
எனக்கு வரும் கனவு போலவே
இந்தக் கனவும் இருக்கிறது
என்கிறாள்
தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டே (more…)

எனக்கு வரும் கனவு போலவே
இந்தக் கனவும் இருக்கிறது
என்கிறாள்
தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டே (more…)

பாக்கெட்டிலிருந்து டொடய்ங்கென்று சத்தம் வந்தது.
மூச்சிறைக்க நடந்து கொண்டிருந்த அனந்துவின் நடை வேகம் கொஞ்சம் குறைய – கேசவன் திரும்பிப் பார்த்தார்.
இரவு பர்தாவை விலக்கிக் கொண்டிருந்த அந்த விடியற்காலை நேரத்தில் நடேசன் பார்க் உயிர் பெற்றிருந்தது. எல்லா வயதிலுமாக ஆண்களும், பெண்களும் சாரை சாரையாக பார்க்கைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். 40+கள் நடை பயில, பதின்மங்களும், இருபதுகளும் வியர்வையில் உடை நனைந்து ஓடிக் கொண்டிருந்தார்கள்.
புல் வெளியில் வட்டம் கட்டி யோகா. ஹா ஹா ஹா வென்று ஒருவர் சிரிக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். நடந்து முடித்த ஒரு கும்பல் குட்டிச் சுவருக்கு அந்தப்பக்கம் கை நீட்டி அருகம்புல் ஜூஸ் வாங்கிக் குடித்துக் கொண்டே தினத்தந்தியை ஆளுக்கொரு பக்கம் இழுத்துக் கொண்டிருந்தார்கள்.
அனந்து பாக்கெட்டுக்குள் கையை விட்டு நீள்செவ்வக செல்பேசியை வெளியே எடுத்தார். அப்படியே அந்த நடைபாதையில் சிலை மாதிரி நின்று – ஆள்காட்டி விரலால் ஃபோன் பட்டனை அழுத்தி உயிர்ப்பித்து திரையில் உள்ள செய்தியைப் படிக்க ஆரம்பித்தார்.
கேசவன் எரிச்சல் பொங்கிக் கொண்டு வர அனந்துவைப் பார்த்துக் கேட்டார். “உனக்கும் அந்த வியாதி வந்துருச்சா? என் பசங்க புள்ளைங்களை தினமும் நான் திட்டித் தீர்க்கிறேன். எந்நேரம் பார்த்தாலும் இந்த எழவை எடுத்துக் கையில் வெச்சிக்கிட்டு தொட்டுத் தடவி அதைப் பார்த்தே சிரிச்சிகிட்டு…” (more…)
– காஸ்மிக் தூசி –

மாநிலப்போக்குவரத்து பேருந்தின் ஜன்னலில்
தார்ப்பாய் மடல்கள்
பொத்தான்கள் கொண்டு பூட்டப்பட்டுள்ளன
ஜெஜூரிக்கு
ஏறிச் செல்லும் வரைக்கும்.
தார்ப்பாயின் மூலையில்
சாட்டையைப்போல அடிக்கும் காற்றின் குளிர்
சுள்ளென்று அறைகிறது
முழங்கையில்.
உறுமிக்கொண்டு சரியும்
சாலையை கீழே பார்க்கிறீர்கள்.
பேருந்தைவிட்டு சிதறும் சிறிய வெளிச்சத்தில்
அதிகாலையின்
அறிகுறிகளைத் தேடியபடி.
கிழவனின் பெரிய மூக்கு. மற்றும்
அவன் கண்ணாடியின் ஜோடியில்
பிளக்கப்பட்ட உங்களின் முகம் –
நீங்கள் பார்க்க முடிகிற
கிராமப்புற காட்சிகள்
இவை மட்டுமே.
தொடர்ந்து முன்னேறிச் செல்கிறது
பேருந்து. கிழவனின் புருவத்தையும்
நாமத்தையும் தாண்டி,
ஏதோ ஒரு இலக்கு நோக்கி.
வெளியே,
சத்தமில்லாமல் எழும்பிவிட்ட சூரியன்
தார்ப்பாயின் துளை வழியே
கூர்ந்து பார்க்கிறான்
கிழவனின் கண்ணாடியின் மேல்.
ரம்பத்தால் அறுக்கப்பட்டது போன்ற
கிரணம் ஒன்று
ஓட்டுநரின் நெற்றியின்
இடப்புறமாய் படிகிறது, மென்மையாக.
திசையை மாற்றியபடி செல்கிறது
பேருந்து. கரடுமுரடான பாதையில்
இடதும் வலதுமாய் ஆடிக்குலுங்கும் முகத்தை
சேகரித்துக்கொண்டு இறங்கும்போது
கிழவனின் தலைக்குள் மட்டும்
மிதித்து விடாதபடி
கவனமாய் இருக்கவேண்டும்.
—அருண் கொலாட்கரின் The Bus, என்ற கவிதையின் தமிழாக்கம்
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
ஒளிப்பட உதவி- A Place for Tulsi
– காஸ்மிக் தூசி –
நீங்கள் கடவுளை தேடுபவரா?
எனக்கு ஒரு நல்ல கடவுளைத் தெரியும்.
அவரது பெயர் யஷ்வந்த் ராவ்
அவர் மிகச்சிறந்த ஒரு கடவுள். (more…)

என் குருவிடம் சில பாண்டாக்கள் குங்-பூ கற்றுக்கொள்வதைப் பார்த்தேன்
அவை என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் பயிற்சியை நிறுத்திவிட்டு
கைகளைக் கீழிறக்கி தலை குனிந்து என்னை வணங்கும்
நானும் பதிலுக்கு தலை குனிந்து வணங்கிவிட்டு பயிற்சி செய்வேன்
ஒரு மணி நேர பயிற்சிக்குப் பின் நான் என் இருப்பிடத்துக்கு வந்துவிடுவேன்
பாண்டாக்கள் பயிற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்
ஒளிப்பட உதவி- taringa.net