்களுடன் சுற்றுலா வந்ததில் அறிமுகமான இந்த இடம் இத்தனை ஈர்ப்பாக மாறும் என்று அப்போது அவன் நினைத்திருக்கவில்லை. அலுவலக நாட்களை தேனியிலும் வாரக் கடைசி நாட்களை இங்குமாக கழிக்க ஏதுவான பயணத்துாரமும் மனவோட்டமும் அமைந்துப் போனதில் ஊருக்குப் போகும் நாட்கள் குறைந்துப் போயின.

சென்ற முறை ஊருக்கு செல்லும்போது தாத்தா கோபமாக கத்தினார். “ஓய்வு ஒளிச்சலில்லாம அப்டியென்னா மயிறு வேலை பாக்ற..? வுட்டு தொலச்சுட்டு இருக்கற காடுக்கரையப் பாத்துக்கிட்டாலே தலமொறைக்கும் தாங்கும்.. ஒதவாக்கர உத்தியோகம்…” நிலம்நீச்சுக்கு பஞ்சமில்லை என்பதால் பேரன் உத்யோகம் பார்ப்பதில் தாத்தாவுக்கு விருப்பமிருப்பதில்லை. குரலும் உடம்பும் இன்னமும் திடகாத்திரம்.

“வைரம்பாஞ்சக்கட்டை..“ என்று கணவனைக் குறித்து அலட்டிக் கொள்ளும் அப்பத்தாவுக்கு பேரனைப் பற்றி வேறுவிதமானக் கவலை வந்து விடும். அம்மாவையும் அதில் சேர்த்துக் கொள்ளும். ”கண்ணாலப் பேச்செடுத்தா புடியே கொடுக்க மாட்டேங்கிறானே இந்தப்பய.. எதும் வெவகாரம் இருக்குமோ..? அம்மாவிடம் கிசுகிசுக்கும். ”சின்னவனே.. கண்ணாலம்ன்னா எங்களுக்கெல்லாம் பத்திரிக்க குடுக்க மறந்துடாதடா..” அப்பாவுக்கு எல்லாமே விளையாட்டுதான்.

”செலவு மிச்சம்னு இருப்பியா.. நீ வேறண்ணே.. பத்திரிக்க.. அதுஇதுன்னுட்டு..” என்பாள் அத்தை. அண்ணனின் விளையாட்டுக்கு ஏற்ற ஜோடி இவள்தான். கலகலத்த சுபாவி. ”அவனை வம்பிழுக்கிலேன்னா ஒனக்கு துாக்கம் வராதே..” என்பாள் அம்மா அத்தையிடம். உள்ளுரிலே திருமணம் செய்துக் கொண்டவள் அத்தை. குடும்பம் பார்க்கும் நேரம் தவிர்த்து மீதி நேரம் பிறந்த வீடே கதி அவளுக்கு. பெரியக்காவின் மகள்தான் அண்ணி என்பதோடு இருவரின் ஒத்த வயதும் நாத்தியையும் அண்ணியையும் இன்னும் ஒட்டியே வைத்திருந்தது.

ஓரோரு வருட வித்யாசத்தில் அடுத்தடுத்து மூன்று ஆண் பிள்ளைகள். கடைக்குட்டி.. ஆறு விரல் அதிர்ஷடக்காரன்.. என்ற கூடுதல் தகுதிகள் இவனுக்கு பிறப்போடு சேர்ந்துக் கொள்ள அம்மாவிடம் செல்லமும் கூடுதல்தான். துாங்கும் நேரம் தவிர்த்து மீதமான நேரங்களில் அவள் இடுப்பே இருப்பிடம். ”அய்யய்யய்யே.. இந்தப் பய பொறந்ததுலேர்ந்து இடுப்பே கழண்டுல்லப் போவுது…” செல்லமாக அலுத்துக் கொள்வாள் அம்மா. “செத்த நேரம் இந்தப் பயல துாக்கீட்டுப் போடீ.. அவள ஒரு வேல பாக்க வுட மாட்டேங்கிறான்..“ அப்பத்தா சாடையாய் மகளிடம் கண்காட்ட அத்தை அவனை இடுப்பிலிருந்து பிரித்து தன் இடுப்பில் ஏற்றிக் கொள்வாள். மூன்று வயதிற்கு ஏற்ற கனம். “அண்ணியோட இடுப்ப ஒடிச்சுப்புடுவான் இந்தப்பய..” என்றாள்.

