
அடுத்த இரவு, அடர்ந்த காட்டில் மரத்தின் உச்சியில் உட்கார்ந்திருந்தபோது என்னுடைய சிக்கிம் நண்பனின் வீட்டையும் அதன் சவுகரியங்கள் பற்றியும் பல முறை நினைத்துப் . பார்த்துக் கொண்டிருந்தேன்.
நாள் முழுக்க நடந்து விட்டு, பயங்கரமான காட்டின் மத்தியில் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆலமரத்தில் அன்றைய இரவைக் கழிப்பதை யோசித்துப் பாருங்கள். பொதுவாக, உயரமான இடங்களில் ஆலமரம் வளர்வதில்லை என்பதால், அந்த மரத்தைக் கண்டுபிடிக்க அரைமணி நேரத்துக்கும் சுற்று கூடுதலாகவே ஆனது. ஒரு யானை பின்னோக்கி நடந்துவந்து தாக்கும்போது, மரம் உடைந்து விடாதபடிக்கு அது தண்டியான மரமாக இருக்க வேண்டும். இப்படித்தான் சில பெரிய மரங்களை யானைகள் சாய்த்துவிடுகின்றன. எனவே, நாங்கள் உயரமான மரத்தைத் தேட வேண்டியிருந்தது. ஒரு யானையின் தும்பிக்கைக்கு உச்சிக்கிளைகள் எட்டாத அளவு உயரமாகவும், இரண்டு யானைகள் சேர்ந்து இரட்டிப்பு பலத்துடன் தள்ளினாலும் உடைக்க முடியாதபடிக்கு தாட்டியாகவும் இருக்கும் மரத்தைத் தேடினோம். (more…)


