Author: பதாகை
விஷால் ராஜாவின் ‘குளிர்’
என்பில தனை வெயில்போலக் காயுமே
அன்பில தனை அறம்
என்ற குறள் நாமறிந்தது. இதற்கு நேரெதிர் தாக்கத்தை விஷால் ராஜாவின் குளிர் சிறுகதை தொடுகிறது.
எல்லாவற்றுக்கும் ஒரு நியாயம் இருக்கும் என்றால், புரிந்துணர்வுக்கான புள்ளி எல்லாரிடமும் உண்டு என்றால், அன்பின் இயல்பும் அறனின் தன்மையும் எப்படிப்பட்டவை?
நாம் காணும் எதுவும் நம்மைத் தொடாது என்றால், அன்பும் அறனும் தம்மைத் தாமே நகைத்துக் கொள்பவையாகாதா?
அசாதாரண குளிர், அசாதாரண மனிதர்கள், அசாதாரண நிகழ்வுகள். இருந்தும் அந்த நாளின் காலைப் பொழுது சாதாரணமாகத்தான் துவங்குகிறது. உணர்வுகளின் ஒடுக்கம், மிகச் சாதாரணமானது. அதில் மிகைகளுக்கு இடமில்லை.
“மரங்களில் சாய்ந்து வீசிய மென் காற்றில் சாமந்தி மணமும் கலந்து வந்தது. அது நாசியில் மயக்கமாக தங்க இன்னொருபுறம் பனியில் தலையைச் சுற்றி குளிரேறிக் கொண்டிருந்தது. காதுகளை அழுந்த மூடி கால்களுக்கு நடுவே முகத்தை புதைத்துக் கொண்டேன். அருகில் யாரோ நடந்து வரும் காலடி சத்தம் கேட்டது. இயல்பாக திரும்பி பார்த்தேன். நல்ல உயரமும் கனமும் கூடிய வாட்டசாட்டமான மனிதர். மடிப்பு விழாத படு நேர்த்தியான உடை. பளபளவென்றிருந்த போலீஸ் காலணிகளில் சீராக அடிவைத்து நடந்து வந்தார்.”
“சொல் விளையாட்டே என் கவிதை முயற்சிகள்” – நித்ய சைதன்யா
![]()
பொதுவாகச் சொல்வதென்றால் சொல் விளையாட்டே என் கவிதை முயற்சிகள். தினமும் நினைப்பேன் இன்று எப்படியாவது ஒரு சிறுகதை எழுதிவிட வேண்டும் என்று. ஆனால் எழுத பயமும் சோம்பலும் சேர்ந்து அத்துணிவை உடனே அழிக்கும். நல்ல வாசகனான என்னால் மோசமான சிறுகதையைத்தான் எழுத முடிகிறது என்கிற நடுக்கத்தினால் கவிதை போன்று ஏதாவது எழுதி்ப் பார்ப்போம் என்று முயற்சிப்பேன். பத்து முதல் பதினைந்து நிமிடங்களில் தடதடவென எழுதிய உடன் எதையாவது படிப்போம் என்று சோர்வு தட்டும்.
கவிதை எழுதுவதற்கான முன் தயாரிப்பென்றால் ஒரு வார்த்தை அல்லது ஒரு சொற்றொடர் கிடைத்தால் போதும். ஜெயமோகன் சொல்வதைப்போன்றுதான் என்று சொல்லத் துணிவேன். அந்த ஒரு சொற்றொடர் அளிக்கும் உத்வேகத்தில் எழுதி முடிப்பேன். வரிகளின் சந்தங்கள் மற்றும் சொற் சிக்கனம் குறித்து மட்டுமே கவனம் இருக்கும்.
பொருளின்மையின் குதுாகலமாக என் வரிகள் இருக்கவேண்டும் என்பதுதான் என் கவிதை விருப்பம். எதிர்காலத்தில் எழுதப்போகும் சிறந்த கவிதைகளுக்கான வீட்டுப்பாடம் இவை என்றும் எண்ணிக் கொள்கிறேன்.