வீட்டுக்கு செல்லும் வழியெங்கும் கதைகளால் நிறைத்து விடுவாள் அத்தை. ஒரு பேச்சும் இரண்டு சிரிப்புமாக நகர்வதில் கதைகள் நீளுபவையாக இருக்கும். அந்த இடைவெளி அவனுக்குத் தாயை நினைவூட்டி விடும். “அத்த.. அம்மாட்ட.. அம்மாட்ட போறன்..“ அனத்தத் தொடங்கி விடுவான். ”எல.. அம்மாட்ட என்னாத்தடா வச்சிருப்ப.. இங்க அத்தைமவளுங்க ரெண்டு பேரு இருக்காளுங்க.. பாத்துக்கிட்டு இருப்பியா.. அம்மா.. அம்மான்னுட்டு ” இழுத்து நொடித்துக் கொஞ்சுவாள். விளையாட்டுக் காண்பிப்பாள். அதற்கும் ஆயுள் குறைவுதான். மீண்டும் “அத்தே.. அம்மாட்ட.. அம்மாட்ட..” என்பான். குரல் அழுகையை நெருங்கியிருக்கும். அத்தையின் முந்தானையைப் பிடித்து இழுப்பான்.

“தம்பிக்கு.. அத்தை.. இப்ப.. ஒரு.. நெசக்கதை.. சொல்லப் போறேனேஏஏ..” வார்த்தை வார்த்தையாக உச்சரித்துப் பீடிகைப் போட்டாள் அத்தை. அம்மாவைப் பார்க்கப் போகும் குஷியில் கதைக் கேட்கப் பிடித்து விடும் அவனுக்கும்.

”மூணு வருசத்துக்கு முந்தி நம்ப ஊருல நெறயா நெல்லு வௌஞ்சுச்சா.. ஊர்சனங்களுக்கெல்லாம் ஒரே சந்தோசம்.. குருவிங்களுக்கும் கொண்டாட்டந்தான்.. கேக்கறல்ல தம்பி.. ஊன்னு சொல்லுய்யா.. அப்பதான் அத்த கதை சொல்லுவேனாம்..”

“ம்ம்ம்.. அத்த அம்மாட்ட..“

”அதான் கூட்டிட்டு போறேன்ல்ல.. கதய கேளுய்யா.. நெல்ல அரச்சு அரச்சு வீட்டுல அரிசு மூட்டையா சேர்ந்துப்போச்சு.. ஊரு பூரா தவுடா நெறஞ்சுப் போச்சு.. மாட்டுக்கெல்லாம் கரச்சு கரச்சு ஊத்துனாலும் தவுடு கொறயவேயில்ல.. ரோடு வீடெல்லாம் தவுடு பறந்து ஒடம்பெல்லாம் அரிப்பெடுக்க ஆரம்பிச்சுடுச்சு.. அப்பதான் வேத்து ஊரு பொம்பள ஒருத்தி வந்தா.. அவ கையில ஒரு ஆம்பளப் புள்ள… ஊன்னு சொல்லுய்யா..”

”ம்ம்ம்..”

