ஜூன் 17 கிளர்ச்சிக்குப் பின்னர்
அரசாங்கத்தின் நம்பிக்கையை
மக்கள் இழந்து விட்டதாகவும்
மேலதிக முயற்சிகளின் மூலமே
இழந்த நம்பிக்கையை மீட்க முடியும் என்றும்
ஸ்டாலின்பாதையில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்
எழுத்தாளர் சங்கச் செயலர்.
அப்படி இருக்கும் பட்சத்தில் அரசாங்கம்
மக்களைக் கலைத்துவிட்டு வேறொரு
மக்களைத் தேர்ந்தெடுப்பது எளிதல்லவா?
(பெர்டோல்ட் பிரெக்ட் எழுதிய The Solution என்ற கவிதையின் தமிழாக்கம்)