சொல் விழுந்த வனம்

நித்ய சைதன்யா

 

கரிய சொல் ஒன்றிலிருந்து
கிளைத்துப் பரவும் வனத்தில்
இளைப்பாறும் பறவைகளுக்கு
உண்ணத்தருகிறாய்
கனவின் ருசிதிகட்டும் கனிகளை

ஆசுவாசம் மிகுந்து
உனதன்பில் சிக்குண்டு
பறத்தலை மறந்த அச்சிறிய
உயிர்களில் நானும் ஒருவன்

அலகிலா உனது லீலைகள்
இடையறா உற்சவ தினங்களாக
நிகழ்ந்தேறி
உன்மத்தம் கொண்டலைகிறேன்

உனதன்பில் ஒளிர்ந்த
ஒற்றைச்சொல்லை கையிலேந்தி
உந்தும் கணத்தில்
உடன் வருகின்றன
உனை விழைந்த ஓராயிரம் சிறகுகள்

oOo

ஒளிப்பட உதவி – Jacob Scriftman

3 comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.