”இந்தப் பயல வாங்கிக்கிட்டீன்னா எறைஞ்சுக் கெடக்கற தவுட்டெல்லாம் நான் வாரி எடுத்துட்டுப் போறேன்னு உங்கம்மாட்ட சொல்லுச்சு அந்தப் பொம்பள.. தவுடெல்லாம் தீர்ந்துப்போனா சரின்னுட்டு உங்கம்மாவும் சம்மதம் சொல்லிடுச்சு.. தவுட்ட எடுத்துக்கிட்டு ஒன்ன இறக்கி வுட்டுட்டு அந்தப் பொம்பளப் போயே போயிடுச்சு.. தவுடுப் போயி இந்த தம்பி வந்துட்டான் டும்.. டும்.. டும்..” அவனை கட்டியணைத்து முத்தமிட்டாள். “காகம் ஒன்று காட்டிலே.. தாகத்தினால் தவித்தது..“ என்பதுப் போல கதையை முடித்திருந்தாள் அத்தை. வீடு வந்து விட ”இந்தாடீயம்மா.. இந்தப் பயலப் புடிச்சுக்க.. வயுசு மூணாச்சு.. இன்னும் பால் குடிக்கிற பப்பா மாதிரி அம்மா.. அம்மான்னுட்டே கெடக்கான்..” டவுசரில் முட்டிக் கொண்டிருக்கும் பகுதியை கிள்ளி முத்தமிட்டாள். தனியேத் தொங்கும் அவனது ஆறாவது விரலை நீவி விடுவாள். மற்ற விரல்களை விடவும் பஞ்சுப் போன்றிருக்கும் அந்த விரல். வளர்ந்தவுடன் அறுவைச்சிகிச்சையில் நீக்கி விடலாம் என்று யாரோ சொன்னார்கள். தாத்தா குடையைத் துாக்கிக் கொண்டு அடிக்க வந்து விட்டார். தனியேத் தொங்கும் விரலைத் தொட்டான். மெத்தென்றுதான் இருந்தது… தவிட்டைத் தொடுவதுப் போல… இப்போதுக் கூட. எதிலும் ஒட்டாமல்.. கூடவே ஒட்டிக் கொண்டு.. அளவில் சிறியதாய்.. உபயோகமற்ற சதை பிண்டமாய்..

“ராசா வூட்டுக் கன்னுக்குட்டி.. நம்ப பரம்பரயில யாருக்குமே இந்த குடுப்புன இல்ல.. எங்க அய்யாவோட கூட்டாளியோட பங்காளி ஒத்தரு ஆறு வெரல்காரராம்.. வெவசாயத்துக்காரருதான்.. ஆனா இன்னிக்கெல்லாம் அவுக வூட்ட நிமிந்து பாத்தா களுத்துவலி கண்டுப்புடும்..” என்பாள் அப்பத்தா. ”அதானா சேதி.. அப்ப தவுடு போயீ லெட்சுமி வந்துச்சு.. டும்..டும்..டும்..” இவனை குறும்போடு ஓரப்பார்வைப் பார்ப்பாள் அத்தை. “பொறவு..? கொஞ்சநஞ்ச தவுடா துாக்கிக் குடுத்தோம்..” என்று அம்மாவும் கேலியைத் தொடர்வாள். “தவுட்டுக்கு கெடச்சப்பயலே..“ கோபமாகும் தருணங்களில் அண்ணன்காரன்களுக்கு வசைப்பாட வசதியாகி விடும்.

மலைகள் அண்மைப் பார்வைக்கு மரங்களாலும் துாரத்துப் பார்வைக்கு பனிப்படலமாகவும் தெரிந்தன. மழை பரவலாக பெய்ததில் ஓடை நனைந்திருந்தது. தெளிந்து நகரும் ஓடையின் நீர் மழையின் சடசடப்பில் இந்நேரம் கலங்கிப் போயிருக்கும் என்ற எண்ணம் அவனுக்கு சற்று அயர்ச்சியைத் தந்தது. ஓடையின் ஆதிமூலம் எங்கோ துாரத்து அருவியிலிருந்தது. அருவிக்கு இது பாதையல்ல. நண்பர்களுடன் பயணம் வந்தது அந்த அருவிக்குதான். நெருங்கிப் பார்க்கும் ஆவலில் பாதையற்ற பாதையில் அன்று பயணித்தனர். சாரல் காற்று அருவியின் நெருக்கத்தைச் சொன்னது. குளிர்ந்து குழைந்திருந்த உடல்கள் ஒருவிதக் கிளர்ச்சியைக் கொடுக்க அலுப்பின்றி பாறைகளுடே நடந்து மேலேறினர். மேலும் முன்னேறவியலாதப்படி தடுப்புக் கட்டப்பட்டிருந்தது.

