Author: பதாகை

புது தில்லியில் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சம்பவம்

 சிகந்தர்வாசி 

சகானோ மற்றும் நரூசேவுக்காக புது தில்லி விமான நிலையத்தில் இன்டர்நேஷனல் பிரிவில் எக்சிட் கேட் வாசலில் காத்துக் கொண்டிருந்தேன். இந்தியாவிற்கு வரும் சர்வதேச விமானங்கள் போல் இதுவும் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல்தான் வந்திறங்கும். அதற்குப் பிறகு அவர்கள் இம்மிக்ரேஷன், கஸ்டம்ஸ் எல்லாம் தாண்டி வெளியில் வர ஒரு மணிக்கு மேல் ஆகிவிடும். அவர்கள் ஜப்பானிலிருந்து வரும் எங்கள் வாடிக்கையாளர்கள். முதல் முறையாக இந்தியா வருவதினால் ப்ராஜெக்ட் மேனேஜரான நான் இங்கு அவர்களுக்காக அரை தூக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். (more…)

பிரபஞ்ச விளையாட்டு

– வேணுகோபால் தயாநிதி –

கரைந்து குழைந்து
காற்றைக் குடிக்கும் சோப்புக்குமிழி
வீங்கிப்பெருத்து மிதந்தலையும்.
மூப்படைந்து துளைகள் தோன்ற
வெடித்துச் சிதறும். (more…)

சோழி

ஹரன் பிரசன்னா

முரளிதர ராவ் தனது எண்ணத்தின் கனம் தாங்காமல் எப்போது வேண்டுமானால் விழுந்துவிடுவார் போல அலைந்து அலைந்து நடந்தார். அவரது மெல்லிய உடலில் அதைவிட மெல்லிய பூணூல் காற்றில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. பூணூலையும் அதோடு சேர்த்து தன்னைப் போர்த்தியிருந்த மேல் துண்டையும் இழுத்து, சூம்பி தொங்கிப் போயிருந்த தன் மார்பின் இரு கருநிறக் காம்புகளையும் அவர் மூடிக்கொண்டார். வழுக்கைத் தலையில் வெளிப்பட்டிருந்த ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன. வழுக்கையைச் சுற்றி மயிர்கள் சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடந்தன. முன்நெற்றியில் அவரது நாமத்தைக் கரைத்துக்கொண்டு வியர்வை வழிந்தது. தன் தோள்துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்தார். நாமத்துக்கிடையே அவர் இட்டிருந்த கரிக்கோடுபட்டு துண்டு கருப்பாகியது. கண்ணாடி மாட்டிக்கொண்டு வெளுத்த உளுத்த மரக்கொம்பு ஒன்று நடந்து வருவதுபோல் அவர் நடை இருந்தது. தள்ளாத வயதிலும் மனதில் இருந்த குழப்பம் காரணமாக வேகமாக நடக்க முயன்று தோற்றுப் போனார். மீண்டும் வேகமாக நடந்தார். (more…)

வண்ணக்கழுத்து 4 (அ): இமாலயம்

-மாயக்கூத்தன்-

சமவெளியில் மழையும் வெப்பமும் அதிகமானதை அடுத்து, பெரியவர்கள் எங்களை இமாலயத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். இந்திய வரைபடத்தை எடுத்துக் கொண்டால், அதன் வடகிழக்கு மூலையில் டார்ஜிலிங் என்ற நகரைப் பார்க்கலாம். உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டைப் பார்த்தபடி அதற்கு எதிரில் நேருக்கு நேர் நின்று கொண்டிருக்கும் நகரம் அது.

டார்ஜிலிங்கிலிருந்து, கேராவானில் பல நாட்கள் மெதுவாக பயணம் செய்து, எங்கள் குடும்பமும் நானும் என் இரண்டு புறாக்களும் டெண்டாம் என்ற சிறிய கிராமத்தை அடைந்தோம். அது கடல்மட்டத்திலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது அக்கிராமம். அப்படியொரு உயரத்தில், அமெரிக்காவின் எந்தவொரு மலையிலோ ஆல்ப்ஸிலோ கொஞ்சமாவது பனி படர்ந்திருக்கும். ஆனால், வெப்பமண்டலத்தில் இருக்கும் இந்தியாவிலோ, பூமத்திய ரேகையிலிருந்து சுமார் முப்பது பாகை கோணங்களில் இருக்கும் இமாலயத்திலோ, பத்தாயிரம் அடிக்கு கீழே பனி உருவாவதில்லை. மிருகங்கள் நிறைந்த மலையடிவாரக் காடுகள், செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு குளிரத் துவங்கியவுடன், அதன் விலங்குகள் எல்லாம் தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்துவிடும்.

எங்கள் இடத்தை, உங்களுக்கு கொஞ்சம் விவரிக்கிறேன். தேயிலை வளரும் பள்ளத்தாக்குகளைப் பார்த்தவாறு, கல்லும் மண்ணும் கொண்டு கட்டப்பட்ட எங்கள் வீடு இருந்தது. அதைத் தாண்டி, கரடுமுரடான ஆனால் கம்பீரமான, வரிசைத் தொடர்களாக இருக்கும் முகடுகளுக்கு இடையே, பள்ளத்தாக்குகளில் நெற்பயிரும், சோளமும் பழத்தோட்டங்களும் தெரியும். தூரத்தில் இருண்ட பசுமரக்காடுகள் போர்த்த செங்குத்துச் சிகரங்களுக்கு அப்பால், ஆயிரக்கணக்கான அடிகள் உயர்ந்து நிற்கும், கஞ்சன்சங்கா, மகாலு, எவரஸ்ட் போன்ற தூய வெண்ணிற மலைத்தொடர்கள். விடியலின் முதற் கதிரொளியில் அவை வெள்ளையாகத் தோன்றும். சூரியன் மேலே போகப் போக, அதிகரிக்கும் வெளிச்சத்தில், ஒவ்வொரு சிகரமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். அடிவானத்தில், அதிக தொலைவில் அல்ல, வானத்தின் மத்தியைக் கிழித்துக் கொண்டு உயரும், அதிலிருந்து சிந்தும் ஒளியில் ஆசீர்வதிக்கப்பட்ட ரத்தம் போல, இளஞ்சிவப்பு நிறத்தில் இச்சிகரங்கள் பிரகாசிக்கும்.

(more…)

நவீன தேவதை கதைகள் சில

அஜய் ஆர்

robertcoover

அரக்கர்களை/ சூனியக்காரிகளை அழித்த பின்னர், நாயகன் இளவரசியை மணம் முடித்து இருவரும் “happily lived ever after” என்பது தேவதைக் கதைகளில் (பெரும்பாலான கதைகளில்கூட) முடிவாக உள்ளது. ஆனால் திரை விழுந்தபின், முப்பது நாள் மோகம் கடந்த பின் அவர்களின் அன்றாட வாழ்க்கை தொடர்ந்து அப்படியே மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கும் என்று சொல்ல முடியுமா? (more…)