பேட்டி

சரியான சொற்களைத் தேடி – ஹிலாரி மேன்டல் நேர்முகம்

நீங்கள் எழுத்தாளராவதற்கான காரணம் என்ன?

எழுத்தாளராகும் விருப்பம் சிறு வயதில் எனக்கு இருக்கவில்லை, ஆனால் ஏதோ ஒன்றைச் சாதிக்கும் ஆசை இருந்தது. பள்ளியில் என்னால் எல்லாரையும் போல் இருக்க முடியவில்லை: என் வயதுக்கு மீறிய முதிர்ச்சி கொண்டவளாக இருந்தேன், ஏராளமாய் படித்தேன் – எனக்கு பத்து வயதாகியிருந்தபோது, என் அம்மா Complete Works of Shakespeare வாங்கிக் கொடுத்தார், அது என்னை முழுமையாய் வசீகரித்துக் கொண்டது. ஆனால், அதன்பின் எல்லாம் மாறிவிட்டது: அம்மா என் அப்பாவைவிட்டுப் பிரிந்து, வேறொரு புதிய ஊருக்கு எங்களை அழைத்துச் சென்று எங்கள் பெயர்களை மாற்றிவிட்டார். அங்கு நான் மானுடவியல் ஆய்வாளர் போல் நடந்து கொள்ளத் துவங்கினேன், இந்த ஊரின் வினோத மத்திய வர்க்க மக்களைக் கூர்ந்து கவனித்து அவர்களைப பற்றி கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்ள ஆரம்பித்தேன். தனியாய் நெடுந்தொலைவு பள்ளி நடந்து செல்லும் வழியில், தென்படும் பொருட்களை எனக்கு நானே விவரித்துக் கொள்ளப் பழக்கிக் கொண்டேன், அவற்றுக்குத் துல்லியமாய் பொருந்தும் சொற்களை அறிந்துகொள்ள முயற்சித்தேன். (more…)

உள்ளிருக்கும் அன்னியன்- கிரண் நாகர்கர், இரு நேர்முகங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்

அர்னாப் சக்லதார்: இந்த நாவலின் எழுதப்பட நேர்ந்தது குறித்துச் சிறிது பேசலாமா?

கிரண் நாகர்கர்: Cuckold உருவான விதம் குறித்துச் சுருக்கமாகச் சொல்கிறேன்: நான் அவ்வப்போது எழுதுபவனாக இருக்கப் போகிறேன் என்பது எனக்கு அப்போது தெரியாது, ஆனால் என் இளமைப் பருவத்தில் இரண்டு விஷயங்களைத் தொடப் போவதில்லை என்று தீர்மானித்திருந்தேன். அவற்றிலொன்று, உட்கலவி (incest)- காரணம், இந்தியச் சமுதாயம் மட்டுமல்ல, மேலைச் சமுதாயமும் தகாத விஷயங்களை (taboo issues) புதிதாய்ப் பார்ப்பதை அனுமதிப்பதில்லை என்று நினைக்கிறேன். ஒரு ஸ்டீரியோடைப்பாகதான் இவற்றை நாம் அணுக முடியும். முடிந்தவரை, தகாத விஷயங்களை ஸ்டீரியோடைப்பாக அணுகுவதைத் தவிர்க்க நினைப்பதால், “முடிந்தவரை” என்று நான் சொல்லியிருப்பதை அடிக்கோடிட விரும்புகிறேன், உட்கலவியைப் பேசுவது எனக்குச் சாத்தியமில்லாமல் போனது. எப்படியானாலும் அது மிகவும் தீவிரமான களம். அது பற்றி எழுதுவதானால் மகேஷ் எல்குஞ்ச்வார் எழுதியதைப் போலல்லாமல் வேறு வகையில் எழுத வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தது.

தொடக்கூடாது என்று நான் நினைத்திருந்த மற்றொரு விஷயம் மீரா…

அர்னாப் சக்லதார் ஏன்? (more…)

நெல் ப்ராய்டன்பெர்கருடன் ஒரு நேர்முகம்

நீங்கள் வெளிநாடு செல்ல நேர்ந்தது எப்படி?

பட்டப்படிப்பு முடிந்ததும் ஓராண்டு பாங்காக்கில் இருந்தேன், அங்கு ஓர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினேன். அதன்பின் இந்தியாவில் இரண்டு மாதங்கள் இருந்தேன், அடுத்த ஆண்டு கோடையில் புதுதில்லி சென்று அங்குள்ள குடிசைப் பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பள்ளியொன்றில் வகுப்புகள் எடுத்தேன்.