பாறைகளிலிருந்து குபுகுபுவென வெள்ளை நுரையைத் தள்ளிக் கொண்டு சீறலாகக் கீழேப் பாய்ந்துக் கொண்டிருந்தது அருவி அருவி பிரம்மாண்டமானது. அழகானது. ஆனால் இறைச்சலானது. ஏகாந்தமற்றது. ஆற்று நீர் அமைதியாக ஆற்றைக் கடந்து விடும். கடல் நீர் ஆவேசமாக பதில்களற்றக் கேள்வியை எழுப்பிக் கொண்டேயிருக்கும். கிணற்று நீருக்கு தன் இருப்புக் குறித்து எந்தவித அக்கறையுமிருப்பதில்லை. டம்ளர் நீரோ செம்பிலிருக்கும் நீரோ ஒரு வரையறைக்குள்ளேயே தன்னை இறுத்திக் கொள்ளும். இவை எவற்றிலும் சேராத.. சேர்ந்துக் கொள்ளத் தோன்றாத ஆங்காரத்தோடு பீறிட்டு பெருமிதமாக பெரும் ஓசையோடு பயணிக்கும் அருவியை அன்றுதான் முழுமையாகப் பார்த்தான். தடுப்புக்கு அப்பால் அத்தனை தள்ளியிருந்தும் அதன் தெறிப்பு உடலை நனைத்துப் படபடக்க வைத்தது. நீரின் உத்வேகத்தில் மதர்த்துக் கிடந்தன பாறைகள்.

இவையெதிலும் தனக்கு சம்மதமில்லை என்பது போல படிப்படியாக அமைந்திருந்த பாறையிலிருந்து நிதானமாக வழிந்த நீர் பாறையின் போக்கிலேயே பாதையை அமைத்துக் கொண்டு வழிந்தப்படியே கீழிறங்கியது. அவர்கள் நின்றிருந்த பாறைகளில் கூட மெல்லியச் சரிகைக் கோடாக நீர் கசிந்துக் கொண்டிருந்தது. ஒற்றைக் கசிவென்றாலும் தனது தடத்தை பாறைகளில் கரையாக படிய வைத்து பாம்பாக நெளிந்து இறங்கிய நீர் இனமறியா சந்தோஷத்தை உண்டாக்கியது அவனுக்கு. இந்த ஓடைக் கூட அருவியின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபாடற்று தனக்கென கட்டமைத்தக் கொண்ட கூழாங்கல் சாம்ராஜ்யத்தோடு ஒதுங்கிக் கொண்டது அவனை வெகுவாக ஈர்த்திருந்தது. வாரக்கடைசிகளுக்காக தவமிருக்கத் தொடங்கிய அவனை அவைகளும் வரவேற்க தயாராகவே இருந்தது. தனக்கும் அவனுக்குமான இரண்டு மணி நேர சந்திப்பு போதாது என்பது ஓடைக்கும் புரிந்திருந்ததில் மழைக் குறைந்து நின்றே போனது.

ஜீப்பில் தயாராகக் கிடந்த ஜெர்கினை மாட்டிக் கொண்டான். மேற்புறம் மழையை தாங்கும் திறனும் உட்பாகம் குளிரைத் தாங்கும் தன்மையும் கொண்ட ஜெர்கின் அது. அதன் குல்லாவை இழுத்து தலையில் வழிய விட்டு தாடையில் முடிச்சுகளிட்டு அதை கட்டுப்படுத்தினான்.

கூழாங்கற்கள் கூட மேல்புறம் வழுவழுப்பும் பாசியேறி அடிப்பாகமுமாக ஓடை முழுக்கச் சிதறிக் கிடந்தன. மரங்களுக்கிடையே கிடந்த பெரிய கூழாங்கல்லொன்று புல் மேயும் மாடு ஒன்றின் முதுகையொத்திருந்தது.

