உயர்ந்தெழுதல்

செந்தில் நாதன்

dove-66475_640

 

செய்தி ஒன்றை கொடுப்பதற்காக வருவது போல்
நம் பால்கனி நோக்கி விரைந்து வரும் பறவைகள்
அதைத் தாண்டிப் பறக்கும், எப்போதும் தாண்டிப் பறந்து
நம் கண்முன்னே தம் திறமையை வெளிக்காட்டும்,
நாம் உவமானங்களைத் தவறாகப் புரிந்து கொண்டோம் என்று
நமக்குச் செய்தி சொல்வது போல.
அவற்றின் உயர்தலும் பறத்தலும்
தரையில் வாழும் நம்மை பொறாமை படச் செய்தாலும் –
இப்போது பெருந்திரளாய், உறுதியான இறக்கைகளில் உயரேயிருக்கிறோம் –
இப்படி உறைந்த பறவைப் பார்வை,
இப்படி இறகுமுனைகளிடையே பயந்ததோர் இருப்பு
அல்ல அவை நமக்குச் சொன்னது.

அடில் ஜுஸ்ஸாவாலாவின் Highrises என்ற கவிதை மொழிபெயர்ப்பு

ஒளிப்பட உதவி- Mikuratv, Pixabay

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.