ஸ்ரீதர் நாராயணன்

ஏபிஎன் பெட்டிக்கடை சம்பவம்

 ஸ்ரீதர் நாராயணன்

எப்போதும் வழக்கமாக சாப்பிடும் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, அந்த பெட்டிக்கடைக்கு வந்து அரை பாக்கெட் சிகரெட் வாங்கி, ஒன்றை பற்ற வைந்து புகைத்தவாறே, கயிற்றுக் கொடியில் தொங்கவிட்டிருந்த புத்தகங்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். அந்த காலகட்டத்தில்தான் பிரபல அரசியல் பிரமுகர் ஒருவர் வார இதழ் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார். அந்த வாரத்திய இதழ் அப்போதுதான் வெளிவந்திருந்தது. அதில் தஞ்சையை முன்வைத்து அருமையானதொரு தொடர்கதை வந்து கொண்டிருந்தது. ஆர்வத்துடன் அதைக் கையில் எடுத்து புரட்டிக் கொண்டிருந்தபோதுதான், கடைக்குள்ளிருந்து அந்த சத்தம் கேட்டது. (more…)

கனவு மெய்ப்படுதல்

ஸ்ரீதர் நாராயணன்

எனக்கு வரும் கனவு போலவே
இந்தக் கனவும் இருக்கிறது
என்கிறாள்
தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டே (more…)

ஆரஞ்சு வண்ணம்

– ஸ்ரீதர் நாராயணன் –

orange_whistle

 

பலவண்ணத்தில் பரப்பி வைக்கப்பட்டிருக்கிற
ஊதாங்குழல்களில்
ஆரஞ்சு வண்ண குழலை
பாய்ந்து பற்றியெடுக்கிறாள். (more…)

சந்தோஷ ஊற்றுகள்

ஸ்ரீதர் நாராயணன்

காலைக் கட்டிக்கொண்டு
தூக்கச்சொல்லும் பரிதவிப்பு,
தோளின் மீதேற்றிக்கொண்டதும்
விகசிக்கிறது பூரிப்பில்.

முதுகில் ஏற்றிக்கொண்டு
குதிரையோட்டம் ஓடும்போது
மகிழ்ச்சி கெக்கலிப்பாகிறது (more…)

தரகு

ஸ்ரீதர் நாராயணன்

“இவனுக்குத்தான் அந்தப் பொண்ணிருக்கற வீடு தெரியுமா?”

லட்சுமணனின் குரலைக் கேட்டதும் கருணாகரன் சட்டென படித்துக் கொண்டிருந்த பத்திரிகையை கீழேப் போட்டுவிட்டு ஸ்டூலில் இருந்து எழுந்து நின்றான். கையை விறைப்பாக வைத்துக் கொண்டு, கீழுதட்டை மடித்துக் கொண்டு அவனை எடைபோடுவது போல பார்த்துக் கொண்டிருந்த லட்சுமணனின் தோரணையைப் பார்த்ததும் இன்னும் பணிவாக

“என்ன சார்” என்றான்.

“தனம் வீடு பத்தி கேக்கறார் சார்” என்றவாறே முத்துராமன் அவர் பக்கத்தில் வந்து நின்றார். பொலிவற்ற பின்னணியில் பிரகாசமான நிறங்கள் தூக்கலாக தெரிவது போல, லட்சுமணனின் மிடுக்கு இன்னமும் அதிகமாக தெரிந்தது.

“எந்தூரு உனுக்கு?” என்றார்.

உடல்மொழியில் இன்னமும் குழைவை சேர்த்துக் கொண்டு “இங்கிட்டுத்தான் சார். மருதுபட்டி” என்றான் கருணாகரன்.

“மருதுபட்டியா? அங்கிட்டு பூரா பயகளும் மாடு பத்திட்டு போற காட்டுப் பயகதான. நீ இங்க துணிய கிழிச்சுப் போட வன்ட்டியாக்கும்”

“இல்லீங்க சார். காலேஜு முடிச்சிட்டு சும்மாங்காட்டிக்கு வேலைக்கு வந்தேன்.”

அவன் சொல்வதை கவனிக்காமல் கடையை சுற்றுமுற்றும் அளவெடுத்துக் கொண்டிருந்தார் லட்சுமணன். முக்கியமாக துணிகளை உதறி, மடித்து பாலித்தீன் பைகளில் போட்டுக்கொண்டிருந்த பெண்களை ஒவ்வொருவராக அளவெடுப்பது போல பார்த்துக் கொண்டிருந்தார். கருணாகரன் பேசுவதை நிறுத்திவிட்டது தெரிந்ததும் அவன் பக்கம் திரும்பி

‘இந்தப் பொண்ணு வீடு எங்கிருக்கு?’ (more…)