மாட்டு வண்டிப் பயணம் அவனுக்கு மிகவும் பிடித்தமானது. அவித்துக் காய வைத்த நெல் மூட்டைகளோடு அரிசி மில்லுக்கு மாட்டு வண்டி புறப்படும்போது இவனும் கூடவே ஏறிக்கொள்வான். அசைந்து அசைந்துச் செல்லும் மாடுகளை ஹாய்.. ஹாய்..என்று விரட்டப் பிடிக்கும் அவனுக்கு. மில்லிலிருந்து அரிசியும் தவிட்டு மூட்டையுமாக வீடு திரும்பும்போது நெற்களத்தில் விளையாடிக் களைத்திருப்பான். அரவைக்கு கூலியாக கொடுத்ததுப் போக மீதமான தவிட்டு மூட்டைகளையும் அரிசி மூட்டைகளோடு ஏற்றிக் கொண்டு வண்டி ஊருக்குத் திரும்பும். அரிசி மூட்டையை வீட்டுக்குள்ளும் தவிட்டு மூட்டையை கொல்லைப்புறத் தாழ்வாரத்திலும் இறக்கி வைப்பது வரை வேலையாட்களின் பணி. அத்தையும் தனது மாடுகளை இதே தொழுவத்தில்தான் கட்டியிருப்பாள். “அந்த தவுட்டு சாக்கை செத்த அவுத்துக் குடுத்துட்டுப் போய்யா..” என்பாள் அத்தை வேலையாளிடம். ”தவுட்டுப்புளுதி ஒடம்ப அரிக்கும்.. நீ உள்ள போய்யா..” கூடவே நின்றுக் கொண்டிருக்கும் அவனையும் விரட்டுவாள்.

”இதான் தவுடாத்தே..” என்றான். ஆறு வயதிருக்கும் அவனுக்கு. கைகளுக்கு மிருதுவாக நெருநெருவென்றிருந்தது தவிடு.

”படிச்சு பெரிய ஆளாவ போறவன்ய்யா நீ.. ஒனக்கென்னாத்துக்குய்யா தவுடும் புண்ணாக்கும்..” கழனித் தொட்டிக்குள் போடும்போது பொத்தென்று உட்கார்ந்துக் கொண்டது தவிடு. புண்ணாக்கோடு கலந்து நடந்த மாடுகளின் களைப்பை ஆற்றுவாள் அத்தை.

அண்ணன்களுக்கோ வீட்டில் மற்றவர்களுக்கோ ஆறு விரல்கள் இருக்கவில்லை. உறவினர்கள் ஒன்றுக் கூடும் இடங்களில் கூட தேடிப் பார்த்திருக்கிறான். பள்ளி.. கல்லுாரி.. பணிப்புரியும் அலுவலகம்.. பயணிக்கும் இடம்.. என அவனது பார்வை விரிந்துக் கொண்டேப் போனாலும் ஆறுவிரல்காரர்கள் யாரும் அதற்குள் அகப்படவேயில்லை. இடதுக்கைச் சுண்டு விரலையடுத்து தனியாக.. துண்டாக.. சிறியதாக.. அழகற்றதாக விரல் போன்ற தோற்றத்திலான சதைத்துண்டு யாருக்குமே வாய்த்திருக்காது என்பது அவனுக்கு புரியும் நாட்களில் ஓடை அவனை தனக்குள் புதைத்து ஆசுவாசப்படுத்தியது.

ஒருநாள் புளியைக் கொட்டையோடு சப்பியதில் கொட்டையையும் சேர்த்து விழுங்கி விட பயந்து போனான். ”அய்யய்யே.. தம்பி வயித்துல புளியமரம் மொளைக்க போவுது..” அப்பா கிண்டலடித்தார். பயத்தில் அழுகை வந்தது அவனுக்கு. அன்று கனவில் அவன் தலையின் மீது முளைத்திருந்த புளியமரத்தில் காய்களைப் பறிக்கக் ஐந்து விரல்கள் கொண்ட கைகளால் கற்களை விட்டெறிந்தனர் அவனின் பள்ளித்தோழர்கள். முகமறியாதப் பெண்கள் கூட குழம்புச் சட்டியோடு புளியம்பழம் பொறுக்க வந்தனர். குனிந்துப் பொறுக்கும் அந்தக் கைகளில் யாருக்குமே ஆறாவது விரல் இருக்கவில்லை.

மழை நின்று கருமேகங்கள் நகர்ந்திருந்தன. இருந்தாலும் பொழுதை ஒப்படைத்து விட்டுப் போக சூரியன் தயாரானதில் காடு மங்கிக் கொண்டே வந்தது. அந்திப்பொழுதும் பெய்த மழையும் காற்றை குளிர்வித்திருந்தது. சூழலை அனுபவிக்கும் ஆவலில் கைகளிரண்டையும் ஜெர்கினுக்குள் நுழைத்தப்படியே நடந்தான். உடலைத் தழுவிக் கொள்ளும் காற்றும் பெயர் தெரியாத பறவைகளின் ஒலியும் குதுாகலப்படுத்த வாயைக் குவித்து விசிலடித்தான். நடையில் சிறிய துள்ளல் இருந்தது.