கதை எழுதிய கதை: பெல்லந்தூர் ப்ளைஓவர் சம்பவம்
பெல்லந்தூர் ஃபளை ஓவர் சம்பவம்- கதை எழுதிய கதையைச் சொல்கிறார் சிகந்தர்வாசி–

சமீபத்தில் திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
ஒருவன் நாங்கள் போய்க் கொண்டிருந்த ஆட்டோ முன்பு வந்து ஏதோ கத்தினான். ஆட்டோ டிரைவர் சற்று முன் சென்று நிறுத்திவிட்டு அவன் வருவான் என்று திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவன் வரவில்லை. நாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றோம்.
இரண்டு நாட்களில் அந்தச் சம்பவம் கதையாகி வர வேண்டிய இடத்துக்கு வந்து விட்டது.
பெண்டுல மனசு கவிதை குறித்து கோபி சரபோஜி
பெண்டுல மனசு கவிதை குறித்து கோபி சரபோஜி-

புலம் பெயர்ந்து வேலைக்காகச் செல்லும் வாழ்க்கை என்பது மாயக் கூண்டுக்குள் நுழைவது மாதிரி. ஒரு வருடமோ இரண்டு வருடமோ மட்டும் அந்த வாழ்க்கையை வாழ்ந்து கொஞ்சம் சம்பாதித்து வந்து ஊரில் குடும்பத்தோடு இருந்து விட வேண்டும் என்றும், தான் செய்ய நினைத்ததைச் செய்து விட வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு விமானம் ஏறுபவர்கள் அதன் பின் தன் வாழ்நாளின் பாதியை அப்படியான வாழ்க்கை முறையிலேயே வாழ்ந்து தீர்க்க வேண்டியதாகிப் போவது மிகப் பெரிய துயரம்!
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நுனிப்புல்லாய் சில வசதிகளை அந்த வாழ்க்கை கொடுத்திருப்பதாய் தெரிந்தாலும் இளமையின் பெரும்பகுதியைத் தொலைத்து விட்ட சூழலில் வேலை இல்லை என தான் வேலை செய்யும் நிறுவனங்களால் திடுமென ஊருக்குத் திருப்பி அனுப்பப்படும் சூழலில் அவர்கள் படும் மனவேதனையும், மனக்குழப்பங்களும் சொல்லி மாளாதவைகள்!
ஆரம்பகாலத்தில் தான் செய்து பார்க்க நினைத்த விருப்ப, தொழில் சார்ந்த முயற்சிகள் எல்லாம் கால ஓட்டத்தில் காலத்திற்கு ஒவ்வாதவைகளாகவும், போட்டித்தன்மை மிக்கதாகவும் மாறி விட்ட நிலையில் எழும் அச்ச உணர்வும், குடும்பத்தின் தேவைகள், குழந்தைகளின் கல்வி போன்ற கட்டாயப் பொருளாதாரத் தேவைகளும் அவர்களை மீண்டும் அதே வாழ்க்கை முறைக்கே பயணப்பட வைக்கிறது.
என்ன செய்வது? எனத் தெரியாத குழப்ப நிலையில் தற்காலிகத் தீர்வாய் இப்படி வாழ்நாள் முழுக்கப் பயணிப்பவர்களின் மனமானது அவர்கள் தங்களின் ஆரம்பகாலத்தில் செய்ய நினைத்த விசயங்கள், தொழில்கள் பற்றிய சிந்தனைகளைத் தாங்கி. குடும்பத்தோடு தொடர்ந்து இருக்க முடியாத துயருடனே நீள்கிறது,
இந்த நாட்டில் இன்னும் இரண்டு வருடம் மட்டும் தான் இருப்பேன், அதன் பின் ஊருக்குச் சென்று குடும்பத்தோடு இருந்து நினைத்த தொழிலை, விசயத்தைச் செய்வேன் என ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர்கள் நினைக்கும் எண்ணங்கள் அனைத்துமே கானல் நீர் போல வெறும் நினைப்பாக மட்டுமே அமைந்து விடுகிறது, பொருளீட்டல் சார்ந்த புலம் பெயர்தலின் ஊடாக ஒரு பெண்டுலம் ஆரம்பத்திற்கும், முடிவுக்குமாய் நிற்காது அசைவதைப் போல அவர்களின் மனம் வாழ்நாள் முழுக்க இரண்டு நிலைகளுக்கும் அசைந்த படியே இருக்கிறது.
அவர்களில் ஒருவராய் நானும் இருக்கிறேன்.
கோபி சரபோஜியின் கவிதை இங்கே