அருண் கொலாட்கர்

சுரண்டல்

காஸ்மிக் தூசி

கடவுள் எது
கல் எது
என்று பிரிக்கும் கோடு
ஒன்று இருக்கும் என்றால்
மிகவும் மெல்லியது
அது ஜெஜூரியில்

எல்லா கற்களுமே
கடவுள்கள்
அல்லது
கடவுளின் உறவினர்கள்

கடவுள் தவிர
வேறெதுவும்
பயிராவதும் இல்லை
இங்கு
இருபத்திநாலு மணி நேரமும்
வருஷம் முழுக்க
தரிசு நிலத்திலும்
இறுகிய பாறையிலும்
அறுவடையாவதெல்லாம்
கடவுள் மட்டுமே

ஒரு கல்லை எடுத்து
சுரண்டினாலுங்கூட
புதிதாய் ஒரு
புராணம் தோன்றும்

படுக்கையறை போன்ற
அந்தப்பெரிய பாறை –
அது கந்தோபரின் சாபத்தால்
கல்லாய் மாறிய அவரது மனைவி
பாறையின் குறுக்கே ஓடும்
அந்தப் பிளவு
கடுங்கோபத்தில்
தன் பெரியவாளால்
கந்தோபர் வெட்டியதன்
தழும்பு

00

ஒளிப்பட உதவி – alexmontjohn

அருண் கொலாட்கரின் Scratch  என்ற கவிதை தமிழாக்கம்

 

பட்டாம்பூச்சி

காஸ்மிக் தூசி

butterfly

அதற்குப் பின்னால்
எந்தக் கதையுமில்லை
வினாடியைப்போல இரட்டித்து
மூடித்திறக்கிறது
தன்னுடலையே கீலாக்கி

அதற்கு
எதிர்காலமில்லை
இறந்த காலத்துடன்
இணைப்பு ஏதுமில்லை
இஃதொரு
நிகழ்காலச் சிலேடை

கொடிய மலைகளை
தன் சிறகுகளுக்குள்
கொண்டுள்ள

சிறிய
மஞ்சள் நிற
வண்ணத்துப் பூச்சி

ஒரு துளியளவு
மஞ்சள்
திறக்கும் முன் மூடி
மூடும் முன் திறக்…

எங்கே அது?

ஓவியம் – நந்து

௦௦௦

அருண் கொலாட்கரின் The Butterfly  என்ற கவிதை தமிழாக்கம்

பூசாரியின் மகன்

காஸ்மிக் தூசி

 IMG_8608

இந்த ஐந்து மலைகள்தான்
கந்தோபா கொன்ற
ஐந்து பூதங்கள்

என்கிறான் பூசாரியின் மகன்
பள்ளிவிடுமுறை நாட்களில்
வழிகாட்டியாக வரும்
சிறுவன்

அந்த கதையை
நீ உண்மையிலேயே
நம்புகிறாயா என்றால்

அவன்
பதில் சொல்வதில்லை
தோள்களை குலுக்கியபடி
சங்கடத்துடன்
வெறுமனே பார்க்கிறான்
வேறெங்கோ

ஒழுங்கற்று வளர்ந்து
வெயிலில் வறண்ட
கற்றைப்புல்லின் மேல்

அசைவின்
ஒரு கண்சிமிட்டலை
காண முடிகிறது
அவனால்

அங்கே பாருங்கள்
பட்டாம்பூச்சி
என்கிறான்.

00

அருண் கொலாட்கரின் The Priest’s Son  என்ற கவிதை தமிழாக்கம்

..

ஒளிப்பட உதவி – i Share

சைதன்யா (இரண்டாவது)

ஜெஜூரியின் கற்கள்
திராட்சையைப்போல இனியவை
என்ற சைதன்யா
ஒரு கல்லை
தன் வாயிலிட்டு  
கடவுள்களாக   
உமிழ்ந்தான்

தாழ்வான கோவில்

காஸ்மிக் தூசி –

Low Temple-image-1

கடவுள்களை
இருளில் வைத்திருக்கிறது
தாழ்வான இந்தக்கோவில்
பூசாரியிடம்
தீப்பெட்டி இரவல்தர
ஒவ்வொருவராக
வெளிச்சத்துக்கு வருகிறார்கள்
கடவுள்கள்

ஸ்வாரஸ்யத்துடன் பார்க்கும் பஞ்சலோகம்
புன்னகைக்கும் கருங்கல்
ஆச்சரியம் ஏதுமற்ற
இன்னொரு கடவுள்

தீக்குச்சி எரியும்
இடைவெளியில்
சைகைகள்
உயிர்த்தெழுந்து மறையும்
ஒவ்வொன்றாக

தோன்றி மறையும்
அபிநயம்
மீண்டும் மறையும்

அந்த சாமி யார்
எனக் கேட்டால்
எட்டுக்கை அம்மன்
என்கிறான் பூசாரி

சந்தேகமாக இருமுகிறது
ஒருதீக்குச்சி
எண்ணிப்பார்த்தால்
கைகள் பதினெட்டு

எதிர்த்துக்கேள்வி கேட்டால்
இருக்கலாம் ஆனால்
இது எட்டுக்கை அம்மன்தான்
என்கிறான் பூசாரி

வெளியே
வெய்யிலுக்கு வந்து
சார்மினார் சிகரெட்டை
பற்ற வைத்தால்
இருபதடி
ஆமையின்மீது
ஏறி விளையாடிகொண்டிருக்கிறார்கள்
குழந்தைகள்.

***

(அருண் கொலாட்கர் எழுதிய A Low Temple என்ற கவிதையின் தமிழாக்கம்)