தலைக்கு மேலே பறவைக் கூட்டம் ஒன்று பறந்துக் கொண்டிருந்தது. அடுக்கி வைத்ததுப் போன்ற ஒழுங்கில் சீரான வேகத்தில் ஏதோ ஒரு நியதிக்கு கட்டுப்பட்டதுப் போல பறந்துக் கொண்டிருந்தன. இவைகளுக்குள் பேதமிருக்காது. எல்லாமே ஒரே இனம். காக்கைக் குஞ்சுகளுடன் வளரும் சின்னக் குயிலின் நிலை அதன் தாயின் துரோகத்தால் விழைவது. கையாலாகாதக் கோபத்தில் எழும்பிக் கொண்டேயிருக்கும் அதன் குரல் ராகமாக மாறிப் போகிறது. அதன் தப்பிக் கிடக்கும் தாளங்கள் யாருக்கும் புரிவதேயில்லை. அதனால்தான் காலங்காலமாக எழும் குயில்களின் ஓசை அதற்கு எந்த ஒரு தீர்வையும் வழங்கி விடவில்லை. இந்த சூட்சுமத்தை அறிந்தவனுக்கு அமைதிக் காப்பது சுலபம். அவனுக்கு அது நன்றாகவே கூடி வருகிறது. “உம்மணாமூஞ்சிப்பய..” என்பாள் அம்மா.

தொட்டதற்கெல்லாம் அத்தைப் போலவே சிரிக்கும் அண்ணன்கள் கூட இவனின் கோபத்திற்கு அஞ்சியே இருந்தனர். இவனின் சுபாவத்துக்கு வம்சத்தில் ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தனர் தாத்தாவும் அப்பத்தாவும். அது கிடைக்கவேப் போவதில்லை என்று இவனுக்குத் தெரியும். “எங்கடீ அந்த மூஞ்சுரக் காணாம்..“ என்று தான் சொல்லும் துணுக்குக்கு தானே சிரித்துக் கொண்டே உள்ளே நுழைவார் அப்பா.

பொலபொலத்தச் சோறை ஆவிப் பொங்க பரிமாறும் அம்மாவின் விரல்கள் உருண்டு திரண்டிருக்கும். அவன் சிறுவனாக இருக்கும்போது நீண்டிருந்த விரல்கள் இப்போது சதைப்பற்றால் சிறிது தடித்திருந்தன. எப்போதோ அணிந்த மோதிரம் அவளின் மோதிர விரலை பள்ளமாக்கியிருந்தது. வலதுக்கையின் கட்டைவிரல் நகம் மட்டும் வெங்காயம் உரிப்பதற்கு ஏதுவாக பெரிதாக வைத்திருப்பாள். பத்து விரல்களும் சோற்றுப்பானையை பிடிப்பதும் பரிமாறுவதுமாக பரபரத்து செயலாற்றும்போது “போதும்“ என்று பாதிச் சோற்றிலேயே எழுந்து விடுவான். தாழ்ந்து பரவியிருந்தப் கொய்யாமரத்தின் கிளை அவ்வப்போது அவனுக்குப் படுக்கையாகி விடும். கிளை முதுகுத்தண்டைத் தாங்கிக் கொள்ள கால்கள் இரண்டையும் இருப்பக்கத் தரைகள் தாங்கியிருக்கும். கோபம் வரும் நேரங்கள் இப்படியாகவும் கழியும் அவனுக்கு. மாடியிலிருக்கும் ஒற்றை அறையும் கைக்கொடுப்பதுண்டு. “அகராசிப்புடிச்சப்பய…” மகனின் கோபம் மனசுக்குப் பழகிப் போனதில் அம்மா நகர்ந்து விடுவாள். அம்மாவின் முதுகு கோபத்தை நீட்டிக்க வைக்கும். மேய்ந்துக் கொண்டிருக்கும் கோழியை குறி பார்த்து அடிப்பான்.