அமெரிக்கா குறித்த உங்கள் பார்வையை நீங்கள் வெளிநாட்டில் இருந்த காலம் எப்படி மாற்றிற்று?

அமெரிக்கனாக இருப்பது என்பதைப் பற்றி அர்த்தமுள்ள வகையில் நான் நினைத்துப் பார்த்ததே அப்போதுதான். நம் பூகோளத்திலோ அல்லது அரசியல் தனிமையிலோ ஏதோ ஒன்று அமெரிக்கனாக இருப்பது பற்றி சுவாரசியமாக எதுவும் நினைப்பதை இங்கிருக்கும்வரை தடுப்பதாக இருக்கிறது. தாய்லாந்தில் நாற்பது ஆங்கில ஆசிரியர்கள் இருந்தார்கள் என்று நினைக்கிறேன், அவர்களில் முப்பத்து ஒன்பது பேர் நடுத்தர வயது தாய் பெண்மணிகள். நான் ஏதோ காட்சிப்பொருளாக இருப்பது போல் உணர்ந்தேன், நான் செய்வது ஒவ்வொன்றும் அத்தனை அமெரிக்கர்களும் செய்வதாக இருக்க வேண்டும் என்பது போன்ற எதிர்பார்ப்பை உணர்ந்தேன். இதற்கு என்ன அர்த்தம் என்பது குறித்த பிரக்ஞை எனக்கு இருந்து கொண்டேயிருந்தது. (more…)

வெல்ஸ் டவருடன் ஒரு உரையாடல் – தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.

 
நன்றி என்பிஆர் – 
 
உங்கள் முதல் சிறுகதைத் தொகுப்பு, இதற்கு கிடைத்திருக்கும் இப்படிப்பட்ட வரவேற்பு. இது எப்படியிருக்கிறது?
 
சுவாரசியமான விஷயம்தான். என்னால் இதை நினைத்தே பார்க்க முடியவில்லை. பொதுவாக, அமெரிக்காவில் சிறுகதை தொகுப்புகளுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பற்றி நான் அறிந்து கொண்ட அளவில், உண்மையில் என் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அது எவராலும் கவனிக்கப்படாது, விமரிசகர்களால் கடுமையாகக் கண்டனம் செய்யப்படாமல் மறைந்தால் நல்லது என்பதாகதான் இருந்தது. அவர்கள் இதை விரும்புகிறார்கள் என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. என்னை ஊக்குவிப்பதாக இருக்கிறது. பிரமாதமாக இருக்கிறது.

(more…)

‘கவிதை மொழியைப் பெருக்குகிறது’

றியாஸ் குரானா

பதாகை –  கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகள் அனைத்தையும் கேட்டுவிட்டது போல் இருக்கிறது. இதுவரை இதைப் பேசியிருக்கிறோமா பாருங்கள் – கதை, கவிதை, கட்டுரை என்று எழுத்துப்பணியே ஒரு விளிம்புக்குப் போய்விட்டச் செயல்பாடாகத் தெரிகிறது, எங்கும் எத்தகைய தாக்கமும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. இது தவிர, கவிதையே மொழியைப் புதுப்பிக்கிறது என்று சொல்கிறார்கள். உண்மையில் இன்று மொழியின், எழுத்தின் இடம்தான் என்ன?

றியாஸ் குரானா – எழுத்துப் பணி என்பது ஒருபோதும் விளிம்பு நிலைக்குச் சென்றுவிடாது என்றே கருதுகிறேன். நாம் சிந்திப்பதே மொழியால்தான், ஆக மொழியாலான எந்த நிகழ்வுகளும் விளிம்பு நிலைக்குச் சென்றுவிடாது. அப்படிச் செல்லுமானால், நாம் சிந்திப்பதை நிறுத்திவிட்டோம் என்றுதான் அர்த்தம். ஆனால் குறித்த வகையான எழுத்து விளிம்பு நிலைக்கு போக வாய்ப்புள்ளது. விளிம்பு, என்றும் மையம் என்றும் நாம் பேசவும், அதன் அரசியல் உள்ளீட்டை முதன்மைப்படுத்தவும் பின்நவீன கருத்து நிலைகளே நமக்கு உதவின. இந்த மையம் விளிம்பு என்பது எதிர் எதிர் நிலைகளில் வைத்துப் புரிந்துகொள்ளப்பட வேண்டியது என்றும், விளிம்பின் பக்கம் சாய்வாக கரிசனம் கொள்ள வேண்டும் என்றும் அது தூண்டியது. ஆனால் எழுத்தைப் பொறுத்தவரை அப்படி இல்லை. அது ஒரு போதும் விளிம்பு நிலைச் செயற்பாடு அல்ல. (more…)