இப்போதுக் கூட இங்கு வாய்க்காத வாரக் கடைசிகள் கோபத்தை வரவழைத்து விடுகிறது அவனுக்கு. அடுத்த வாரம் அவசியம் வந்தேத் தீர வேண்டுமென்ற கட்டளையை ஊரிலிருந்து பெற்றிருந்தான். கூழாங்கல் ஒன்றின் மறைவிலிருந்து எட்டிப் பார்த்தத் தவளையை சிறிய கல் ஒன்றை எடுத்து குறி வைத்து அடித்தான். அது ஒரு நொடியில் விலகி கல்லுக்குள் அடைக்கலம் புகுந்துக் கொண்டது. மீண்டும் கல்லெடுத்து வீசினான். மீண்டும் மீண்டும் வீசினான். தவளை தப்பி விட்டது. காலில் தட்டியக் கல் எகிறிப் பறந்தது. நேரம் நழுவியது. எகிறி விழும் கற்களின் துாரம் அதிகரித்துக் கொண்டேப் போனது.

ஜீப் தொலைவில் நின்றிருந்தது. அதை நோக்கி நடக்கத் தொடங்கினான். பின்னால் பேச்சுக்குரல் கேட்டது. திரும்பிப் பார்க்காமலேயே பெண்களும் ஆண்களுமான ஒரு சிறுக் கூட்டம் என கணிக்க முடிந்தது அவனால். சற்று துாரத்தில் நின்றிருந்த இனோவா கார் அவர்களுடையதாக இருக்கும். பேச்சும் சிரிப்பும் நெருங்கி வந்தன.

அவனின் வீட்டிலும் குலதெய்வம் கோயிலுக்கு போவதென்றால் இரண்டு வேன்களுக்கு கும்பல் காணும். அப்பா.. அம்மா.. அத்தை.. அவளின் மூன்று மகள்கள்.. அண்ணன்கள்.. அப்பத்தா.. தாத்தா.. பங்காளி வீட்டு ஆட்கள் என பெருங்கூட்டம் கூடி விடும். பேச்சும் சிரிப்பும் கட்டுச்சாதமுமாக கிளம்பும் கும்பலிடம் திரும்பி வரும்போது புளியோதரை மட்டுமே தீர்ந்திருக்கும். “உம்மாணாம்மூஞ்சி மாமனாம்.. உத்துப்பாத்தா பீமனாம்..“ சாப்பிடுகையில் வயதில் மூத்த அத்தை மகள்கள் அடிக்கும் கிண்டலில் இவனுக்கு கோபம் எகிறி அடிக்கும். பேச்சு நின்று விடும். “ஏண்ணீ.. வாங்குனதுதான் வாங்குனே.. ஒரு பொட்டப்புள்ளயா பாத்து வாங்கியிருக்கக் கூடாது.. வூட்டு வேலைக்காது ஆயிருக்கும்.. ஆன்னா ஊன்னா இந்தப்பய பொணங்கீட்டு வெளியில்ல ஓடிடுறான்..” அத்தை வம்பிக்கிழுப்பாள்.

அவர்கள் கடப்பதற்காக நடையின் வேகத்தை மட்டுப்படுத்தினான். ஆணும் பெண்ணுமாக இருவர்.. கிட்டத்தட்ட இவனின் வயதையொத்தவர்கள்.. இரண்டு மூன்று சிறுவர்கள்.. இரு ஜோடிப் பெரியவர்கள் என கும்பல் இவனைக் கடந்துச் சென்றது. வயதானவர்கள் களைப்பேறியதுப் போல நடந்தனர். கடைசியாக சென்றப் பெண்மணியைத் தொடர்ந்து நடந்தான் இவனும். அந்தப் பெண்மணி சற்றே தளர்ந்திருந்த முந்தானையை உதறி சொருகும்போதுதான் அந்த விரலைப் பார்த்தான். தனித்து ஆடியது அந்த ஆறாவது விரல் தனியாக.. துண்டாக.. சிறியதாக.. அழகற்றதாக.
மழை நின்றதில் ஓடை நீர் தெளிந்திருந்தது. குனிந்து நீரை அள்ளி எடுத்து வருடலாக முகத்தைக் கழுவிக் கொண்டான். பிறகு கைகளை இணைத்து குவித்து நீரை அள்ளிப் பருகினான்.

மெலிதான பனி ஜீப்பின் மீது கவிழ்ந்திருந்தது நிறைவாக.